id
stringlengths 1
6
| url
stringlengths 31
789
| title
stringlengths 1
93
| text
stringlengths 9
259k
|
---|---|---|---|
683785 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE | சலமாண்ட்ரெல்லா | சலமாண்ட்ரெல்லா (Salamandrella) என்பது கைனோபிடே குடும்பத்தைச் சேர்ந்த சாலமாண்டர்களின் ஒரு பேரினம் ஆகும்.
சலமாண்ட்ரெல்லா பேரினத்தில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன.
சலமாண்ட்ரெல்லா கீசர்லிங்கி டைபோவ்சுகி, 1870
சலமாண்ட்ரெல்லா டிரைடாக்டிலா நிக்கோல்சுகி, 1905
மேற்கோள்கள்
நீர்நில வாழ்வனப் பேரினங்கள் |
683786 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D | எரிக் சிமியோன் | எரிக் சோசப் சிமியோன் (Eric Joseph Simeon) இந்திய நாட்டினைச் சார்ந்த கல்வியாளர் ஆவார். 1960 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதி வரை இந்தியாவின் சில புகழ்பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியராக இருந்தார். லா மார்டினியர் கல்கத்தா, டூன் பள்ளி மற்றும் கதீட்ரல் மற்றும் சான் கானான் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றினார்.
தொழில் வாழ்க்கை
1949 ஆம் ஆண்டில், அப்போதைய கேப்டன் எரிக் சிமியோன்-சிக்னல்சு கார்ப்சு அதிகாரியால் டேராடூனில் உள்ள பிரின்சு வேல்சு ராயல் இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் பணியமர்த்தப்பட்டார்.
பின்னர், 1961 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் டெல்லியில் நிறுத்தப்பட்டபோது, அப்போதைய இந்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த வி. கே. கிருட்டிண மேனனால் முதல் இந்திய சைனிக் பள்ளிக்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டார். குஞ்ச்புராவில் உள்ள சைனிக் பள்ளியின் நிறுவனர் முதல்வராக இருந்தபோது இவரது கல்வி வாழ்க்கையின் தொடக்கமாக இருந்தது. 1967 ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் வரை ஏழு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார்.
1967 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை, கல்கத்தாவின் லா மார்டினியர் சிறுவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார். லா மார்டினியரில் தனது பதவிக்காலத்திற்குப் பிறகு டூன் பள்ளியின் நான்காவது தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். டூன் பள்ளியில் முதல் இந்திய தலைமை ஆசிரியராக இருந்த போது, டூனின் வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றிய தலைமை ஆசிரியர்களில் ஒருவராக கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்துடன் குறிப்பிடத்தக்கவர் ஆனார். டூனில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இவரது கடைசி திட்டம் மும்பை உள்ள கதீட்ரல் மற்றும் சான் கானான் பள்ளி தலைமை ஆசிரியராக இருப்பது ஆகும்.
2007 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதியன்று நுரையீரல் புற்றுநோயால் இறந்தார்.
மேலும் காண்க
பிரின்சு வேல்சு ராயல் இந்தியன் மிலிட்டரி கல்லூரி
மேற்கோள்கள்
மேலும் வாசிக்கவும்
Chhota Hazri Days: A Dosco's Yatra by Sanjiv Bathla, Rupa & Co., 2010 .
The Corporeal Image by David McDougall, Princeton University Press, 2006, .
Doon, The Story of a School, IPSS (1985) edited by Sumer Singh, published by the Indian Public Schools Society 1985.
Constructing Post-Colonial India: National Character and the Doon School by Sanjay Srivastva, published by Routledge 1998 .
The Doon School – Sixty Years On, edited by Pushpinder Singh Chopra, published by the Doon School Old Boys' Society in October 1996
2007 இறப்புகள்
1918 பிறப்புகள்
இந்திய அறிஞர்கள்
இந்தியப் பள்ளிகள் |
683787 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D | பாராடாக்டைலோடான் | மலை சாலமண்டர்கள் (Paradactylodon) அல்லது மத்தியக் கிழக்கு நீரோடை சாலமண்டர் என்ற பாராடாக்டைலோடான் ஆப்கானித்தானில் காணப்படும் கைனோபைடே குடும்பத்தில் உள்ள சாலமண்டர்களின் ஒரு பேரினமாகும்.
பின்வரும் சிற்றினங்கள் பாராடாக்டைலோடான் பேரினத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
பாராடாக்டைலோடான் பெர்சிகசு
பாராடாக்டைலோடான் மசுடர்சி
மேற்கோள்கள்
நீர்நில வாழ்வனப் பேரினங்கள் |
683788 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE | உருபியா | உருபியா (Urupia) என்பது இப்போது உருசியாவில் உள்ள பாதோனியன் இட்டட் உருவாக்கத்திலிருந்து அழிந்துபோன சாலமண்டர் பேரினமாகும். 2011ஆம் ஆண்டில் பி. பி. இசுகட்சாசு மற்றும் எசு. ஏ. கிராசுனோலுட்ச்கி ஆகியோரால் இது விவரிக்கப்பட்டது. மேலும் இந்தப் பேரினத்தின் மாதிரி இனம் உ. மான்சுட்ரோசா ஆகும்.
மேற்கோள்கள்
அற்றுவிட்ட இனங்கள் |
683789 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 | அப்துல் ரகுமான் இன்பான்டு | அப்துல் ரகுமான் இன்பாண்டு இ.கா.சே. (A. R. Infant IPS) இந்திய நாட்டின் கருநாடக மாநிலத்தில் முன்னாள் பொது இயக்குநர் மற்றும் காவல் துறைத் தலைவர் (டி.சி.பி & ஐ.சி) ஆவார். இவர் 1952 ஆம் ஆண்டு சூன் மாதம் 23 ஆம் தேதியன்று கொல்லம் மாவட்டத்தின் பரவூரில் பிறந்தார். தற்போதைய காவல் துறைத் தலைவர் மற்றும் ஐசி சங்கர் பீடாரியை நீக்கி, காவல் துறைத் தலைவர் மற்றும் ஐசி பதவிக்கு பதிலாக இன்பான்டு என மாற்ற உத்தரவிட்ட மாநில உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஆர். அசோகா 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதியன்று இவரது நியமனத்தை அறிவித்தார்.இருப்பினும், பின்னர் சங்கர் பிதிரிக்கு இந்திய உச்ச நீதிமன்றம் அனைத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளிலிருந்தும் இவரை விடுவித்தது. இவர் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
1952 பிறப்புகள்
இந்திய காவல் பணி அதிகாரிகள் |
683792 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | உத்கிர் சட்டமன்றத் தொகுதி | உத்கிர் சட்டமன்றத் தொகுதி (Udgir Assembly constituency) என்பது லாத்தூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு மகாராட்டிரா சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
1980: பாலசாகேப் கிசன் ராவ் பாட்டீல், இந்திய தேசிய காங்கிரசு
1985: பாலசாகேப் கிசன் ராவ் பாட்டீல், இந்திய தேசிய காங்கிரசு
1990: நாராயணராவ் பாட்டீல், ஜனதா தளம்
1995: மனோகர் பட்வாரி, இந்திய தேசிய காங்கிரசு
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
மகாராட்டிர அரசியல்
லாத்தூர் மாவட்டம்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
683794 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%28Ce%29 | வேக்பீல்டைட்டு-(Ce) | வேக்பீல்டைட்டு-(Ce) (Wakefieldite-(Ce)) என்பது CeVO4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இக்கனிமம் அருமண் தனிமமான வனேடேட்டின் கனிமம் வேக்பீல்டைட்டின் சீரியம் ஒப்புமை ஆகும். செனோடைம் குழுவில் இது உறுப்பினரும் ஆகும்.
வேக்பீல்டைட்டு-(Ce) கனிமம் முதலில் 1977 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. சாயிர் குடியரசிலுள்ள சின்சாசா நகரத்தின் தென்மேற்கில் உள்ள குசு படிவுகளில் கண்டறியப்பட்டதால் முதலில் கனிமத்திற்கு குசைட்டு என்று பெயரிடப்பட்டது. 1987 ஆம் ஆண்டில் இது வேக்பீல்டைட்டு-Y இன் சீரியம் ஒப்புமையாகக் கருதப்பட்டு மறுபெயரிடப்பட்டது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் வேக்பீல்டைட்டு-(Ce) கனிமத்தை Wf-Ce என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
சீரியம் கனிமங்கள்
வனேடேட்டு கனிமங்கள்
கனிமங்கள்
நாற்கோணவமைப்புக் கனிமங்கள் |
683795 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D | காலகேயர்கள் | காலகேயர்கள், இந்து தொன்மவியல் கூறும் தானவர்களில் ஒரு பிரிவினர் ஆவார். காசியபர் மற்றும் கலா தம்பதியருக்கு பிறந்த 60,000 மகன்கள் ஆவார். இவர்கள் அசுரர்களின் தலைவரான விருத்திராசூரன் மற்றும் பிறர் தலைமையில் தேவர்களுக்கு எதிராகப் போரிட்டவர்கள்.
மகாபாரதம்
மகாபாரதத்தில் பல இடங்களில் காலகேயர்களை குறித்துள்ளது. தீர்த்த யாத்திரை பர்வத்தில், பெருங்கடல் ஆழத்தில் மறைந்திருக்கும் காலகேயர்களை வெளிக்கொணர, தேவர்கள் அகஸ்திய முனிவரிடத்தில் கடலை உறிஞ்சிக் குடிக்குமாறு வேண்டினர். அகத்தியரும் அவ்வண்னமே செய்தபடியால், கடலிருந்து காலகேயர்கள் வெளிப்பட்டனர். போரில் பெரும்பாலான காலகேயர்களை தேவர்கள் வீழ்த்தினர்..போரிலிருந்து தப்பிய சில காலகேயர்கள் பாதாள உலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
வன பருவத்தில் காலகேயர்களை குறித்துள்ளது. தானவர்களில் ஒரு பிரிவினரான நிவாதகவசர்களுடன் சேர்ந்து காலகேயர்கள், தேவர்களுக்கு எதிரான போரில் கலந்து கொண்டு தேவலோகத்தைத் தாக்கினர். இந்திரன் தனது மகனான அருச்சுனன், தேரோட்டியான மாதலி உடன், நிவாதகவச்சர்களை அழிக்கும் பணியை ஒப்படைத்தான். இந்தப் பணியை முடித்துவிட்டு, தேவலோகத்திற்குத் திரும்பியபோது, அருச்சுனன் ஒரு அற்புதமான நகரத்தைக் கண்டான். மாதலி அருச்சுனனிடம்அந்த நகரம் ஹிரண்யபுரம் என்ற தங்க நகரம் என்று அழைக்கப்பட்டதாகவும், ஒரு வரத்தின் விளைவாக பிரம்மாவால் உருவாக்கப்பட்டதாகவும் கூறினார். காசியபரின் மனைவிகளான பூலோமா மற்றும் கலா என்ற இரண்டு பெண்களால் இந்த வரம் வேண்டப்பட்டது. அவர்கள் தங்கள் மகன்களும், தானவர்களுமான நிவாதகவசர்கள் மற்றும் காலகேயர்களை தேவர்கள், நாகர்கள் மற்றும் அசுரர்கள் வெல்ல முடியாதவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினர். இருப்பினும், அவர்கள் மனிதர்களுக்கு எதிராக எந்த பாதுகாப்பையும் நாடவில்லை. தேரோட்டி மாதலி அவர்கள் இந்திரனுக்கும் எதிரிகள் என்பதால் அவர்களை அழிக்க அருச்சுனனை வற்புறுத்தினார். அருச்சுனன் பாசுபத அஸ்திரத்தினை ஏவி ஹிரண்யபுரத்தையும், நிவாதகவசர்கள் மற்றும் காலகேயர்களை அழித்தான்.
இதனையும் காண்க
தைத்தியர்கள்
தானவர்கள்
மாதலி
மேற்கோள்கள்
தானவர்கள்
இந்து தொன்மவியல் மாந்தர்
மகாபாரதக் கதை மாந்தர்கள் |
683796 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D | கோலாலம்பூர் நெகாரா அரங்கம் | கோலாலம்பூர் நெகாரா அரங்கம் (மலாய்; ஆங்கிலம்: Stadium Negara Kuala Lumpur) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் உள்ள ஓர் உள்விளையாட்டரங்கம் ஆகும்.
இந்த அரங்கம் கோலாலம்பூர் மாநகர மையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில், மெர்டேக்கா அரங்கம் (Stadium Merdeka) மற்றும் மெர்டேக்கா 118 கட்டிடம் (Merdeka 118); ஆகிய கட்டிடங்களுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது.
ஏப்ரல் 19, 1962 அன்று, இந்த கோலாலம்பூர் நெகாரா அரங்கம் மலேசிய அரசர் துவாங்கு சையத் புத்ரா ஜமாலுல்லைல் (Yang di-Pertuan Agong Tuanku Syed Putra Jamalullail) அவர்களால்அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. மூடிய அரங்கமாக விளங்கும் இந்த விளையாட்டரங்கம், மலேசிய நாட்டில் விளையாட்டு மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளை அடையாளப்படுத்தும் சின்னமாகத் திகழ்கின்றது.
பின்னணி
இந்த அரங்கத்தின் கட்டுமானச் செலவு ரிங்கிட் RM 34 மில்லியன்; மேலும் இந்த அரங்கம் தென்கிழக்கு ஆசியாவில் சிறந்த உள்ளரங்கங்களில் ஒன்றாகக கருதப்படுகிறது.
அத்துடன், பொறியியல் துறையின் இணையற்ற எடுத்துக்காட்டாக அமைவதோடு அல்லாமல், மலேசிய நாட்டின் நவீன கட்டிடக்கலை வடிவமைப்பிற்கும் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.
இந்த அரங்கம் 10,000 நிரந்தர இருக்கைகளைக் கொண்டது; மற்றும் முழுவதுமாக குளிரூட்டப்பட்டு உள்ளது. அத்துடன், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கச்சேரிகள் போன்ற பல்வேறு வகையான நிகழ்வுகளை நடத்தும் திறனையும் கொண்டது.
பொது
இந்த அரங்கம் 1982, 1985, 2015-ஆம் ஆண்டுகளில் மூன்று முறை புதுப்பிக்கப்பட்டது.
பிப்ரவரி 2003-இல், இந்த கோலாலம்பூர் தேசிய அரங்கம் தேசியப் பாரம்பரியக் கட்டிடமாக அறிவிக்கப்பட்டது.
காட்சியகம்
கோலாலம்பூர் நெகாரா அரங்கத்தின் 2014-ஆம் ஆண்டு காட்சிப் படங்கள்:
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மலேசியாவில் விளையாட்டு
கோலாலம்பூரில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள்
கோலாலம்பூர் சுற்றுலா இடங்கள் |
683799 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | நாசிக் கிழக்கு சட்டமன்றத் தொகுதி | நாசிக் கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Nashik East Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது நாசிக் மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது 2008ஆம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணை நிறைவேற்றப்பட்ட பின்னர் நிறுவப்பட்டது.
புவியியல் பரப்பு
இந்த தொகுதியில் நாசிக் வட்டத்தின் சில பகுதிகள் உள்ளன. அதாவது நாசிக் மாநகராட்சியின் பின்வரும் பகுதிகள்-1 முதல் 10,14,16,30 முதல் 35,40 முதல் 42 மற்றும் 67 முதல் 70 வரை.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
683800 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF | அஞ்சுமூர்த்தி | அஞ்சுமூர்த்தி அல்லது அஞ்சுமூர்த்தி மங்கலம் (Anjumoorthy or Anjumoorthy Mangalam) என்பது கேரளத்தின், பாலக்காடு மாவட்டடத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். (இது அஞ்சுமூர்த்தி மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது).
அமைவிடம்
அஞ்சுமூர்த்தி கிராமம் பாலக்காடு மாவட்டத்தில் 10.6106°N 76.5031°E ஆயத்தொலைவில் அமைந்துள்ளது. இதன் அஞ்சல் குறியீட்டு எண் 678682 ஆகும்.
சமயம்
இந்து கோவில்
இங்கு 108 சிவன் கோயில்களில் ஒன்றான அஞ்சுமூர்த்தி கோயில் என்ற இந்து கோயில் உள்ளது.
மேற்கோள்கள்
பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates not on Wikidata |
683802 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87 | இராகுல் உத்தம்ராவ் திகாலே | இராகுல் உத்தம்ராவ் திகாலே (Rahul Uttamrao Dhikale) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார் . 2019ஆம் ஆண்டில், இவர் மகாராட்டிராவின் நாசிக் கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இளமையும் குடும்பமும்
இராகுல் திகாலே ஆகத்து 14,1979இல் பிறந்தார். இவரது தந்தை மறைந்த உத்தமராவ் திகாலே. உத்தமராவ் திகாலே நாசிக் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்தியாவின் 13வது மக்களவை உறுப்பினராக இருந்தார். இராகுல் தனது கல்லூரிக் கல்வியினை நாசிக்கில் உள்ள என். பி. டி சட்டக் கல்லூரியில் சட்டத்தில் இளங்கலைச் சட்டத்தில் முடித்தார். தனது பன்னிரண்டாவது வயதில், இராகுல் திகாலே மல்யுத்தத்தில் பயிற்சி பெற்று மகாராட்டிரா இந்த் கேசரி போட்டிகளில் பங்கேற்றார். 1995ஆம் ஆண்டில், இராகுல் திகாலே நாசிக்கின் மாநகரத் தந்தை கேசரி போட்டியில் வெற்றி பெற்றார்.
அரசியல் வாழ்க்கை
இராகுல் திகாலே நாசிக் மாநகராட்சியின் பகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (2012-2017). 2014-2015இல் நாசிக் மாநகராட்சியில் நிலைக்குழுவின் தலைவராக இராகுப் இருந்தார். 2019ஆம் ஆண்டில், மகாராட்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நாசிக் கிழக்கு தொகுதியிலிருந்து இராகுல் திகாலே வெற்றி பெற்றார்.
விருதுகள்
நாசிக் மாநகரத் தந்தை கேசரி வெற்றி-1995
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
மகாராட்டிரத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
1979 பிறப்புகள்
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்கள் |
683803 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D | நிதின்குமார் பிகன்ராவ் தேசுமுக் | நிதின்குமார் பிகன்ராவ் தேசுமுக் (Nitinkumar Bhikanrao Deshmukh) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மகாராட்டிரா சட்டமன்றத்தில் பாலாப்பூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றுகிறார். இவர் மகாராட்டிராவின் அகோலா மாவட்டத்தில் சிவ சேனா கட்சியின் மாவட்டத் தலைவராக உள்ளார்.
பதவிகள் வகித்தவர்
2019: மகாராட்டிரா சட்டப் பேரவை உறுப்பினர் (முதல் முறை)
2024: மகாராட்டிரா சட்டப் பேரவை உறுப்பினர் (இரண்டாவது முறை)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Shivsena முகப்புப்பக்கம் 1 செப்டம்பர் 2020 at the Wayback Machine
வாழும் நபர்கள்
சிவ சேனா அரசியல்வாதிகள் |
683805 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE | சைலுரானா | சைலுரானா (Silurana) என்பது பிபிடே குடும்பத்தைச் சேர்ந்த தவளைகளின் துணைப் பேரினமாகும். இவை நகங்களுடன் கூடிய தவளை துணை பேரினமான சீனோப்சுடன் நெருக்கமாக தொடர்புடையவை.
சிற்றினங்கள்
கேமரூன் நக தவளைகள் (சை. எபிடுரோபிகாலிசு)
வெப்பமண்டல நக தவளைகள் (சை. டுரோபிகாலிசு)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
நீர்நில வாழ்வனப் பேரினங்கள் |
683812 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%28Y%29 | இட்ரியைட்டு-(Y) | இட்ரியைட்டு-(Y) (Yttriaite-(Y)) என்பது Y2O3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். மிகவும் அரிய கனிமமான இது இயற்கையாகத் தோன்றும் இட்ரியம் ஆக்சைடு சேர்மமாகும். வேதியியலின் அடிப்படையில் இது கங்கைட்டு, ஆர்சனோலைட்டு, அவிசென்னைட்டு மற்றும் செனார்மோண்டைட்டு (சம அளவு கனிமங்கள்) ஆகியவற்றின் இட்ரியம் ஒப்புமையாக கருதப்படுகிறது. குருந்தம், பிசுமைட்டு, பிக்சுபைட்டு, எசுகோலைட்டு, ஏமடைட்டு, கரேலியனைட்டு, சுபேரோபிசுமொயிட்டு, திசுடாரைட்டு மற்றும் வாலண்டைனைட்டு ஆகியவை பொதுவான A2O3 என்ற வாய்ப்பாட்டுடன் கூடிய பிற கனிமங்களுடன் சேர்ந்து இட்ரியைட்டு-(Y) காணப்படுகிறது. தாயக தங்குதன் உலோகத்துடன் சிறிய அளவில் உள்ளடக்கமாகவும் இக்கனிமம் உள்ளது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் இட்ரியைட்டு-(Y) கனிமத்தை Yt-Y என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
ஆக்சைடு கனிமங்கள்
கனிமங்கள்
இட்ரியம் கனிமங்கள்
கனசதுரக் கனிமங்கள் |
683816 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81 | செலீனோசல்பைடு | செலீனோசல்பைடு (Selenosulfide) என்பது வேதியியலில், கந்தகம் மற்றும் செலீனியம் தனிமங்களைக் கொண்ட கனிம மற்றும் கரிம சேர்மங்களின் தனித்தனி வகுப்புகளைக் குறிக்கிறது. கரிம வழிப்பெறுதிகள் Se-S பிணைப்புகளைக் கொண்டிருக்கின்றன. அதேசமயம் கனிம வழிப்பெறுதிகள் மிகவும் மாறுபடுகின்றன.
கரிம செலீனோசல்பைடுகள்
இந்த இனங்கள் கரிமக் கந்தகம் மற்றும் கரிம செலீனியம் சேர்மங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. இவை கரிம டைசல்பைடுகள் மற்றும் கரிம டைசெலீனைடுகள் ஆகியவற்றின் கலப்பினங்கள் ஆகும்.
தயாரிப்பு
செலீனைல் ஆலைடுகளுடன் தயோல்கள் வினைபுரிவதால் செலீனோசல்பைடுகள் உருவாகின்றன.
RSeCl + R'SH -> RSeSR' + HCl
டைசெலீனைடுகள் மற்றும் டைசல்பைடுகளுக்கு இடையிலான சமநிலை இடதுபுறத்தில் உள்ளது:
RSeSeR + R'SSR' 2 RSeSR'
இந்த சமநிலை வசதியின் காரணமாக, செலீனோசல்பைடுகளின் பல சிறந்த எடுத்துக்காட்டுகள் வளையங்களாக உள்ளன. இதன் மூலம் S-Se பிணைப்புகள் உள்மூலக்கூறாக நிலைப்படுத்தப்படுகின்றன. நாப்தலீனின் 1,8-செலீனோசல்பைடு ஓர் உதாரணமாகும். செலினியம்-கந்தகம் பிணைப்பு நீளம் சுமார் 220 பைக்கோமீட்டர்கள் ஆகும். இது ஒரு வழக்கமான S-S மற்றும் Se-Se பிணைப்பின் சராசரியாக உள்ளது.
தோற்றம்
குளுட்டோதயோன் பெராக்சிடேசு மற்றும் தயோரெடாக்சின் ரிடக்டேசு போன்ற பல்வேறு பெராக்சிடேசு நொதிகளின் ஒரு பகுதியாக செலீனோசல்பைடு குழுக்கள் கிட்டத்தட்ட அனைத்து உயிரினங்களிலும் காணப்படுகின்றன. செலினோசிசுட்டீன் மற்றும் சிசுட்டீன் எச்சங்களின் ஆக்சிசனேற்ற பிணைப்பால் இவை உருவாகின்றன. இந்த வினை செல்லுலார் பெராக்சைடுகளின் சிதைவின் மூலம் இயக்கப்படுகிறது. இது மிகவும் சேதத்தை விளைவிக்கும் மற்றும் ஆக்சிசனேற்ற அழுத்தத்தின் மூலமுமாகும். சிசுட்டீனை விட செலினோசிசுட்டீன் குறைவான குறைப்பு ஆற்றலைக் கொண்டுள்ளது. இது ஆக்சிசனேற்ற செயல்பாட்டில் ஈடுபடும் புரதங்களுக்கு மிகவும் பொருத்தமானதாகும்.
ஒருவித்திலை பிரிவைச் சார்ந்த பூக்கும் தாவரமான அல்லியம் மற்றும் வறுத்த காபியில் செலினோசல்பைடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தயோரெடாக்சின் ரிடக்டேசு என்ற புரதத்தின் பாலூட்டிகளின் பதிப்பில் செலினோசிசுட்டீன் எச்சம் உள்ளது. இது ஆக்சிசனேற்றத்தின் போது தயோசெலீனைடை (டைசல்பைடுக்கு ஒப்பானது) உருவாக்குகிறது.
கனிம செலீனோசல்பைடுகள்
சில கனிம வேதியியல் செலீனோசல்பைடு சேர்மங்களும் அறியப்படுகின்றன. இவற்றில் எளிமையானது செலீலினியம் சல்பைடு ஆகும். இது மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. தனிம கந்தகத்தின் பல்வேறு கட்டமைப்புகளை இது ஏற்றுக்கொள்கிறது. ஆனால் சில கந்தக அணுக்கள் செலீனியத்தால் மாற்றப்படுகின்றன.
மற்ற கனிம வேதியியல் செலீனோசல்பைடு சேர்மங்கள் தாதுக்களாகவும் நிறமிகளாகவும் தோன்றுகின்றன. ஆண்டிமனி செலீனோசல்பைடு இதற்கு உதாரணமாகும்.
காட்மியம் சிவப்பு நிறமி காட்மியம் சல்போசெலீனைடு சேர்மத்தைக் கொண்டதாகும். மஞ்சள் நிறத்தில் உள்ள காட்மியம் சல்பைடு மற்றும் அடர் பழுப்பு நிறத்தில் உள்ள காட்மியம் செலீனைடு ஆகியவற்றின் திண்மக் கரைசல் ஆகும். இது கலைஞர்களின் நிறமியாகப் பயன்படுத்தப்படுகிறது. கரிம செலீனோசல்பைடுகளைப் போலல்லாமலும் செலீனைடு சல்பைடு போலல்லாமலும் CdS1−xSex அல்லது Sb2S3-xSex ஆகியவற்றில் S-Se பிணைப்பு இல்லை.
மேற்கோள்கள்
கரிமசெலீனியம் சேர்மங்கள்
கரிமக்கந்தகச் சேர்மங்கள்
சால்கோசெனைடுகள்
காட்மியம் சேர்மங்கள்
செலீனைடுகள் |
683821 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D | மெர்டேக்கா அரங்கம் | மெர்டேக்கா அரங்கம் அல்லது மலேசிய மெர்டேக்கா அரங்கம் (மலாய்; Stadium Merdeka அல்லது Stadium Merdeka Malaysia; ஆங்கிலம்: Independence Stadium Malaysia; சீனம்: 默迪卡體育場) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் உள்ள ஒரு விளையாட்டரங்கம்; மற்றும் மலேசிய வரலாற்றில் தடம் பதித்த ஒரு புகழ்பெற்ற வரலாற்றுத் தளமும் ஆகும்.
மலாயா விடுதலை தினமான 31 ஆகத்து 1957-ஆம் தேதி தொடங்கி, இந்த அரங்கம் மலாயா கூட்டமைப்பின் விடுதலைப் பிரகடனத்தின் வரலாற்றுத் தளமாக அறியப்படுகிறது. அதே வேளையில் இந்த அரங்கம், 16 செப்டம்பர் 1963 அன்று மலேசியா கூட்டமைப்பு பிரகடனம் செய்யப்பட்ட போதும் இந்த அரங்கமே பயன்படுத்தப்பட்டது.
இந்த அரங்கம் கோலாலம்பூர் மாநகர மையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில், கோலாலம்பூர் நெகாரா அரங்கம் (Stadium Negara Kuala Lumpur) மற்றும் மெர்டேக்கா 118 கட்டிடம் (Merdeka 118); ஆகிய தளங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.
பின்னணி
இந்த அரங்கத்தின் கட்டுமானச் செலவு RM 2.3 மில்லியன்; மேலும் கீழ் மேல் மாடிகளுடன் அமைக்கப்பட்ட இந்த அரங்கம் 25,000 இருக்கைகளைக் கொண்டது. அத்துடன் 14 சுரங்க நுழைவாயில்கள் (Tunnels Entrance), ஒரு மூடிய வெளி, 50 பல்லடுக்குகள் (Turnstiles); மற்றும் 4 ஒளிவெள்ளக் கோபுரங்களைக் கொண்டுள்ளது.
மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமானின் வழிகாட்டுதலில், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் இஸ்டான்லி ஜூக்ஸ் (Stanley Jewkes) என்பவரால் இந்த அரங்கம் வடிவமைக்கப்பட்டது.
இந்த அரங்கம் கட்டி முடிக்கப்பட்டதும் சில சாதனைகளையும் படைத்தது. மிக உயரமான ஒளிவெள்ளக் கோபுரங்கள் (Floodlight Towers); மிகப்பெரிய வளைவுத் தூண் கூரைகளுக்கான (Thin-shell Structure) பன்னாட்டுச் சாதனை; தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அரங்கம் எனும் சாதனைகளைப் படைத்தது.
பொது
1998-ஆம் ஆண்டு 16-ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம் கட்டப்படும் வரை, கோலாலம்பூரின் தேசியநிலைக் கொண்டாட்டங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு இந்த அரங்கம் முக்கிய இடமாக இருந்தது. அதற்கு முன்னர், இந்த அரங்கம் மலேசிய தேசிய கால்பந்து அணியின் சொந்த அரங்கமாக இருந்தது.
இந்த அரங்கம் 1995-ஆம் ஆண்டு வரை மெர்டேக்கா போட்டிகளுக்கான இடமாகவும் இருந்தது. அத்துடன், கோலாலம்பூரில் நடைபெற்ற ஐந்து தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று போட்டிகள் இந்த அரங்கத்தில்தான் நடத்தப்பட்டன.
யுனெசுகோவின் ஆசிய-பசிபிக் விருது
1975-ஆம் ஆண்டில், பாகிஸ்தான் மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையிலான உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்ட இறுதிப் போட்டியும் இந்த அரங்கத்தில்தான் நடைபெற்றது.
இந்த அரஙம் தற்போது தேசிய பாரம்பரியக் கட்டிடமாக உள்ளது. 2008-ஆம் ஆண்டில், அதன் பண்பாட்டு முக்கியத்துவம் மற்றும் உருவகத்தின் காரணமாக, பாரம்பரியப் பாதுகாப்பிற்கான சிறந்த யுனெஸ்கோவின் ஆசிய-பசிபிக் விருதைப் (UNESCO Asia-Pacific Award for Excellence for Heritage Conservation) பெற்றது.
காட்சியகம்
மலேசிய மெர்டேக்கா அரங்கத்தின் காட்சிப் படங்கள்:
மேற்கோள்கள்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Merdeka 118 Precinct : Stadium Merdeka webpage
மலேசியாவில் விளையாட்டு
கோலாலம்பூரில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள்
கோலாலம்பூர் சுற்றுலா இடங்கள் |
683823 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D | முசாகர் | முசாகர் (Musahar) என்பது கிழக்கு கங்கை சமவெளி மற்றும் தெராய் பகுதிகளில் காணப்படும் ஒரு தலித் சமூகமாகும். இவர்கள் இரிசிதேவ், சதா, மாஞ்சி, பன்பாசி என்றும் அழைகப்படுகிறார்கள். பூயான் மற்றும் ராஜாவர் என்பதும் இவர்களுடைய பிற பெயர்கள். எலிகளைப் பிடிப்பதற்கான அவர்களின் முக்கிய முந்தைய தொழில் காரணமாக இவர்களின் பெயருக்கு 'எலிகளின் மேல் சவாரி செய்பவர்' என்று பொருள்படும் முசாகர் எனப் பெயர் வந்தது. வறுமை மற்றும் ஆதரவின்மை காரணமாக இந்த வேலையைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இன்றும் பலர் உள்ளனர்.
தோற்றமும் வரலாறும்
முசாகர் என்ற சொல் போச்புரியின் மூஸ் + அகர் (எலிகளை உண்பவர்) என்பதிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரம்மன் மனிதனைப் படைத்து, குதிரையில் சவாரி செய்ய கற்றுக் கொடுத்தார். முதல் முசாகர் தனது கால்களை வசதியாக வைத்துக் கொள்ள குதிரையின் வயிற்றில் துளைகளை இட முடிவு செய்தார். இது பிரம்மனை கோபப்படுத்தியது. அவரும் அவரது சந்ததியினரும் எலி பிடிப்பவர்களாக இருக்கவேண்டுமெனெ சபித்தனர் என ஒரு உள்ளூர் கதை இருக்கிறது. எர்பர்ட் கோப் ரிசிலி 1881 ஆம் ஆண்டில் நடத்திய வங்காளத்தின் சாதிகள் மற்றும் பழங்குடியினரைப் பற்றிய கணக்கெடுப்பில், முசாகர்கள் சோட்டா நாக்பூர் மேட்டுநிலங்களைச் சேர்ந்த புய்யா பழங்குடியினத்தைச் சேர்ந்த கிளை என்று ஊகித்தார். இவர்கள் சுமார் 6 முதல் 7 தலைமுறைகளுக்கு முன்னர் சுமார் 300-350 ஆண்டுகளுக்கு முன்னர் கங்கை சமவெளிகளுக்கு குடிபெயர்ந்தனர் என ஊகித்தார். இந்தக் கோட்பாடு பொதுவாக சரியானது என்று இப்போது நம்பப்படுகிறது. நவீன மரபணு ஆய்வுகள் முசாகர்கள் சந்தாலிகள் மற்றும் ஹோக்கள் போன்ற முண்டா மக்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளன. சில முசாகர்கள் ஒரு காலத்தில் தங்களுக்கு சொந்த மொழி இருந்ததாகவும், ஆனால் அவர்கள் குடிபெயர்ந்தபோது அதை இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
தற்போதைய சூழ்நிலைகள்
முசாகர் பகத், சகதியா மற்றும் துர்காகியா ஆகிய மூன்று இன மரபு குலங்களைக் கொண்டுள்ளது. இவர்கள் இப்போது பெரும்பாலும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாக உள்ளனர். மேலும் சில சமயங்களில் வறண்ட காலங்களில் உயிர்வாழ எலி பிடிப்பைதையும் செய்கின்றனர். இவர்கள் இந்தியாவில் தலித்துகளிக்கும் கீழே மிகவும் ஒடுக்கப்பட்ட சாதிகளில் ஒன்றாக உள்ளனர். முசாகர் இந்துக்கள், ஹோலி மற்றும் தீபாவளி போன்றவைகளுடன் பெரும்பாலான உள்ளூர் இந்து பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். இவர்கள் தினபத்ரி மற்றும் புனியா பாபா உள்ளிட்ட பல பழங்குடி தெய்வங்களையும் வணங்குகிறார்கள். முசாகர்கள் குல பூஜை போன்ற தங்கள் சொந்த சடங்குகளையும் கொண்டுள்ளனர். இவர்கள் பூஜை மற்றும் திருமணங்களின் போது மதுபானத்தையும் வழங்குகிறார்கள்.
கிழக்கு உத்தரப்பிரதேசம், தெற்கு நேபாளம் மற்றும் பீகார் முழுவதும் முசாகர் இனத்தவர்கள் காணப்படுகின்றனர். பீகாரின் கல் குவாரிகளில் இவர்கள் வேலை செய்கின்றனர். பலர் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களுக்கு விவசாயத் தொழிலாளர்களாக குடிபெயர்ந்துள்ளனர். பல நேப்பாளி முசாகர்கள் வருடத்தில் 6 மாதங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் போச்புரி, மகாகி மற்றும் மைதிலி போன்ற மொழிகளைப் பேசுகிறார்கள். ஆனால் இப்போது பலருக்கு இந்தியும் தெரியும்.
நேபாளத்தில் உள்ள முசாகர்
2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பு முசாகர்களை மதேசி தலித் சமூகக் குழுவிற்குள் வகைப்படுத்துகிறது. 2011 ஆம் ஆண்டின் நேப்பாளி மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, 234,490 மக்கள் (நேபாள மக்கள் தொகையில் 0.9%) முசாகர்களாக இருந்தனர். மாகாண வாரியாக முசாகர்களின் எண்ணிக்கை:
மாதேஷ் மாநிலம் (3%)
நேபாள மாநில எண் 1 (1.4%)
லும்பினி மாநிலம் (0.1%)
பாக்மதி மாநிலம் (0%)
கண்டகி பிரதேசம் (0.0%)
கர்ணாலி பிரதேசம் (0.0%)
தூரமேற்கு பிரதேசம் (0%)
மேற்கோள்கள்
தலித் சமூகங்கள் |
683824 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D | நிவாதகவசர்கள் | நிவாதகவசர்கள் (சமசுகிருதம்|निवातकवच|lit=ஊடுருவ முடியாத கவசங்களுடையவர்கள்), காசியபர்-பூலோமா தம்பதியர்களுக்கு பிறந்த தைத்திய குலத்தினர் ஆவார்.தைத்தியர்களின் எண்ணிக்கை 30 மில்லியன் ஆவார். இந்து தொன்மவியலில் இவர்களை அசுரர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.. நிவாதகவசர்கள் மாயஜாலம் மற்றும் போர்த்திறனில் திறமையானவர்கள். மேலும் தங்கள் எதிரிகளை தோற்கடிக்க சக்திவாய்ந்த ஆயுதங்களைக் கொண்டவர்கள்..இவர்கள் தேவர்கள், இராவணன் மற்றும் அருச்சுனன் ஆகியோர்களுடன் போரிட்டவர்கள். குருச்சேத்திரப் போரில் நிவாதகவசர்கள் அருச்சுனனால் கொல்லப்பட்டனர். இவர்களது நெருங்கிய உறவினர்கள் காலகேயர்கள். நிவாதகவசர்கள் குறித்த தகவல்கள் இராமாயணம் மற்றும் மகாபாரத்தில் கூறப்பட்டுள்ளது.
இதிகாசங்களில்
இராமாயணம்
இராமாயணத்தில் நிவாதகவச்சர்கள் உலகைப் பயமுறுத்தியதாகவும், கடலுக்கு அடியில் வாழ்ந்து, பிரம்மாவிடமிருந்து வரங்களைப் பெற்ற பிறகு மாநிமதி நகரில் வசித்ததாக கூறப்படுகிறது. இராமாயணத்தில், இராவணன் தனது மகன்களான இந்திரஜித், அதிகாயன் மற்றும் தனது படைகளுடன் இந்த தைத்தியர்களான நிவாதகவசர்களைத் தாக்கினான். பிரம்மாவின் வரம் காரணமாக, அவனால் நிவாதகவசர்களை முழுமையாகக் கொல்ல முடியவில்லை. இறுதியில் பிரம்மா தலையிட்ட பிறகு இரு தரப்பும் ஒரு கூட்டணியை உருவாக்கியது.
மகாபாரதம்
மகாபாரதத்தில், இந்திரன் தன் அம்சமான பிறந்த அருச்சுனன் மூலம் பாதாளத்தில் கோட்டைக் கட்டி வாழும் தேவர்களின் எதிரிகளான 30 மில்லியன் நிவாதகவசர்களை அழிக்க முயன்றான். இப்பணியில் இந்திரனின் தேரோட்டியான மாதலி, அருச்சுனனின் தேரோட்டியாக பணி செய்தான். அருச்சுனன் போருக்கு செல்கையில் தேவர்கள் அருச்சுனனுக்கு தேவதத்தா என்ற சங்கு ஒன்றை வழங்கினர். இருவரும் தைத்தியர்களின் நகரதத்தை அடைந்ததும், அருச்சுனன் சங்கு ஊதும்போது, நிவாதகவசர்கள் அருச்சுனன் மீது திரிசூலங்கள், ஈட்டிகள் மற்றும் அம்புகளை வீசினர். அருச்சுனன் தனது காண்டீபத்திலிருந்து அம்புகளை எய்து, ஆயிரக்கணக்கான தைத்தியர்களைக் கொன்றான். நிவாதகவச்சர்கள் மாயாஜாலம் செய்து அருச்சுனனின் கண்ணுக்கு தெரியாமல், அருச்சுனன் மீது கனைகளைத் தொடுத்தனர். நிவாதகவசர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அருச்சுனன் தவிக்கும் வேளையில், மாதலி தன்னுடன் கொண்டு வந்த இடியுடன் கூடிய கணைகளைப் பயன்படுத்துமாறு வற்புறுத்தினார். அவ்வாறே அருச்சுனன் செய்த போது, அந்த ஆயுதம் தைத்தியர்களை வென்றது.. ஆனால் பிரம்மா நிவாதகவசர்களுக்கு வழங்கிய வரம் காரணமாக தைத்தியர்கள் காப்பாற்றப்பட்டனர். பிறகு அருச்சுனன் இந்திராதி தேவர்களின் பகைவர்களான காலகேயர்களை போரில் வென்றார்.
இதனையும் காண்க
மாதலி
அசுரர்
தானவர்கள்
தைத்தியர்கள்
காலகேயர்கள்
மேற்கோள்கள்
இந்து தொன்மவியல் மாந்தர்
மகாபாரதக் கதை மாந்தர்கள்
இராமாயணக் கதைமாந்தர்கள் |
683825 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | புல்தானா சட்டமன்ற தொகுதி | புல்தானா சட்டமன்ற தொகுதி (Buldhana Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது புல்தானா மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும்.
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்மகாராட்டிர அரசியல் |
683828 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF | மாதலி | மாதலி, இந்து தொன்மவியலில் தேவர்களின் தலைவன் இந்திரனின் தேரோட்டியும்,. தூதுவரும் ஆவார். காளிதாசன் இயற்றிய அபிஞான சாகுந்தலம் நாடக இலக்கியத்தில், அசுரர்களுக்கு எதிரான போரில், இந்திரனுக்கு ஆதரவாக துஷ்யந்தனை மாதலி அழைத்தார்.பத்ம புராணத்தில், ஆன்மாவின் தன்மை, முதுமை மற்றும் பிற கருத்துக்கள் குறித்து மாதலி மன்னர் யயாதியுடன் உரையாடுகிறார்.
பிறப்பு
வாமன புராணத்தில் மாதலியின் பிறப்பு பற்றிய கதை உள்ளது. முனிவர் ஷமீகருக்கும்-தபஸ்வினிக்கும் பிறந்த குழந்தையே மாதலி ஆவார். இந்திரன் மாதலியை தனது தேரோட்டியாக ஏற்றுக்கொண்டான்.
மகாபலிச் சக்கரவர்த்தியுடனான போரில்
பாகவத புராணத்தில் இந்திரன் தலைமையிலான தேவர்கள், மகாபலி சக்கரவர்த்திக்கு எதிரான போரில், ஜம்பா எனும் அசுரன் இந்திரனின் தேரோட்டி மாதலியை தனது எரி ஈட்டியால் தாக்கினான். இதனால் மாதலி வலியால் துடித்தார்.அதைக் கண்டு கோபமடைந்த இந்திரன் அசுரனுக்கு எதிராக தனது வஜ்ராயுதத்தால் தாக்கி ஜம்பாவின் தலையை துண்டித்தான்.
இராமாயணம்
இராமாயணத்தின், யுத்த காண்டத்தில், இராவணன் தன் தேரில் ஏறி, தரையில் நின்றிருந்த இராமருடன் போரிட்டுக் கொண்டிருந்தான். இதனைக் கண்ட இந்திரன் இராமருக்கு உதவி செய்ய தனது தேரோட்டி மாதலி மூலம் தனது தேரை இராமருக்கு அனுப்பி வைத்தான்.
மகாபாரதம்
மகாபாரதத்தில் சிவபெருமானிடமிருந்து தவம் செய்து பாசுபத அஸ்திரத்தை பெற்ற அருச்சுனனை, இந்திரனின் ஆணைப்படி, மாதலி அருச்சுனனை தேரில் அமர்த்தி, இந்திரனின் வசிப்பிடமான அமராவதிக்கு அழைத்துச் சென்றான்இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க, மாதலி தேரோட்ட அருச்சுனன் நிவாதகவசர்ளை போரில் வென்றான்.
இதனையும் காண்க
காலகேயர்கள்
நிவாதகவசர்கள்
மேற்கோள்கள்
இந்து தொன்மவியல் மாந்தர்
மகாபாரதக் கதை மாந்தர்கள்
இராமாயணக் கதைமாந்தர்கள் |
683829 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | சிக்லி சட்டமன்றத் தொகுதி | சிக்லி சட்டமன்றத் தொகுதி (Chikhali Assembly constituency) என்பது மகாராட்டிர சட்டப் பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது புல்தானா மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும்.
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்மகாராட்டிர அரசியல் |
683832 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81 | மையோசோரெக்சு | மையோசோரெக்சு (Myosorex) என்பது சோசிடே (மூஞ்சூறு) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி பேரினமாகும். மொத்தமாகச் சுண்டெலி மூஞ்சூறு என்று குறிப்பிடப்படும் இந்தப் பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன.
பாபோல்ட்டி சுண்டெலி மூஞ்சூறு, மை. பாபௌல்டி
மோன்டேன் சுண்டெலி மூஞ்சூறு, மை. பிளாரினா
புருரி வன மூஞ்சூறு, மை. புருரியென்சிசு
இருண்ட பாத சுண்டெலி மூஞ்சூறு, மை. கேபர்
ஐசன்ட்ராட்டி சுண்டெலி மூஞ்சூறு, மை. ஐசன்ட்ராட்டி
கியாட்டா சுண்டெலி மூஞ்சூறு, மை. கியாட்டா
நைகா சுண்டெலி மூஞ்சூறு/நைகா வளைய மூஞ்சூறு, மை. குனோசுகி
காகுசி சதுப்பு மூஞ்சூறு, மை. ஜெஜி
கபோகோ சுண்டெலி மூஞ்சூறு மை. கபோகோன்சிசு
கிகெளல் சுண்டெலி மூஞ்சூறு, மை. கிகெளலேய்
நீண்ட வால் வன மூஞ்சூறு, மை. லாங்கிகாடாடசு
மீசுடர் வன மூஞ்சூறு, மை. மீசுடெரி
ஓகு சுண்டெலி மூஞ்சூறு, மை. ஒகுயென்சிசு
இரம்பி சுண்டெலி மூஞ்சூறு, மை. ரம்பி
சாலர் சுண்டெலி மூஞ்சூறு, மை. சல்லேரி
இசுக்லேட்டர் சுண்டெலி மூஞ்சூறு், மை. இசுக்லடெரி
மெல்லிய சுண்டெலி மூஞ்சூறு, மை. தென்யூசு
வன மூஞ்சூறு, மை. வாரியசு
கிளிமஞ்சாரோ சுண்டெலி மூஞ்சூறு, மை. ஜிங்கி
மேற்கோள்கள்
பாலூட்டிப் பேரினங்கள் |
683834 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29 | அமராவதி (இந்திரலோகம்) | அமராவதி என்பதற்கு என்றும் அழியாத நகரம் என்று பொருள். இந்நகரம் தேவர்களின் தலைவரான இந்திரன் தனது மனைவி இந்திராணியுடன் வாழுமிடம்.இந்நகரம் தேவ உலகத்தின் தலைநகரம் ஆகும்.
விளக்கம்
இந்து தொன்மவியல்படி, பிரம்மாவின் மகனும், தேவர்களின் கட்டிடக் கலைஞருமான விஸ்வகர்மா நிறுவிய நகரமே அமராவதி ஆகும். அமராவதி பட்டணத்தில் நறுமலர்கள் கொண்ட பூந்தோட்டங்களும், சாகா வரம் அளிக்கும் அமிர்தம், விருப்பத்தை நிறைவேற்றும் கற்பக விருட்சம், கேட்டதை தரும் காமதேனு, நடனமாட அழகிய அரம்பையர்கள், இன்னிசைக்க கந்தர்வர்கள், இந்திரன் ஏறிவரும் வெள்ளை யானை மற்றும் உச்சைசிரவஸ் எனும் வெள்ளைக் குதிரை உள்ளது. இந்த அமராவதி பட்டிணம் எண்ணூறு மைல் சுற்றளவும் நாற்பது மைல் உயரமும் கொண்டது.இந்த அமராவதி பட்டிணத்தை பல முறை அசுரர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது.
அமராவதி நகரத்திற்கு மனிதர்கள் செல்ல அனுமதி இல்லை. இருப்பினும் தேவர்களுக்கு இணையான மனிதர்களான நகுசன், யயாதி, அருச்சுனன் போன்றவர்கள் அமராவதி நகரத்திற்கு சென்று வந்தவர்களே.அமராவதி பட்டணத்தின் தூண்கள் வைரத்தால் மின்னும்.அமரும் ஆசனங்கள் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்திரனின் சபா மண்டபமானது, முப்பத்தி மூன்று தேவர்கள், 48 ஆயிரம் ரிஷிகள் அமரத்தக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
புராணங்களில்
கந்த புராணம்
கந்த புராணத்தில் அமராவதி பட்டணம் குறித்து விரிவாக விளக்கியுள்ளது:
பிரம்ம புராணம்
பிரம்ம புராணத்தில் துவாரகை நகரத்தை நிறுவிய கிருஷ்ணர், அமராவதி பட்டணம் குறித்து விளக்குகையில் தெய்வீக நகரமான அமராவதி நூற்றுக்கணக்கான ஏரிகளும், நூற்றுக்கணக்கான பெரிய அரண்மனைகளும், பிரம்மாண்டமான பூங்காக்கள் மற்றும் வெளிப்புற சுவர்களைக் கொண்டுள்ளது.
இதனையும் காண்க
சொர்க்கம்
தேவ உலகம்
திருப்பரமபதம்
திருப்பாற்கடல்
பிரம்ம லோகம்
கயிலை மலை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இந்து தொன்மவியல் இடங்கள் |
683835 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | சிந்த்கேட் ராசா சட்டமன்றத் தொகுதி | சிந்த்கேட் ராசா சட்டமன்றத் தொகுதி (Sindkhed Raja Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது புல்தானா மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும்.
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்மகாராட்டிர அரசியல் |
683839 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81 | வான் ஆறு | வான் ஆறு (Vaan River) மத்திய இந்தியாவில் ஓடும் ஓர் ஆறு ஆகும். இது தப்தி ஆற்றின் முக்கிய துணை ஆறான பூர்ணா ஆற்றின் துணை ஆறாகும். இது வான் அல்லது வன் என்றும் உச்சரிக்கப்படுகிறது. இது வான்கங்கா என்றும் அழைக்கப்படுகிறது.
விளக்கம்
வான் ஆறு மகாராட்டிரா மாநிலத்தின் அமராவதி மாவட்டத்தில் உள்ள கிழக்கு சத்புரா மலைத்தொடரின் கவில்கர் மலைகளில் உருவாகி, தெற்கு நோக்கிப் பாய்ந்து, அமராவதி, அகோலா மற்றும் புல்தானா பிராந்தியத்தில் வடிநிலத்தினைக்கொண்டு, மகாராட்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள பூர்ணா ஆற்றில் கலக்கிறது. இந்த நீர்நிலைகள் பெரும்பாலும் மகாராட்டிரா மாநிலத்தின் இந்த மூன்று மாவட்டங்களில் உள்ளன.
வான் ஆற்றின் மீது அகோலாவில் உள்ள வாரியில் வான் அணை உள்ளது. பின்வரும் கிராமங்களான வாரி பைரோகட், வார்கேட், சகோடா, தனாபூர், வாட்கான் பிரா அட்கான், கோலாட், காடேட், காகன்வாடா பக், காகன்வடா கே, வான்கெட், படுர்தா ஆகியன வான் ஆற்றின் கரையில் அமைந்துள்ளன.
மகாராட்டிரா மாநில நெடுஞ்சாலைகளான ம. மா. நெ. சா. 194 வான்கெட் கிராமத்தில் ஆற்றைக் கடக்கிறது. மா. நெ. 195 காகன்வாடா பி. கே. விற்கும் காகன்வாடா கே கிராமத்திற்கும் இடையில் உள்ளது.
இடங்கள்
வான் ஆற்றின் பெயரால் பல இடங்கள் பெயரிடப்பட்டுள்ளன. அவைகளில் சில:
வான் வனவிலங்கு சரணாலயம்-அமராவதி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வனவிலங்குச் சரணாலயம், மேல்காட் புலிகள் காப்பகத்தின் விரிவாக்கமாகும் இது.
தெற்கு மத்திய ரயில்வேயின் அகோலா-கண்ட்வா பாதையில் உள்ள வான் சாலை தொடருந்து நிலையம் (நிலையக் குறியீடு WND).
அகோலாவில் வாரி என்ற இடத்தில் உள்ள வான் அணை
மேற்கோள்கள்
புல்டாணா மாவட்டம் |
683840 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | மெக்கர் சட்டமன்றத் தொகுதி | மெக்கர் சட்டமன்றத் தொகுதி (Mehkar Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது புல்தானா மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும். இது பட்டியல் சாதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
புல்டாணா மாவட்டம்
மகாராட்டிர அரசியல்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
683842 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | சகோலி சட்டமன்றத் தொகுதி | சகோலி சட்டமன்றத் தொகுதி (Sakoli Assembly constituency) என்பது மத்திய இந்தியாவில் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள 288 மகாராட்டிரா சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி பண்டாரா மாவட்டத்தில் அமைந்துள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.
பண்டாரா மாவட்டத்தில் உள்ள பண்டாரா மற்றும் தும்சார் மற்றும் கோந்தியா மாவட்டத்தில் உள்ள கோந்தியா, அர்ஜுனி மோர்காவ் மற்றும் திரோரா ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுடன் சாகோலி பண்டாரா-கோந்தியா மக்களவைத் தொகுதி ஒரு பகுதியாகும்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
2019
2014
மேலும் காண்க
சாகோளி
மஹாராஷ்டிரா விதான் சபா தொகுதிகளின் பட்டியல்
மேற்கோள்கள்
மகாராட்டிர அரசியல்
பண்டாரா மாவட்டம்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
683843 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D | டெலிகோம் கோபுரம் | டெலிகோம் கோபுரம் (மலாய்; Menara Telekom; ஆங்கிலம்: Telekom Tower) (TM Tower) என்பது மலேசியா, கோலாலம்பூர் மேற்குப் பகுதியில், லெம்பா பந்தாய் புறநகரில், 310.0 மீ (1,017 அடி) உயரத்தில் உள்ள 55-அடுக்கு வானளாவிய கட்டிடமாகும்.
இந்தக் கோபுரம் 2023-ஆம் ஆண்டு வரை, மலேசிய தொலைத்தொடர்புத் துறை நிறுவனமான டெலிகோம் மலேசியாவின் தலைமையகமாக இருந்தது.
முறுக்கப்பட்ட நிலையிலான உயர்க் கட்டிடங்களில் (Tallest Twisted Building), இந்தக் கோபுரம் உலகின் 4-ஆவது நிலையில் உள்ளது. இது மலேசியாவின் ஐந்தாவது உயரமான கட்டிடமாகும். மேலும் இது ஒரு முளைக்கும் மூங்கில் தளிரைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொது
இந்தக் கோபுரம் உலகின் முதல் முறுக்கப்பட்ட நிலையிலான வானளாவிய கட்டிடமாகவும் கருதப்படுகிறது. இது இஜாஸ் கஸ்தூரி அசோசியேட்ஸ் கட்டிடக்கலை நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது; மற்றும் 1998 மற்றும் 2001-ஆம் ஆண்டுகளுக்கு க்கு இடையில் டேவூ கட்டுமான நிறுவனத்தால் (Daewoo Construction) கட்டப்பட்டது.
நான்காவது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அவர்களால், 11 பிப்ரவரி 2003 அன்று இந்தக் கட்டிடம் திறக்கப்பட்டது.
அமைப்பு
கட்டிடத்தைச் சுற்றிலும் ஏறுமுகத்தில் தொங்கும் தோட்டங்கள் உள்ளன. இதைக் கட்டுவதற்கு அமெரிக்க டாலர் $160 மில்லியன் செலவானது.
ஆற்றல் சேமிப்பை ஊக்குவிப்பதற்காக, இந்தக் கோபுரத்தின் சாளரங்கள், சுற்றுச் சூழல் குளிரூட்டும் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
விரைவு மின்தூக்கிகள்
இந்தக் கோபுரத்தில் 2,500 பார்வையாளர்கள் அமரக்கூடிய ஓர் அரங்கம்; ஒரு பெரிய தொழுகைக் கூடம் (Surau) மற்றும் விளையாட்டு அரங்கம் ஆகியவை உள்ளன. கோபுரத்தின் ஒரு தனிச்சிறப்பு அதன் 22 திறந்த வான தோட்டங்கள் ஆகும். ஒவ்வொரு மூன்று மாடிகளுக்கும் ஒரு வான தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது.
அலுவலகத் தளங்கள், வடக்கு தெற்குப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, இரட்டை அடுக்கு விரைவு மின்தூக்கிகள் (Double-deck Elevators) மூலமாகச் சேவை செய்யப்படுகின்றன.
டெலிகோம் மலேசியா
டெலிகோம் மலேசியா என்பது 1984-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு மலேசிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் வானொலி ஒலிபரப்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகளுக்கான தேசிய தொலைத்தொடர்பு அமைப்பாகத் தொடக்கப் பட்டது.
டெலிகோம் மலேசியா நிறுவனம், இன்றைய காலத்தில் அகன்ற அலைவரிசை சேவைகள், கட்டணத் தொலைக்காட்சி மற்றும் இணையச் சேவைகள் போன்றவற்றில் நாட்டின் மிகப்பெரிய சேவையாளராக உருவாகியுள்ளது.
போகுவரத்து
டெலிகோம் கோபுரம், வழித்தடத்தில் உள்ள கெரிஞ்சி எல்ஆர்டி நிலையத்திற்கு நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது
மேலும் இந்தக் கோபுரம், கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன் அந்த இடத்தில்தான் இசுபிரிண்ட் விரைவுச்சாலையும், கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலையும் இணைகின்றன.
காட்சியகம்
டெலிகோம் கோபுரத்தின் 2019-ஆம் ஆண்டு காட்சிப் படங்கள்:
மேலும் காண்க
எக்ஸ்சேஞ்ச் 106 கோபுரம்
கோலாலம்பூர் கோபுரம்
மே பேங்க் கோபுரம்
மெர்டேக்கா 118
துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச்
மெக்சிஸ் கோபுரம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Telekom Malaysia
Menara Telekom on CTBUH Skyscraper Center
Hijjas Kasturi Associates
கோலாலம்பூர்
கோலாலம்பூரில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள்
கோபுரங்கள் |
683844 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | காம்காவ் சட்டமன்றத் தொகுதி | காம்காவ் சட்டமன்றத் தொகுதி (Khamgaon Legislative Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது புல்தானா மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டமன்றத் உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்மகாராட்டிர அரசியல் |
683846 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81 | திரெசுகியோர்னிசு | திரெசுகியோர்னிசு (Threskiornis) என்பது திரெசுகியோரனிதிடே குடும்பத்தைச் சேர்ந்த அரிவாள்மூக்கன், கரையோரப் பறவைகளின் ஒரு பேரினமாகும். இவை தெற்காசியா, ஆத்திரேலிய, சகாரா கீழமை ஆப்பிரிக்கா உள்ளிட்ட பழைய உலகின் வெப்பமான பகுதிகளில் காணப்படுகின்றன. இவை காலனித்துவப் பறவைகளாக உள்ளன. இவை மரம் அல்லது புதரில் குச்சிகளைக் கொண்டு கூடு கட்டி இரண்டு முதல் நான்கு முட்டைகளை இடும். இவை சதுப்பு நிலங்களில் காணப்படும் பல்வேறு மீன், தவளை, ஓட்டுமீன்கள் மற்றும் பூச்சிகளை உணவாகக் கொள்கின்றன. ஆங்கிலத்தில், இவை sacred ibises (புனித அரிவாள்மூக்கன்) என்று அழைக்கப்படுகின்றன. ஆத்திரேலியாவில், நகர்ப்புறத்தில் வசிக்கும் அரிவாள் மூக்கன் பேச்சுவழக்கில் "குப்பைக் கோழிகள்" என்று அழைக்கப்படுகின்றன.
விளக்கம்
முதிர்ச்சியடைந்த திரெசுகியோர்னிசு அரிவாள் மூக்கன்கள் பொதுவாக 75 செ. மீ. நீளமும், வெள்ளை நிற உடல் இறகுகளைக் கொண்டுள்ளன. இறக்கைகளற்ற தலையுடன், கழுத்தும் கால்களும் கருப்பு நிறத்தில் உள்ளன. அலகு தடிமனாகவும் வளைந்ததாகவும் உள்ளது. பாலினங்கள் ஒத்தவை, ஆனால் இளம் வயதுப் பறவைகள் வெண்மையான கழுத்துடன் மந்தமான இறகுகளைக் கொண்டுள்ளன. வைக்கோல்-கழுத்து அரிவாள் மூக்கன் மற்ற இனங்களிலிருந்து இருண்ட மேல் பகுதிகளைக் கொண்டிருப்பதிலிருந்து வேறுபடுகிறது. மேலும் சில நேரங்களில் கார்பிபிசு இசுபின்கோலிசு என கார்பிபிசு (ஜேம்சன், 1835) தனிப் பேரினத்தில் வைக்கப்படுகிறது. பறக்க இயலாத ரீயூனியன் அரிவாள் மூக்கன் 18ஆம் நூற்றாண்டில் அழிந்தது.
சிற்றினங்கள்
மேற்கோள்கள்
அரிவாள் மூக்கன்
பறவைப் பேரினங்கள் |
683847 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%20%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D | குளோரோ அசிட்டிக் அமிலம் | குளோரோ அசிட்டிக் அமிலம் (Chloroacetic acid) என்பது ClCH2CO2H என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மோனோகுளோரோ அசிட்டிக் அமிலம் என்றும் இந்த கரிமக்குளோரின் சேர்மம் அறியப்படுகிறது. கரிமத் தொகுப்பு வினைகளில் இந்த கார்பாக்சிலிக் அமிலம் கட்டுறுப்புத் தொகுதியாகப் பயன்படுகிறது. குளோரோ அசிட்டிக் அமிலம் நிறமற்ற திண்மமாக காணப்படுகிறது. இருகுளோரோ அசிட்டிக் அமிலமும் முக்குளோரோ அசிட்டிக் அமிலமும் இதனுடன் தொடர்புடைய பிற சேர்மங்களாகும்.
தயாரிப்பு
1843 ஆம் ஆண்டு பிரெஞ்சு வேதியியலாளர் பெலிக்சு லெப்லாங்கு (1813-1886) முதன்முதலில் குளோரோ அசிட்டிக் அமிலத்தை தூய்மையற்ற வடிவத்தில் தயாரித்தார். இதற்காக சூரிய ஒளியின் முன்னிலையில் அசிட்டிக் அமிலத்தை குளோரினேற்றம் செய்தார். 1857 ஆம் ஆண்டில் தூய வடிவத்தில் செருமானிய வேதியியலாளர் ரெய்னோல்டு ஆப்மேன் (1831-1919) குளோரின் மற்றும் சூரிய ஒளியின் முன்னிலையில் உறைநிலை அசிட்டிக் அமிலத்தை பின்னியக்க வினைக்கு உட்படுத்தி தயாரித்தார். பின்னர் பிரெஞ்சு வேதியியலாளர் சார்லசு அடோல்ஃப் வூர்ட்சு குளோரோ அசிட்டைல் குளோரைடை (ClCH2COCl) நீராற்பகுப்பு மூலம் 1857 ஆம் ஆண்டில் தயாரித்தார்.
குளோரோ அசிட்டிக் அமிலம் தொழில் ரீதியாக இரண்டு வழிகளில் தயாரிக்கப்படுகிறது. முக்கிய தயாரிப்பு முறையானது அசிட்டிக் அமிலத்தின் குளோரினேற்றம் ஆகும். இவ்வினையில் அசிட்டிக் நீரிலி ஒரு வினையூக்கியாக உள்ளது:
H3C−COOH + Cl2 → ClH2C−COOH + HCl
இந்த தயாரிப்பு முறையில் இருகுளோரோ அசிட்டிக் அமிலமும் முக்குளோரோ அசிட்டிக் அமிலமும் அசுத்தங்களாக உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றை வடித்தல் மூலம் பிரிப்பது கடினம்:
H3C−COOH + 2 Cl2 → Cl2HC−COOH + 2 HCl
H3C−COOH + 3 Cl2 → Cl3C−COOH + 3 HCl
இரண்டாவது தயாரிப்பு முறை முக்குளோரோ எத்திலீனின் நீராற்பகுப்பை உள்ளடக்கியதாகும்:
ClHC=CCl2 + 2 H2O → ClH2C−COOH + 2 HCl
கந்தக அமிலத்தின் செறிவூட்டப்பட்ட (குறைந்தபட்சம் 75%) கரைசலில் 130-140 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீராற்பகுப்பு நடத்தப்படுகிறது. இந்த முறையானது ஆலசன் வழி தயாரிப்பைப் போலல்லாமல், மிகவும் தூய்மையான தயாரிப்பை உருவாக்குகிறது. இருப்பினும், வெளியிடப்பட்ட கணிசமான அளவு ஐதரசன் குளோரைடு ஆலசனேற்றப் பாதையின் பிரபலத்திற்கு வழிவகுத்தது. உலகளவில் ஆண்டுக்கு சுமார் 420,000 டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
அசிட்டிக் அமிலங்கள்
ஆல்க்கைலேற்றும் முகவர்கள்
கரிமகுளோரைடுகள் |
683850 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81 | திப்பசு | திப்பசு (Dipus) என்பது ஜெர்போவாவினைச் சேர்ந்த ஒரு பேரினம் ஆகும். இன்று ஒரே ஒரு சிற்றினம் மட்டுமே பொதுவாக இப்பேரினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் மூன்று விரல்களுடன் கூடிய ஜெர்போவா (திப்பசு சஜிட்டா) நடு ஆசியா முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. சில வகைப்பாட்டியலாளர்கள் இரண்டாவது சிற்றினமான மேற்கு சீனா கைடம் வடிநிலத்தைச் சேர்ந்த கைதம் மூன்று-விரல் ஜெர்போவா (திப்பசு தேசியூ) சிற்றினத்தை அடையாளம் கண்டுள்ளனர். இந்தப் பேரினத்தில் மயோசீன் காலத்தைச் சேர்ந்த புதைபடிவப் பதிவுகள் உள்ளன. ஆசியாவிலிருந்து அறியப்பட்ட பல அழிந்துபோன சிற்றினங்களும் உள்ளன. மிகப் பழமையான சிற்றினம் திப்பசு காண்டிட்டர் ஆகும்.
மேற்கோள்கள்
பாலூட்டிப் பேரினங்கள் |
683854 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%29 | புன்னையாடி ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் (வனத்திருப்பதி) | புன்னையாடி ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில் (வன திருப்பதி), தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம்,, ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம், கச்சினாவிளை ஊராட்சியில் உள்ள புன்னையாடி கிராமத்தில் அமைந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் ஆகும். திருமாலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் மூலவர் ஸ்ரீநிவாசப் பெருமாள் என்ற ஆதிநாராயணன் மற்றும் தாயார் பத்மாவதி ஆவர். ஸ்ரீஆதிநாராயணன் (சிவனைத் தழுவிய பெருமாள்) கருவறையிலிருந்து பக்தர்களுக்கு நின்ற வடிவில் அருள்பாலிக்கிறார்.. திருமால் மார்பில் சிவலிங்கம் உள்ளது.
இக்கோயிலில் முருகன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, நரசிம்மர், அனுமன் மற்றும் ஆண்டாள் நாச்சியாருகு தனித்தனி சன்னதிகள் உள்ளது. கோயில் நுழைவாயிலில் இராஜ விநாயகருக்கு தனிச்சன்னதி அமைந்துள்ளது. இக்கோயிலின் தல விருட்சம் புன்னை மரம் ஆகும். இக்கோயில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வழிபாட்டிற்கு திறந்திருக்கும். இக்கோயில் சுற்றிலும் புன்னை மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளது.
இக்கோயிலுக்கு தெற்கே 12.4 கிலோ மீட்டர் தொலைவில் தேரி செம்மணல் மேடுகள் 5 முதல் 50 அடி வரை உயரம் வரை 8,000 எக்டேர் பரப்பளவில் உள்ளது..
அமைவிடம்
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்த இந்த வனத்திருப்பதிக் கோயில் திருச்செந்தூருக்கு வடமேற்கே 17 கிலோ மீட்டர் தொலைவிலும்; தூத்துக்குடிக்கு தெற்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலும்; திருநெல்வேலிக்கு தென்கிழக்கே 37 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. அருகில் அமைந்த பேரூராட்சிகள்: காயல்பட்டினத்திற்கு (மேற்கில் 15 கிமீ)., ஆழ்வார்திருநகரிக்கு கிழக்கே 13 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
வரலாறு
பழமையான இக்கோயில் முன்னர் சிறிய அளவில் இருந்தது. திருமுருக கிருபானந்த வாரியாரின் ஆலோசனையின் பேரில், புன்னையாடி கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபர் சரவண பவன் ராஜகோபாலனின் தலைமையிலான திருப்பணிக்குழு, 23,000 சதுர அடியில் பழைய கோவிலுக்குப் பதிலாக கட்டப்பட்ட புதிய கோயிலில் திருவிழா மண்டபம், பிரகார மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், பிரதான கோபுரம்-ராஜகோபுரம். மற்றும் கருவறை மண்டபங்கள் நிறுவப்பட்டது. மேலும் இக்கோயிலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் அழகிய முறையில் செதுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதிகள்
தொடருந்து நிலையங்கள்
புன்னையாடி கிராமத்திற்கு அருகில் உள்ள தொடருந்து நிலையங்கள் பின்வருமாறு:
குறும்பூர் தொடருந்து நிலையம் - 3 கிலோ மீட்டர்
நாசரேத்து தொடருந்து நிலையம் 5 கிமீ.
ஆறுமுகநேரி தொடருந்து நிலையம் 8 கிமீ.
ஆழ்வார்திருநகரி தொடருந்து நிலையம் 9 கிமீ
பேருந்துகள்
புன்னையாடி கிராமத்திலிருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர், காயல்பட்டினம், குறும்பூர், நாசரேத்து, ஆறுமுகநேரி, மற்றும் ஆழ்வார்திருநகரி செல்வதற்கு பேருந்து வசதிகள் உள்ளது.
உணவகங்கள்
இக்கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் மறைந்த தொழிலதிபர் சரவண பவன் பி. ராஜகோபாலன் ஆவார். அவரது உணவகத்தின் கிளை இக்கிராமத்தில் உள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
தமிழகத்தின் அழகிய வனத்திருப்பதி கோயில் - காணொளி
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள் |
683857 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF | புன்னையாடி | புன்னையாடி, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், (ஆத்தூர் குறுவட்டத்தில்)ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம், கச்சினாவிளை ஊராட்சியில் அமைந்துள்ளது.இக்கிராமத்தில் அதிகம் புன்னை மரங்கள் கொண்டுள்ளது. இக்கிராமத்தில் வனத்திருப்பதி ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் உள்ளது. இக்கிராமத்திற்கு தெற்கே 12.4 கிலோ மீட்டர் தொலைவில் தேரி செம்மணல் மேடுகள் 8,000 எக்டேர் பரப்பளவில் உள்ளது.
அமைவிடம்
புன்னையாடி கிராமம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இது திருச்செந்தூருக்கு வடமேற்கே 17 கிலோ மீட்டர் தொலைவிலும்; தூத்துக்குடிக்கு தெற்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலும்; திருநெல்வேலிக்கு தென்கிழக்கே 37 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. அருகில் அமைந்த ஊர்கள்: காயல்பட்டினம் (15 கிமீ)., ஆழ்வார்திருநகரி 13 (கிலோ மீட்டர்)
தொடருந்து வசதிகள்
புன்னையாடி கிராமத்திற்கு அருகில் உள்ள தொடருந்து நிலையங்கள் பின்வருமாறு:
குறும்பூர் தொடருந்து நிலையம் - 3 கிலோ மீட்டர்**
நாசரேத்து தொடருந்து நிலையம் 5 கிமீ.
ஆறுமுகநேரி தொடருந்து நிலையம் 8 கிமீ.
ஆழ்வார்திருநகரி தொடருந்து நிலையம் 9 கிமீ
உணவகங்கள்
இக்கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் மறைந்த தொழிலதிபர் சரவண பவன் பி. ராஜகோபாலன் ஆவார். அவரது உணவகத்தின் கிளை இக்கிராமத்தில் உள்ளது.
மேற்கோள்கள்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள் |
683861 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%203 | பெட்ரோனாஸ் கோபுரம் 3 | பெட்ரோனாஸ் கோபுரம் 3 (மலாய்; Menara Petronas 3; ஆங்கிலம்: Petronas Tower 3) (Carigali Tower) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் மாநகர மையத்தில் (Kuala Lumpur City Centre) (KLCC), 267 மீ (876 அடி) உயரத்தில் உள்ள 60-அடுக்கு வானளாவிய கட்டிடமாகும்.
இந்தக் கோபுரம் மலேசியாவின் எட்டாவது உயரமான கட்டிடமாகும். மேலும் இந்தக் கோபுரம், பெட்ரோனாஸ் கோபுரங்களின் வளாகத்தில் (Petronas Towers Complex) ஒரு பகுதியாகும்.
இந்தக் கட்டிடத்தின் கீழே உள்ள 6- மாடிகள் வரைக்கும் சூரியா கேஎல்சிசி (Suria KLCC) வணிக வளாகத்திற்கு உட்பட்டவை; அதற்கும் மேலே உள்ள மற்ற மாடித் தளங்கள் அலுவலக இடங்களைக் கொண்டவையாகும்.
பொது
இந்தக் கட்டிடத்தில் பெட்ரோனாஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான பெட்ரோனாஸ் சாரிகாலி (Petronas Carigali) நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது; மற்றும் மைக்ரோசாப்ட் மலேசியா (Microsoft Malaysia) போன்ற பிற பன்னாட்டு நிறுவனங்களின் உள்ளூர் துணை நிறுவனங்களும் உள்ளன.
பெட்ரோனாஸ் கோபுரம் 3 கோபுரத்தின் கட்டுமானத் திட்டத்தில் தற்போது இரண்டாம் கட்டம் நடைபெற்று வருகிறது.
இரண்டாம் கட்டத் திட்டம்
இந்த இரண்டாம் கட்டத் திட்டத்தில் லாட் சி (Lot C) எனும் வணிக வளாகம்; பிஞ்சாய் ஆன் தி பார்க் (Binjai On The Park) எனும் சொகுசு மாளிகைக் கட்டுமானத் துணைத் திட்டமும் அடங்கும்.
இந்த மேம்பாட்டுத் திட்டத்திற்கான செலவு ரிங்கிட் 1 பில்லியன் (ரிங்கிட் 1,000 மில்லியன்) என மதிப்பிடப்பட்டு உள்ளது.
கட்டுமானம்
முதலாம் கட்டக் கட்டுமானம் 2006-இன் இறுதியில் தொடங்கப்பட்டு 2012-இல் நிறைவடைந்தது. தற்போது இரண்டாம் கட்டக் கட்டுமானம் நடைபெற்று வருகிறது.
பெட்ரோனாஸ்
பெட்ரோலியம் நேசனல் பெர்காட் (Petroliam Nasional Berhad) என்பதின் சுருக்கமே பெட்ரோனாஸ் ஆகும். இது ஆகத்து 17, 1974-இல் நிறுவப்பட்ட மலேசிய எண்ணெய் மற்றும் கனிவள நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் முற்றிலும் மலேசிய அரசாங்கத்திற்கு உரிமையானது. மலேசிய நாட்டின் எண்ணெய் வளங்களைக் கண்டறிவதும் பராமரிப்பதையும் பெட்ரோனாஸ் நிறுவனம்நோக்கமாக கொண்டுள்ளது.
சொத்து மதிப்பு
பார்ச்சூன் இதழ் வெளியிடும் உலகின் 500 மிகப்பெரிய நிறுவனங்கள் பட்டியலில், பெட்ரோனாஸ் நிறுவனம் 2022-ஆம் ஆண்டில் 216-ஆவதாகவும், 2021-ஆம் ஆண்டில் 277-ஆவதாகவும் இடம்பெற்றுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பெட்ரோனாஸ், அமெரிக்க டாலர் US$152.50 பில்லியன் (ரிங்கிட் RM679.70 பில்லியன்) மொத்த சொத்துக்களைக் கொண்டுள்ளது; மற்றும் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.
காட்சியகம்
பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களுக்கு இடது புறத்தில்: பெட்ரோனாஸ் கோபுரம் 3; அதன் காட்சிப் படங்கள்:
மேலும் காண்க
பெட்ரோனாஸ் கோபுரங்கள்
கோலாலம்பூர் கோபுரம்
மே பேங்க் கோபுரம்
மெர்டேக்கா 118
துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச்
மெக்சிஸ் கோபுரம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
KLCC official website
கோலாலம்பூர்
கோலாலம்பூரில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள்
கோபுரங்கள் |
683870 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | பால்கர் சட்டமன்றத் தொகுதி | பால்கர் சட்டமன்றத் தொகுதி (Palghar Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி பால்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
புவியியல் பரப்பு
பால்கர் சட்டமன்றத் தொகுதியில் தகானு வட்டத்தின் சில பகுதிகள் உள்ளன. அதாவது வருவாய் வட்டங்கள் காசா மற்றும் சின்சானி, பால்கர் வட்டத்தின் சில பகுதிகளான வருவாய் வட்டங்கள் தாராப்பூர், பால்கர் மற்றும் பால்கர் நகராட்சி மன்றம்.{
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
2019
மேற்கோள்கள்
மகாராட்டிர அரசியல்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
683871 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81 | அத்திக்கோடு | அத்திகோடு (Athicode) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இது பாலக்காடு (20 கி. மீ), பொள்ளாச்சி (25 கி. மீ), கோயம்புத்தூர் (35 கி. மீ) சிற்றூர் (16 கி.மீ) ஆகிய நகரங்களுக்கான முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்தக் கிராமத்தில் பாதி கொழிஞ்சம்பறை ஊராட்சியிலும் மறு பாதி நள்ளம்பிள்ளே ஊராட்சியிலும் உள்ளது.
மேற்கோள்கள்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata |
683873 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81 | போசெலாபசு | {{Taxobox
| color = yellow
| name = போசெலாபசு
| fossil_range = பிளியோசீன் பிற்காலம்-முதல்
| image = Nilgai at Ranthambore.jpg
| image_caption = நீலான் (போசெலாபசு திராகோகேமெலசு)
| display_parents = 2
| domain =மெய்க்கருவுயிரி
| regnum = விலங்கு
| divisio = முதுகுநாணி
| classis = பாலூட்டி
| ordo = ஆர்ட்டியோடாக்டிலா
| familia = போவிடே
| genus = போசெலாபசு
| genus_authority =பிளைன்வில்லே, 1816
| type_species = போசெலாபசு திராகோகேமெலசு
| type_species_authority = (பாலாசு, 1766)
| subdivision_ranks = சிற்றினம்
| subdivision =
போசெலாபசு திராகோகேமெலசு - நீலான்
†போசெலாபசு நாமாதிகசு
| synonyms = போர்தக்சு'
}}
போசெலாபசு (Boselaphus) என்பது போவிடே குடும்ப பேரினம் ஆகும். நீலான் மட்டுமே வாழும் சிற்றினம் ஆகும். இருப்பினும் மற்றொரு சிற்றினம் புதைபடிவ பதிவுகளிலிருந்து அறியப்படுகிறது.
நீலானும் நாற்கொம்பு மானும் போசலாபினி'' பழங்குடி உயிரிக்கிளையினைச் சார்ந்த உயிரிகள் ஆகும்.
மேற்கோள்கள்
பாலூட்டிப் பேரினங்கள் |
683874 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%81 | கலேமைசு | கலேமைசு (Galemys) என்பது வாழ்ந்து கொண்டிருக்கும் பைரனியன் தெசுமன் (கலேமைசு பைரனாய்கசு) மற்றும் பல புதைபடிவச் சிற்றினங்களைக் கொண்ட சிற்றெலி பேரினமாகும்.
அழிந்துபோன சிற்றினங்களில் பல உயிருள்ள சிற்றினங்களை விட மிகவும் பரவலாக வாழ்ந்தன. எடுத்துக்காட்டாக, ஆரம்பக்கால பிளிசுடோசீன் கலேமைசு கோர்மோசி பிரித்தானியத் தீவுகள் உட்பட ஐரோப்பாவின் பெரும்பகுதி முழுவதும் நன்னீர் வாழ்விடங்களில் காணப்பட்டது. கலேமைசு அநேகமாக ஆரம்பக்கால பிளோசீனில் அழிந்துபோன ஆர்க்கியோட்சுமனா பேரினத்தைச் சேர்ந்த ஒரு சிற்றினத்திலிருந்து தோன்றியிருக்கலாம்.
மேற்கோள்கள்
பாலூட்டிப் பேரினங்கள் |
683877 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D | சூலனூர் | சூலனூர் (Chulanur) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். சூலனூர் மயில்களுக்குப் புகழ் பெற்றதாகும். இங்கு சூலனூர் மயில்கள் சரணாலயம் என்ற பெயரில் ஒரு சரணாலயம் உள்ளது. கேரளத்தில் மயில்களுக்கு உள்ள ஒரே சரணாலயமான இது இந்த ஊரில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata |
683878 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | சல்காவ் சாமோத் சட்டமன்றத் தொகுதி | சல்காவ் சாமோத் சட்டமன்றத் தொகுதி (Jalgaon Jamod Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது புல்தானா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது புல்தானா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்மகாராட்டிர அரசியல் |
683883 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | புடு எல்ஆர்டி நிலையம் | புடு எல்ஆர்டி நிலையம் அல்லது புடு இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Pudu LRT Station; மலாய்: Stesen LRT Pudu; சீனம்: 半山芭站) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களில் அமைந்துள்ள உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.
அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்பு இஸ்டார் எல்ஆர்டி (STAR-LRT) என அழைக்கப்பட்டன.
அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களையும் ஒருங்கிணைக்கும் நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும்.
பொது
இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் தொடங்கி அம்பாங் எல்ஆர்டி நிலையம் வரையில் 13 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த பிளாசா ராக்யாட் நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 16 டிசம்பர் 1996 அன்று திறக்கப்பட்டது.
கோலாலம்பூர் மாநகர மையத்தில் உள்ள புடு சாலையின் பெயரால் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. ஆங் துவா நிலையத்திற்கு அருகில் இந்த புடு எல்ஆர்டி நிலையம் அமைந்துள்ளது.
இந்த நிலையம் புடு பகுதிக்குச் சேவை செய்யும் அம்பாங்; செரி பெட்டாலிங் வழித்தட நிலையங்களில் ஒன்றாகும்; மற்றவை ஆங் துவா நிலையம் மற்றும் சான் சோவ் லின் எல்ஆர்டி நிலையம் ஆகிய இரு நிலையங்கள் ஆகும்.
அமைவு
புடு எல்ஆர்டி நிலையம் என்பது புடு நகரத்தின் எதிரே உள்ள கடைவீதிகளின் வரிசைக்குப் பின்னால், சரவாக் சாலையின் மருங்கில் அமைந்துள்ளது.
அத்துடன், நிலையத்தின் தென்மேற்கில் உள்ள சான் பெங் சாலை வழியாகவும்; நிலையத்தின் தென்கிழக்கில் உள்ள சுங்கை பீசி வழியாகவும் இந்த நிலையத்தை அணுகலாம்.
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.
பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்த வழித்தடங்கள் இயக்கப்படுகின்றன.
காட்சியகம்
புடு எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2024)
மேலும் காண்க
கோலாலம்பூர் சாலைகளின் பட்டியல்
கோலாலம்பூர் மாநகர மையம்
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
மலேசிய தொடருந்து போக்குவரத்து
கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மலேசியத் தொடருந்து நிலையங்கள்
கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள் |
683884 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | அகோட் சட்டமன்றத் தொகுதி | அகோட் சட்டமன்றத் தொகுதி (Akot Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையின் 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அகோலா மாவட்டத்தில் அமைந்துள்ள ஐந்து தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
அகோலா மாவட்டம்
மகாராட்டிர அரசியல்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
683892 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D | பிகாரி தாக்கூர் | பிகாரி தாக்கூர் (Bhikhari Thakur) (18 டிசம்பர் 1887-10 ஜூலை 1971) ஒரு இந்திய போச்புரி மொழிக் கவிஞரும், நாடக ஆசிரியரும், பாடலாசிரியரும், நடிகரும், நாட்டுப்புற நடனக் கலைஞரும், நாட்டுப்புறப் பாடகரும் மற்றும் சமூக ஆர்வலரும் ஆவார். இவர் போச்புரி மொழியின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகவும், பூர்வாஞ்சல் மற்றும் பீகாரின் மிகவும் பிரபலமான நாட்டுப்புற எழுத்தாளராகவும் பரவலாகக் கருதப்படுகிறார். தாக்கூர் பெரும்பாலும் “போச்புரியின் சேக்சுபியர்” என்று “ராவ் பகதூர்” என்று அழைக்கப்படுகிறார். இவரது படைப்புகளில் பனிரெண்டு நாடகங்கள், தனி பாத்திரத்தின் உரையாடல், கவிதைகள் மற்றும் பஜனைகள் ஆகியவை அடங்கும், இவை அனைத்தும் புத்தகங்களில் அச்சிடப்பட்டன. பிடேசியா, கபர்கிச்சோர், பேட்டி பெச்வா மற்றும் பாய் பிரோத் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் அடங்கும். கபர்கிச்சோர் பெரும்பாலும் பெர்தோல்ட் பிரெக்ட்டின் தி காகசியன் சாக் சர்க்கிள் என்ற நாடகத்துடன் ஒப்பிடப்படுகிறது. நாச் பாணி நாட்டுப்புற நாடகப் பாரம்பரியத்தின் தந்தை என்று தாக்கூர் அறியப்படுகிறார். பெண் வேடங்களில் முதன்முதலில் நடித்த ஆண் நடிகர்களில் இவரும் ஒருவர்.
படைப்புகள்
தாக்கூரின் படைப்பில் ஒடுக்குமுறை, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான கருத்துகள், சாதிவாத மற்றும் ஆணாதிக்க முறை போன்றவைகளுக்கு மறைமுக எதிர்ப்பு இருந்தது. இடப்பெயர்வு, வறுமை, பொருந்தாத திருமணங்கள் ஆகியவையும் இவர் எழுப்பிய முக்கிய பிரச்சினைகளாகும்.
கௌரவங்கள்
சமூகத்தின் யதார்த்தத்தை வெளிப்படுத்தும் இவரது நாடகத்திற்காக பிகாரி தாக்கூர் மிகுந்த பாராட்டைப் பெற்றார். மக்கள் இவரை ராய்பகதூர் மற்றும் போச்புரியின் சேக்சுபியர் போன்ற பட்டங்களுடன் அழைத்தனர். 1944 ஆம் ஆண்டில், பீகார் அரசு இவருக்கு ராவ் பகதூர் என்ற பட்டத்தை வழங்கியது. மேலும் இவருக்கு செப்பு கேடயமும் வழங்கப்பட்டது அசாமைச் சேர்ந்த புகழ்பெற்ற போச்புரி நாட்டுப்புற பாடகியான கல்பனா படோவரி, தாக்கூரின் பாடல்களை தி லெகசி ஆஃப் பிகாரி தாக்கூர் என்ற இசைத் தொகுப்பில் தொகுத்துள்ளார்.
பிகாரி தாக்கூர், கீழ் வர்க்கத்தினரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் பல சாதி மற்றும் வர்க்கங்களால் எதிர்ப்புக்கு ஆளானர்.
மேற்கோள்கள்
நூலியல்
வெளி இணைப்புகள்
http://www.bhikharithakur.com/
भिखारी ठाकुर के व्यक्तित्व और कृतित्व पर समर्पित जाल स्थल (bidesia.co.in)
सूत्रधार (भिखारी ठाकुर के जीवन पर सुप्रसिद्ध कथाकार
भिखारी ठाकुर कृत बिदेसिया नाटक (pdf file)
भिखारी ठाकुर का एकमात्र प्रकाशित साक्षात्कार (बिदेसिया, 1987 में प्रकाशित)
BHOJPURI ARTISTIC TRADITION AND BHOKHARI THAKUR
लोक कला मर्मज्ञ और सुप्रसिद्ध नाटककार जगदीश चंद्र माथुर का भिखारी ठाकुर पर संस्मरण (1971 में प्रकाशित)
एंजोय डर्टी पिक्चर,वी कांट टॉलरेट लौंडा (परिचयात्मक आलेख)
ब्रेख्त,भिखारी,बादल और बोल (भिखारी ठाकुर के रंगमंचीय अवदान पर तुलनात्मक आलेख)
Bhikhari Thakur
1971 இறப்புகள்
1887 பிறப்புகள் |
683897 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%28%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%29 | சாகிப் சிங் (சீக்கிய குரு) | சாகிப் சிங் (Sahib Singh) (17 ஜூன் 1663-7 டிசம்பர் 1704 அல்லது 1705) பாஞ்ச் பியாரே எனப்படும் “ஐந்து அன்புக்குரியவர்கள்” பட்டியலில் இவரும் ஒருவர். நாவி சாதியில் பிறந்த இவர் முன்பு சாகிப் சந்த் என்றும் அழைக்கப்பட்டார்.
இவரது பிறப்பிடம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் குறித்து வெவ்வேறு கருத்துகள் உள்ளன. இருப்பினும் இவர் ஒரு முடிதிருத்தும் குடும்பத்தில் பிறந்தார் என்ற உண்மையை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். சாகிப் சிங், பகத் சைனின் மறுபிறவி என்று ஆரம்பகால சீக்கிய இலக்கியங்கள் கூறுகின்றன. இவர் இன்றைய கர்நாடகாவிலுள்ள பீதரில் பிறந்தார் என பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். பஞ்சாப்பின் ஹோசியார்பூர் மாவட்டத்தில் பிறந்தார் என மகான் கோஷ் கூறுகிறார்.
மேற்கோள்கள்
மேலும் வாசிக்க
Encyclopedia of Sikhism, by Harbans Singh.Published by Punjabi University, Patiala
சீக்கிய குருக்கள் |
683899 | https://ta.wikipedia.org/wiki/1%2C3-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D | 1,3-புரோப்பேன் டைசல்போனிக் அமிலம் | 1,3-புரோப்பேன் டைசல்போனிக் அமிலம் (1,3-Propanedisulfonic acid) என்பது C3H8O6S2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இரண்டு சல்போனேட்டு அலகுகள் இந்த அமிலத்தில் உள்ளன. இதன் உப்புகள் எப்ரோடைசேட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஏஏ அமிலாய்டோசிசு சிறுநீரக செயல்பாட்டின் பாதுகாவலராக இவை மதிப்பிடப்படுகின்றன.
மேற்கோள்கள்
மேலும் காண்க
ஈத்தேன்டைசல்போனிக் அமிலம்
சல்போனிக் அமிலங்கள்
கரிமச் சேர்மங்கள் |
683900 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D | சின்மோய் கிருஷ்ண தாஸ் | சின்மோய் கிருஷ்ண தாஸ், வங்காள தேசத்தவரும், இந்து சமயத் துறவியும், அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் மற்றும் வங்காளதேச சனாதன விழிப்புணர்வு இயக்கத்தைச் சேர்ந்தவரும் ஆவார். பிரோஸ் கான் என்பவர் டாக்கா காவல்துறையில் அளித்த புகார் மனுவின் பேரில், 25 நவம்பர் 2024 அன்று சின்மோய் கிருஷ்ண தாசை தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு டாக்கா சிறையில் அடைக்கப்பட்டார். இவரது கைதை கண்டித்தும், சிறையிலிருந்து விடுதலைச் செய்யக்கோரியும், வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் மேற்கு வங்காள மாநில இந்துக்கள் 26 நவம்பர் 2024 முதல் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
சின்மோய் கிருஷ்ண தாஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவை நீதிமன்றம் ஏற்கவில்லை.
இந்துக்களின் தொடர் போராட்டங்களின் எதிரொலியாக வங்காளதேச அரசு உயர் நீதிமன்றத்தில், அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தை மத அடிப்படைவாத அமைப்பு எனக்காரணம் கூறி, அந்த அமைப்பை தடை செய்யக்கோரி நீதிப்பேராணை கோரியது.. 28 நவம்பர் 2024 அன்று உயர் நீதிமன்றம், அரசின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தது.
இளமை மற்றும் தொழில்
முன்னர் சின்மோய் கிருஷ்ண தாஸ் இஸ்கான் அமைப்பின் மண்டலச் செயலளராக சிட்டகாங்கில் பணியாற்றினார். இவர் தற்போது வங்காளதேச சனாதன விழிப்புணர்வு இயக்கத்தில் சேவையாற்றிவருகிறார். மேலும் இவர் சிட்டகாங் நகரத்தில் புண்டரிக் தாம் ஆசிரமத்தின் காப்பாளராக உள்ளார்.
கைதின் காரணம்
சிட்டகாங் நகரத்தின் புது சந்தை பகுதியில் நடைபெற்ற இந்துக்களின் பேரரணியில், வங்காள தேசியக் கொடியை விட உயரமாகக் காவிக் கொடிகளை உயர்த்தி பிடித்ததால், வங்காளதேச தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.காவல்துறையால் கைது செய்யப்பட்ட இவரை 26 நவம்பர் 2024 அன்று சிட்டகாங் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி சின்மோய் கிருஷ்ண தாசின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, 10 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
பிற கைதுகள்
30 நவம்பர் 2024 அன்று சின்மோய் கிருஷ்ண தாசை சிறையில் சந்தித்து விட்டு திரும்பிய இஸ்கான் துறவிகளான ஆதிபுருஷ் சியாம் தாஸ் மற்றும் ரங்கநாத் தாஸ் ஆகியோர் நீதிமன்ற ஆணை இன்றி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்
மேற்கோள்கள்
நடப்பு நிகழ்வுகள்
இந்துத் துறவிகள்
வாழும் நபர்கள்
வங்காளதேச மக்கள்
இந்து சமயப் பெரியார்கள் |
683901 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | சான் சோவ் லின் நிலையம் | சான் சோவ் லின் நிலையம் (ஆங்கிலம்: Chan Sow Lin Station; மலாய்: Stesen Chan Sow Lin; சீனம்: 陈秀连站) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம்; புத்ராஜெயா வழித்தடம் ஆகிய மூன்று வழித்தடங்களில் அமைந்துள்ள உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.
இந்த நிலையம் அம்பாங் மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்களுக்கான தரநிலை நிலையத்தையும், புத்ராஜெயா வழித்தடத்திற்கான நிலத்தடி நிலையத்தையும் கொண்டுள்ளது. இரண்டு நிலையங்களும் ஓர் உயரமான பாதசாரி நடைபாதையால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையம் கட்டணம் செலுத்தும் ஒருங்கிணைப்பை அனுமதிக்கிறது.
பொது
அம்பாங் வழித்தடம் (செந்தூல் தீமோர்-அம்பாங்) மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடம் (செந்தூல் தீமோர்-புத்ரா அயிட்ஸ்) ஆகிய இரண்டு வழித்தடங்களும் பகிரும் பொதுவான பாதையில் இந்த சான் சோவ் லின் நிலையம் முதல் நிலையம் ஆகும்.
அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்பு இஸ்டார் எல்ஆர்டி (STAR-LRT) என அழைக்கப்பட்டன.
ஒருங்கிணைப்பு நிலத்தடி நிலையம்
அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களையும் ஒருங்கிணைக்கும் நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும்.
இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் தொடங்கி அம்பாங் எல்ஆர்டி நிலையம் வரையில் 13 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த சான் சோவ் லின் நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 16 டிசம்பர் 1996 அன்று திறக்கப்பட்டது.
சான் சோ லின்
கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள சான் சோவ் லின் சாலையின் பெயரால் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. சான் சோ லின் (Chan Sow Lin), 1845-1927) என்பவர் இரும்புத் தொழிலில் ஒரு தொழிலதிபர் ஆகும் அவரின் நினைவாக சான் சோவ் லின் சாலைக்கு பெயரிடப்பட்டது. இவர் மலாயாவில் இரும்பு வேலைகளின் தந்தை என்றும் அறியப்படுகிறார்.
மிகார்ஜா நிலையத்திற்கு (Miharja LRT station) அருகில் இந்த சான் சோவ் லின் நிலையம் அமைந்துள்ளது. புத்ராஜெயா வழித்தடத்தின் கடைசி நிலத்தடி தொடருந்து நிலையம் இந்த சான் சோவ் லின் நிலையம் ஆகும்
புத்ராஜெயா வழித்தடம்
புத்ராஜெயா வழித்தடம் அல்லது புத்ராஜெயா கொமுட்டர் வழித்தடம் (Putrajaya Line) என்பது மலேசியா, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள எம்ஆர்டி (Mass Rapid Transit) தொடருந்து வழித்தடம் ஆகும்.
இந்த வழித்தடம் மலேசிய நாட்டின் மூன்றாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து வழித்தடமாக அறியப்படுகிறது. முன்பு இந்த வழித்தடம் எம்ஆர்டி சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தடம் (MRT Sungai Buloh–Serdang–Putrajaya Line) (SSP Line) என அறியப்பட்டது.
குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையத்தில் இருந்து புத்ராஜெயா சென்ட்ரல் வரை நீண்டு செல்லும் இந்த வழித்தடமானது; செரி டாமன்சாரா, கெப்போங், பத்து, ஈப்போ சாலை, செந்தூல், கம்போங் பாரு, துன் ரசாக் சாலை, கோலாலம்பூர் கோபுரம், துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச், கூச்சாய் லாமா, செரி கெம்பாங்கான் மற்றும் சைபர்ஜெயா போன்ற மக்கள் அடர்த்தியான பகுதிகள் வழியாகச் செல்கிறது.
காட்சியகம்
சான் சோவ் லின் நிலையத்தின் காட்சிப் படங்கள் (2024)
மேலும் காண்க
கோலாலம்பூர் சாலைகளின் பட்டியல்
கோலாலம்பூர் மாநகர மையம்
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
புத்ராஜெயா வழித்தடம்
கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Chan Sow Lin LRT Station – mrt.com.my
மலேசியத் தொடருந்து நிலையங்கள்
கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள் |
683905 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | கோலாப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி | கோலாப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி (Kolhapur South Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் 274 சட்டமன்றத் தொகுதிகள் தொகுதிகளில் ஒன்றாகும். 2008ஆம் ஆண்டு எல்லை நிர்ணயம் மூலம் இந்தத் தொகுதி நிறுவப்பட்டது. இது கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கர்வீர் வட்டம் மற்றும் கோலாப்பூர் மாநகராட்சியின் சில பகுதிகளை உள்ளடக்கியது. கோலாப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி கோலாப்பூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, பாரதிய ஜனதா கட்சியின் அமல் மகாதிக் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
2019
மேலும் காண்க
கோலாப்பூர் மாவட்டம்
மேற்கோள்கள்
மகாராட்டிர அரசியல்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
683909 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE | சோதாலியா | சோதாலியா (Sotalia) என்பது ஓங்கில் பேரினம் ஆகும். 2007ஆம் ஆண்டில் சோதாலியா புளூவியாடிலிசிலிருந்து ஒரு தனித்துவமான சிற்றினமாக சோதாலியா கியனென்சிசு வேறுபடுத்தி வகைப்படுத்தப்பட்டதால் இரண்டு சிற்றினங்களைக் கொண்ட பேரினமாகக் கருதப்படுகிறது. இது சமீபத்திய புறத்தோற்றுரு பகுப்பாய்வுகள் மற்றும் இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோ நியூக்லியிக் காடி பகுப்பாய்வின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டது.
சோதாலியா பேரினத்தின் சிற்றினங்கள் மத்திய மற்றும் தென் அமெரிக்கா அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் கரீபியன் கடற்கரைகளிலும், அமேசான் ஆறு மற்றும் அதன் பெரும்பாலான துணை ஆறுகளிலும் காணப்படுகின்றன.
சிற்றினங்கள்
சோதாலியா புளூவாடிலிசு (கெர்வாய்சு & டெவில்லே, 1853)
சோதாலியா கியனென்சிசு (வான் பெனெடன், 1864) கோசுடெரோ அல்லது கயானா ஓங்கில்
மேற்கோள்கள்
மேலும் வாசிக்க
வெளி இணைப்புகள்
திமிங்கிலம் மற்றும் டால்பின் பாதுகாப்பு சங்கம் (WDCS)
பாலூட்டிப் பேரினங்கள் |
683913 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95 | தனுர திசாநாயக்க | தனுர திசாநாயக்க இலங்கை அரசியல்வாதியும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினரும் ஆவார். கண்டி தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அவர் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தகவல் தொழில்நுட்ப பொறியாளரான இவர், தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். அவர் கண்டி சோசலிச இளைஞர் சங்கத்தின் அமைப்பாளராகவும் உள்ளார்.
தேர்தல் வரலாறு
மேற்கோள்கள்
மக்கள் விடுதலை முன்னணி அரசியல்வாதிகள்
இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி அரசியல்வாதிகள்
வாழும் நபர்கள்
1989 பிறப்புகள் |
683914 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D | நிகழ்காலம் | நிகழ்காலம் (Present tense) என்பது ஒரு காலம் ஆகும், இதன் முக்கியச் செயல்பாடு தற்போதைய நேரத்தில் ஒரு சூழ்நிலை அல்லது நிகழ்வைக் கண்டுபிடிப்பதாகும். தற்போது நிகழும் செயல்களுக்கு நிகழ்காலம் பயன்படுத்தப்படுகிறது. நிகழ்காலம் நான்கு வகைப்படும். அவையாவன,
சாதாரண நிகழ்காலம்: இது வழக்கமாக நிகழும் ஒரு செயல் அல்லது நிகழ்வைக் குறிக்க ஒரு வாக்கியத்தில் பயன்படுத்தப்படுகிறது.குறிக்கப்பட்ட கால அட்டவணை அல்லது ஏற்கனவே திட்டமிடப்பட்ட எதிர்கால நிகழ்வுகளைக் குறிக்க சாதாரண நிகழ்காலம் பயன்படுகிறது. எ.கா: அடுத்த வானூர்தி நாளை காலை 7 மணிக்குப் புறப்படும்.
நிகழ்கால வினைமுற்று: கடந்த காலத்தில் தொடங்கிய நிகழ்வு அண்மையில் நிறைவு பெற்றாலோ குறிப்பிட்ட காலத்தை உணர்த்தாத இறந்தகால நிகழ்வைக் குறிக்கவோ கடந்த காலத்தில் தொடங்கிய நிகழ்வானது நாம் பேசும் போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் எனில் இக்காலம் பயன்படுத்தப்படுகிறது.
தொடர் நிகழ்காலம்: தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு செயலை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது.
முற்றுப் பெற்ற தொடர் நிகழ்காலம்: கடந்த காலத்தில் தொடங்கிய நிகழ்வானது தற்போது வரை தொடரும் போது இந்தக் காலம் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
சீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்
காலங்கள் (இலக்கணம்) |
683916 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF | மூவுருளி மிதிவண்டி | மூவுருளி மிதிவண்டி அல்லது மிதியிழுவை வண்டி (சைக்கிள் ரிக்ஷா), மூவுருளி வண்டியின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு காலால் இயக்கப்படுவது. நகரத்திற்குள் அதிகபட்சம் 3 கிலோ மீட்டர் தொலைவு போக்குவரத்திற்கு மூவுருளி மிதிவண்டிகள் வாடகை வண்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனை ஒருவர் காலால் இயக்க, வண்டியில் ஒருவர் அல்லது இருவர் அமர்ந்து பயணிக்கலாம்.
தற்போது பெட்ரோலால் இயக்கப்படும் ஆட்டோ ரிக்சாக்கள் புழக்கத்திற்கு வந்த பிறகு, மனிதர்கள் பயணிக்கும் மூவுருளி மிதிவண்டிகளின் புழக்கம் அரிதாக உள்ளது.. ஏழைகள் உள்ளூரில் பயன்படுத்தும் இவ்வகை வண்டிகள் இந்தியாவில் சென்னை, வாரணாசி, கொல்கத்தா போன்ற ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத் தலங்களில் காணப்படுகிறது.
வரலாறு
முதல் மூவுருளி மிதிவண்டி 1880களில் உருவாக்கப்பட்டது. இருப்பினும் 1929ல் இவ்வகை வண்டி சிங்கப்பூரில் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தது. 1950களில் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியா நாடுகளில் மூவுருளி மிதிவண்டிகள் உள்ளூர் போக்குவரத்து பயன்பாட்டிற்கு வந்தது. 1980களில் உலகம் முழுவதும் 4 மில்லியன் மூவுருளி மிதிவண்டிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
படக்காட்சிகள்
இதனையும் காண்க
ரிக்ஷா
ஆட்டோ ரிக்சா
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Becak Yogya
மூவுருளி வண்டிகள்
ஊர்திகள்
சாலைப் போக்குவரத்து |
683917 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | மிகார்ஜா எல்ஆர்டி நிலையம் | மிகார்ஜா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Miharja LRT Station; மலாய்: Stesen LRT Miharja; சீனம்: 美和家站) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடத்தில் அமைந்துள்ள உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.
இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள தாமான் மிகார்ஜா எனும் குடியிருப்பு பகுதியின் பெயரில் இருந்து இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. அத்துடன் லோகே இயூ சாலை, கெராயோங் ஆற்றுப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் வளாகமும் இந்த நிலையத்திற்கு அருகில்தான் உள்ளது.
பொது
அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்பு இஸ்டார் எல்ஆர்டி (STAR-LRT) என அழைக்கப்பட்டன.
இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் ஒரு பகுதியாக சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் தொடங்கி அம்பாங் எல்ஆர்டி நிலையம் வரையில் 17 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த மிகார்ஜா எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 16 டிசம்பர் 1996 அன்று திறக்கப்பட்டது.
இந்த நிலையம் மலூரி எல்ஆர்டி நிலையத்துடன் பேருந்து அணுகலையும் கொண்டுள்ளது.
அம்பாங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சான் சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது.
இலகு தொடருந்து இஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.
கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை மலேசிய அரசாங்கம் முன்மொழிந்தது. திசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் இஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
காட்சியகம்
மிகார்ஜா நிலையத்தின் காட்சிப் படங்கள் (2024)
மேலும் காண்க
புடு எல்ஆர்டி நிலையம்
சான் சோவ் லின் நிலையம்
அம்பாங் வழித்தடம்
பண்டாராயா எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர் சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Miharja LRT Station - mrt.com.my
மலேசியத் தொடருந்து நிலையங்கள்
கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள் |
683926 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D | அயிலூர் | ஆயிலூர் (Ayiloor) அல்லது அயலூர் என்று அழைக்கப்படுவது, இந்தியாவின், கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சித்தூர் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். அயிலூலூர் மாவட்ட தலைநகரான பாலக்காடு நகரிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சூரிலிருந்து 48 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
நிருவாகம்
அயிலூர் இதே பெயரிலான கிராம ஊராட்சிக்கு உட்பட்டதாக உள்ளது. இந்த ஊராட்சி தற்போது இடது ஜனநாயக முன்னணியால் (எல். டி. எஃப்) ஆளப்படுகிறது. தற்போதைய ஊராட்சித் தலைவர் எஸ். விக்னேஷ் ஆவார். இவர் திருவழியாட் வார்டிலிருந்து தேர்ந்தெடுக்கபட்டார்.
கல்வி
அரசு மேல்நிலைப்பள்ளி (GUPS), எஸ்.எம் உயர்நிலைப் பள்ளி (SMHS), ஐ.எச்.ஆர்.டி. இன் பயன்பாட்டு அறிவியல் கல்லூரி ஆகியவை அயிலூரில் அமைந்துள்ள முக்கிய கல்வி நிறுவனங்கள் ஆகும். அரசு மேல்நிலைப் பள்ளி 1890 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் முன் துவக்கபள்ளி முதல் 7 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை கல்வி வழங்கப்படுகிறது. 1948 இல் நிறுவப்பட்ட எஸ். எம் உயர்நிலைப் பள்ளியில் 5 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ளது. 2012 சூலையில் நிறுவப்பட்ட பயன்பாட்டு அறிவியல் கல்லூரி கணினி அறிவியல், மின்னணுவியல் மற்றும் வர்த்தகத்தில் இளங்கலைப் படிப்புகளை வழங்குகிறது.
நெம்மறையில் உள்ள என். எஸ். எஸ் கல்லூரி, அயிலூரிலிருந்து 2.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
நலவாழ்வு
200 படுக்கைகள் கொண்ட அவிடிஸ் மருத்துவ அறிவியல் நிறுவனம் என்னும் பல்நோக்கு நிறப்பு மருத்துவமனையானது, அயிலூரிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
பொருளாதாரம்
வேளாண் சார்ந்த பணிகளே இப்பகுதியின் முதன்மை வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக இருந்தது. இருப்பினும், அண்மைய தசாப்தங்களில் சேவை சார்ந்த தொழில்களை மையமாக கொண்ட பொருளாதார மாற்றமும் ஏற்பட்டுள்ளது.
மக்கள்வகைப்பாடு
2011 ஆம் ஆண்டய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அயிலூரின் மொத்த மக்கள் தொகை 8999 ஆகும். இதில் 4394 பேர் ஆண்கள், 4605 பேர் பெண்களாவர்.
மேற்கோள்கள்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata |
683927 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87 | அசோக் உய்கே | அசோக் ராமாஜி உய்கே (Ashok Uike)(பிறப்பு 1 சனவரி 1964) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் மூன்று முறை மகாராட்டிர சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார். இவர் 2014 மகாராட்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் ராலேகான் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட உய்கே சூன் 2019இல் தேவேந்திர பட்னாவிசு அமைச்சரவையில் பழங்குடி மேம்பாட்டு அமைச்சராகப் பதவியேற்றார். உய்கே 2024-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மூன்றாம் முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
மேற்கோள்கள்
சிவ சேனா அரசியல்வாதிகள்
மகாராட்டிரத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
1964 பிறப்புகள்
வாழும் நபர்கள் |
683929 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | இராலேகான் சட்டமன்றத் தொகுதி | இராலேகான் சட்டமன்றத் தொகுதி (Ralegaon Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா சட்டப்பேரவையின் 288 தொகுதிகளில் ஒன்றாகும். மேலும் இது யவத்மாள் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும். இது இராலேகான் நகரத்தினையும் வட்டத்தினையும் உள்ளடக்கியது. இத்தொகுதி பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ராலேகான், கலம்ப் மற்றும் பாபுல்காவ் வட்டங்கள் இராலேகான் சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகின்றன.
இது யவத்மாள்-வாசிம் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இது அருகிலுள்ள வாசிம் மாவட்டத்துடன் வாசிம் சட்டமன்றத் தொகுதி, கரஞ்சா, யவத்மாள் (பகு) திக்ராசு மற்றும் புசாட் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுடன் யவத்மாள்-வாசிம் மக்களவைத் தொகுதியின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
யவத்மாள் மாவட்டம்
மகாராட்டிர அரசியல்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
683932 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%28II%29%20%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 | பாதரசம்(II) அசிடேட்டு | பாதரசம்(II) அசிடேட்டு (Mercury(II) acetate) என்பது Hg(O2CCH3)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அசிட்டிக் அமிலத்தின் பாதரசம்(II) உப்பான இது மெர்குரிக் அசிடேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
பொதுவாக சுருக்கமாக Hg(OAc)2 என்ற வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. நிறைவுறாத கரிம முன்னோடிச் சேர்மங்களிலிருந்து கரிமப்பாதரச சேர்மங்களை உருவாக்க ஒரு வினைபொருளாகப் பாதரசம்(II) அசிடேட்டு பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை நிறத்தில் நீரில் கரையக்கூடிய திடப்பொருளாகக் காணப்படுகிறது. ஆனால் சில மாதிரிகள் சிதைவு காரணமாக காலப்போக்கில் மஞ்சள் நிறமாகத் தோன்றும்.
கட்டமைப்பு
பாதரசம்(II) அசிடேட்டு Hg-O பிணைப்பு தூரம் 2.07 Å கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட Hg(OAc)2 மூலக்கூறுகளைக் கொண்ட ஒரு படிகத் திடப்பொருளாகும். மூன்று நீண்ட, பலவீனமான இடைக்கணிப்பு Hg···O பிணைப்புகள் சுமார் 2.75 Å நீளத்தில் உள்ளன. இதன் விளைவாக Hg இல் சற்று சிதைந்த சதுர பிரமிடு ஒருங்கிணைப்பு வடிவம் உள்ளது.
தயாரிப்பு
பாதரச(II) ஆக்சைடுடன் அசிட்டிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பாதரசம்(II) அசிடேட்டு உருவாகும்.
HgO + 2 CH3COOH → Hg(CH3COO)2 + H2O
கனிமவேதியியல் வினைகள்
அசிட்டிக் அமிலக் கரைசலில் உள்ள பாதரசம்(II) அசிடேட்டு H2S உடன் வினைபுரிந்து HgS சேர்மத்தின் கருப்பு (β) வடிவ உருவத்தை விரைவாகத் தருகிறது. குழம்பை மெதுவாக சூடாக்கினால், கருப்பு திடப்பொருளானது சிவப்பு நிறமாக மாறுகிறது. சின்னபார் கனிமம் சிவப்பு HgS ஆகும். ஐதரசன் சல்பைடைப் பயன்படுத்தி HgS மற்றும் வேறு சில சல்பைடுகளின் வீழ்படிவு தரமான கனிம பகுப்பாய்வில் ஒரு படியாகும்.
கரிமவேதியியல் வினைகள்
எலெக்ட்ரான் நிறைந்த அரீன்கள் Hg(OAc)2 உடன் சேர்த்து சூடுபடுத்தும்போது பாதரசமேற்றத்திற்கு உட்படுகின்றன. இந்த நடத்தை பீனால் சேர்மத்தின் மூலம் விளக்கப்பட்டுள்ளது:
C6H5OH + Hg(OAc)2 → C6H4(OH)-2-HgOAc + HOAc
பாதரசத்துடன் இருக்கும் அசிடேட்டு குழு (OAc) குளோரைடு மூலம் இடமாற்றம் செய்யப்படுகிறது:
C6H4(OH)-2-HgOAc + NaCl → C6H4(OH)-2-HgCl + NaOAc
Hg2+ மையம் ஆல்க்கீன்களுடன் பிணைகிறது, ஐதராக்சைடு மற்றும் ஆல்காக்சைடு சேர்க்கப்படுவதைத் தூண்டுகிறது. எடுத்துக்காட்டாக, மெத்தனாலில் உள்ள பாதரச அசிடேட்டுடன் மெத்தில் அக்ரைலேட்டைச் சேர்த்து சூடுபடுத்தினால் α-பாதரச எசுத்தர் உருவாகிறது:
Hg(OAc)2 + CH2=CHCO2CH3 + CH3OH → CH3OCH2CH(HgOAc)CO2CH3 + HOAc
கந்தக ஈந்தணைவிகளுக்கு பாதரசத்தின்(II) மீதான அதிகப்பிணைப்பு நாட்டத்தைப் பயன்படுத்தி, பாதரசம்(II) அசிடேட்டானது கரிமத் தொகுப்பு வினைகளில் தயோல் குழுக்களைப் பாதுகாப்பதற்கான வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் தயோகார்பனேட்டு எசுத்தர்களை டைதயோகார்பனேட்டுகளாக மாற்றவும் பாதரசம்(II) அசிடேட்டு பயன்படுத்தப்படுகிறது:
(RS)2C=S + H2O + Hg(OAc)2 → (RS)2C=O + HgS + 2 HOAc
ஆல்க்கீனை நடுநிலை ஆல்ககாலாக மாற்றும் ஆக்சிபாதரசமேற்ற வினைகளிலும் பாதரசம்(II) அசிடேட்டு பயன்படுகிறது.
ஐடாக்சுரிடின் என்ற வைரசு எதிர்ப்பு மருந்து தயாரிக்கப் பயன்படுவது பாதரசம்(II) அசிடேட்டின் முக்கியமான பயனாகும்.
நச்சுத்தன்மை
நீரில் கரையும் என்பதாலும் பாதரச அயனிகளைக் கொண்டிருப்பதாலும் பாதரசம்(II) அசிடேட்டு மிகவும் நச்சுத் தன்மை மிகுந்த வேதிச் சேர்மமாகும். புற நரம்பியல், தோல் நிறமாற்றம் மற்றும் சிதைவு (தோல் உரித்தல் மற்றும்/அல்லது உதிர்தல்) ஆகியவை பாதரச நச்சுத்தன்மையின் அறிகுறிகளில் அடங்கும். நாள்பட்ட பாதரசம்(II) அசிடேட்டு வெளிப்பாட்டினால் நுண்ணறிவு குறைதலும் சிறுநீரகச் செயலிழப்பும் ஏற்படலாம்.
மேற்கோள்கள்
அசிட்டேட்டுகள்
பாதரச(II) சேர்மங்கள் |
683943 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88 | திகோனா கோட்டை | வித்தன்காட் என்றும் அழைக்கப்படும் திகோனா(Tikona), என்பது மகாராட்டிராவின் புனே மாவட்டத்திலுள்ள மாவல் எனுமிடத்தில் அமைந்துள்ள ஒரு மலைக்கோட்டை ஆகும். இது புனேவிலிருந்து 60 கிமீ தொலைவிலுள்ள கம்சேத் அருகே அமைந்துள்ளது. கோட்டைக்கு அருகில் உள்ள கிராமம் திகோனா-பெத் என்று அழைக்கப்படுகிறது. 3500 அடி உயரமுள்ள மலையானது பிரமிடு வடிவத்தில் உள்ளது. திகோனா என்ற பெயருக்கு "முக்கோணம்" என்று பொருள்.
கோட்டைக்குள் பெரிய கதவுகள், திரியம்பகேசுவர மகாதேவர் கோயில், ஏழு குளங்கள் மற்றும் சில குகைகளும் உள்ளது. பவனா அணை, துங் கோட்டை, லோகாகாட் மற்றும் விசாபூர் கோட்டை ஆகியவைகளும் இதன் அருகே உள்ளது.
வரலாறு
இந்தக் கோட்டையின் தோற்றம் குறித்து அதிகம் அறியப்படவில்லை. கிபி ஏழாம்-எட்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்த ஒரு புத்த விகாரம் இந்தக் கோட்டையில் உள்ளது. 1585 ஆம் ஆண்டில் நிசாம் சாகி வம்சத்தைச் சேர்ந்த முதலாம் மாலிக் அகமது நிசாம் சா கோட்டையைக் கைப்பற்றி அதை தனது பகுதிகளுடன் இணைத்தார். 1657 ஆம் ஆண்டில், சத்ரபதி சிவாஜி, நிசாமின் கட்டுப்பாடிலிருந்த கொங்கண் பகுதிகள் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். அவர் கர்னாலா, லோகாகாட், மகூலி, சோன்காட், தாலாகாட் மற்றும் விசாபூர் ஆகிய கோட்டைகளுடன் திகோனாவையும் கைப்பற்றினார். இந்த கோட்டை அப்பகுதியில் ஒரு முக்கிய இடமாக இருந்தது. பவனா, மாவல் பகுதி முழுவதற்கும் கட்டுப்பாட்டு மையமாக இருந்தது. 1660 ஆம் ஆண்டில், மாவல் பிராந்தியத்தைச் சேர்ந்த தேஷ்முக் குடும்பத்தினர் திகோனா கோட்டையின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பை ஏற்றனர். கோட்டை நீண்ட காலமாக தமலே தேஷ்முக் குடும்பத்தின் கீழ் இருந்தது. முகலாயப் பேரரசின் முக்கியப் படைத்தலைவர்களில் ஒருவரான முதலாம் ஜெய் சிங் 1665இல் இப்பகுதியின் மீது படையெடுத்து உள்ளூர் கிராமங்களைத் தாக்கினார். 1665 ஜூன் 12 அன்று கையெழுத்திடப்பட்ட புரந்தர் உடன்படிக்கையின்படி, முகலாயத் தளபதி குபாத் கானிடம் திகோனா கோட்டை ஒப்படைக்கப்பட்டது. ஆனால் பின்னர் அது மராட்டியர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டது. 1682இல் சம்பாஜி ஔரங்கசீப்பின் மகன் அக்பரை சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு அக்பருக்கு திகோனா கோட்டையில் தங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், காலநிலை அவருக்கு பொருந்தாததால் அவர் ஜெய்தாப்பூருக்கு மாற்றப்பட்டார். 1818இல் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு மராட்டிய இராணுவத்தின் வசம் இக்கோட்டை இருந்தது.
அணுகல்
புனேவில் இருந்து 51 கிமீ தொலைவில் கம்சேத் என்ற ஊரை அடைந்து அங்கிருந்து கோட்டை அமைந்துள்ள திகோனா-பெத் பகுதிக்குச் செல்லலாம். கோட்டையின் நுழைவாயிலுக்கு அருகிலோ அல்லது கோட்டையின் உச்சியில் உள்ள குகைகளிலோ இரவு தங்கலாம். திகோனா-பெத்திலுள்ள உள்ளூர் கோட்டை மறுசீரமைப்புக் குழுவைச் சேர்ந்த கிராமவாசிகள் இரவு தங்குவதற்கும் உணவு ஏற்பாடுகளுக்கும் நியாயமான விலையில் செய்து தருகின்றனர். கம்சேத்திலிருந்து வரும் வழியில் இருக்கும் பெத்சே குகைகளையும் பார்வையிடலாம்.
புகைப்படங்கள்
மேற்கோள்கள்
மகாராட்டிர கோட்டைகள் |
683945 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88 | துங் கோட்டை | துங் கோட்டை (Tung Fort) அல்லது கதிங்காட் ( கடினமான கோட்டை ) என்பது இந்தியாவின் புனே மாவட்டத்திலுள்ள ஒரு மலைக்கோட்டை ஆகும்.
அமைவிடம்
இது மாளவ்லி தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 12 கி. மீ தொலைவில் உள்ளது, மேலும் லோணாவ்ளாவிலிருந்தும் அணுகலாம். துங் கோட்டை கடல் மட்டத்திலிருந்து 1075 மீட்டர் உயரத்தில் உள்ளது. பவனா ஆற்றில் அணை கட்டப்பட்டதால், இது இப்போது மூன்று பக்கங்களிலும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. பாவ்னா அணையிலிருந்து அதன் அடிப்படை கிராமமான துங்கிக்கு ஒரு படகில் செல்லலாம்.
துங் கோட்டை கதிங்காட் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. மராத்தியில் "கதின்" என்ற வார்த்தைக்கு கடினம் என்று பொருள். ஏறும்போது, இந்த கோட்டையை அடைவதற்கான கடினமான இருப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம். இந்த கோட்டை கூம்பு வடிவமானது. மேலும், மலையின் விளிம்பில் மிகவும் குறுகிய பாதையுடன் செங்குத்தான ஏறுதல்களைக் கொண்டுள்ளது. பாவனா அணையிலிருந்து, இந்த கோட்டையை அடைய 400 மீட்டர் மலையேற வேண்டும்.
லோணாவ்ளாவிலிருந்து, புசி அணை- சிவாஜி-பேத் சாகாபூர்-துங்வாடி வழியாக சுமார் 20 கி. மீ. தொலைவில் உள்ள அடிவார கிராமமான துங்வாடியை அடையலாம். துங்வாடி கிராமத்திலிருந்து, இந்த கோட்டையை அடைய சுமார் 300 மீட்டர் மலையேற வேண்டும்.
வரலாறு
துங் கோட்டை கிபி 1600 க்கு முன்பு கட்டப்பட்டது. இது ஆதில் சாகி வம்சத்தால் கட்டப்பட்டது. பின்னர், பேரரசர் சிவாஜியால் கைப்பற்றப்பட்டது. ஒரு சிறிய கோட்டையான இதில் ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட துருப்புக்களை வைத்திருக்க முடியாது. எனவே, அது நீண்ட காலத்திற்கு தன்னை தற்காத்துக் கொள்ள முடியாமல் போனது. அதன் வடிவம் மற்றும் கட்டமைப்பு காரணமாக மாவல் பிராந்தியத்தில் ஒரு கண்காணிப்பு கோபுரமாகவும் இருந்தது. புனே நகரத்திற்கு செல்லும் சாலையை முல்சி பள்ளத்தாக்குகள் பாதுக்காத்தன. மாவல் பிராந்தியத்தைச் சேர்ந்த தேஷ்முக் குடும்பத்தைச் சேர்ந்த தமாலே குடும்பத்தினர் துங் கோட்டையின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பை வைத்திருந்தனர். எதிரிகளின் படையெடுப்பின் போது, படையெடுப்பாளர்களுக்கு தற்காலிக கவனச்சிதறலை வழங்க இது உதவியது. எனவே, விசாபூர் மற்றும் லோகாகாட்டின் முக்கிய கோட்டைகள் படையெடுக்கும் இராணுவத்தை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக் கொண்டது.
மேற்கோள்கள்
Coordinates on Wikidata
மகாராட்டிர கோட்டைகள் |
683951 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D | தாலாகாட் | தாலாகாட் (Talagad) என்பது இந்திய மாநிலமான மகாராட்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் ரோகா-தாலா-இந்தாபூர் சாலையில் ரோகா நகருக்கு தெற்கே 18 கிமீ தொலைவில் அமைந்துள்ள கோட்டை ஆகும். இந்த கோட்டை 1000 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோட்டை 20 மீட்டர் அகலத்தில் ஒரு குறுகிய துண்டு வடிவத்தில் உள்ளது. இந்த கோட்டை ஒரு குறுகிய முடுக்கில் அமைந்துள்ளது. இது கோட்டைகளால் பாதுகாக்கப்படுகிறது. இந்த கோட்டை எதிரிகளை கண்காணிக்கவும், மாவலிருந்து சுற்றியுள்ள துறைமுகங்களுக்கு செல்லும் வர்த்தக பாதையை கண்காணிக்க உதவியது. மேலும் இந்த கோட்டை ஜஞ்சிராவின் சித்தியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க பயன்படுத்தப்பட்டது. இந்த கோட்டையிலிருந்து கோசலேகாட் கோட்டையையும் காணலாம்.
வரலாறு
இந்தக் கோட்டையின் தோற்றம் குறித்து அதிகம் அறியப்படவில்லை. 1585 ஆம் ஆண்டில் நிசாம் சாகி வம்சத்தைச் சேர்ந்த முதலாம் மாலிக் அகமது நிசாம் சா கோட்டையைக் கைப்பற்றி அதை தனது பகுதிகளுடன் இணைத்தார். 1657 ஆம் ஆண்டில், சத்ரபதி சிவாஜி, நிசாமின் கட்டுப்பாடிலிருந்த கொங்கண் பகுதிகள் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். 1659இல் பிரதாப்காட்டில் சிவாஜியைக் கொல்ல அப்சல் கான் முயன்றபோது இந்த கோட்டை ஜஞ்சிராவின் சித்தியர்களின் படைகளால் சூழப்பட்டது. இருப்பினும் சிவாஜி அப்சால்கானைக் கொன்றார். இதையடுத்து கையெழுத்திடப்பட்ட புரந்தர் உடன்படிக்கையின்படி, சிவாஜியிடம் மற்ற கோட்டைகளை ஒப்படைக்கும்போது இந்தக் கோட்டையும் ஒப்படைக்கப்பட்டது. சிவாஜியின் மரணத்திற்குப் பிறகு இந்த கோட்டை சித்தியர்களால் கைப்பற்றப்பட்டது. 1735இல் முதலாம் பேஷ்வா பாஜிராவ் இந்த கோட்டையை கைப்பற்றினார். இறுதியாக, ஆங்கிலேய கர்னல் பிரோதர் 1818இல் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினார். சிவாஜி முடிசூட்டும்போது அணிந்திருந்த ஆடைகள் இந்தக் கோட்டையிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
புகைப்படங்கள்
மேற்கோள்கள்
மகாராட்டிர கோட்டைகள் |
683955 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88 | கோசலேகாட் கோட்டை | கோசலேகாட் கோட்டை (Ghosalegad Fort) மகாராட்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் ரோகா-பால்கான்-முருத் சாலையில் ரோகா நகருக்கு தெற்கே 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோட்டை 20 மீட்டர் அகலத்தில் ஒரு குறுகிய துண்டு வடிவத்தில் உள்ளது. இந்த கோட்டை ஒரு குறுகிய முடுக்கில் அமைந்துள்ளது. இது கோட்டைகளால் பாதுகாக்கப்படுகிறது. இந்த கோட்டை எதிரிகளை கண்காணிக்கவும், மாவலிருந்து கடல் துறைமுகங்கள் வரையிலான வர்த்தக பாதையை கண்காணிக்கவும் உதவியது. மேலும் இந்த கோட்டை ஜஞ்சிராவின் சித்தியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க பயன்படுத்தப்பட்டது. இந்த கோட்டையிலிருந்து தாலாகாட் கோட்டையையும் காணலாம்.
வரலாறு
இந்தக் கோட்டையை யார் கட்டினார்கள் என்பது தெரியவில்லை. 1585 ஆம் ஆண்டில் நிசாம் சாகி வம்சத்தைச் சேர்ந்த முதலாம் மாலிக் அகமது நிசாம் சா கோட்டையைக் கைப்பற்றி அதை தனது பகுதிகளுடன் இணைத்தார். பின்னர்,1648இல் சிவாஜி மன்னர் இந்தக் கோட்டையை வென்றார். 1657 ஆம் ஆண்டில், சத்ரபதி சிவாஜி, நிசாமின் கட்டுப்பாடிலிருந்த கொங்கண் பகுதிகள் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். 1659இல் பிரதாப்காட்டில் சிவாஜியைக் கொல்ல அப்சல் கான் முயன்றபோது இந்த கோட்டை ஜஞ்சிராவின் சித்தியர்களின் படைகளால் சூழப்பட்டது. இருப்பினும் சிவாஜி அப்சால்கானைக் கொன்றார். இதையடுத்து கையெழுத்திடப்பட்ட புரந்தர் உடன்படிக்கையின்படி, சிவாஜியிடம் மற்ற கோட்டைகளை ஒப்படைக்கும்போது இந்தக் கோட்டையும் ஒப்படைக்கப்பட்டது. சிவாஜியின் மரணத்திற்குப் பிறகு இந்த கோட்டை சித்தியர்களால் கைப்பற்றப்பட்டது. 1735இல் முதலாம் பேஷ்வா பாஜிராவ் இந்த கோட்டையை கைப்பற்றினார். இறுதியாக, ஆங்கிலேய கர்னல் பிரோதர் 1818இல் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினார்.
புகைப்படங்கள்
மேற்கோள்கள்
மகாராட்டிர கோட்டைகள் |
683959 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF | மகூலி | மகூலி (Mahuli) என்பது இந்திய மாநிலமான மகாராட்டிராவின் மும்பையிலிருந்து வடகிழக்கே சுமார் 75 கிமீ தொலைவில் உள்ளது. சிவாஜியின் தந்தை சாகாஜி போஸ்லே இந்த கோட்டையை தனது வசம் வைத்திருந்தார்.
அம்சங்கள்
கடல் மட்டத்திலிருந்து 2815 அடி உயரத்தில் அமைந்துள்ள மகூலி கோட்டை, பிரபலமான மலையேற்றப் பாதையாகும்.
தானே மாவட்டத்தின் மிக உயரமான இடமாகும். மகூலியைச் சுற்றியுள்ள காடு சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு திறந்த சிவன் கோயிலைத் தவிர, அதன் மேல் ஒரு சிறிய வற்றாத குடிநீர் குளம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் மூன்று குகைகளும் உள்ளன. அவற்றில் பெரிய குகை சில நேரங்களில் மகாராட்டிடிராவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள இயற்கையான மலைக் கோட்டைகளைப் போலவே இரவு தங்குமிடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. வரலாற்று ரீதியாக 'கல்யாண் கர்வாஜா' என்று அழைக்கப்படும் ஒரு கல் வளைவும் உள்ளது. ஆனால் வளைவின் குவிமாடம் இப்போது உடைக்கப்பட்டுள்ளது.
அசங்காவ் தொடருந்து நிலையம் மகூலிக்கு அருகிலுள்ளது.
வரலாறு
முகலாயப் பேரரசர் (ஷாஜகான்) இராணுவத்தில் தக்காணப் படையில் சிறிது காலம் பணிபுரிந்த சாகாஜி போஸ்லே தனது மனைவி ஜிஜாபாய் மற்றும் மகன் சிவாஜியுடன் மகூலிக்கு குடிபெயர்ந்தார். கான் ஜமான் கோட்டையைத் தாக்கியபோது, சாகாஜி போர்த்துகேயர்களிடம் உதவி கேட்டார். அவர்கள் மறுத்ததால் சாகாஜி சரணடைந்தார்.
சிவாஜி 1658 ஜனவரி 8 அன்று முகலாயர்களிடமிருந்து இந்தக் கோட்டையைக் கைப்பற்றினார். ஆனால் 1661 இல் அதை இழந்து பின்னர் அதை மீண்டும் வென்றார். 1665ஆம் ஆண்டு புரந்தர் உடன்படிக்கையின் மூலம், மராத்தியர்கள் மீண்டும் இந்தக் கோட்டைகளை இழந்தனர். 1670 பிப்ரவரியில், சிவாஜி மகூலியை கைப்பற்ற முயன்றார். ஆனால் தோல்வியடைந்தார். போரில் ஆயிரக்கணக்கான மராத்தியர்கள் கொல்லப்பட்டனர். 1817 வரை, சிவாஜியின் வம்சாவளி கோட்டையை சொந்தமாக வைத்திருந்தது. ஆனால் பின்னர் அது ஆங்கிலேயர் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது.
இந்தக் கோட்டை தான்சா வனவிலங்கு சரணாலயத்தின் அதிகார வரம்பிற்குள் வருகிறது. சூழலியல் சுற்றுலாமேம்படுத்துவதற்காக, சமீபத்தில் கூட்டு வன மேலாண்மை ஆட்சிகளின் கீழ் 'மகூலி காட் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழு' உருவாக்கப்பட்டது. இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் உதவியுடன் கோட்டையை மீட்டெடுக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மகாராட்டிர கோட்டைகள் |
683961 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | பெஞ்சல் புயல் | பெஞ்சல் புயல் (Cyclone Fengal) என்பது இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகிய புயல் ஆகும். இது 2024 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட இரண்டாவது புயலும், 2024 ஆம் ஆண்டின் நான்காவது புயலுமாகும். பெஞ்சல் என்பது சவூதி அரேபிய நாடு பரிந்துரைத்த பெயர் ஆகும். இப்புயல் 2024 நவம்பர் 30 அன்று பிற்பகல் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை கணித்தது. இருப்பினும் இரவு 11.30 மணியளவில் புதுச்சேரி அருகே இப்புயல் கரையைக் கடந்தது.
புயல் உருவாதல்
நிலநடுக் கோட்டை ஒட்டிய, கிழக்கு இந்தியப் பெருங்கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், கடந்த 2024 நவம்பர் 23 அன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை அறிவித்தது. 2024 நவம்பர் 24 நிலவரப்படி, அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 26 நவம்பர் 2024 இல் இரவு 11.30 மணியளவில் சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 670 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்ததாகவும், அது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, 2024 நவம்பர் 27 அன்று புயலாக வலுப்பெறக் கூடும் எனவும் இது அடுத்த இரு நாட்களில் மேலும் வடக்கு வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்தது.
புயலாக மாறுவதில் தாமதம்
2024 நவம்பர் 28 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை அறிக்கையின் படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வு வேகம் குறைந்து ஒரு கட்டத்தில் பல மணி நேரங்களாக நகர்வின்றி ஒரே இடத்தில் நிலை கொண்டதால் ஆழ்ந்த காற்றழுத்தம் வலுவிழந்து புயல் உருவாகும் வாய்ப்பு குறைந்துள்ளதாகவும் தற்காலிக புயலாக கரையை கடக்கும் வாய்ப்புள்ளதாகவும் அறிவித்தது.
பெஞ்சல் புயலாக மாறுதல்
2024 நவம்பர் 29 பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியதாகவும், இப்புயலானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து காரைக்கால்- மகாபலிபுரம் இடையே 2024 நவம்பர் 30 அன்று பிற்பகல் புயலாகவே கரையை கடக்கும் எனவும், புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் கரையை கடக்கும் எனவும், இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
பெஞ்சல் புயல் காரணமாக இலங்கை, தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், புதுச்சேரி மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளை மேற்கொண்டன. தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் 2024 நவம்பர் 26 அன்று மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்ட ஆட்சியர்களுடன் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். 2024 நவம்பர் 28 அன்று புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி பேரிடர் மேலாண்மை, பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு அவசர நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை நிவாரண முகாம்களுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். புதுச்சேரியில் 24/7 கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்து வந்ததால் புதுச்சேரியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு 2024 நவம்பர் 28 அன்றும் விடுமுறை அளிக்கப்பட்டது.
அரசு நிகழ்ச்சிகள் இரத்து
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து நவம்பர் 28, 29 ஆகிய நாட்களில் விழுப்புரத்தில் தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சியும், கள ஆய்வு கூட்டமும் இரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கன மழை பெய்தது. 2024 நவம்பர் 27 அன்று கன மழை பெய்த விழுப்புரம், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை , திருவாரூர், திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மாவட்டங்கள், திண்டுக்கல் கொடைக்கானல் ஒன்றியம் மட்டும் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. புயல் கரையை கடக்கும் பகுதி என்பதால் கடலூர் மாவட்டத்திற்கு நவம்பர் 28,29,30 ஆகிய தேதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறையை அறிவித்தார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
புயல் காரணமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 2024 திசம்பர் 2 வரை மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது.
தாக்கம்
இலங்கை
காற்றழுத்தத் தாழ்வு மண்டல நிலையிலான பெஞ்சல் புயலால் இலங்கையில், குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 480,000 பேர் இடம்பெயர்ந்தனர், 17 பேர் இறந்தனர், 20 பேர் காயமடைந்தனர், 103 வீடுகள் அழிந்தன, 2,635 வீடுகள் சேதமடைந்தன.
இந்தியா
திருவண்ணாமலையில் நிலச்சரிவினால், ஏழு பேர் நீரில் மூழ்கி இருவர், மின்சாரம் தாக்கியதால் ஒருவர், என மொத்தம் 10 பேர் பலியாயினர். 130 மிமீ (5.1 அங்குலம்) வரை கனமழை பெய்ததால் சென்னையில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதன் விளைவாக மின்சாரம் தாக்கி நான்கு பேர் இறந்தனர். உதகையில் பெய்த கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார். கூடுதலாக, புதுச்சேரியில் நான்கு பேரும் வேலூரில் மற்றொருவரும் இறந்தனர். நாகப்பட்டினத்தில் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பெஞ்சல் புயல் எதிரொலியாக தென்பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதன் எதிரொலியாக சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. டிசம்பர் 2 அதிகாலை நீர்வரத்து விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடியாக கிடுகிடுவென அதிகரித்து, அணையின் நீர்மட்டம், முழு கொள்ளவான 119 அடியை நெருங்கியது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வந்த தண்ணீர் முழுவதும், தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால், தென்பெண்ணையாறு கரையோரங்களில் உள்ள திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. வெள்ளப் பெருக்கில் திறந்து மூன்று மாதங்களே ஆன திருவண்ணாமலை மாவட்டம் அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானூரை இணைக்கும் உயர்மட்ட பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
இழப்பீடுகள்
2024 நவம்பர் 3 அன்று பெஞ்சல் புயலாலும், மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, புயலால் அதிக பாதிப்புகளை சந்தித்த கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கவும், வட தமிழ்நாடு மாவட்டங்களில் புயல் காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக 5 இலட்சம் ரூபாய் வழங்கவும், வீடுகள் சேதம், கால்நடைகள் இழப்பு போன்றவற்றுக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் புயலாலும், மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்படும் எனவும், புயல் காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூபாய் 5 இலட்சம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் என். ரெங்கசாமி அறிவித்தார்.
மேற்கோள்கள்
இந்தியாவில் சூறாவளிகள்
2024 நிகழ்வுகள் |
683963 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | மலூரி நிலையம் | மலூரி நிலையம் (ஆங்கிலம்: Maluri Station; மலாய்: Stesen Maluri; சீனம்: 馬魯里站) என்பது மலேசியா, கோலாலம்பூர் கிழக்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT); மற்றும் பெரும் விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையமாகும். இந்த நிலையத்திற்கு அருகில் உள்ள தாமான் மலூரி (Maluri Garden) எனும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது.
இந்த நிலையத்திற்கு அம்பாங் வழித்தடம், காஜாங் வழித்தடம், ஆகிய 2 வழித்தடங்கள் சேவை செய்கின்றன.
இந்த நிலையம் மலேசிய கூட்டரசு சாலை 1; மற்றும் செராஸ் சாலை (Cheras Road) ஆகிய சாலைகளின் வழிப்பகுதியில் அமைந்துள்ளது
அமைவு
பிரித்தானிய காலனித்துவக் காலத்திலும்; மற்றும் 1980-ஆம் ஆண்டுகள் வரையிலும்; இன்றைய மாலுரி நிலையத்தின் தளம், கேடிஎம் இண்டர்சிட்டி தொடருந்து அமைப்பின் புடோ உலு நிறுத்தம் (Pudoh Ulu Halt) அல்லது புடு உலு நிறுத்தம் (Pudu Ulu Halt) என அழைக்கப்பட்டது.
முன்னர் இஸ்டார் எல்ஆர்டி (STAR LRT) என அழைக்கப்பட்ட அம்பாங் வழித்தடம் 1996-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது; மற்றும் 17 சூலை 2017 அன்று திறக்கப்பட்ட காஜாங் வழித்தடத்தின் மூலம் இந்த நிலையம் சேவையாற்றுகிறது. இந்த உயர்த்தப்பட்ட மற்றும் நிலத்தடி நிலையம்; நிலையங்களுக்கு இடையிலான கட்டண ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளது.
எம்ஆர்டி நிறுவனத்திற்கு (MRT Corp) வழங்கப்பட்ட பெயரிடும் உரிமையின் கீழ், மலூரி எம்ஆர்டி நிலையம் தற்போது ஏயோன்-மலூரி எம்ஆர்டி நிலையம் (AEON-Maluri MRT) என அழைக்கப்படுகிறது.
அம்பாங் வழித்தடச் சேவை
பழைய உயர்த்தப்பட்ட மலூரி நிலையம், அம்பாங் வழித்தடத்திற்குச் சேவை செய்கிறது.
பழைய மலூரி நிலையம், கட்டண வாயில்கள் அமைந்துள்ள தரைநிலை மட்டத்திற்கும் மேலே உள்ளது; மற்றும் உயரமான இரண்டு பக்க மேடைகளையும் கொண்டுள்ளது. இரண்டு மேடைகளையும் தரைநிலை மட்டத்திலிருந்து படிக்கட்டுகள் மற்றும் சுழலும் படிக்கட்டுகள் வழியாக அடையலாம். முன்னதாக, சுமைதூக்கிகள் எதுவும் இல்லை. இருப்பினும், 2015-இல் அந்தக் குறைகள் தீர்க்கப்பட்டன..
பேருந்து சேவைகள்
காட்சியகம்
மலூரி நிலையக் காட்சிப் படங்கள்:
மேலும் காண்க
காஜாங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம்
சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம்
செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையம்
எம்ஆர்டி சுற்று வழித்தடம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Kuala Lumpur MRT Integration website
Maluri MRT station at official website
மலேசியத் தொடருந்து நிலையங்கள்
கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள் |
683964 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88 | மசஞ்சோர் அணை | மசஞ்சோர் அணை (Massanjore Dam) என்பது இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தில் தும்கா அருகே மசஞ்சூரில் மயூராக்சி ஆற்றின் மீது நீர்மின் உற்பத்தி செய்யும் நோக்கில் கட்டப்பட்ட அணையாகும். மயூராக்சி அணை கனடா அணை என்றும் அழைக்கப்படுகிறது. மசஞ்சோர் அணையின் கட்டுமானப் பணி 1955ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதை கனடாவின் வெளியுறவு அமைச்சர் லெசுடர் பி. பியர்சன் முறையாகத் தொடங்கி வைத்தார். அணை அமைந்துள்ள இடத்தில் மயூராக்சி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதி 1869 சதுர கிலோமீட்டர் ஆகும்.
புவியியல்
அமைவிடம்
23°06′03′′N 87°19′31′′E/23.10083 °N 87.32528 °E/தும்கா சுமார் 34 கிலோமீட்டர் (21 மைல்) தொலைவில் உள்ளது.
அணை
மசஞ்சோர் அணை, அடித்தளத்திலிருந்து 47.25 மீட்டர் உயரமும் 661.58 மீட்டர் நீளமும் கொண்டது. நீர்த்தேக்கம் 67.4 சதுர கிலோமீட்டர் (16,650 ஏக்கர்) பரப்பளவைக் கொண்டுள்ளது. அணையானது 617,000,000 கன மீட்டர் (500,210 ஏக்கர்) சேமிப்பு திறன் கொண்டது. மேல்நிலைப் பகுதியின் நீளம் 225.60 மீ ஆகும். மேலும் இது 21 பிரிவுகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் 9.144 மீ. அகலம் கொண்டது. இதன் மூலம் 4.446 கியூமெக்சு நீர் வெளியேற்றப்படலாம். முழு நீர்த்தேக்க மட்டம் 121.34 மீ. வெள்ள மட்டம் 122.56 மீட்டர் ஆகும். இந்த அணை 16.10 கோடி செலவில் கட்டப்பட்டது.
கால்வாய்
மயூராக்சி இடது கரை கால்வாய்-நீளம் 20.54 கிலோமீட்டர்கள்.
மயூராக்சி வலது கரை கால்வாய் இன்னும் கட்டப்படாமல் உள்ளது.
நிதி
இந்தியாவில் பயன்படுத்த கனடாவிலிருந்து கோதுமை மற்றும் பிற பொருட்களை வழங்குவதன் மூலம் உருவாக்கப்பட்ட ரூபாய் நிதியால் இந்த அணை கட்டப்பட்டது. கனடா இந்த ரூபாயை மயூராக்சி அணை திட்டத்தின் மேலும் வளர்ச்சிக்கு அர்ப்பணித்தது.
வெள்ள இருப்பு
துரதிருஷ்டவசமாக, மசஞ்சோர் அணையில் வெள்ள நீர் இருப்பு இருக்க அனுமதிக்கப்படவில்லை. 1956ஆம் ஆண்டில் மாநில அரசு வெள்ளக் கட்டுப்பாட்டுக் கரைகளைத் தேர்ந்தெடுத்துக் கையகப்படுத்தியது. இது நில உரிமையாளர்கள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் பராமரிக்கப்பட்டது.
மேலும் காண்க
இந்தியாவில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பட்டியல்
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
தும்கா மாவட்டம்
சார்க்கண்டில் உள்ள அணைகள்
Coordinates on Wikidata |
683965 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88 | துர்வா அணை | துர்வா அணை (Dhurwa Dam) என்பது அதிகாரப்பூர்வமாக ஹடியா அணை என்று அழைக்கப்படுகிறது. இது சார்க்கண்டு மாநிலத்தின் ராஞ்சியில் ஓடும் சுபர்ணரேகா ஆற்றில் உள்ள கட்டப்பட்ட குறிப்பிடத்தக்க அணை ஆகும்.
விளக்கம்
1963ஆம் ஆண்டில் உருசியா உதவியுடன் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை, ராஞ்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குத் தினமும் சுமார் 9 மில்லியன் கேலன் குடிநீர் வழங்குகிறது. இதில் நகரத்திற்கு 8.5 மில்லியன் கேலனும் கனரகத் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு 1 மில்லியன் கேலனும் வழங்குகிறது. கூடுதலாக 12 மில்லியன் லிட்டர் தண்ணீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ராஞ்சி திறன் நகர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த அணை நீர் ஆதாரமாக உள்ளது. இருப்பினும், குறிப்பாகக் கோடையில் நீர் மட்டங்கள் கணிசமாகக் குறையும் போது இது சவால்களை எதிர்கொள்கிறது.
சார்க்கண்டு நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் துர்வா அணை சுமார் 1.3 சதுர கிலோமீட்டர் நீர்த்தேக்கத் திறனைக் கொண்டுள்ளது. இது உள்நாட்டுப் பயன்பாடு மற்றும் பாசனத்திற்கு முக்கியமானது. இந்த அணை உள்ளூர் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது மட்டுமல்லாமல், இதன் இயற்கை அழகு மற்றும் பொழுதுபோக்கு வாய்ப்புகளுக்காகச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கும் இயற்கையான நடைப்பயணங்களுக்கும் பார்வையாளர்கள் ரசிக்க இது ஒரு அமைதியான சூழலை வழங்குகிறது. தற்போது நடைபெற்று வரும் தண்ணீர்ப் பற்றாக்குறை வளர்ந்து வரும் நகர்ப்புற மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது குறித்த கவலைகளை எழுப்புகையில், தற்போதைய குடியிருப்பாளர்களுக்கும் எதிர்கால முன்னேற்றங்களுக்கும் நம்பகமான விநியோகத்தை உறுதி செய்வதற்காகக் கூடுதல் நீர் ஆதாரங்களை உருவாக்க சார்க்கண்டு அரசு முன்வந்துள்ளது.
மேலும் காண்க
இந்திய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பட்டியல்
மேற்கோள்கள்
1963-இல் கட்டிமுடிந்த அணைகள்
சார்க்கண்டில் உள்ள அணைகள்
Coordinates on Wikidata |
683968 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | நாக்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி | நாக்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி (Nagpur North Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். நாக்பூர் மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த தொகுதியை மகாராட்டிரா அரசில் அமைச்சராக பணியாற்றும் நிதின் ராவத் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
2019
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
683974 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D | தீரஜ் சிங் தாக்கூர் | தீரஜ் சிங் தாக்கூர் (Dhiraj Singh Thakur)(பிறப்பு ஏப்ரல் 25,1964) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார். தாக்கூர் பம்பாய் உயர் நீதிமன்றம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி உள்ளார்.
தொழில்
1989 அக்டோபர் 18 அன்று தில்லி வழக்கறிஞர் குழுவிலும் பின்னர் சம்மு காசுமீர் வழக்கறிஞர் குழுவில் வழக்கறிஞராகவும் சேர்ந்தார். 2011ஆம் ஆண்டில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட இவர், 8 மார்ச் 2013 அன்று சம்மு காசுமீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார். இவர் 10 சூன் 2022 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டார். தாக்கூர் சூலை 28,2023 அன்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
1964 பிறப்புகள்
இந்திய நீதிபதிகள் |
683975 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE.%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE.%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D | பா. இரா. இராமச்சந்திர மேனன் | பாரப்பிள்ளில் இராமகிருஷ்ணன் நாயர் இராமச்சந்திர மேனன் (Parappillil Ramakrishnan Nair Ramchandra Menon) என்பவர் சத்தீசுகர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.
கல்வி
இராமச்சந்திர மேனன் 1959 சூன் 1 அன்று கேரளாவில் பிறந்தார். எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார்.
தொழில்
இராமச்சந்திர மேனன் 1983 சனவரி 8 அன்று வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டு எர்ணாகுளத்தில் பயிற்சி பெற்றார். 2009 சனவரி 5 அன்று கேரள உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்ட இவர், 2010 திசம்பர் 15 முதல் நிரந்தர நீதிபதியாக ஆனார்.
சத்தீசுகர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இவருக்கு 2019 ஏப்ரல் 30 அன்று இந்திய குடியரசுத் தலைவரால் பொறுப்பு வழங்கப்பட்டது. இவர் 6 மே 2019 அன்று ஆளுநர் ஆனந்திபென் படேலால் முன் சத்தீசுகர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியேற்றார்.
மேற்கோள்கள்
இந்திய நீதிபதிகள்
1959 பிறப்புகள்
கேரளா உயர் நீதிமன்ற நீதிபதிகள்
வாழும் நபர்கள் |
683976 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D | வாக்கேஸ்வரர் கோயில் | வாக்கேஸ்வரர் கோயில் அல்லது வன கங்கை கோயில்,இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தின் தலைநகரான தெற்கு மும்பை நகரபகுதியில் மலபார் மலையில் உள்ளது. இக்கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.இக்கோயில் அருகில் வன கங்கை குளம் அமைந்துள்ளது.
வழிபாடு
பௌர்ணமி, பிரதோசம் மற்றும் அமாவாசை நாட்களில் இக்கோயிலுக்கு அதிக பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோயிலில் சிவராத்திரியின் போது சிவபெருமானுக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் பூ அலங்காரம் செய்யப்படுகிறது.
மேற்கோள்கள்
Mallya, K.G. The Merchant Of Bombay, Mumbai:Bharatiya Vidya Bhavan (1997). —An historical novel of the life of Rama Kamati.
வெளி இணைப்புகள்
Temples Of Saraswat Brahmins
Walkeshwar Banganga Tank and Temple
மும்பையின் வழிபாட்டுத தலங்கள் |
683978 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81.%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE | ஆர். எசு. மோங்கியா | ஆர். எசு. மோங்கியா (R. S. Mongia) என்பவர் குவகாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், பஞ்சாப் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தவர் ஆவார்.
தொழில்
நீதிபதி மோங்கியா 1963ஆம் ஆண்டில் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். 1964ஆம் ஆண்டில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகச் சேர்ந்தார். 1990 சூன் 15 அன்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்றார்.
2001 சூன் 21 அன்று மோங்கியா குவகாத்தி உயர் நீதிமன்றத்திற்குப் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2001 செப்டம்பர் 21 அன்று தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் 2002 சூன் 10 அன்று ஓய்வு பெற்றார்.
இதற்குப் பிறகு மோங்கியா நவம்பர் 12, 2007 அன்று பஞ்சாப் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் இப்பதவியில் சூன் 9, 2010 வரை பணியாற்றினார்.
இறப்பு
நீண்ட நோயால் அவதிப்பட்டு வந்த மோங்கியா, 2017 ஆகத்து 21 அன்று தில்லியில் காலமானார்.
மேற்கோள்கள்
இந்திய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்
இந்திய நீதிபதிகள்
2017 இறப்புகள்
1940 பிறப்புகள் |
683980 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF.%20%E0%AE%AA%E0%AE%BF.%20%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D | பி. பி. நவோலேகர் | பி. பி. நவோலேகர் (P. P. Naolekar-பிறப்பு சூன் 29,1943) என்பவர் மத்தியப் பிரதேசத்தின் லோகாயுக்தா ஆவார். இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பதவி வகித்தவர் ஆவார்.
நீதிபதியாக
1992 - மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் நிரந்தர நீதிபதி
1994 - இராசத்தான் உயர் நீதிமன்ற நீதிபதி
2002 - குவகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
2004 முதல் 2008 வரை இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி
மேற்கோள்கள்
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
21-ஆம் நூற்றாண்டு இந்திய நீதிபதிகள்
வாழும் நபர்கள்
1943 பிறப்புகள் |
683982 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 | அரிதாள் எரிப்பு | அரிதாள் எரிப்பு (Stubble burning) என்பது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மற்றும் வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப் அரியானாவில் விளைந்த நெற்ப் பயிர்களை அறுவடை செய்த பிறகு வயலை சுத்தப்படுத்தி கோதுமை விதைப்பதற்காக, வயலில் எஞ்சி நிற்கும் நெல் கட்டைப் பயிர் எச்சங்களை அக்டோபர் முதல் திசம்பர் நடுப்பகுதி வரை எரித்து விடுவது வழக்கம். இந்நிகழ்வு ஒரு வாரம் அல்லது தொடர்ந்து நடைபெறும் செயலாகும் அதேசமயம் கோதுமைக் கட்டைப் பயிர்களை எரிப்பதில் மேற்கு உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அறுவடையான பிறகு எஞ்சியுள்ள கட்டைப்பயிர்களை சட்டவிரோதமான செயலாகும்.
தில்லியைச் சுற்றிய மாநிலங்களின் அறுவடையான பின் எஞ்சி நிற்கும் கட்டைப் பயிர்களை எரிப்பதால், தில்லி வானத்தில் குளிர்காலத்தில் அளவிற்கு அதிகமாக காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சுவாசிக்கும் காற்றின் மூலம் நுரையீரல் பாதிகக்ப்படுவதால் சுவாச நோய்கள் ஏற்படக் காரணமாகிறது.
கட்டைப் பயிர்களை எரிக்க காரணம்
நெல் அறுவடைக்கும், கோதுமை விதைப்பதற்கும் இடையே உள்ள குறுகிய கால அவகாசமே இருப்பதால்,.வயலை சுத்தப்படுத்த நெற்பயிரை அறுவடை செய்தவுடன், வயலில் எஞ்சி நிற்கும் கட்டைப் பயிர்களை தீ வைத்து எரித்து விடுவது வழக்கம்.
தாக்கம்
வயலில் அறுவடையான பிறகு எஞ்சியுள்ள் கட்டைப் பயிர்களை எரிப்பதால் கார்பனோராக்சைடு (CO), மீத்தேன் (CH4), புற்றுநோயை உண்டாக்கும் பாலிசைக்ளிக் ஹைட்ரோகார்பன்கள், ஆவியாகும் கரிம சேர்மங்கள் (VOC) போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களால் வளிமண்டலத்தில் அனுமதிக்கப்பட்ட காற்றுத் தரச் சுட்டெண்ணை விட காற்றில் மாசு ஏற்படுகிறது. இந்த மாசுக்கள் சுற்றுப்புறங்களில் பரவி, இறுதியில் காற்றின் தரம் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
வாகன உமிழ்வுகளுடன், கட்டைப் பயிர் எரிப்பால் தில்லியின் [[காற்றுத் தரச் சுட்டெண்|] கடுமையாக பாதிக்கிறது. வட இந்தியாவில் அரியானா, மேற்கு உத்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயிகளால் புல் எரிக்கப்படுவது டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசுபாட்டிற்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
கட்டைப் பயிர்களை எரிப்பதா மண்ணில் வெப்பம் ஊடுருவி மண்னில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் ஈரப்பதம் இழப்பு ஏற்படுகிறது.
இதனையும் காண்க
காற்றுத் தரச் சுட்டெண்
மேற்கோள்கள்
வேளாண்மை
இந்தியாவில் காற்று மாசுபாடு |
683983 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D | சொர்க்கவாசல் | சொர்க்கவாசல் (Sorgavaasal) என்பது ஒரு இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தினை சுவைப் ரைட் இசுடுடியோசு திங்க் இசுடுடியோசுடன் இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ஆர். ஜே. பாலாஜி மற்றும்செல்வராகவன் நடித்துள்ளனர். இவர்களுடன் நடராஜன் சுப்பிரமணியம், கருணாஸ், சாமுவேல் அபியோலா ராபின்சன், சானியா ஐயப்பன், சராஃப் யு தீன் மற்றும் பாலாஜி சக்திவேல் ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர்கள்
கதைக்களம்
இத்திரைப்படத்தின் கதை செய்யாத குற்றத்திற்காக சிறைக்குச் செல்லும் விசாரணைக் கைதிகள் சிறையின் சூழ்நிலையால் எவ்வாறு மாற்றப்படுகிறார்கள் என்பதை விவரிக்கிறது. சாலையோர உணவகம் நடத்திவரும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன். எதிர்பாராத சூழலில் அரசு அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட, அந்த கொலைப்பழி பார்த்திபன் மீது விழுகிறது. சிகா என்ற மற்றொரு இனி குற்றங்களில் ஈடுபட மாட்டேன் என சிறைச்சாலைக்குள்ளேயே திருந்தும் முயற்சியில் இருக்கிறார். சிறைச்சாலைக்குள் நிகழும் ஒரு மரணம், கலவரச் சூழலாக மாறி வன்முறை வெடிக்கிறது. சிறையின் கொடுமையான சூழலில் இருந்து விடுபட நினைப்பவர்கள் எம்மாதிரியான நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள் என்பதே சொர்க்கவாசல் படத்தின் மீதிக்கதை.
தயாரிப்பு
திரைப்படத்தின் வளர்ச்சி
ரன் பேபி ரன் (2023) திரைப்படத்திற்குப் பிறகு, சிங்கப்பூர் சலூன் படப்பிடிப்பின் போது (கோகுலுடன் 2024), நடிகர் ஆர். ஜே. பாலாஜி தனது அடுத்த திட்டமான சொர்க்கவாசல் என்ற பெயரில் அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத்துடன் ஒப்பந்தக் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது. சித்தார்த், தமிழ் பிரபா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து இத்திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார். திங்க் ஸ்டுடியோசு மற்றும் ஸ்வைப் ரைட் ஸ்டுடியோசின் சித்தார்த் ரவிபுட்டி மற்றும் பல்லவி சிங் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். செல்வராகவன், யோகி பாபு மற்றும் கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், பாலாஜி சக்திவேல், நட்டி, சானியா அய்யப்பன், ஷராப் யு தீன், ஹக்கீம் ஷா, ஆண்டனிதாசன் ஜேசுதசன், ரவி ராகவேந்திரா மற்றும் சாமுவேல் அபியோலா ராபின்சன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் கிறிஸ்டோ சேவியர் இசையமைப்பாளராகவும், இளவரசர் ஆண்டர்சன் ஒளிப்பதிவாளராகவும், செல்வா ஆர். கே. படத்தொகப்பாளராகவும், எஸ். ஜெயச்சந்திரன் கலை இயக்குனராகவும் உள்ளனர்.
படப்பிடிப்பு
2023 மார்ச் நடுப்பகுதியில், முதன்மைப் படப்பிடிப்பு எடுத்தல் ஏற்கனவே தொடங்கி கர்நாடகா சுமார் 37 நாட்கள் படப்பிடிப்பை முடித்ததாக தெரிவிக்கப்பட்டது.
சந்தைப்படுத்தல்
அக்டோபர் 19,2024 அன்று, தலைப்பு வெளியிடப்பட்தற்குப் பிறகு முதல் தோற்ற சுவரொட்டி 1999 ஆம் ஆண்டில் சென்னை மத்திய சிறையில் கைதி எண்ணுடன் கையில் ஒரு சிலேட்டைக் கொண்ட முன்னணி நடிகரைக் கொண்டிருந்தது. 1954 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் சி. என். அண்ணாதுரை எழுதி இதே பெயரில் வெளியான திரைப்படத்தின் சொர்க்கவாசல் என்ற தலைப்பே இப்படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 21 அன்று, சில முன்னணி நடிகர்களைக் கொண்டு பாத்திரங்களின் சுருக்கமான அறிமுகத்துடன் படத்தின் முன்னோட்டக் காணொலி வெளியிடப்பட்டது. கருணாஸ் வழங்கிய குரலொலி புதிய ஏற்பாட்டின் வசனம் மத்தேயு 5:4 ஐக் குறிப்பிடுகிறது. அனிருத் ரவிச்சந்தருடன் படத்தின் வெளியிட்ட லோகேஷ் கனகராஜ், தனது படத்திலும் பல சிறைக் காட்சிகள் இருந்ததால், சொர்க்கவாசலைப் பார்த்த பிறகு தனது இன்னும் வெளியிடப்படாத கைதி 2 படத்தின் திரைக்கதையை மாற்றியமைத்தார்.
இசை
பின்னணி இசை மற்றும் ஒலிப்பதிவை கிறிஸ்டோ சேவியர் தனது தமிழ் அறிமுகத் திரைப்படத்தில் செய்துள்ளார். கிளின்ட் லூயிஸ் எழுதிய ஆங்கில பாடல் வரிகள் மற்றும் அருண் சீனிவாசன் எழுதிய தமிழ் பாடல் வரிகளுடன் அனிருத் ரவிச்சந்தர் பாடிய முதல் தனிப்பாடலான "தி எண்ட்" 27 நவம்பர் 2024 அன்று வெளியிடப்பட்டது.
வெளியீடு
திரையரங்கம்
சொர்க்கவாசல் 29 நவம்பர் 2024 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் 25 நவம்பர் 2024 அன்று மத்தியத் திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
விநியோகம்
தமிழ்நாட்டில் சொர்க்கவாசல் படத்தின் விநியோக உரிமையை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனமும், கர்நாடகாவில் கே. வி. என் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளன.
வீட்டு ஊடகங்கள்
ஜனவரி 16,2024 அன்று, நெட்ஃபிளிக்சு சொர்க்கவாசலின் திரையரங்குக்கு பிந்தைய ஸ்ட்ரீமிங் உரிமைகளை மற்ற 8 படங்களின் பட்டியலுடன் வாங்கியதாக அறிவித்தது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
2024 தமிழ்த் திரைப்படங்கள் |
683984 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D | சல்மான் நிசார் | சல்மான் நிசார் (Salman Nizar; பிறப்பு சூன் 30,1997) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஓர் இடது கை மட்டையாட்ட வீரரும் வலது கை எதிர்ச்சுழல் பந்து வீச்சாளரும் ஆவார்.
உள்நாட்டு விளையாட்டுப் போட்டி பங்களிப்பு
கீ-14, கீ-16, மற்றும் கீ-23 மட்டங்களில் கேரளா துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப்படுத்திய பின்னர், சல்மான் 6 பிப்ரவரி 2015 அன்று அசாமுக்கு எதிரான ரஞ்சி கோப்பைக்கான போட்டியில் கேரளாவுக்காக தனது முதல் தர போட்டியில் அறிமுகமானார். ரஞ்சி கோப்பை போட்டியில் விதர்பாவிற்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 102 பந்துகளில் 62 ஓட்டங்கள் எடுத்து கேரள அணிக்காக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராக இருந்தார். ரஞ்சி கோப்பை போட்டியில் பஞ்சாப்பிற்கு எதிராக ஆட்டமிழக்காமல் 91 ஓட்டமெடுத்து தனது தொழில் வாழ்க்கையின் சிறந்த விளையாட்டினை வெளிப்படுத்தினார்.
பிப்ரவரி 25,2017 அன்று திரிபுராவிற்கு எதிராக விஜய் அசாரே போட்டியில் கேரளா தனது ஏ வரிசையில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இவர் தனது அதிகபட்ச தனிப்பட்ட ஓட்டமான 82 ஆட்டமிழக்காமல் அடித்தார். ஆறு போட்டிகளில் விளையாடி 215 ஓட்டங்கள் எடுத்து போட்டியில் தனது அணியின் முன்னணி வீரராக இவர் இருந்தார்.
இவர் 2018 சனவரி 8 அன்று ஐதராபாத்து அணிக்கு எதிராக நடந்த மண்டல இருபது 20 போட்டியில் கேரளாவுக்காகத் தனது முதல்இருபது20 போட்டியில் அறிமுகமானார்.
ஆகத்து 2018-இல், கேரளாவின் அணித்தலைவர் சச்சின் பேபிக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததற்காகக் கேரளத் துடுப்பாட்டச் சங்கத்தால் அபராதம் விதிக்கப்பட்ட எட்டு வீரர்களில் இவரும் ஒருவர்.
சல்மான் நிசார் 2020-21 கே. சி. ஏ. தலைவர் கோப்பைக்கான இருபது20-இல் கே. சி. ஏ. லயன்ஸ் அணிக்காக விளையாடினார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Salman Nizar இல்ESPNcricinfo
இந்தியத் துடுப்பாட்டக்காரர்கள்
வாழும் நபர்கள்
1997 பிறப்புகள்
கேரள நபர்கள் |
683994 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | நாக்பூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதி | நாக்பூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Nagpur East Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். நாக்பூர் மக்களவைத் தொகுதியின் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். நாக்பூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் எண் 54 ஆகும். இந்த தொகுதி நாக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2008ஆம் ஆண்டில் தொகுதியின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. இது நாக்பூர் வட்டம் மற்றும் பகுதி எண் 6 முதல் 8 வரை, 28 முதல் 36 வரையும் நாக்பூர் மாநகராட்சி 67 முதல் 72 வரை ஒரு பகுதியையும் உள்ளடக்கியது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
2019
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
683996 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B1 | சளவற | சளவற (Chalavara) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரும், கிராம ஊராட்சியும் ஆகும்.
இந்த ஊரில் கே. டி. என். மருந்தியல் கல்லூரி அமைந்துள்ளது.
மக்கள்வகைப்பாடு
2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சளவறவின் மக்கள் தொகை 21,042 ஆகும். அதில் ஆண்களின் தொகை 9,952 என்றும், பெண்களின் தொகை 11,090 என்றும் உள்ளது.
மேற்கோள்கள்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata |
683997 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D | வினோத் அகர்வால் | வினோத் சந்தோசு குமார் அகர்வால் (Vinod Agrawal) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 மகாராட்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் கோண்டியா சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்பு, இவர் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடையவர். பின்னர் சூன் 23 அன்று 2022 மகாராட்டிர அரசியல் நெருக்கடிக்கு இடையில் இவர் மீண்டும் பாஜகவில் சேர்ந்தார். இதன் பின்னர் நவம்பர் 2024-ல் நடைபெற்ற மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
மேற்கோள்கள்
மகாராட்டிரத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
வாழும் நபர்கள்
1969 பிறப்புகள் |
683999 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D.%20%E0%AE%95%E0%AF%87.%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE | எச். கே. சீமா | எச். கே. சீமா (H. K. Sema; பிறப்பு சூன் 1,1943) என்பவர் இந்திய நீதிபதியும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாகப் பணியாற்றியவரும் ஆவார். சீமா உத்தரப்பிரதேச மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இளமை
சீமா 1943 சூன் 1 அன்று பிறந்தார். 1967ஆம் ஆண்டில் டார்ஜீலிங்கில் உள்ள தூய யோவான் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1970ஆம் ஆண்டில் மும்பை அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டப் பட்டம் பெற்றார்.
வகித்தப் பதவிகள்
இளைய அரசு வழக்கறிஞர், நாகாலாந்து-1971-1975.
உதவி தலைமை வழக்கறிஞர், நாகாலாந்து 16 நவம்பர் 1985 முதல்.
குவகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி, கோகிமா இருக்கை, 1992-2001
சம்மு காசுமீர் உயர் நீதிமன்ற நீதிபதி, 7 சூன் 2001. செப்டம்பர் 12,2001 அன்று சம்மு-காசுமீர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
2000 சனவரி 25 அன்று குசராத்து உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி.
2002 முதல் 2008 வரை இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி
உத்தரப்பிரதேச மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர்
மேற்கோள்கள்
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
21-ஆம் நூற்றாண்டு இந்திய நீதிபதிகள்
வாழும் நபர்கள்
1943 பிறப்புகள் |
684000 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE | சாம் நாரிமன் வரியாவா | சாம் நாரிமன் வரியாவா (Sam Nariman Variava, பிறப்பு நவம்பர் 8,1940) என்பவர் ஓர் இந்திய நீதிபதியும், இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் ஆவார்.
தொழில்
வரியாவா 1964 சூன் 22 அன்று வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டு பம்பாய் உயர்நீதிமன்றத்திலும், பம்பாய் நகர குடிமை நீதிமன்றத்திலும் பயிற்சி பெறத் தொடங்கினார். இதன் பின்னர் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மும்பையில் உள்ள சிடென்காம் வணிகம் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் பகுதிநேரச் சட்டப் பேராசிரியராகவும் பணியாற்றினார். நவம்பர் 21,1986 அன்று இவர் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதன்பிறகு 1987 சூன் 12 அன்று நிரந்தர நீதிபதியாக ஆனார். வரியாவா 1999 மே 25 அன்று தில்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆனார். இவர் 15 மார்ச் 2000 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பதவிக்கு உயர்த்தப்பட்டார். இதன் பின்னர் 8 நவம்பர் 2005 அன்று பணி ஓய்வு பெற்றார்.
மேலும் காண்க
வரியாவ்
மேற்கோள்கள்
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
மும்பாய் உயர் நீதிமன்ற நீதிபதிகள்
20 ஆம் நூற்றாண்டு இந்திய வழக்கறிஞர்கள்
வாழும் நபர்கள்
1940 பிறப்புகள் |
684001 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE | தாரா கோர்முசுஜி வரியாவா | தாரா கோர்முசுஜி வரியாவா (Dara Hormusji Variava)(05 சூலை 1897-1961) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக 1952 முதல் 1960 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை குசராத்து மாநிலத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். வரியாவா இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர்.
மேலும் காண்க
சாம் நாரிமன் வரியாவா
மேற்கோள்கள்
1961 இறப்புகள்
1897 பிறப்புகள்
குசராத்து மாநிலங்களவை உறுப்பினர்கள் |
684006 | https://ta.wikipedia.org/wiki/2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81 | 2-பியூரோயில் குளோரைடு | 2-பியூரோயில் குளோரைடு (2-Furoyl chloride) என்பது C5H3ClO2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பியூரான் சேர்மத்தின் அசைல் குளோரைடாக இது கருதப்படுகிறது. பென்சாயில் குளோரைடை விட கண்களில் அதிகமாக அரிக்கும் தன்மையைக் கொண்டுள்ள நீர்மம் என்ற பண்பைக் கொண்டுள்ளது. 2-புரோயில் குளோரைடு ஒரு பயனுள்ள மருந்து இடைநிலையாகும். தோல் கோளாறுகள், வைக்கோல் காய்ச்சல் மற்றும் காசநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஓர் அழற்சி எதிர்ப்பு மருந்தான மோமடசோன் பியூரோயேட்டின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
2-பியூரோயில் குளோரைடு 1924 ஆம் ஆண்டு இயெலிசன் என்பவரால் கண்டறியப்பட்டது. ஆய்வக தண்ணீர் குளியல் முடிந்த அதிகப்படியான தயோனைல் குளோரைடில் 2-பியூரோயிக் அமிலத்தைச் சேர்த்து பின்னியக்க வினைக்கு உட்படுத்தி 2-பியூரோயில் குளோரைடு தயாரிக்கப்பட்டது.
பயன்பாடுகள்
2-பியூரோயில் குளோரைடு சேர்மத்திற்கு பெரிய பயன்பாடுகள் இல்லை. ஆனால் இது பல்வேறு மருந்துகளின் தயாரிப்பில் ஓர் இரசாயன இடைநிலையாகப் பயன்படுத்தப்படுகிறது. மோமெட்டசோன் பியூரோயேட்டு புளூட்டிகசோன் பியூரோயேட்டு டைலோக்சனைடு பியூரோயேட்டு செப்டியோபியூர் மிர்பெண்டானில் குயின்பமைடு , மற்றும் டைக்குளோபியூரைம் ஆகியன எடுத்துக்காட்டு மருந்துகளாகும்.
மேலும் காண்க
பர்பியூரைல் ஆல்ககால்
மேற்கோள்கள்
அசைல் குளோரைடுகள்
2-பியூரைல் சேர்மங்கள் |
684011 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81 | பியூட்டைரைல் குளோரைடு | பியூட்டைரைல் குளோரைடு (Butyryl chloride) என்பது C4H7ClO என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். CH3CH2CH2C(O)Cl என்ற அமைப்பு வாய்ப்பாட்டால் இதை அடையாளப்படுத்தலாம். விரும்பத்தகாத வாசனையுடன் நிறமற்ற திரவமாகக் காணப்படுகிறது. பியூட்டைரைல் குளோரைடு கரிம கரைப்பான்களில் கரையும். ஆனால் தண்ணீர் மற்றும் ஆல்ககால்களுடன் உடனடியாக வினைபுரிகிறது. பொதுவாக பியூட்டைரிக் அமிலத்தின் குளோரினேற்ற வினை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
வினைகள்
தொடர்புடைய அசைல் குளோரைடுகளைப் போலவே, பியூட்டைரைல் குளோரைடும் உடனடியாக நீராற்பகுத்தல் வினைக்கு உட்படுகிறது:
CH3CH2CH2C(O)Cl + H2O → CH3CH2CH2CO2H + HCl
ஆல்ககால்களுடன் வினையில் ஈடுபட்டு எசுத்தர்களைக் கொடுக்கிறது:
CH3CH2CH2C(O)Cl + ROH → CH3CH2CH2CO2R + HCl
அமீன்|அமீன்களுடன் வினைபுரிந்து அமைடுகளைக் கொடுக்கிறது:
CH3CH2CH2C(O)Cl + R2NH → CH3CH2CH2C(O)NR2 + HCl
பூச்சிக்கொல்லிகள், மருந்துகள், வாசனை திரவியங்கள், பலபடியாக்கல் வினையூக்கி மற்றும் சாயப் பொருட்கள் தயாரிப்பில் பியூட்டைரைல் குளோரைடின் வழிப்பெறுதிகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக பியூட்டைரைல் குளொரைடும் மருந்து, வேளாண் இரசாயனங்கள், சாயங்கள், எசுத்தர்கள் மற்றும் பெராக்சைடு சேர்மங்களைத் தயாரிப்பதற்கான கரிமத் தொகுப்பு வினைகளில் பியூட்டைரைல் குளோரைடு ஓர் இடைநிலையாக பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
அசைல் குளோரைடுகள் |
684013 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | நாக்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி | நாக்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி (Nagpur South Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். நாக்பூர் மக்களவைத் தொகுதியின் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இந்தத் தொகுதியின் எண் 53 ஆகும். இந்தத் தொகுதி நாக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2008ஆம் ஆண்டு எல்லை நிர்ணயம் செய்யப்பட்டதன் மூலம் தொகுதியின் எல்லைகள் மாற்றப்பட்டன. இது நாக்பூர் வட்டத்தின் சில பகுதிகளையும், நாக்பூர் மாநகராட்சிப் பகுதி எண் 9 முதல் 11,37 முதல் 42,73 முதல் 78,99 முதல் 102 மற்றும் 120 பகுதிகளையும் உள்ளடக்கியது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
^ இடைத் தேர்தல்
தேர்தல் முடிவுகள்
2024
2019
2014
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
684016 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | பாண்டான் ஜெயா எல்ஆர்டி நிலையம் | பாண்டான் ஜெயா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Pandan Jaya LRT Station; மலாய்: Stesen LRT Pandan Jaya; சீனம்: 美和家站) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடத்தில் அமைந்துள்ள உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.
இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள பாண்டான் ஜெயா எனும் குடியிருப்பு பகுதியின் பெயரில் இருந்து இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. அத்துடன் பாண்டான் 3/8 சாலை, இந்த நிலையத்திற்கு அருகில் உள்ளது.
பொது
அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்பு இஸ்டார் எல்ஆர்டி (STAR-LRT) என அழைக்கப்பட்டன.
இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் ஒரு பகுதியாக சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் தொடங்கி பாண்டான் ஜெயா எல்ஆர்டி நிலையம் வரையில் 13 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த பாண்டான் ஜெயா எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 16 டிசம்பர் 1996 அன்று திறக்கப்பட்டது.
இந்த நிலையம் பாண்டான் இண்டா எல்ஆர்டி நிலையத்துடன் பேருந்து அணுகலையும் கொண்டுள்ளது. இந்த நிலையம் 1 கிலோமீட்டர் வடகிழக்கில் உள்ள பாண்டான் இண்டா எல்ஆர்டி நிலையத்துடன் பாண்டான் எனும் அதே பெயரைப் பகிர்ந்து கொள்கிறது.
அம்பாங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சான் சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது.
இலகு தொடருந்து இஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.
கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை மலேசிய அரசாங்கம் முன்மொழிந்தது. திசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் இஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
காட்சியகம்
பாண்டான் ஜெயா எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2022)
மேலும் காண்க
மலூரி நிலையம்
மிகார்ஜா எல்ஆர்டி நிலையம்
சான் சோவ் லின் நிலையம்
அம்பாங் வழித்தடம்
பண்டாராயா எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர் சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Pandan Jaya LRT Station - mrt.com.my
மலேசியத் தொடருந்து நிலையங்கள்
கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள் |
684017 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D | பியூமரின் | பியூமரின் (Fumarin) என்பது C17H14O5 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கூமரின் வழிப்பெறுதிச் சேர்மமான இது கூமாபியூரைல் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இரத்த உறைவு எதிர்ப்பு மருந்தான வார்ஃபரின் மருந்துக்கு இது ஓர் ஒப்புமை மருந்தாகும். எலிக்கொல்லி மருந்தாக பியூமரின் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
2-பியூரைல் சேர்மங்கள்
கீட்டோன்கள் |
684019 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 | பால்மியரைட்டு | பால்மியரைட்டு (Palmierite) என்பது K2Pb(SO4)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். ஓர் அரிய சல்பேட்டுக் கனிமமான இது எரிமலைகளுக்கு அருகில் காரணப்படுகிறது. வாய்னிச் கைப்பிரதி புத்தகத்தில் பால்மியரைட்டு கனிமம் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மேற்கோள்கள்
சல்பேட்டுக் கனிமங்கள் |
684022 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 | சூம்வைட்டு | சூம்வைட்டு (Shumwayite) என்பது (UO2)2(SO4)2•5H2O என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். ஓர் அரிய ஆனால் மிக எளிய யுரேனைல் சல்பேட்டுக் கனிமமாக சூம்வைட்டு கருதப்படுகிறது. அமெரிக்காவின் உட்டா மாநிலம் சான் யூவான் மாகாணத்தில் உள்ள சிம்ப்ளாட்டு சுரங்கத்தில் இக்கனிமம் கண்டறியப்பட்டது.
சூம்வைட்டு கனிமத்தின் கட்டமைப்பு தனித்துவமானதாகும். ஓரளவிற்கு வேதியியல் ரீதியாக ஒத்த இயற்கை யுரேனைல் சல்பேட்டுகளில் இயாக்கிமோவைட்டு, மெட்டாரானோபிலைட்டு மற்றும் யுரேனோபிலைட்டு ஆகியவை அடங்கும்.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சூம்வைட்டு கனிமத்தை Smw என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
சல்பேட்டுக் கனிமங்கள்
யுரேனியம்(VI) கனிமங்கள்
ஒற்றைச்சரிவச்சுக் கனிமங்கள் |
684023 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D | கடந்தகாலம் | கடந்த காலம் அல்லது இறந்தகாலம் (past tense) என்பது ஓர் இலக்கணக் காலமாகும். கடந்த காலத்தில் நடந்த ஒரு செயலை அல்லது சூழ்நிலையைக் குறிப்பதாகும். எழுதினான், பாடினன், ஆடினான் ஆகியன கடந்த கால வினைச்சொற்களின் எடுத்துக்காட்டுகளாகும். பெரும்பாலான மொழிகள் கடந்த காலத்தைக் கொண்டுள்ளன, சிலவற்றில் செயலானது எவ்வளவு நாட்கள் நடந்தது என்பதைக் குறிக்கும் வகையில் பல வகைகள் உள்ளன. சில மொழிகளில் கூட்டு கடந்த காலம் உள்ளது, இது துணை வினைச்சொற்களையும், தொடர்ச்சியான அல்லது மீண்டும் மீண்டும் நிகழும் நிகழ்வுகள் அல்லது செயல்களை வெளிப்படுத்துகிறது.
அறிமுகம்
சில மொழிகளில், கடந்த காலத்தின் இலக்கண வெளிப்பாடு இலக்கணக் கூறு போன்ற பிற வகைகளின் வெளிப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு மொழியில் பல வகையான கடந்த கால வடிவங்கள் இருக்கலாம், அவற்றின் பயன்பாடு எந்த அம்ச அல்லது பிற கூடுதல் தகவல்களை குறியிட வேண்டும் என்பதைப் பொறுத்து இருக்கும். உதாரணமாக, பிரஞ்சு மொழியானது கூட்டுக் கடந்த காலத்தினைக் கொண்டுள்ளது. இது முடிந்த செயல்களையும், மீண்டும் மீண்டும் நிகழும் நிகழ்வுகள் அல்லது செயல்களை வெளிப்படுத்துகிறது.
ஆசியா
கடந்த காலங்கள் பல்வேறு ஆசிய மொழிகளில் காணப்படுகின்றன. வட ஆசியாவில் உள்ள இந்தோ-ஐரோப்பிய மொழிகள் உருசிய மொழி, தென்மேற்கு மற்றும் தெற்காசியாவில் உள்ள பாரசீக, உருது, நேபாளி,இந்தி, துருக்கிய மொழிகள், துருக்குமேனியம், காசாக்கு, தென்மேற்கு, மத்திய ஆசியாவில் உள்ள உய்குர் மொழிகள், தென்மேற்கு ஆசியாவில் அரபு மற்றும் ஹீப்ரு, சப்பானியம் இந்தியாவின் திராவிட மொழிகள், உருசியாவின் உராலிக் மொழிகள், மங்கோலிக் மற்றும் கொரிய மொழிகள் ஆகியவை இதில் அடங்கும்.
கிரியோல் மொழிகள்
கிரியோல்
கிரியோல் மொழிகள் காலத்தினை விருப்பமானதாக ஆக்க முனைகின்றன, மேலும் காலங்களானது மாரிலியாகக் குரிக்கப்படும் போது முன் வாய்மொழிக் குறிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஐத்தி கிரியோல்
ஐத்தி கிரியோல் மொழி மீண்டும் மீண்டும் நிகழும் நிகழ்வுகள் அல்லது செயல்களை வெளிப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
கடந்தகாலம்
காலங்கள் (இலக்கணம்) |
684024 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 | சாங்கோயிட்டு | சாங்கோயிட்டு (Changoite) என்பது Na2Zn(SO4)2·4H2O என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இது ஓர் அரிய துத்தநாக சல்பேட்டு கனிமமாகும். சாகோயிட்டு கனிமம் சிலி நாட்டின் அண்டோஃபாகசுட்டாவில் உள்ள சியரா கோர்டாவுக்கு அருகிலுள்ள சான்பிரான்சிசுகோ சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. சாங்கோயிட்டு கனிமமானது புளோடைட்டு கனிமத்தின் துத்தநாக ஒப்புமையாகும். புளோடைட்டு குழுவின் மற்ற பிரதிநிதிகளான கோபால்டோபுளோடைட்டு, மாங்கனோபுளோடைட்டு மற்றும் நிக்கல்புளோடைட்டு ஆகியவற்றின் துத்தநாக-ஒப்புமையாகவும் சாங்கோயிட்டு கருதப்படுகிறது. வேதியியலின் அடிப்படையில் சாங்கோயிட்டு கனிமம் கிட்டத்தட்ட கோர்டைட்டைப் போலவே உள்ளது. கனிமத்திற்கான சாங்கோயிட்டு என்ற பெயர் சிலியின் ஆரம்பகால குடிமக்களான சாங்கோசு என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது.
சாங்கோயிட்டு கனிமத்தில் மக்னீசியம் மற்றும் கால்சியத்தின் தடயங்கள் மிகக் குறைவாகும்.
சாங்கோயிட்டு கனிமத்துடன் இணைந்து இயிப்சம், துத்தநாகம் கொண்டுள்ள பராடகாமைட்டு தேனார்டைட்டு ஆகிய கனிமங்கள் இணைந்து காணப்படுகின்றன.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சாங்கோயிட்டு கனிமத்தை Cgo என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
துத்தநாகக் கனிமங்கள்
சல்பேட்டுக் கனிமங்கள்
சோடியம் கனிமங்கள்
ஒற்றைச்சரிவச்சுக் கனிமங்கள் |
684030 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 | நீக்கல் பண்பு | கணிதத்தில், நீக்கற்தன்மை அல்லது நீக்கல் பண்பு (cancellativity, cancellability, cancellation property) என்பது நேர்மாற்றத்தக்கதன்மையின் பொதுமைப்படுத்தலாகும்.
என்றதொரு குலமனின் ஏதேனுமொரு உறுப்பு என்க.
எனில்
உறுப்பு a ஆனது, இடது நீக்கல் பண்பு கொண்டது அல்லது இடப்பக்க-நீக்கற்தன்மை உடையது எனப்படும்.
மேலும்,
எனில்
உறுப்பு a ஆனது, வலது நீக்கல் பண்பு கொண்டது அல்லது வலப்பக்க-நீக்கற்தன்மை உடையது எனப்படும்.
குலமனின் உறுப்பு a ஆனது, இடது நீக்கல் பண்பு, வலது நீக்கல் பண்பு இரண்டையும் கொண்டிருந்தால் அது இருபக்க நீக்கல் பண்பு (two-sided cancellation property) உடையது அல்லது நீக்கத்தக்கது (cancellative) எனப்படும்.
ஒரு குலமனின் அனைத்து உறுப்புகளுக்கும் இடது நீக்கல் பண்பிருந்தால் அக்குலமன் இடது நீக்கல் பண்புடையது அல்லது இடது-நீக்கத்தக்கது என அழைக்கப்படும். அதேபோல, ஒரு குலமனின் அனைத்து உறுப்புகளுக்கும் வலது நீக்கல் பண்பிருந்தால் அக்குலமன் வலது நீக்கல் பண்புடையது அல்லது வலது-நீக்கத்தக்கது என அழைக்கப்படும்.
வலது, இடது நீக்கத்தன்மை இரண்டுமுடைய குலமன் இருபக்க நீக்கல் பண்புடையது அல்லது நீக்கத்தக்கது எனப்படும்.
ஓர் அரைக்குலத்தில், இடப்பக்க-நேர்மாற்றத்தக்கதாகவுள்ள ஒவ்வோரு உறுப்பும் இடப்பக்க-நீக்கற்தன்மை உடையதாகும்; வலப்பக்க, இருபக்கப் பண்புகளுக்கும் இது பொருந்தும். a இன் இடப்பக்க நேர்மாறு a−1 எனில்,
,
(சேர்ப்புப் பண்பின்படி)
ஒவ்வொரு பகுதி குலமும் நீக்கத்தக்கதாக இருக்கும். எனவே ஒவ்வொரு குலமும் நீக்கல் பண்புயையது.
விளக்கம்
என்ற குலமனின் உறுப்பு a ஆனது, இடது நீக்கல் பண்பு கொண்டுள்ளது என்பது, என்ற சார்பானது ஒரு உள்ளிடு கோப்பாக இருக்குமென்பதைக் குறிக்கிறது.
அதாவது சார்பு g ஒரு உள்ளிடு கோப்பு எனில்,
சமன்பாட்டிலுள்ள மாறி x மட்டுமேயாகவும், அச்சமன்பாட்டை நிறைவு செய்யக்கூடிய வகையான x இன் மதிப்பு ஒன்றேயொன்று மட்டுமாகவும் இருக்கும்.
மேலும் நுட்பமாக இதனைப் பின்வருமாறு விளக்கலாம்:
x இன் அனைத்து மதிப்புகளுக்கும்,
என்பதை நிறைவுசெய்யும் வகையில் g இன் நேர்மாறாக f சார்பை வரையறுக்க முடியும்.
இதனையே கீழ்வருமாறும் கூறலாம்:
M இலுள்ள அனைத்து x , y உறுப்புகளுக்கும்,
எனில், ஆகும்.
என்ற குலமனின் உறுப்பு a ஆனது, வலது நீக்கல் பண்பு கொண்டுள்ளது என்பது, என்ற சார்பானது ஒரு உள்ளிடு கோப்பாக இருக்குமென்பதைக் குறிக்கிறது.
அதாவது சார்பு h ஒரு உள்ளிடு கோப்பு எனில்,
M இலுள்ள அனைத்து x , y உறுப்புகளுக்கும்,
, எனில் ஆக இருக்கும்.
மேற்கோள்கள்
இருமச் செயல்களின் பண்புகள் |
684032 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87 | மோகன் மதே | மோகன் மதே (Mohan Mate) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். மதே 1999 முதல் 2004 வரை மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் 2019 முதல் 2024 வரை நாக்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் மீண்டும் மதே போட்டியிட்டு மூன்றாவது முறையாக மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
மகாராட்டிரத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள் |
684034 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE | பிரபா சங்கர் சுக்லா | பிரபா சங்கர் சுக்லா {Prabha Shankar Shukla) என்பவர் 27 சூலை 2021 நிலவரப்படி வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளார்.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
உயர்கல்வி விருது
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
இந்தியக் கல்வி நிர்வாகவியலாளர்கள் |
684040 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D | காட்டுயிர்களைக் கடத்தல் | காட்டுயிர்கள் கடத்தல் என்பது அழிந்து வரும் காட்டு உயிரினங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் மற்றும் தாவரங்களைச் சட்டவிரோதமாக சேகரித்தல், வர்த்தகம் செய்தல் மற்றும் வெளிநாடுகளுக்கு கடத்தி வர்த்தகம் செய்தல் பன்னாட்டுச் சட்ட விரோதம் ஆகும். யானை தந்தத்தில் கலைப்பொருட்கள் செய்தல், வன விலங்குகளை வேட்டையாடி உண்ணல், பாரம்பரிய மருத்துவத்திற்காகவும், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பதற்காகவும், வீட்டில் கவர்ச்சியான செல்லப் பிராணிகளாக வளர்ப்பதற்காகவும் காட்டுயிர்கள் மனிதர்களால் வேட்டையாடப்பட்டு வருகிறது,
சீனாவும், அமெரிக்காவும் சட்டவிரோத வனவிலங்குகளை வாங்குபவர்களில் முதலிடத்தில் உள்ளனர்..
யானை தந்தங்கள் மற்றும் காண்டாமிருக கொம்புகள் அரைக்கப்பட்டு பொடியாக்கி கடத்தப்படுகிறது..மேலும் உணவுக்காக பாம்புகளை சிறிய தகர டப்பாக்களில் வைத்துக் கடத்தப்படுகிறது..
ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை குறைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று சட்டவிரோத காட்டுயிர் கடத்தலே காரணம். . கடந்த 30 ஆண்டுகளில் ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை சுமார் 90% குறைந்துள்ளதால், ஆப்பிரிக்க யானைகளை, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம், மிகவும் ஆபத்தான நிலையிலுள்ள அழிந்து வரும் உயிரினங்களின் சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
காட்டுயிர்கள் மற்றும் தாவரங்களின் (CITES) அழிந்து வரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் கீழ், அழிந்து வரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளது. இது அந்த இனங்களின் எண்ணிக்கையை மீட்டெடுக்க அனுமதிக்கும்.
சட்டவிரோத காட்டுயிர் கடத்தலைக் கண்காணிக்கும் அமைப்புகளின்படி, கடத்தல்காரர்கள் அதிகளவில் அஞ்சல் மற்றும் தூதஞ்சல் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர்.எடுத்துக்காட்டாக, டிசம்பர் 2023 மற்றும் சனவரி 2024க்கு இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள அஞ்சல் நிலையங்களைப் பயன்படுத்திப் பல்வேறு வகையான பல்லிகளைக் கடத்த முயற்சிகள் நடந்தது.ஆப்பிரிக்காவில் உணவிற்காக காட்டுயிர்கள் வேடையாடப்படுகிறது. மேலும் காட்டுயிர்களை வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்யப்படுகிறது.
இதனையும் காண்க
தந்த வர்த்தகம்
வனவிலங்கை வேட்டையாடுதல்
வேட்டையாடுதலுக்கான எதிர்ப்பு
மேற்கோள்கள்
காட்டுயிர்
கடத்தல்கள்
வேட்டையாடுதல் |
684043 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | பாண்டான் இண்டா எல்ஆர்டி நிலையம் | பாண்டான் இண்டா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Pandan Indah LRT Station; மலாய்: Stesen LRT Pandan Indah; சீனம்: 美丽的香兰) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடத்தில் அமைந்துள்ள உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.
இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள பாண்டான் இண்டா எனும் குடியிருப்பு பகுதியின் பெயரில், இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. அத்துடன் பாண்டான் 3/8 சாலை, இந்த நிலையத்திற்கு அருகில் உள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ள எம்ஆர்டி சுற்று வழித்தடத்துடன் எதிர்காலப் பரிமாற்றமாக நிலையமாகச் செயல்பட இந்த நிலையம் திட்டமிடப்பட்டுள்ளது.
பொது
அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்பு 'இஸ்டார் எல்ஆர்டி' (STAR-LRT) என அழைக்கப்பட்டன.
இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் ஒரு பகுதியாக சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் தொடங்கி, இந்த பாண்டான் இண்டா எல்ஆர்டி நிலையம் வரையில் 13 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த 13 நிலையங்களில் இந்த பாண்டான் இண்டா எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 16 டிசம்பர் 1996 அன்று திறக்கப்பட்டது.
இந்த நிலையத்தன் மேலே கட்டப்பட்டு உள்ள மேம்பாலம்; தாமான் பக்தி (Taman Bakti) மற்றும் பாண்டான் இண்டா (Pandan Indah) ஆகிய அடுக்குமாடி மனைக் குடியிருப்புகளுக்குச் செல்வதற்கு ஒரு நடைபாதை வழியாகவும் (Walkway) செயல்படுகிறது.
பாண்டான் ஜெயா
இந்த நிலையத்திற்கு முந்தைய நிலையம் பாண்டான் ஜெயா எல்ஆர்டி நிலையம்; அந்த பாண்டான் ஜெயா எல்ஆர்டி நிலையத்துடன் பேருந்து அணுகலையும் இந்த பாண்டா இண்டா நிலையம் கொண்டுள்ளது. இந்த நிலையம் 1 கிலோமீட்டர் வடகிழக்கில் உள்ள பாண்டான் ஜெயா நிலையத்துடன் பாண்டான் நகரின் பெயரைப் பகிர்ந்து கொள்கிறது.
அம்பாங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சான் சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது.
இலகு தொடருந்து இஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.
கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை மலேசிய அரசாங்கம் முன்மொழிந்தது. திசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் இஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
காட்சியகம்
பாண்டான் ஜெயா எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2022)
மேலும் காண்க
மலூரி நிலையம்
மிகார்ஜா எல்ஆர்டி நிலையம்
சான் சோவ் லின் நிலையம்
பாண்டான் ஜெயா எல்ஆர்டி நிலையம்
பண்டாராயா எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர் சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Klang Valley MRT Line Integrations
மலேசியத் தொடருந்து நிலையங்கள்
கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள் |
684044 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE | சாந்தனு குப்தா | சாந்தனு குப்தா, இந்திய எழுத்தாளும், அரசியல் விமர்சகரும் ஆவார். இவர் இராமாயணப் பள்ளியை நிறுவியுள்ளார். சாந்தனு குப்தா பாரதிய ஜனதா கட்சி: கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட தினம் அல்லாத நூல்களை எழுதியுள்ளார். நடப்பு உத்தரப் பிரதேச முதலமைச்சரான யோகி ஆதித்தியநாத்தின் வாழ்க்கை வரலாறு குறித்த The Monk Who Became Chief Minister எனும் நூலை எழுதியுள்ளார். The Monk Who Transformed Uttar Pradesh எனும் நூலில் சாந்தனு குப்தா யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கை வரலாற்றின் தொடர்ச்சியை எழுதியுள்ளார் 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் முதன்முறையாக வாக்களிப்பவர்கள் குறித்தான அரசியல் நகைச்சுவை நூலை 101 Reasons Why I Will Vote for Modi .தலைப்பில் எழுதிய முதல் எழுத்தாளர் சாந்தனு குப்தா ஆவார்.
இளமை மற்றும் கல்வி
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பரேலியில் 7 பிப்ரவரி 1979 அன்று பிறந்த சாந்தனு குப்தா, ரிசிகேசுவில் பள்ளிக் கல்வியை முடித்தார். பின்னர் ப்ந்த் நகரத்தில் உள்ள ஜி. பி. பந்த் வேளாண்மை மற்றும் தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றார்.
பிறகு ஜம்சேத்பூர் நகரத்தில் உள்ள சேவியர் மேலாண்மைப் பள்ளியில் (XLRI) மேலாண்மை படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்று, இந்தியா மற்றும் அயல் நாடுகளில் ஆலோசகராக பணியாற்றினார்.
தொழில்
இவர் முதன்முதலில் ஐதராபாத் நகரத்தில் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றினார் பன்னாட்டு மென்பொருள் பணியிலிருந்து விலகிய பின்னர், நந்தி அறக்கட்டளையை நிறுவி சமூக சேவையாற்றி வருகிறார்.
நந்தி அறக்கட்டளை மூலம் சாந்தனு குப்தா ஆந்திரம், மகாராட்டிரம் மற்றும் புது தில்லி பகுதிகளில் கல்வித்துறையில் உள்ள குறைகளை தீர்ப்பதற்காக திட்டங்களை நிர்வகிக்க உதவுகிறார். ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியுதவியுடன் உத்தரப் பிரதேசத்தில் கலவி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய புந்தேல்கண்ட் பகுதியில் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு சேவை செய்து வருகிறார்.
சாந்தனு குப்தா அரசியல் மற்றும் அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக பல நூல்களை எழுதியுள்ளார்.
இராமாயணப் பள்ளி
சாந்தனு குப்தா இராமாயணப் பள்ளியை நிறுவி, தற்காலம் வரை இருக்கும் வாழ்க்கைப் பாடங்களை ஆராய்ந்து, அதற்கேற்ப வாழ்க்கைச் சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகளை விவரிக்கிறது.
படைப்புகள்
சாந்தனு குப்தா எழுதிய நூல்களின் பட்டியல்:
Ajay to Yogi Adityanath
India's Football Dream,
The Monk Who Became Chief Minister
The Monk Who Transformed Uttar Pradesh
101 Reasons, Why I Will Vote For Modi,
Bharatiya Janata Party - Past, Present & Future
இதனையும் காண்க
இந்திய எழுத்தாளர்கள் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
1979 பிறப்புகள்
வாழும் நபர்கள்
இந்திய எழுத்தாளர்கள்
இந்திய ஆங்கில எழுத்தாளர்கள்
உத்தரப் பிரதேச நபர்கள் |
684053 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | செம்பாக்கா எல்ஆர்டி நிலையம் | செம்பாக்கா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Cempaka LRT Station; மலாய்: Stesen LRT Cempaka; சீனம்: 千百家站) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடத்தில் அமைந்துள்ள உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.
இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள தாமான் செம்பாக்கா (Taman Cempaka) எனும் குடியிருப்பு பகுதியின் பெயரில், இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. அத்துடன் பாண்டான் இண்டா சாலை 6/1, இந்த நிலையத்திற்கு அருகில் உள்ளது.
பொது
அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்பு 'இஸ்டார் எல்ஆர்டி' (STAR-LRT) என அழைக்கப்பட்டன.
இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் ஒரு பகுதியாக சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் தொடங்கி, இந்த செம்பாக்கா எல்ஆர்டி நிலையம் வரையில் 13 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த 13 நிலையங்களில் இந்த செம்பாக்கா எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 16 டிசம்பர் 1996 அன்று திறக்கப்பட்டது.
இந்த நிலையம் அண்டை நிலையமான சகாயா நிலையத்திலிருந்து 470 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
பாண்டான் இண்டா நிலையம்
இந்த நிலையத்திற்கு முந்தைய நிலையம் பாண்டான் இண்டா எல்ஆர்டி நிலையம்; அந்த பாண்டான் இண்டா எல்ஆர்டி நிலையத்துடன் பேருந்து அணுகலையும் இந்த செம்பாக்கா நிலையம் கொண்டுள்ளது.
அம்பாங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சான் சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது.
இலகு தொடருந்து இஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.
கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை மலேசிய அரசாங்கம் முன்மொழிந்தது. திசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் இஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
பேருந்து சேவைகள்
காட்சியகம்
செம்பாக்கா எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2023)
மேலும் காண்க
மலூரி நிலையம்
மிகார்ஜா எல்ஆர்டி நிலையம்
சான் சோவ் லின் நிலையம்
பாண்டான் ஜெயா எல்ஆர்டி நிலையம்
பாண்டான் இண்டா எல்ஆர்டி நிலையம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Klang Valley MRT Line Integrations
மலேசியத் தொடருந்து நிலையங்கள்
கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள் |
684060 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87 | லிங்குவா லிப்ரே | லிங்குவா லிப்ரே என்பது பிரான்சிய விக்கிமீடியாவின் இணைய கூட்டுத் திட்டத்தின்மூலம் உருவாக்கப்பட்ட சொற்களை ஒலிப்பதிவுச் செய்ய உதவும் கருவியாகும். இது கட்டற்ற உரிமத்தில் கூட்டுழைப்பு, பன்மொழியாமை, ஒலிக்கட்புலத் தரவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது விரைவாக ஒலிப்பை பதிவு செய்ய உதவுகிறது, இது பயனர்களை நூற்றுக்கணக்கிலான கோப்புகளை பதிவேற்ற அனுமதிக்கிறது. இதில் பங்களிப்பாளர்கள் 250 மேற்பட்ட மொழிகளில் ஒலிப்புக்கோப்புகளை உருவாக்கியுள்ளனர்.
விளக்கம்
லிங்குவா லிப்ரே எந்த ஒரு மொழியின் சொற்கள், சொற்றொடர்களையும் பதிவு செய்யும். பேசப்படும் மொழியாக இருந்தால் ஒலிபதிவாகவும், சைகை மொழியாக இருந்தால் நிகழ்படமாக பதிவு செய்து உதவுகிறது.
பதிவாளருக்கு ஒரு சொற்கள் பட்டியல் வழங்கப்படுகின்றன, சுயமாகவோ, விக்கிமீடியப் பகுப்புகளைக் கொண்டோ சொற்பட்டியலை உருவாக்கலாம். பதிவாளர் வெறுமனே திரையில் காட்டப்படும் சொல்லைப் படித்து, ஒரு நொடி அமைதி காக்கும் போது அதை கண்டறிந்து மென்பொருள் சொற்பட்டியில் உள்ள அடுத்த சொல்லிற்கு செல்லும். இந்த முறைமை, திறந்த மூல மென்பொருளான ச்டூகா (Shtooka) இலிருந்து கொண்டுவரப்பட்டது. இதனின் உருவாக்குநர் நிக்கோலசு வியோனியால் ஒரு மணி நேரத்திற்கு பல நூற்றுக்கணக்கான சொற்களைப் பதிவுசெய்வது சாத்தியமாகியது. பதிவுகள் வலை நுகர்வியிலிருந்து விக்கிமீடியப் பொதுவகத்துக்கு தானாகவே பதிவேற்றப்படும்.
2021 வசந்த காலத்தில், இசுதிராசுபூர்க்க்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக லிங்குவா லிப்ரே முடக்கநிலையில் இருந்தது, ஆனால் பதிவுகள் எதுவும் இழக்கப்படவில்லை.
பதிவுகளின் பயன்பாடு
பதிவுகளை லிங்குவா லிப்ரே அல்லது பொதுவகத்தில் இருந்து பயன்படுத்தப்படலாம். இவை முக்கியமாக மற்ற விக்கிமீடியத் திட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன, எடுத்துக்காட்டாக விக்சனரிகளில் சொற்களின் ஒலிப்பை விளக்குவதற்கும், விக்கிப்பீடியாக்களில் கட்டுரைகளின் பெயர்களை சரியான மூலமொழி ஒலிப்பை விளக்குவதற்கும் பயன்படுகிறது.
மொழி கற்பித்தல் சூழலில் பதிவுகளைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொழி கற்பவர்கள், ஒலிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பிரபலமான அகராதி மென்பொருளான கோல்டன்டிக்ட்-இல் (GoldenDict) பயன்படுத்தலாம்.
இயற்கை மொழி முறையாக்கத்திட்டங்களிலும் இப்பதிவுகள் பயன்படுத்தப்படுகின்றன, உதாரணமாக மொசில்லாவின் பேச்சுணரி கருவிகளை இயக்குவதற்கு பயன்படும்.
பதிப்புகள்
சனவரி 23, 2015 அன்று லிங்குவா லிப்ரே தொடங்கப்பட்டது. மூன்று தொடர்ச்சியான பதிப்புகளைக் கொண்டுள்ளது:
லிங்குவா லிப்ரே ப.1 (2016)
பிரான்சின் மொழிகள் திட்டத்தின் ஒரு பகுதியாக, விக்கிமீடியா மற்றும் பொதுவாக இணையத் திட்டங்களில் பிரான்சின் பிராந்திய மொழிகளை ஆவணப்படுத்தி மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, Lingua Libre லிங்குவா லிப்ரே கருத்தாக்கம் நவம்பர் 2015 இல் தொடங்கியது, இதில் மொழிக்கான பொது பிரதிநிதிகள் குழு மூலம் ஓரளவு நிதியளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல் பதிப்பு ஆகத்து 2016 இல் வெளியிட்டது.
அப்போது ஒலிப்பதிவுக்கு மட்டுமே பொருத்தமானதாக இருந்தது, லிங்குவா லிப்ரே திசம்பர் 2016 இல் ஓக் மொழி குறித்த பட்டறையின் போது காட்டப்பட்டது, பின்னர் 2017 இல் சர்வதேச நிகழ்வுகளில் இணையத்தில் விக்கிமீடிய சமூகத்துக்கு வழங்கப்பட்டது.
லிங்குவா லிப்ரே ப.2 (2018)
2017 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு முழுமையான மறுகட்டமைப்பு லிங்குவா லிப்ரேயில் தொடங்கப்பட்டது. லிங்குவா லிப்ரேயின் புதிய பதிப்பு மீடியாவிக்கியை அடிப்படையாகக் கொண்டது, விக்கிமீடிய சூழலைச் சிறப்பாக ஒருங்கிணைக்க விக்கித்தளம் (Wikibase), திறந்த உரிமை நல்குதலை (OAuth) பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டது. இடைமுகம் Translatewiki.net வழியாக மொழிபெயர்க்க கொண்டுவரப்பட்டது, இதனால் திட்டத்தை அதிக எண்ணிக்கையிலான சமூகங்கள் பயன்படுத்தி மொழிபெயர்க்க முடியும். தளத்தின் புதிய பதிப்பு சூன் 2018 இல் தயாராகி, ஆகத்து 2018 இல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
லிங்குவா லிப்ரே ப.2.2 (2020)
2020 இல், முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டன; குறிப்பாக தளத்திற்கு ஒரு புதிய இடைமுகத் தோற்றம் உருவாக்கப்பட்டது, .fr என்று பயன்படுத்தப்பட்ட களப்பெயர் .org என்று மாற்றியது, நிகழ் படங்களை பதிவு செய்யும் வசதி கொண்டுவரப்பட்டு சைகை மொழிகளுக்கான ஆதரவையும் சேர்த்தது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இவற்றையும் காண்க
பிற கருவிகள்
Spell4Wiki, தமிழ்நாட்டைச் சேர்ந்த தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்ட ஒலிப்பதிவு கைபேசிக் கருவி
மீடியாவிக்கி இணையங்கள்
மொழியியல் |
Subsets and Splits