id
stringlengths
1
6
url
stringlengths
31
789
title
stringlengths
1
93
text
stringlengths
9
259k
682839
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE
இந்திரா காந்தி ராட்டிரிய மானவ் சங்கராலயா
இந்திரா காந்தி ராட்டிரிய மானவ் சங்கராலயா (Indira Gandhi Rashtriya Manav Sangrahalaya) மனிதகுலத்தின் தேசிய அருங்காட்சியகம் அல்லது மனிதர் மற்றும் கலாச்சார அருங்காட்சியகம் எனவும் அறியப்படும் இது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் போபாலில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகம் நகரின் சியாமளா மலையில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் நேரம் மற்றும் விண்வெளியில் மனிதகுலத்தின் கதையை சித்தரிக்கிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய இனவியல் அருங்காட்சியகம் ஆகும். பழங்குடியினர் வாழ்விடம், கடலோர கிராமம், பாலைவன கிராமம், இமயமலை கிராமம், பாறை கலை பாரம்பரியம், புராண பாதை, ஆற்றுப் பள்ளத்தாக்கு கலாச்சாரம், அய்யனார் ஆலய வளாகம் மற்றும் பாரம்பரிய தொழில்நுட்ப பூங்கா ஆகிய திறந்தவெளி கண்காட்சிகளை இந்த அருங்காட்சியகம் கொண்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் தென்னிந்திய பிராந்தியத்திற்கான பிராந்திய மையமும் உள்ளது, இது கருநாடகாவின் மைசூரில் அமைந்துள்ளது. வரலாறு 1970 ஆம் ஆண்டில், கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய அறிவியல் பேராய சங்க அமர்வின் ஒரு பகுதியாக, "மானுடவியல் மற்றும் தொல்லியல் பிரிவின் தலைவர் சச்சின் ராய், தனது தலைமை உரையில், நாட்டில் 'மனித அருங்காட்சியகம்' தேவை என்பதை வலியுறுத்தினார்". இதற்காக மத்தியப் பிரதேச மாநில அரசு 200 ஏக்கர் நிலத்தை வழங்கியது. இதன் விளைவாக இந்த அருங்காட்சியகம் மாநிலத்தில் முறையாக நிறுவப்பட்டது. பின்னர் 21 ஏப்ரல் 1979 அன்று மத்திய அமைச்சர் டாக்டர் பிரதாப் சந்திர சுந்தர் இதனை திறந்து வைத்தார். ஆரம்பத்தில், இந்த அருங்காட்சியகம் புதுதில்லியில் உள்ள பகவல்பூர் இல்லத்தில் அமைந்திருந்தது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Official website Images of Rashtriya Manav Sangrahalaya
682840
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF
தோக்ரா சட்டக் கல்லூரி
தோக்ரா சட்டக் கல்லூரி (Dogra Law College) இந்திய ஒன்றியப் பிரதேசமான சம்மு-காசுமீரில் உள்ள சம்முவில் உள்ள துக்கர் நிலத்தின் பாரி பிராமணாவில் அமைந்துள்ள ஒரு தனியார் சட்டப் பள்ளியாகும். இது 3 ஆண்டு இளங்கலை சட்டப் படிப்புகள், 5 ஆண்டு ஒருங்கிணைந்த எல். எல். பி. படிப்புகளை வழங்குகிறது. இப்பட்டப் படிப்புகள் இந்திய பார் கவுன்சில் (பிசிஐ) புது தில்லியால் அங்கீகரிக்கப்பட்டு சம்மு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வரலாறு. 1999 ஆம் ஆண்டில் சம்மு-காசுமீர் அரசு இக்கல்லூரியை நிறுவ அனுமதித்தது. சம்மு பல்கலைக்கழகமும் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கியது. இறுதியாக 2000 ஆம் ஆண்டில், தோக்ரா சட்டக் கல்லூரி இந்திய பார் கவுன்சிலின் அங்கீகாரத்திற்குப் பிறகு நிறுவப்பட்டது. ஒவ்வொரு தனிமனிதர் மீதும் கவனம் செலுத்துவதன் மூலம் சிறந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும் அனைத்து வகையான ஆளுமை வளர்ச்சியைப் பெறக்கூடிய ஒரு தளத்தை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் ஆறு ஏக்கர் பரப்பளவில் இக்கல்லூரி நிறுவப்பட்டது. மேற்கோள்கள் சம்மு காசுமீரில் கல்வி
682841
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D
குமார் சுரேஷ் சிங்
குமார் சுரேஷ் சிங் (Kumar Suresh Singh) (1935-2006) பொதுவாக கே. எஸ். சிங் என்று அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார். இவர் சோட்டாநாக்பூரின் ஆணையராகவும் (1978-80) மற்றும் இந்திய மானுடவியல் ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் முக்கியமாக இந்திய மக்கள் பற்றிய கணக்கெடுப்பின் மேற்பார்வை மற்றும் தொகுத்தல் பாணிக்காகவும் மற்றும் பழங்குடி வரலாறு பற்றிய ஆய்வுகளுக்காகவும் அறியப்படுகிறார். வாழ்க்கை குமார் சுரேஷ் சிங் , பிற்படுத்தப்பட்ட ஒரு இனத்தைச் சேர்ந்தவர். பீகாரில் உள்ள முங்கேரில் வளர்ந்தார். பாட்னா பல்கலைக்கழகத்தில் இளங்கலை வரலாறு படித்தார். பின்னர் முதுகலைப் பட்டம் பெற்றார். இறுதியாக புரட்சியாளர் பிர்சா முண்டா என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் 1958 இல் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். பின்னர் 1965-1968 காலகட்டத்தை சோட்டாநாக்பூர் பகுதியில் உள்ள பலாமூவில் துணை ஆணையராகப் பணி புரிந்தார். இந்த சமயத்தில் ஏற்பட்ட இந்தியப் பஞ்சத்தில் பீகாரில் நிவாரணப் பணிகளை ஒழுங்கமைக்க உதவினார். பின்னர், சிங் சோட்டாநாக்பூருக்கு 1978-1980 ஆணையராக மீண்டும் பணியேற்றார். 1984 ஆம் ஆண்டில் இவர் இந்திய மானுடவியல் ஆய்வகத்தில் தலைமை இயக்குநராகவும் , போபாலில் உள்ள இந்திரா காந்தி ராட்டிரிய மானவ் சங்கராலயாவின் (மனிதகுலத்தின் தேசிய அருங்காட்சியகம்) இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். சிங் 1993 இல்இந்திய மானுடவியல் ஆய்வகத்தின் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றாலும், இவர் 20 மே 2006 இல் இறக்கும் வரை பீப்பிள் ஆஃப் இந்தியா தொடரின் பொது ஆசிரியராக இருந்தார். தான் இறப்பதற்கு சற்று முன்பு இறுதி தொகுதியை முடித்தார். இவர் இறக்கும் போது இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவின் தேசிய உறுப்பினராக இருந்தார். பழங்குடியினர் ஆய்வுகள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிப் பிரச்சாரத்தின் தலைவரான பிர்சா முண்டாவைப் பற்றி சிங் ஒரு ஆய்வறிக்கையை எழுதினார். இதைச் செய்ய, பீகாரின் சார்க்கண்டு பகுதியின் பழங்குடியின மக்களால் கூறப்பட்டுவந்த நாட்டுப்புறக் கதைகள் மற்றும் பிற வாய்வழி வரலாற்றை இவர் கணிசமாக நம்ப வேண்டியிருந்தது. மொத்தத்தில் இவர் 15 ஆண்டுகள் களப்பணிகளை மேற்கொண்டார். தாமோதர் தர்மானந்தா கோசாம்பியை முதன்மையான துணை வரலாற்றாசிரியர் என்று கருதினாலும், குமார் சுரேஷ் சிங் சிங்கும் குறிப்பிடத்தக்க வரலாற்றாசிரியராக இருந்துள்ளார். இவர் பழங்குடியின வரலாற்றில் பிற படைப்புகளையும் உருவாக்கினார். இந்திய மக்கள் இந்தியாவில் உள்ள அனைத்து சமூகங்களுக்கிடையிலான வேறுபாடுகள் மற்றும் இணைப்புகள் பற்றிய மானுடவியல் ஆய்வாகக் கருதப்பட்ட இந்திய மக்கள் கணக்கெடுப்பின் அமைப்பு, தொகுத்தல் மற்றும் மேற்பார்வை ஆகியவற்றுக்கான பொறுப்பு இவரிடம் வழங்கப்பட்டது . அக்டோபர் 1985 மற்றும் 1994 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 470 அறிஞர்களை உள்ளடக்கிய இந்த கணக்கெடுப்பில் 4694 சமூகங்கள் அடையாளம் காணப்பட்டன. இதில் பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகளில் ஈடுபட்டவர்களும் உள்ளனர். கணக்கெடுப்பின் முழு முடிவுகளும் வெளியிடப்பட்ட 43 தொகுதிகளை நிரப்புகின்றன, அவற்றில் 12 சிங் இறந்த நேரத்தில் தயாரிக்கப்பட்டவை இதனையும் காண்கவும் வில்லியம் குரூக் மேற்கோள்கள் மேலும் படிக்க வெளி இணைப்புகள் Anthropological Survey of India இந்திய வரலாற்றாளர்கள் 2006 இறப்புகள் 1935 பிறப்புகள்
682844
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81
பார்த்தா கோசு
பார்த்தா கோசு (Partha Ghosh)(7 மே 2022) மேற்கு வங்காளத்தின் புகழ்பெற்ற சொற்பொழிவாளராக இருந்தார். சோட்டி ஜபே, சாய் மற்றும் மா ஆகிய படைப்புகளுக்காக இவர் அறியப்படுகிறார். அனைத்திந்திய வானொலி கல்பா தாதுர் அசார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கத் தொடங்கிய பிறகு இவர் புகழ் பெற்றார். இளமை கோசு பகராம்பூரைச் சேர்ந்தவர். பின்னர் கொல்கத்தாவிற்கு குடிபெயர்ந்தார். தொழில் கொல்கத்தாவின் அனைத்திந்திய வானொலி அறிவிப்பாளர்-தொகுப்பாளராக கோடு தொடர்புடையவர் ஆனார். இரவீந்திரநாத் தாகூரின் கர்ண குந்தி சங்கபாதை அடிப்படையாகக் கொண்ட ஒரு இசைத் தொகுப்பினை இவர் தனது மனைவி கௌரி கோசுடன் இணைந்து தயாரித்தார். விருதுகள் 1971ஆம் ஆண்டு விடுதலைப் போரில் இவரது பங்களிப்பிற்காக விடுதலை போரின் நண்பர்கள் விருது பெற்றார். 2018ஆம் ஆண்டில், இவருக்கு மேற்கு வங்க அரசு பங்கா பூசண் விருது வழங்கியது. மரணம் கோசு 7 மே 2022 அன்று இறந்தார். இவர் தனது 83 வயதில் கடுமையான இதய செயலிழப்பு காரணமாக இறந்தார். இவருக்கு அயன், எனும் ஒரு மகன் இருந்தார். மேற்கோள்கள் 2022 இறப்புகள் 1930கள் பிறப்புகள் வானொலி ஆளுமைகள்
682846
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பீகாரிலுள்ள இராஜபுத்திரர்கள்
பீகாரில் உள்ள இராஜபுத்திரர்கள் (Rajputs in Bihar) இந்திய மாநிலமான பீகாரில் வசிக்கும் இராஜபுத்திரச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பாபு சாகேப் என்று பிரபலமாக அறியப்படுகிறார்கள். இவர்கள் முக்கியமாக பீகார், உத்தரபிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதி, மற்றும் சார்க்கண்டு ஆகிய இடங்களில் பரவியுள்ளனர். இவர்கள் பாரம்பரியமாக பீகாரி சமூகத்தில் நிலப்பிரபுத்துவ உயரடுக்கின் ஒரு பகுதியை உருவாக்கினர். சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் ஜமீந்தாரி ஒழிப்பு மற்றும் நிலக்கொடை இயக்கத்தால் இராஜபுத்திரர்கள் அழுத்தப்பட்டனர்; மற்ற முற்போக்கு சாதியினருடன் சேர்ந்து, அவர்கள் பீகாரின் விவசாய சமூகத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை இழந்தனர். இது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எழுச்சிக்கு வழிவகுத்தது. வரலாறு கி.பி. 1200 முதல், பல இராஜபுத்திர குழுக்கள் கிழக்கு நோக்கி சிந்து-கங்கைச் சமவெளிகளை நோக்கி நகர்ந்து, தங்கள் சொந்த ஆட்சிப் பகுதிகளை உருவாக்கினர். இந்த சிறிய இராஜபுத்திர இராச்சியங்கள் இன்றைய உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரின் கங்கை சமவெளிகளில் சிதறிக் கிடந்தன. இந்த செயல்பாட்டின் போது, பூர்வீக மக்களுடன் சிறிய மோதல்கள் ஏற்பட்டன. சில சந்தர்ப்பங்களில், கூட்டணிகள் உருவாக்கப்பட்டன. இந்த இராஜபுத்திர தலைவர்களில் போஜ்பூர் ஜமீந்தார்கள் மற்றும் அவத் வட்டங்களும் இருந்தன. கங்கை சமவெளியின் இந்தப் பகுதிகளுக்குள் இராஜபுத்திர குலத் தலைவர்கள் குடிபெயர்ந்ததும் முன்பு காடுகளாக இருந்த பகுதிகளில், குறிப்பாக தெற்கு பீகாரில் விவசாயப் பணிகள் மேம்பட்டன. சில வரலாற்றாசிரியர்கள் இந்த கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை மேற்கில் கோரிகளின் படையெடுப்பு தொடங்கியதோடு இணைத்துள்ளனர். இந்த குழுக்களில் பரமார இராஜ்புத்திரர்களின் உஜ்ஜெனியா குலமும் அடங்கும். அதே குலத்தைச் சேர்ந்த கஜபதி உஜ்ஜைனியா சேர் சா சூரியின் இராணுவத்தில் ஒரு தலைவராகவும் தளபதியாகவும் இருந்தார். 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், போஜ்பூர் மாவட்டத்தின் இராஜபுத்திர ஜமீந்தார் குன்வர் திர் கிளர்ச்சி செய்து முகலாயப் பேரரசை எதிராகப் போராடினார். இடைக்காலத்தில், பீகார் பகுதிக்கு குடியேறிய இராஜபுத்திரர்கள் கிதௌர், தேவ், நமுதக் மற்றும் கரக்பூர் போன்ற இராசியங்களை நிறுவினர். அதே காலகட்டத்தில், காந்தவரியா இராஜபுத்திரக் குலத்தினர் வடக்கு பீகாரின் குறிப்பிடத்தக்க பகுதியை கட்டுப்படுத்தினர். சோன்பர்சா அரசும் இந்த குலத்தைச் சேர்ந்தவர். இந்த இந்து இளவரசர்களுக்கு இந்த வலுவான குல அமைப்புதான் அவர்களுக்கு வெற்றியைக் கொண்டுவந்தது. 16ஆம் நூற்றாண்டிலிருந்து, பீகார் மற்றும் அவத் ஆகிய பகுதிகளின் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த இராஜபுத்திர வீரர்கள் மேற்கில், குறிப்பாக மால்வா பிராந்தியத்தில் உள்ள இராஜபுத்திரர்களுக்கு கூலிப்படையினராக நியமிக்கப்பட்டனர். 1857 ஆம் ஆண்டின் பெரும் எழுச்சியின் போது, பீகாரில் புரட்சியின் முக்கிய தலைவராக இருந்த குன்வர் சிங் தலைமையில் இராஜபுத்திரர்களில் ஒரு பகுதியினர் பங்கேற்றனர். சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் பீகாரின் பாரம்பரிய விவசாய சமூகத்தில், ஜமீந்தாரி உரிமைகள் மூலம் விவசாய உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் உயர் சாதியினரில் இராஜபுத்திரர்களும் அடங்குவர். சில உயர் சாதியினரும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கீழ் கீழ் மட்ட நிர்வாகத்திற்கு நியமிக்கப்பட்டனர். பிற உயர் சாதியினரின் குறைந்த கல்வியறிவு பெற்றவர்களான இராஜபுத்திரர்கள், பொது நிர்வாகத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட பங்கை வகித்தனர். மேலும் அவர்கள் முதன்மையாக சொத்து வைத்திருப்பவர்களாக இருந்தனர். 1900 மற்றும் 1920 க்கு இடையில், தெற்கு பீகாரின் சில பகுதிகளின் மக்கள்தொகையில் இராஜபுத்திரர்கள் பெரும்பகுதியாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இராஜபுத்திரர்கள் முக்கியமானவர்களாக இருந்த ஷாஹாபாத் பிராந்தியத்தில், அவர்கள் அறிவுசார் முயற்சிகளில் சிறிதளவேனும் ஆர்வம் காட்டவில்லை. இப்பகுதி மற்றும் ஒட்டுமொத்த பீகாரின் கல்வியறிவு விகிதமும் ஆபத்தான நிலையில் இருந்தது. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில், ஜமீந்தாரி ஒழிப்பு மற்றும் நிலக்கொடை இயக்கத்தின் அழுத்தத்தால், இராஜ்புத்துகளும் பிற உயர் சாதியினரும் பீகாரின் விவசாய சமூகத்தில் தங்கள் முக்கியத்துவத்தை இழந்தனர். தற்போதைய சூழ்நிலைகள் நவீன காலங்களில் பீகாரின் இராஜ்புத்திரர்கள் சமூக ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் சமூகமாக உள்ளனர். ஏனெனில் அவர்கள் பீகாரின் சட்டமன்றத்தில் போதிய பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். பீகாரில் இருந்து மக்களவையிலும் மற்றும் மாநிலங்களைவியிலும் இச்சமூகத்தினர் அதிக பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். குறிப்பிடத்தக்க நபர்கள் ஹரிஹர் சிங்-பீகாரின் 9வது முதலமைச்சர். குன்வர் சிங்-1857 ஆம் ஆண்டு இந்திய கிளர்ச்சியில் பங்கேற்ற ஜமீந்தார் மற்றும் இராணுவத் தளபதி பீஷ்ம நாராயண் சிங்-நாமுதக் மாநிலத்தைச் சேர்ந்தவர் மற்றும் அசாமின் முன்னாள் ஆளுநராக இருந்தார். அனுக்ரா நாராயண் சின்கா-இந்திய தேசியவாத அரசியல்வாதி [4]பீகார் ராஜா நரேன் சிங்-ஔரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கஜபதி உஜ்ஜைனியா-சேர் சா சூரி கீழ் சூர் பேரரசின் இராணுவத் தளபதி. பாட்னா மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த கே. பி. என். சிங், பீகாரின் பொறுப்பு ஆளுநராகவும் பணியாற்றினார். கமல் சிங்-தும்ரான் ராஜாவின் கடைசி மகாராஜா (உஜ்ஜைனியா ராஜ்புத்) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர். திக்விஜய் சிங்-கிதௌர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர், பல முறை மத்திய அமைச்சராக இருந்தவர். ராஜ்குமார் சிங்-மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர். மல்கன் சிங்-ஜம்சேத்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். மேற்கோள்கள் இராசபுத்திரர்கள் இந்திய இனக்குழுக்கள் இராஜஸ்தான் வரலாறு குசராத் வரலாறு ராசத்தான் மாநில சாதிகள்
682847
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
கஜபதி உஜ்ஜைனியா
ராஜா போஜ்பூர் சாஹி என்றும் அழைக்கப்படும் ராஜா கஜபதி உஜ்ஜைனியா (Gajpati Ujjainia) உஜ்ஜெனியா வம்சத்தைச் சேர்ந்த போஜ்பூரைச் சேர்ந்த ஒரு ஆட்சியாளர் ஆவார். இவர் சேர் சா சூரியின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டார். சூரியின் இராணுவத்தில் தளபதியாகவும் பணியாற்றினார். சூரஜ்கரா மற்றும் சௌசா ஆகிய இடங்களில் நடந்த போரில் இவரது பங்கிற்காக இவருக்கு ரோத்தாஸ் பிரதேசம் வழங்கப்பட்டது. இவர் முகலாயர்களுடன் தொடர்ந்து போரிட்ட முதல் உஜ்ஜைனியா தலைவர். மேற்கோள்கள் 1577 இறப்புகள் 1484 பிறப்புகள் இந்திய அரசர்கள் பீகார் வரலாறு
682852
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B7%E0%AE%BE
பிர்சாதா பரூக் அகமது ஷா
பிர்சாதா பரூக் அகமது ஷா (Pirzada Farooq Ahmed Shah) என்பவர் சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். பொறியியல் பட்டதாரியான ஷா சம்மு காசுமீர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுப்பினராக குல்மார்க் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். மேலும் காண்க 2024 ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை மேற்கோள்கள் சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினர்கள் 2024-2029 வாழும் நபர்கள்
682872
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%28%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
கல்லூரிக் கல்வித் திறன் சோதனைத் தேர்வு (தென் கொரியா)
கல்லூரிக் கல்வித் திறன் சோதனை (College Scholastic Ability Test or CSAT) தென் கொரியா நாட்டில் பள்ளிக் கல்வியில் இறுதி படிப்பில் தேர்வான மாணவர்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான திறனறிதல் தேர்வாகும். இத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தின் வியாழக்கிழமை அன்று நடத்தப்படும். இத்தேர்வு ஐந்து பாடங்களில், எட்டு மணி நேரம் தேர்வுகள் நடத்தப்படும். ஒவ்வொரு பாடத்தேர்வுக்கு இடையிலும் 20 நிமிடங்கள் இடைவேளை உண்டு. இத்தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஒதுக்கப்படுகிறது தகுதித் தேர்வு அட்டவணை கணிதப் பிரிவில் உள்ள 9 வினாக்களைத் தவிர, அனைத்து வினாக்களுக்கு பல விருப்பங்கள் உள்ளது, அவை குறுகிய பதில்களைக் கொண்டது. இதனையும் காண்க பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Ministry of Education, Science, and Technology Korea Institute for Curriculum and Evaluation College Scholastic Ability Test தென் கொரியா கல்வி
682890
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
சங்கு வளையல்
சங்கு வளையல் (Conch Bangle) என்பது பண்டையத் தமிழ் மகளிர் அணிந்த வளையல்களில் ஒரு வகையாகும். தமிழர் வரலாற்றுக் காலம் முதல் சங்கு வளையல்களை அணிந்து வந்துள்ளனர். பழந்தமிழ்ப் பெண்கள் சங்கு வளையல்கள் அணிந்தது குறித்து சங்க இலக்கியங்களில் குறிப்பிடபட்டுள்ளன. சங்கினை அக்காலத்தில் அரம் போன்ற சிறு கருவி கொண்டு அறுத்து செய்யப்பட்டது. சங்கை அறுத்து வளையல் செய்பவர்கள் வேளாப் பார்ப்பார் என்று அழைக்கப்பட்டது அகநானூறால் அறியவருகிறது. நக்கீரர் அக்குடியைச் சேர்ந்தவர். பண்டையத் தமிழ்நாட்டில் இருந்து சங்கு வளையல்கள் ஏற்றுமதி செய்யபட்டுள்ளன. தமிழ்நாட்டில் வெம்பக்கோட்டை போன்ற பகுதிகளில் நடந்த அகழாய்வுகளில் சங்கு வளையல்கள் கிடைத்துள்ளன. அரச குடும்பத்துப் பெண்களும், செல்வ மகளிரும் வலம்புரி சங்கினால் செய்யப்பட்ட வளையல்களை அணிந்திருந்தனர். நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனின் மனைவியான பாண்டிமாதேவி பொன் வளையல்களுடன் வலம்புரிச் சங்கினாலான வளையல்களையும் அணிந்திருந்தாள் என்று நெடுநல்வாடை குறிப்பிடுகிறது. சாதாரண மகளிர் இடம்புரி சங்கினால் செய்யப்பட்ட வளையல்களை அணிந்தனர். கணவனை இழந்த பெண்களின் கைகளில் அணியப்பட்ட வளையல்கள் அகற்றப்படும் அல்லது உடைக்கப்படும். கோவலனை இழந்த கண்ணகி கொற்றவை கோயிலின் முன் தன்னுடைய சங்கு வளையை உடைத்துப் போட்டாள். சங்கு வளையல் அணியும் வழக்கம் மிகப் பிற்காலத்தில் அற்றுப்போய், கண்ணாடி வளையல் அணியும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. இசுலாமியர் வருகைக்குப் பிறகு இந்த மாறுதல் உண்டாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேற்கு வங்கம் உள்ளிட்ட வட இந்தியாவின் சில பகுதிகளில் இன்றும் சங்கு வளையல்கள் பயன்பாட்டில் உள்ளன. மேற்கோள்கள் அணிகலன்கள் சங்குகள்
682897
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%29
தற்காலிக திருமணம் (இஸ்லாம்)
தற்காலிக திருமணம் அல்லது நிக்கா முத்தாஹ் (Nikah mut'ah) அரபு:نكاح المتعة) என்பது ஒரு தனிப்பட்ட மற்றும் வாய்மொழியான தற்காலிக திருமண ஒப்பந்தமாகும். பன்னிருவர் சியா இசுலாமியப் பிரிவினர் இவ்வகை திருமணத்தை மேற்கொள்கின்றனர். இதில் திருமணத்தின் காலம் மற்றும் மஹர் எனும் மணக்கொடை இருக்க வேண்டும்.  இஸ்லாத்தில் உள்ள மற்ற திருமண முறைகளைப் போலவே, தற்காலிக திருமணத்திலும் விதிமுறைகளை ஏற்பது அவசியமானது. ஒரு தற்காலிக திருமணத்தின் காலம் மாறுபடும். இவ்வகைத் திருமணம் ஒரு மணிநேரம் முதல் தொண்ணூற்றொன்பது ஆண்டுகள் வரை இருக்கலாம். பாரம்பரியமாக, ஒரு தற்காலிக திருமணத்திற்கு சாட்சிகள் அல்லது பதிவு தேவையில்லை. இருப்பினும் சாட்சிகளை எடுத்துக்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.இஸ்லாம் குறித்தான ஆக்ஸ்போர்டு அகராதி, இவ்வகை திருமணத்தின் குறைந்தபட்ச கால அளவு மூன்று நாட்கள், மூன்று மாதங்கள் அல்லது ஒராண்டு காலம் எனப்பரிந்துரைக்கிறது. சன்னிகளும், சியாக்களும் இந்த திருமணம் இஸ்லாத்திற்கு முந்தைய அரபு பாரம்பரியம் என்றும் குர்ஆனால் தடை செய்யப்படவில்லை என்றும் ஒப்புக்கொள்கிறார்கள். ஷியாக்களின் கூற்றுப்படி, இந்த பாரம்பரியம் முகமதுவால் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் அவரது வாழ்நாளில் முஸ்லிம்களிடையே தொடர்ந்தது. சுன்னிகளின் கூற்றுப்படி, இந்த நடைமுறை ஆரம்பத்தில் முகமதுவால் அங்கீகரிக்கப்பட்டாலும், பின்னர் அது அவரால் தடைசெய்யப்பட்டது. தடையில் கலீஃபா உமரின் கூர்மையான பங்கை இரு தரப்பும் வலியுறுத்துகின்றன. சில முஸ்லீம்கள் மற்றும் மேற்கத்திய அறிஞர்கள் நிக்காஹ் முத்தாஹ் மற்றும் நிக்காஹ் மிஸ்யார் ஆகிய இரண்டும் இஸ்லாமிய ரீதியாக தடைசெய்யப்பட்ட விபச்சாரத்தை அனுமதிக்கும் முயற்சிகள் என்று கூறியுள்ளனர். பின்னணி முத்தா என்பதற்கு மகிழ்ச்சி என்று பொருள்.. நிக்கா முத்தாவில் கணவன் மனைவிக்கு சில உரிமைகள் இல்லை . இதில் முக்கியமாக நிக்கா முத்தா முறையில் மணந்த மனைவியுடன் வீட்டில் இருக்க முடியாது மற்றும் நிறைய பயணம் செய்பவர்களால் இத்திருமண முறை பயன்படுத்தப்பட்டது. உதாரணமாக, வெளிநாடுகளில் மாதக்கணக்கில் பயணம் செய்யும் ஒரு வியாபாரி, விவாகரத்து பெற்ற விதவையை திருமணம் செய்து கொள்ளலாம். அவர்கள் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்வார்கள். அடுத்த ஊருக்குப் போகும்போது, திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, அடுத்த இடத்தில் முத்தா ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம். இதனையும் காண்க இசுலாத்தில் திருமணம் மேற்கோள்கள் இசுலாமிய நடைமுறைகள் திருமண முறைகள்
682899
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
பியெய்ன் ஆறு
பியெய்ன் ஆறு (Piyain River) என்பது இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் எல்லையில் ஓடும் ஓர் ஆறாகும். இது மேகாலயா உம்கோட்டிலிருந்து உருவாகும் சுர்மா ஆற்றின் துணை ஆறாகும். இந்த ஆறு சில்ஹெட் மாவட்டம் வழியாக வங்காளதேசத்தில் நுழைகிறது. ஆற்றோட்டம் பியெய்ன் ஆற்றின் நீளம் 145 கிமீ ஆகும்.  ஓம் அல்லது உமகத் ஆறு அல்லது அசாமிலிருந்து உருவாகிறது. படங்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பங்கலாபேடியாவில் உள்ள பியெய்ன் ஆறுவங்காளபீடியா மேகாலயாவில் உள்ள ஆறுகள்
682901
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
மைன்ட்டு ஆறு
மைன்ட்டு ஆறு (Myntdu River) இந்திய மாநிலமான மேகாலயாவின் ஜைண்டியா மலை மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளில் ஒன்றாகும். உள்ளூரில் 'கா தவியார் கா தகன்' (பினார் பேச்சுவழக்கில் எங்கள் பாதுகாவலர் ஏஞ்சல்) என்று அழைக்கப்படுகிறது. இது ஜோவாய் நகரத்தினையும், நகரை ஒட்டியுள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு ஓர் ஆசீர்வாதமாகும். ஜோவாய் நகரின் புறநகரில் அமைந்துள்ள மைன்ட்டு பள்ளத்தாக்குக்குப் பகுதியின் நீர்ப்பாசனம் இந்த ஆற்று நீரின் அடிப்படையில் அமைகிறது. கடல் மட்டத்திலிருந்து 1,420 மீட்டர் (4,660 ) உயரத்தில் உருவாகும் இந்த ஆறு நீர் மின் உற்பத்திக்கு ஏற்றது. ஆதாரங்கள் இந்த ஆறு ஜோவாய் நகரத்தை ஒட்டியுள்ள மிமிந்த்டு என்ற இடத்தில் உருவாகிறது. இந்த ஆறு நகரின் வடக்குப் பகுதியைத் தவிர மூன்று பக்கங்களிலும் ஜோவாயைச் சுற்றி வருகிறது. ஆற்றோட்டம் இந்த ஆறு ஜோவாய் வழியாகப் பாய்ந்து, பின்னர் லெஷ்கா வழியாக (அங்கு ஒரு நீர்மின் திட்ட அணை கட்டப்பட்டு வருகிறது), ஜைண்டியா மலைகளுக்குள் உள்ள போர்காட் கிராமத்தை அடைவதற்கு முன்பு, வங்காளதேசத்தில் நுழைகிறது. இங்கு இது உள்நாட்டில் 'சாரி' என்று அழைக்கப்படுகிறது. நீர்மின் திட்டம் மூன்று கட்டங்களாகத் திட்டமிடப்பட்டு, ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மைன்ட்டு-லெஷ்கா நீர்மின் திட்ட அணை (3X42 மெகாவாட்), மேகாலயா மேற்கு ஜைண்டியா மலை மாவட்டத்தில் உள்ள லெஷ்காவில், அம்லரம் துணைப்பிரிவு தலைமையகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இத்திட்டத்திற்கான செலவு சுமார் 360 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காண்க ஜோவாய் மேற்கோள்கள் மேகாலயாவில் உள்ள ஆறுகள்
682902
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
கோபிலி ஆறு
கோபிலி ஆறு (Kopili River) என்பது வடகிழக்கு இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையேயான ஓடும் ஓர் ஆறாகும். இது மேகாலயா மற்றும் அசாம் மாநிலங்கள் வழியாகப் பாய்கிறது. கோபிலி ஆறு அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றின் தெற்குக் கரை துணை ஆறாகும். ஆற்றோட்டம் கோபிலி மேகாலயா பீடபூமியில் உருவாகி மத்திய அசாம் மற்றும் அசாமின் மலை மாவட்டங்கள் வழியாக பிரம்மபுத்திராவுடன் சங்கமிக்கும் முன் பாய்கிறது. அசாமில் இது கர்பி ஆங்கலாங், திமா ஹசாவ், காமரூப் மற்றும் நகாமோ மாவட்டங்கள் வழியாகப் பாய்கிறது. இந்த ஆறு மொத்தம் 290 கிலோமீட்டர் (180 மைல்) நீளம் ஓடுகிறது. இது 16,420 சதுர கிலோமீட்டர் (6,340 சதுர மைல்) நீர்ப்பிடிப்புப் பகுதியினைக் கொண்டுள்ளது. நாகான் மாவட்டத்தில் சமவெளிகளில் இறங்குவதற்கு முன்பு 120 கிலோமீட்டர் (75 மைல்) தொலைவில் பல ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் அருவிகளைக் கொண்டுள்ளது. நீர்ப்பாசன பணிகள் 1975ஆம் ஆண்டில் முடிக்கப்பட்ட, காமரூப் மாவட்டத்தில் கோபிலி பாசனத் திட்டம் 14 வருவாய் கிராமங்களில் 1,300 ஹெக்டேர் (3,200 ஏக்கர்) நிலத்திற்கு நீர்ப்பாசனம் வழங்குகிறது. இதன் மூலம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அசாமின் திமா ஹசாவ் மற்றும் மேகாலயாவின் ஜைண்டியா மலை மாவட்டங்களில் அமைந்துள்ள கோபிலி நீர்மின் திட்டம், வடகிழக்கு மின்சாரக் கழகத்தால் நடத்தப்படுகிறது. இதில் காண்டோங் மற்றும் உம்ரோங்சோ அணைகள் மற்றும் அவற்றின் நீர்த்தேக்கங்கள் அடங்கும். இந்த நீர்மின் திட்டத்தில் மொத்தம் 275 மெகாவாட் திறன் கொண்ட மூன்று மின் நிலையங்கள் உள்ளன. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் கோபிலி 54 வகையான மீன்களைக் கொண்டுள்ளது. மேகாலயாவில் கோபிலியின் மேல் பகுதிகளில் உள்ள திறந்தவெளி நிலக்கரி சுரங்கமானது ஆற்றின் அமில மயமாக்கலுக்கு வழிவகுத்தது. இது ஆற்றின் போக்கின் ஒரு பகுதியை உயிரியல் ரீதியாக பாதித்தது. இதனால் ஆற்று நீர் மனித நுகர்வுக்குத் தகுதியற்றதாக உள்ளது. கோபிலி நீர்மின் திட்டத்தின் மின் நிலையங்களில் அடிக்கடி செயலிழக்கவும் வழிவகுத்தது. அசாமில் உள்ள நீப்கோ (வடகிழக்கு மின்சார மின் கழகம் லிமிடெட்) நிறுவனத்தின் 275 மெகாவாட் கோபிலி அணை மின் நிலையம் 7 அக்டோபர் 2019 அன்று பெரும் பேரழிவைச் சந்தித்தது. உம்ராங்சோ அணையிலிருந்து நீர்மின் நிலையத்திற்குத் தண்ணீரை எடுத்துச் செல்லும் குழாய் அசாமின் திமா ஹசாவோ மாவட்டத்தில் அதிகாலையில் வெடித்தது. இதனால் ஏராளமான நீர் மின் நிலையத்திற்குள் நுழைந்தது. மேற்கோள்கள் கர்பி ஆங்கலாங்கு மாவட்டம் அசாம் ஆறுகள் மேகாலயாவில் உள்ள ஆறுகள்
682903
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF
கர்பி மேகாலயா பீடபூமி
கர்பி மேகாலயா பீடபூமி (Karbi-Meghalaya Plateau) இந்தியத் தீபகற்பப் பீடபூமியின் விரிவாக்கமாகும். இது முதலில் இரண்டு வெவ்வேறு பீடபூமிகளாக இருந்ததாகும். இவை கர்பி ஆங்கலாங் பீடபூமி மற்றும் சில்லாங் பீடபூமி ஆகும். மேகாலயா பீடபூமி பாரம்பரியமாக காரோ, காசி மற்றும் ஜைண்டியா மலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் தன்சிரி ஆற்றுப்பகுதியிருந்து மேற்கில் சிங்கிமாரி ஆறு வரை சுமார் 400 கிமீ நீளமும், சராசரியாக 40 கிமீ அகலமும், சுமார் 35,291 கிமீ2 பரப்பளவும் கொண்டுள்ளது. கர்பி பீடபூமி பேரிக்காய் வடிவத்தில் சுமார் 7000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மேகாலயா பீடபூமியுடன் இதன் இணைப்பு தெற்கே மிகவும் சிதைந்த மற்றும் முதுமை நிலப்பரப்பின் ஒரு பகுதி வழியாக உள்ளது. விவரங்கள் இமயமலை தோன்றிய நேரத்தில் இந்தியத் தட்டின் வடகிழக்கு நோக்கிய இயக்கத்தால் ஏற்பட்ட சக்தியின் காரணமாக, ராஜ்மகால் மலைகளுக்கும் கர்பி மேகாலயா பீடபூமிக்கும் இடையில் ஒரு பெரிய பிளவு உருவானது என்று நம்பப்படுகிறது. பின்னர், இந்தத் தாழ்வுநிலையானது ஏராளமான ஆறுகளின் படிவு நடவடிக்கைகளால் நிரப்பப்பட்டது. இன்று மேகாலயா மற்றும் கர்பி ஆங்கலாங் பீடபூமி பிரதானத் தீபகற்பத் தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் தென்மேற்கு பருவமழை அதிகபட்சமாகப் பெய்யும். இது இந்தியாவின் வடகிழக்கு பீடபூமியில் அமைந்துள்ளது . மேற்கோள்கள் இந்தியாவின் பீடபூமிகள்
682904
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF
மசாய் பீடபூமி
மசாய் பீடபூமி (Masai Plateau), மசாய் பதார் அல்லது மசாய் சதாசு என்றும் அழைக்கப்படுகிறது. இது மகாராட்டிராவின் கோலாப்பூர் நகரத்திலிருந்து மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பீடபூமி ஆகும். இது இயற்கைக்காட்சிக்காகவும் ஆகத்து, செப்டம்பர் மாதங்களில் பூக்கும் பல்வேறு வகையான பருவகாலக் காட்டுப்பூக்களுக்காகப் பெயர் பெற்றது. இந்த பீடபூமி கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இப்பீடபூமி சுமார் ஒன்றரை சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. மசாய் பீடபூமியில் பூக்கும் தாவரங்களின் பன்முகத்தன்மை உள்ளது.இவற்றில் ஆர்க்கிடுகள் மற்றும் யூட்ரிகுலேரியா மற்றும் ட்ரோசெரா இண்டிகா போன்ற உணுண்ணித் தாவரங்கள் அடங்கும். மேற்கோள்கள் Coordinates on Wikidata இந்தியாவின் பீடபூமிகள்
682908
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம்
யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம் அல்லது யுனிவர்சிட்டி இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Universiti LRT Station; மலாய்: Stesen LRT Universiti; சீனம்: 大学站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். கிள்ளான் பள்ளத்தாக்கு போக்குவரத்துக் கட்டமைப்பின் முதலாவது கட்டுமானத் திட்டத்தில், பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் தொடங்கி கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் வரையில் 10 நிலையங்கள் கட்டப்பட்டன. அவற்றில் ஒரு பகுதியாக 1 செப்டம்பர் 1998 அன்று இந்த யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம் திறக்கப்பட்டது. கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (Klang Valley Mass Rapid Transit) (MRT System) திட்டத்தின் கீழ் உள்ள எம்ஆர்டி சுற்று வழித்தடத்திற்கு இந்த நிலையம் எதிர்காலப் பரிமாற்ற நிலையமாக அமையும்; மேலும் 2030-ஆம் ஆண்டில் எம்ஆர்டி சுற்று வழித்தடத்தின் கட்டுமானங்கள் நிறைவடையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொது இந்த நிலையத்திற்கு அருகிலுள்ள மலாயா பல்கலைக்கழகத்தின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. இந்த நிலையம் கெரிஞ்சி சாலையில், கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. 1 செப்டம்பர் 1998-இல் இந்த நிலையத்தின் செயல்பாடுகள் தொடங்கப்படுவதற்கு முன்னர் பல்கலைக்கழக நிலையம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் இந்த நிலையத்தின் பெயர் கேஎல் கேட்வே-யுனிவர்சிட்டி என மாற்றப்பட்டது. எனினும், மார்ச் 2022-க்குப் பின்னர் நிலையத்தின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டு யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம் என அழைக்கப்படுகிறது. இந்த நிலையம், மலாயா பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும், கம்போங் கெரிஞ்சி, தெற்கு பங்சார், பந்தாய் டாலாம் மற்றும் பந்தாய் இல் பார்க் ஆகிய பகுதிகளுக்கும் சேவை செய்கிறது. கிளானா ஜெயா வழித்தடம் கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும். மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பில் (Klang Valley Integrated Transit System) இந்த வழித்தடம் ஒரு பகுதியாகும். இந்த வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. பேருந்து சேவைகள் காட்சியகம் மேலும் காண்க மலாயா பல்கலைக்கழகம் கோலாலம்பூர் மருத்துவமனை மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையம் மலாயா பல்கலைக்கழக நிபுணத்துவ மையம் மலேசிய மருத்துவமனைகளின் பட்டியல் மலேசிய இசுலாமிய அறிவியல் பல்கலைக்கழகம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
682911
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D
அனா-ரவ்கிதி மைபி-கிளார்க்
ஹனா-ரவ்கிதி மைபி-கிளார்க் (Hana-Rawhiti Kareariki Maipi-Clarke) (பிறப்பு: 2002) நியூசிலாந்து நாட்டின் மிக இளைய வயதுடைய பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் மாவோரி எனும் பழங்குடியைச் சேர்ந்த பெண் அரசியல்வாதி ஆவார். இவர் தனது 21வது அகவையில் தே பாட்டி மாவோரி கட்சியின் வேட்பாளராக, செப்டம்பர் 2023ல், நியூசிலாந்து பாராளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிட்டு வென்றார்.. 1853 தேர்தலில் ஜேம்ஸ் ஸ்டூவர்ட்-வொர்ட்லிக்கு (20 ஆண்டுகள் 7 மாதங்கள்) அடுத்த இளைய நாடாளுமன்ற உறுப்பினர் ஹனா-ரவ்கிதி மைபி-கிளார்க் ஆவார். ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம் ஹனா-ரவ்கிதி மைபி-கிளார்க், மாவோரி மொழி ஆர்வலரான, ஹனா தே ஹேமாராவின் பேத்தி ஆவார்.. 2020 ஆம் ஆண்டில் கேப்டன் ஹாமில்டன் சிலை அகற்றப்படுவதற்கு பங்களித்த டைதிமு மைபி ஹனா-ரவ்கிதி மைபி-கிளார்க்கின் தாத்தா ஆவார்.. நியூசிலாந்து நாட்டின் நிர்வாகக் குழுவிற்கு நியமிக்கப்பட்ட முதல் மாவோரி நாடாளுமன்ற உறுப்பினரான வை கேட்டேன் மைபி கிளார்க்கின் கொள்ளு தாத்தா.ஆவார். மைபி-கிளார்க் தனது கல்வியை ஹன்ட்லியில் உள்ள தே வாரேகுரா'வில் பயின்றார். 17 வயதில், அவர் மரமடகா பற்றிய மஹினா என்ற புத்தகத்தை வெளியிட்டார். மாவோரி சந்திர நாட்காட்டி. ரங்கி மாதாமுவா'' மற்றும் மாதரிக்கியைப் பற்றி விரிவுரை செய்தபோது, மைபி கிளார்க் ஆராய்ச்சி செய்ய தூண்டப்பட்டார். அரசியல் வாழ்க்கை 14 அக்டோபர் 2023 அன்று நடைபெற்ற நியூசிலாந்து நாடளுமன்றப் பொதுத் தேர்தலில், மைபி-கிளார்க் 2,911 வாக்குகள் வித்தியாசத்தில் தற்போதைய தொழிலாளர் உறுப்பினரான நனையா மஹுதாவைத் தோற்கடித்தார். 21 வயதில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மைபி-கிளார்க் நியூசிலாந்தின் இரண்டாவது இளைய நாடாளுமன்ற உறுப்பினரானார். 170 ஆண்டுகளுக்கு முன்னர் 1853ஆம் ஆண்டில் ஜேம்ஸ் ஸ்டூவர்ட்-வொர்ட்லிக்கு அடுத்தபடியாக மைபி கிளார்க் இரண்டாவது இளையவர் ஆவார். மாவோரி பழங்குடிகள் நலன்கள் குறித்து மைபி கிளார்க் நாடாளுமன்றத்தில் தனது கன்னி உரையில் அழுத்தம் திருத்தமாக பேசினார். 14 நவம்பர் 2024 அன்று மைபி கிளார்க், மாவோரி பழங்குடி மக்கள் தொடர்பான வைத்தாங்கி ஒப்பந்தச் சட்டத்திருத்த மசோதா நகலை கிழித்து எறிந்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.இதனால் அவைத்தலைவர் மைபி கிளார்க்கை 24 நேரத்திற்கு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்தார். இதனையும் காண்க வைத்தாங்கி ஒப்பந்தம் மாவோரி மக்கள் நியூசிலாந்து நாடாளுமன்றம் மேற்கோள்கள் 2002 பிறப்புகள் வாழும் நபர்கள் நியூசிலாந்தின் பழங்குடிகள் நியூசிலாந்து அரசியல்வாதிகள்
682921
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
பாலக்காடு நகர தொடருந்து நிலையம்
பாலக்காடு நகர தொடருந்து நிலையம் (Palakkad Town railway station) (நிலைய குறியீடு: PGTN) என்பது இந்திய இரயில்வேயின், தென்னக தொடருந்து மண்டலத்தின், பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் உள்ள NSG-5 வகை இந்திய தொடருந்து நிலையம் ஆகும். இது கேரளத்தின் பாலக்காடு, நகரத்தில் உள்ள தொடருந்து நிலையம் ஆகும். பாலக்காடு சந்திப்பு தொடருந்து நிலையம், பாலக்காடு நகர தொடருந்து நிலையம் ஆகிய இரண்டு தொடருந்து நிலையங்களும் பாலக்காடு நகரத்தின் போக்குவரத்திற்கு சேவை செய்கின்றன. பாதைகள் (மின்மயமாக்கப்பட்ட ஒற்றை அகலப் பாதை) பாலக்காடு சந்திப்பு- பாலக்காடு டவுன் (மின்மயமாக்கப்பட்ட ஒற்றை அகலப் பாதை) பாலக்காடு நகரம்–பொள்ளாச்சி சந்திப்பு. அண்மைய வளர்ச்சி பிட்லைன் எனப்படும் ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதிக்குள் மையம் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இது நகரத்தில் மட்டுமல்லாமல் மாநிலத்திலும் ஒரு முக்கிய தொடருந்து மையமாக மாறும். மேற்கோள்கள் பாலக்காடு மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்
682922
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF
ரேவா பீடபூமி
ரேவா பீடபூமி (Rewa Plateau) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கியது. ரேவா பீடபூமி தெற்கில் கைமூர் மலைத்தொடருக்கும் வடக்கில் விந்திய மலைத்தொடர் அல்லது பின்ஜ் பகாருக்கும் இடையில் அமைந்துள்ளது. பின்ஜ் பகாரின் வடக்கே உப்ரிகர் என்று அழைக்கப்படும் வண்டல் சமவெளிகள் உள்ளன. இந்தப் பீடபூமி ரேவா மாவட்டத்தின் குசூர், சிர்மௌர் மற்றும் மகஞ்ச் வட்டங்களை உள்ளடக்கியது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்ல உயரம் குறைகிறது. கைமூர் மலைத்தொடர் 450 மீட்டர் உயரத்திற்கும் (1,480 ) மேல் உள்ளது. தியோந்தரின் வண்டல் சமவெளிகள் சுமார் 100 மீட்டர் (330 ) ஆகும். கைமூர் மலைத்தொடரின் குறுக்கே தொடர்ச்சியான பீடபூமிகள் உள்ளன. இந்த நீர்நிலைகள் கொண்ட பீடபூமிகள், மேற்கில் பன்னா பீடபூமி தொடங்கி, பண்டேர் பீடபூமி மற்றும் ரேவா பீடபூமி, கிழக்கில் ரோக்தாசு பீடபூமியில் முடிவடையும். வண்டல் மண் கென் பள்ளத்தாக்கு ரேவா பீடபூமியை சத்னா பீடபூமியிலிருந்து பிரிகிறது. தட்டையான தன்மை காரணமாக இவற்றை உயர் சமவெளிகள் என்றும் அழைக்கலாம். ரேவா பீடபூமியின் தெற்குப் பகுதி மட்டுமே மலைப்பாங்கானது. தென்மேற்கில் ரெக்லியிலிருந்து வடகிழக்கில் சத்னா வரை உள்ள ரேவா பீடபூமி பிளிசுடோசீன் மற்றும் சமீபத்திய காலகட்டங்களின் வண்டல்களால் மூடப்பட்டுள்ளது. ஆறுகளும் அருவிகளும் இந்தப் பீடபூமியில் தமசா ஆறு அல்லது தான்சு ஆறு மற்றும் சோன் மற்றும் அவற்றின் துணை ஆறுகள் பாய்கின்றன. இரண்டு ஆறுகளுக்கும் இடையிலான நீர்நிலையை கைமூர் மலைத்தொடர் உருவாக்குகிறது. பெரும்பாலான ஆறுகள் கைமூர் மலைத்தொடரில் உருவாகின்றன. ரேவா பீடபூமியிலிருந்து கீழே வரும்போது தமசா ஆறும் அதன் துணை ஆறுகளில் குறிப்பிடத்தக்க அருவிகளாகக் கக்காய் அருவி (127 மீ) தமாசின் துணை ஆறான பிகாட் ஆற்றிலும் கியோட்டி நீர்வீழ்ச்சி (98 மீ) மகானா ஆற்றிலும் (தமாசு துணை ஆறு), பாகுதி அருவி ஓடா ஆற்றிலும் (பெலாகா ஆற்றுன் துணை ஆறு) புர்வா அருவி தமாசு ஆற்றிலும் அமைந்துள்ளன. மேற்கோள்கள் ரேவா மாவட்டம் Coordinates on Wikidata
682923
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF
பிஜாவர் பன்னா பீடபூமி
பிஜாவர் பன்னா பீடபூமி (Bijawar-Panna Plateau) இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள சத்தர்பூர் மற்றும் பன்னா மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பீடபூமி ஆகும். புவியியல் சாகர் பிரிவில் உள்ள பிஜாவர் மலைகளுக்குப் பின்னால் 25-30 கிமீ அகலமுள்ள பிஜாவர்-பன்னா பீடபூமி உள்ளது. பிஜாவர் பன்னா பீடபூமி வடக்கிலிருந்து தெற்கே மூன்று நன்கு குறிக்கப்பட்ட செங்குத்துச் சரிவுகளால் உயர்ந்து. இதைத் தொடர்ந்து சுமார் 300, 375 மற்றும் 450 மீட்டர் விளிம்புகள், மிர்காசன் மற்றும் சோனார் ஆறுகளின் நீளமான பள்ளத்தாக்குகளை நோக்கி அமைந்துள்ளன. பன்னாவின் வடகிழக்கில் இரண்டு முக்கிய கிளைகள் உள்ளன. தெற்கில் இவை பன்னா மலைகள் என்றும் வடக்கில் விந்தியாச்சல் மலைத்தொடர் என்றும் அழைக்கப்படுகிறது. பன்னா மலைத்தொடர் வெறும் 15 கி. மீ. அகலமுள்ள ஒரு மேட்டு நிலத்தை உருவாக்குகிறது. இதன் பொதுவான சாய்வு தென்மேற்கிலிருந்து வடகிழக்கு வரை உள்ளது. இது புந்தேல்கண்ட் பீடபூமியின் ஒரு பகுதியாகும். பீடபூமியின் தொடர் கைமூர் மலைத்தொடரை ஒட்டிச் செல்கிறது. இந்த ஆற்றோட்டப் பீடபூமி, மேற்கில் பன்னா பீடபூமியில் தொடங்கி, பாந்தர் பீடபூமி மற்றும் ரேவா பீடபூமியைத் தொடர்ந்து கிழக்கில் ரோக்தாசு பீடபூமியுடன் முடிவடையும் தொடர்ச்சியான இறங்கு பீடபூமிகளைக் கொண்டுள்ளது. பிஜாவர்-பன்னா மலைகளைக் கடந்து, கென் ஆற்றினை 60 கிமீ நீளத்தில் கடந்து, 150-180 மீட்டர் ஆழமும் கொண்ட பள்ளத்தாக்கை உருவாக்குகிறது. இந்தப் பள்ளத்தாக்கில் பல நீரோடைகள் கென் ஆற்றுடன் சேர்ந்து அருவிகளை உருவாக்குகின்றன. மேற்கோள்கள் Coordinates on Wikidata மத்தியப் பிரதேசம் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்
682924
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
பீம்குண்டு
பீம்குண்டு (Bhimkund) அல்லது நீலகுண்டு எனப்படுவது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓர் இயற்கை நீர் நிலையாகும். இது புனித இடமாகக் கருதப்படுகிறது. பீம்குண்டு மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பஜ்னா கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இது புந்தேல்கண்ட் பிராந்தியத்தில் சத்தர்பூரிலிருந்து 77 கி. மீ. தொலைவில் உள்ளது. பீம்குண்ட் ஓர் இயற்கை நீர் ஆதாரமாகவும், மகாபாரதச் சகாப்தத்திலிருந்து ஒரு புனித இடமாகவும் உள்ளது. குண்ட் என்பது நீர்த் தொட்டி எனப் பொருள்படும். இந்த நீர் நிலையின் நீர் மிகவும் சுத்தமாகவும் தெளிவானதாகவும் இருப்பதால், மீன் தண்ணீரில் நீந்துவதைத் தெளிவாகக் காணலாம். இந்த நீர் நிலையின் வாயிலிலிருந்து சுமார் 3 மீட்டர் தொலைவில் ஒரு குகை அமைந்துள்ளது. நுழைவாயிலின் இடதுபுறத்தில் சிறிய சிவலிங்கம் ஒன்றுள்ளது. இந்தக் குளம் அடர் நீல நிறத்தில் உள்ளது. இது சிவப்புக் கல் சுவர்களுக்கு மாறாக உள்ளது. மகாபாரதத்தின் ஒரு கதை பீம்குண்டை பாண்டவர்களுடன் தொடர்பு படுத்துகிறது. கொதிக்கும் சூரியனின் கீழ் சோர்வடைந்த திரௌபதி தாகத்தால் மயங்கி விழுந்தார். ஐந்து சகோதரர்களில் வலிமையானவரான பீம், தாகம் தனிக்கத் தனது கதையிலிருந்து நீரை வெளியேற்றி தரையில் விழச்செய்து உருவாக்கிய குளமானது இது என்பதாகும்.கதையிலிருந்து நீர் வெளியே வந்து குளம் உருவானது என்பது இதன் விளக்கமாகும். குகையின் மேற்பகுதியில் குளத்திற்குச் சற்று மேலே ஒரு சிறிய திறப்பு உள்ளது. இந்த இடத்தில்தான் பீம் தனது கதாவினால் அடித்ததாகக் கூறப்படுகிறது. மற்றொரு புராணக்கதை, வேத முனிவர் நாரதர் விஷ்ணுவினப் புகழ்ந்து கந்தர்வ கானம் (பரமப் பாடல்) நிகழ்த்தினார் என்று கூறுகிறது. அவரது பக்தியால் மகிழ்ச்சி அடைந்த விஷ்ணு, குளத்திலிருந்து வெளிப்பட்டார். விஷ்ணுவின் கருமையான நிறம் காரணமாக நீர் நீல நிறமாக மாறியது என்பதாகும். இந்தக் குளம் நீல் குண்ட் (நீல குளம்) நாரதா குண்டு (நிஜயா குளம்) என்றும் அழைக்கப்படுகிறது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இந்திய ஏரிகள்
682927
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
அம்மோனியம் அறுபுளோரோபிளாட்டினேட்டு
அம்மோனியம் அறுபுளோரோபிளாட்டினேட்டு (Ammonium hexafluoroplatinate) என்பது (NH4)2PtF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தயாரிப்பு இலந்தனம்(III) அறுபுளோரோபிளாட்டினேட்டுடன் அம்மோனியம் ஐதராக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அம்மோனியம் அறுபுளோரோபிளாட்டினேட்டு உருவாகும்: La2[PtF6]3 + 6NH4OH -> 3(NH4)2PtF6 + 2La(OH)3 இயற்பியல் பண்புகள் அம்மோனியம் அறுபுளோரோபிளாட்டினேட்டு Fm3m என்ற இடக்குழுவில் கனசதுர படிக அமைப்பில் வெளிர் மஞ்சள் நிறப் படிகங்களாக உருவாகிறது. வேதிப் பண்புகள் அம்மோனியம் அறுபுளோரோபிளாட்டினேட்டு நீராற்பகுப்புக்கு உட்பட்டு நிரில் கரையாத பிளாட்டினம்(IV) ஐதராக்சைடைக் கொடுக்கிறது. (NH4)2PtF6 + 4H2O -> Pt(OH)4 + 4HF + 2NH4F}} மேற்கோள்கள் பிளாட்டினம் சேர்மங்கள் அமோனியம் சேர்மங்கள் புளோரோ அணைவுச் சேர்மங்கள் புளோரோ மெட்டலேட்டுகள் அறுபுளோரைடுகள்
682928
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
அம்மோனியம் அறுபுளோரோயிரேனேட்டு
அம்மோனியம் அறுபுளோரோயிரேனேட்டு (Ammonium hexafluororhenate) என்பது (NH4)2ReF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தயாரிப்பு தொடர்புடைய பொட்டாசியம் உப்பை அயனிப் பரிமாற்ற வினைக்கு உட்படுத்தினால் அம்மோனியம் அறுபுளோரோயிரேனேட்டு உருவாகும். இயற்பியல் பண்புகள் அம்மோனியம் அறுபுளோரோயிரேனேட்டு Pm1. என்ற இடக்குழுவில் அறுகோணப் படிக அமைப்பில் வெளிர் இளஞ்சிவப்பு நிறப் படிகங்களாக உருவாகிறது. இது நீரில் கரையும். சூடுபடுத்தினால் கருப்பு நிற இரேனியம் நைட்ரைடு புளோரைடு (ReNF) உருவாகும். மேற்கோள்கள் புளோரோ அணைவுச் சேர்மங்கள் அமோனியம் சேர்மங்கள் புளோரோ மெட்டலேட்டுகள் அறுபுளோரைடுகள்
682931
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%28III%29
அம்மோனியம் அறுகுளோரோரோடேட்டு(III)
அம்மோனியம் அறுகுளோரோரோடேட்டு(III) (Ammonium hexachlororhodate(III)) என்பது (NH4)3RhCl6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தயாரிப்பு ரோடியம் முக்குளோரைடு கரைசலையும் அதிக அளவு அமோனியம் குளோரைடு கரைசலையும் சேர்த்து கரைசலை ஆவியாக்கினால் அம்மோனியம் அறுகுளோரோரோடேட்டு(III) உருவாகும். RhCl3 + 3NH4Cl -> (NH4)3RhCl6 இயற்பியல் பண்புகள் அம்மோனியம் அறுகுளோரோரோடேட்டு(III) சிவப்பு நிறப் படிகங்களாக உருவாகிறது. இது நீரில் சிறிதளவு கரையும். வேதிப் பண்புகள் நீரிய கரைசலில் இது பகுதியளவு நீராற்பகுப்புக்கு உட்படும். (NH4)3[RhCl6] + H2O → (NH4)2[RhCl5(H2O)] + NH4Cl பயன்கள் மருந்துவகைப் பொருள்கள், வேளாண் வேதிப்பொருள்கள், கரிமத் தொகுப்பு வினைகளில் அம்மோனியம் அறுபுளோரோரோடேட்டு(III) ஒரு மூலப்பொருளாகவும் ஓர் இடைநிலையாகவும் பயன்படுகிறது. மேற்கோள்கள் குளோரோ ஒருங்கிணைவுச் சேர்மங்கள் குளோரோ மெட்டலேட்டுகள் அமோனியம் சேர்மங்கள் ரோடியம்(III) சேர்மங்கள்
682932
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%28%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
புர்பியா (வீரர்கள்)
புர்பியா (Purbiya) (அல்லது புராபியா ) என்பது இடைக்கால இந்தியாவில் பிராமண மற்றும் இராஜபுத்திரர்களின் கூலிப்படையினர் அல்லது வீரர்கள் ஆவர். இன்றைய மேற்கு பீகார் மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்துடன் தொடர்புடைய கிழக்கு கங்கை சமவெளி பகுதிகளைச் சேர்ந்த வீரர்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான சொல் ஆகும். மேற்கு இந்தியாவில் உள்ள மார்வார் பிரதேசம் இராணுவம் மற்றும் குஜராத் சுல்தானகம் மற்றும் மால்வா சுல்தானகம் உட்பட பல்வேறு சமஸ்தானங்களின் இராணுவங்களில் புர்பியர்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தனர். ஆட்சேர்ப்பு நவீனகால மேற்கு பீகார் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் போஜ்பூர் போன்ற பகுதிகளில் புர்பியாவிற்கான ஆட்சேர்ப்பு அதிக அளவில் நடந்தது. இராஜ்புத்திரர்களின் உஜ்ஜெனியா குலத்தினர் இந்தப் பிராந்தியத்தின் முக்கிய பிராந்திய பிரபுக்களாக இருந்தனர். மேலும் அவர்கள் பொதுவாக போஜ்பூரைச் சேர்ந்த இளம் விவசாயிகளாக இருந்த புர்பிய வீரர்களின் சிறப்பு ஆட்சேர்ப்பு முகவர்களாகவும் மற்றும் தளபதிகளின் பாத்திரத்தை வகித்தனர். இவர்கள் வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் பிரபுக்கள் மற்றும் மன்னர்களிடையே பெரும் நற்பெயரைப் பெற்றனர். மேலும் உஜ்ஜைனியாக்கள் மற்ற இராஜபுத்திர குலங்களிடையே தங்கள் தகுதியை வளர்த்துக் கொண்டனர். இளம் விவசாயிகளாக இருந்து புர்பிய கூலிப்படையில் சேர்வதற்கு முன்பு பலர் நவீனகால பீகாரில் உள்ள பக்சருக்கு சென்று அங்கு அவர்கள் ‘புலித் தொட்டி’ எனப்படும் ஒரு குளத்தில் குளிப்பதன் மூலம் தங்களை ஒரு “அச்சமற்ற போர்வீரராக” கருதுவர். வரலாறு முகலாயர்களும் புர்பியர்களை ஆட்சேர்ப்பு செய்யத் தொடங்கினர். முகலாய ஆதாரங்கள் பீகார் சுபாவின் ஒரு திவான் தனது அரசருக்கு சேவை செய்ய பக்சரில் படைவீரர்களை சேகரிக்க முயன்றதை முகலாய ஆதாரங்கள் விவரிக்கின்றன. புர்பியர்களின் துப்பாக்கி நிபுணத்துவம் காரணமாக மால்வா ஆட்சியாளர்களும் ஆர்வத்துடன் இவர்களை தங்களுடன் சேர்த்துக் கொள்ப்தில் அதிக ஆர்வம் காட்டினர். இந்த நிபுணத்துவம் அவர்களின் சொந்த பகுதிகளில் உப்பு எளிதில் கிடைப்பதால் பெறப்பட்டிருக்கலாம். பெரும்பாலான புர்பியர்கள் கூலிப்படையினராக இருந்தனர். இவர்களின் சேவைகளுக்காக ஊதியம் பெற்றனர். ஆனால் சிலர் சிறிய சமஸ்தானங்களின் உண்மையான மன்னர்களாக இருந்தனர். மால்வாவிலிருந்து இந்த ஆட்சேர்ப்பு இயக்கம் இப்பகுதிக்கு பெரிய அளவில் புர்பியா சிப்பாய்களைக் கண்டது. மால்வாவில் உள்ள பல உள்ளூர் தலைவர்கள் சில்ஹாடி போன்ற புர்பியா வீரர்களை பெரிதும் நம்பியிருந்தனர். 1535 இல் குஜராத் சுல்தானகத்தின் பகதூர் ஷாவின் இராணுவத்தில் இவர்கள் பணியாற்றியதாக 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரசீக நாளேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானிய இந்தியா மற்றும் மராட்டியப் பேரரசு போன்ற பல்வேறு ஆட்சியாளர்களுக்கு கூலிப்படையினராக நியமிக்கப்படுவதில் புர்பியாக்கள் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டிருந்தனர். வங்காள இராணுவத்தில் பெரும்பான்மையாக புர்பியாக்கள் இருந்தனர். 1857க்கு முன்னர், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் புர்பியா வீரர்களை நியமிக்க விரும்பியது. நிறுவனம் இவர்களை "இந்துக்கள் மற்றும் முஸ்லிம் போராளி பழங்குடியினர்" அல்லது வெறுமனே "கிழக்கத்தியர்கள்" என்று பெயரிட்டது. கிழக்கிந்திய நிறுவனத்தின் வங்காள இராணுவம் தனது சிப்பாய்களை அவத் , பீகாரின் பிராமணர்கள் மற்றும் இராஜபுத்திரர்களிடம் பணிபுரிந்தவர்களை நியமிக்க விரும்பியது. ஏனெனில் அவர்கள் சராசரியாக 5 '8' உயரத்தைக் கொண்டிருந்தனர். இது இராணுவத்தில் வீரர்களிடையே ஈர்க்கக்கூடிய தோற்றத்தைக் கொண்டிருக்கும். மேற்கோள்கள் மேலும் படிக்க M K A Siddiqui (ed.), Marginal Muslim Communities in India, Institute of Objective Studies, New Delhi (2004) Dasharatha Sharma Rajasthan through the Ages a comprehensive and authentic history of Rajasthan, prepared under the orders of the Government of Rajasthan. First published 1966 by Rajasthan Archives. பீகார் வரலாறு
682934
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
கருணநாதன் இளங்குமரன்
கருணநாதன் இளங்குமரன் (Karunananthan Ilankumaran, பிறப்பு: 29 மே 1990) ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். 2024 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் இவர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இவர் 32,102 விருப்பு வாக்குகளைப் பெற்றார். இவர் தேர்தல் அரசியலுக்கு வர முன்னர் மக்கள் விடுதலை முன்னணியிலும் அதன் தொழிற்சங்க இயக்கத்திலும் பங்கெடுத்து வந்துள்ளார். தேர்தல் வரலாறு மேற்கோள்கள் 1990 பிறப்புகள் வாழும் நபர்கள் யாழ்ப்பாணத்து நபர்கள் இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் தேசிய மக்கள் சக்தி அரசியல்வாதிகள் மக்கள் விடுதலை முன்னணி அரசியல்வாதிகள்
682935
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%20%E0%AE%93%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%28IV%29
அம்மோனியம் அறுகுளோரோ ஓசுமேட்டு(IV)
அம்மோனியம் அறுகுளோரோ ஓசுமேட்டு(IV) ( Ammonium hexachloroosmate(IV)) என்பது (NH4)2OsCl6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தயாரிப்பு அமோனியா அயனிகள் முன்னிலையில் ஓசுமியம்(VIII) ஆக்சைடுடன் அமில ஊடகத்திலுள்ள இரும்பு(II) குளோடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஒடுக்க வினை நிகழ்ந்து அம்மோனியம் அறுகுளோரோ ஓசுமேட்டு(IV) உருவாகும்: OsO4 + 4FeCl2 + 8HCl + 2NH4Cl -> (NH4)2[OsCl6] + 3FeCl3 + 4H2O இயற்பியல் பண்புகள் அம்மோனியம் அறுகுளோரோ ஓசுமேட்டு(IV) Fm3m என்ற இடக்குழுவில் a = 0.9729 நானோமீட்டர், Z = 4 என்ற அலகுசெல் அளவுருக்களுடன் கனசதுரப் படிக அமைப்பில் அடர் சிவப்பு நிறப் படிகங்களாகப் படிகமாகிறது. குளிர்ந்த நீரில் மிகச் சிறிதளவில் கரைகிறது. வேதிப் பண்புகள் ஐதரசனுடன் சேர்ந்து வினைபுரியும்போது ஒடுக்கமடைந்து உலோக ஓசுமியத்தைக் கொடுக்கிறது: 3(NH4)2[OsCl6] -> 3Os + 2N2 + 16HCl + 2NH4Cl |(NH4)2[OsCl6] + 2H2 -> Os + NH4Cl + 4HCl பயன்கள் அம்மோனியம் அறுகுளோரோ ஓசுமேட்டு(IV) சேர்மம் மருந்து, கரிம மற்றும் இரசாயன இடைநிலையாகப் பயன்படுத்தப்படுகிறது. மேற்கோள்கள் ஓசுமியம் சேர்மங்கள் குளோரோ ஒருங்கிணைவுச் சேர்மங்கள் குளோரோ மெட்டலேட்டுகள் அமோனியம் சேர்மங்கள்
682936
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
ஆம்பி பள்ளத்தாக்கு நகரம்
ஆம்பி பள்ளத்தாக்கு நகரம் ( Aamby Valley City ) என்பது இந்தியாவின் புனேவின் புறநகரில் உள்ள சஹாரா இந்தியா பரிவார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நகரமாகும். கட்டுமானம் 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நகரம், மேற்குத் தொடர்ச்சி மலையின் சக்யாத்ரி மலைகளில் 10,600 ஏக்கர் (4,300 ஹெக்டேர்) மலைப்பாங்கான நிலப்பரப்பில் பரவியுள்ளது. இது லோனாவாலாவிலிருந்து சுமார் 23 கிமீ , புனே நகரத்திலிருந்து 87 கிமீ மற்றும் மும்பை நகரத்திலிருந்து 120 கிமீ தொலைவில் உள்ளது. இந்த நகரம் லோனாவாலா சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் ஒரு விமான ஓடுபாதை உள்ளது. அது 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் செயல்படுவதை நிறுத்தியது. ஜூன் முதல் செப்டம்பர் வரை ஆண்டுக்கு சராசரியாக 4,000 மிமீ (160 அங்குலம்) அளவிற்கு இங்கு மழைப்பொழிவு இருக்கும். இந்தியாவின் பெரும் செல்வந்தர்களுக்கு சந்தைப்படுத்தப்பட்ட இந்த நகரம் ஐந்து கட்டங்களாக உருவாக்கப்பட்டது. இது 2003 ஆம் ஆண்டில் குரூன்-பாபி முகர்ஜி & அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு திட்டம் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் சகாரா மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்குச் சொந்தமானது. இதில் 5 கோடி முதல் 20 கோடி வரை விலையுள்ள 600-800 ஆடம்பர வீடுகள் உள்ளன. இங்கு மூன்று பெரிய ஏரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மிகப்பெரிய ஏரி ஒன்றரை கிலோமீட்டர் நீளம் கொண்டது.  இந்த நகரம் 10,600 ஏக்கர் (4,300 ஹெக்டேர்) மற்றும் லோனாவாலா அருகே பத்து கிராமங்களில் பரவியுள்ளது. மேலும் ஒரு விமான ஓடுதளம், வணிக வளாகங்கள், 256 ஏக்கர் பரப்பிலான குழிப்பந்தாட்ட மைதானம், துணை மின் நிலையம், சிறிய அணைகள், ஒரு சர்வதேசப் பள்ளி மற்றும் ஒரு மருத்துவமனை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த நகரத்தில் பல ஆடம்பர உணவகங்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்காக வாரணாசியிலுள்ள படித்துறைகள் போன்ற செயற்கை கடற்கரையும் உள்ளது. 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், குழிப்பந்தாட்டம் மைதானம் மற்றும் விமான ஓடுபாதை செயல்படுவதை நிறுத்தியது. நிதி சிக்கல்கள் நிறுவப்பட்டதிலிருந்து இந்த நகரம் பல்வேறு நிதி மற்றும் சட்ட சிக்கல்களை எதிர்கொண்டது. நான்கு சகாரா கூட்டுறவுச் சங்கங்கள் விதிமுறைகளை மீறி 62,643 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நைட் ஃபிராங்க் இந்தியா அறிக்கையை மேற்கோள் காட்டி, சகாரா குழுமம் 2014 ஆம் ஆண்டில் ஆம்பி பள்ளத்தாக்கு திட்டத்தின் மதிப்பு சுமார் 1 டிரில்லியன் டாலர் (14.76 பில்லியன் டாலர்) என அறிக்கை வெலியிட்டது. 2016 ஆம் ஆண்டில், முல்ஷியின் வட்டாட்சியர், வரிகளை செலுத்தாததற்காக நகரின் நுழைவாயிலில் மூடினார். சகாரா குழுமம் 2.53 கோடியை செலுத்திய அதே நாளில் நகரம் மீண்டும் திறக்கப்பட்டது. விற்பனை நடவடிக்கைகள் நிறுவனம் முதலீட்டாளர்களை ஏமாற்றியதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக 14,000 கோடி ரூபாயை மீட்டெடுக்க ஏப்ரல் 2017 இல், இந்திய உச்ச நீதிமன்றம் ஆம்பி பள்ளத்தாக்கு திட்டத்தை ஏலம் விட உத்தரவிட்டது. நீதிமன்றம் 37,000 கோடி ரூபாய்க்கு அதிக இருப்பு விலையை நிர்ணயித்தது. இறுதியில் இரண்டு முறை ஏலங்கள் மட்டுமே நடைபெற்றது. ஆனால் எவரும் வாங்குபவர்கள் இல்லை. ஜூலை 2018 இல், உச்ச நீதிமன்றம் ஏலத்தை ஒத்திவைத்து, சகாரா பரிவாரின் கட்டுப்பாட்டில் நகரத்தை அனுமதிக்க அனுமதித்தது. 2019 ஆம் ஆண்டில், நீதிமன்றம் ஏலத்தைத் தொடர முடிவு செய்தது. ஜனவரி 2020 இல், உச்ச நீதிமன்றம் ஆம்பி பள்ளத்தாக்கை நிர்வகிக்கவும், ஒரு புதிய ஏலத்தை ஆராயவும் ஒரு அலுவலரை நியமித்தது. இதனையும் காண்க லவாசா மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Coordinates on Wikidata மகாராட்டிர மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
682941
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%28IV%29
அம்மோனியம் அறுகுளோரோ சிடானேட்டு(IV)
அம்மோனியம் அறுகுளோரோ சிடானேட்டு(IV) (Ammonium hexabromostannate(IV)) என்பது (NH4)2SnBr6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தயாரிப்பு அமோனியம் புரோமைடுடன் 47% ஐதரோபுரோமிக் அமிலத்தில் கரைக்கப்பட்ட வெள்ளீயம்(IV) புரோமைடு சேர்மக் கரைசலைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அம்மோனியம் அறுகுளோரோ சிடானேட்டு(IV) உருவாகும். இயற்பியல் பண்புகள் அம்மோனியம் அறுகுளோரோ சிடானேட்டு(IV) Fm3m என்ற இடக்குழுவில் கனசதுரப் படிக அமைப்பில் படிகங்களாகப் படிகமாகிறது. நீரில் நன்றாகக் கரைகிறது. மேற்கோள்கள் குளோரோ ஒருங்கிணைவுச் சேர்மங்கள் குளோரோ மெட்டலேட்டுகள் அமோனியம் சேர்மங்கள் வெள்ளீய சேர்மங்கள்
682948
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
தேவிந்தர் குமார் மன்யால்
தேவிந்தர் குமார் மன்யால் (Devinder Kumar Manyal)(பிறப்பு ஏப்ரல் 21,1969) சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராம்கர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் மேனாள் சுகாதார அமைச்சரும் ஆவார். சம்பா மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட சம்பா சட்டமன்றத் தொகுதியில் 2014ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். மன்யால் 2024 அக்டோபரில் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இளமையும் கல்வியும் மன்யால் சம்மு காசுமீரின் சம்பா வட்டம் தியானி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் மேனாள் அரசியல்வாதியான மறைந்த சோம் நாத் மன்யாலின் மகன் ஆவார். இவர் ஒரு மருத்துவரும் ஓய்வுபெற்ற அரசு ஊழியரும் ஆவார். இவரது மனைவி அரசு சேவையில் மருத்துவர் ஆவார். இவர் தனது மருத்துவப் படிப்பை பீஜப்பூரில் உள்ள பி. எல். டி. இ. மருத்துவக் கல்லூரியில் முடித்தார். பின்னர், மகாராட்டிராவின் வர்தா ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் எலும்பியல் துறையில் பட்டயப்படிப்பினை முடித்தார். அரசியல் 2014 சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைப் பிரதிநிதி சம்பா சட்டமன்றத் தொகுதியில் மான்யால் வெற்றி பெற்றார். இவர் 34,075 வாக்குகளைப் பெற்று தனது நெருங்கிய போட்டியாளரான ஜம்மு-காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சியின் யாஷ் பால் குண்டலை 22,118 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பின்னர், மன்யால் 2024 சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில் இராம்கர் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 35,672 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான இந்திய தேசிய காங்கிரசின் யாஷ் பால் குண்டலை 14,202 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மேற்கோள்கள் சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினர்கள் 2024-2029 வாழும் நபர்கள் 1970 பிறப்புகள்
682949
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
தாமான் ஜெயா எல்ஆர்டி நிலையம்
தாமான் ஜெயா எல்ஆர்டி நிலையம் அல்லது தாமான் ஜெயா இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Taman Jaya LRT Station; மலாய்: Stesen LRT Taman Jaya; சீனம்: 再也公园) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த நிலையத்தின் வழித்தடம் முன்பு புத்ரா வழித்தடம் என்று அழைக்கப்பட்டது. பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் தொடங்கி கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் வரையிலான முதலாவது கட்டமைப்புப் பிரிவில் 10 நிலையங்கள் கட்டப்பட்டன. அவற்றில் ஒரு பகுதியாக 1 செப்டம்பர் 1998 அன்று இந்த நிலையம் திறக்கப்பட்டது. அந்தக் கட்டமைப்புப் பிரிவில் கோலாலம்பூர் சென்ட்ரல் சேர்க்கப்படவில்லை. தாமான் ஜெயா எல்ஆர்டி நிலையம் திறக்கப்பட்ட பின்னர் தான் கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த நிலையத்திற்கான பராமரிப்பு கிடங்கு லெம்பா சுபாங் புறநகர்ப்பகுதியில் உள்ளது. அமைவு தாமான் ஜெயா நிலையம் பெட்டாலிங் ஜெயாவின் புதிய பிரிவான பிரிவு 52-க்கு நேர் வடக்கே அமைந்துள்ளது; மற்றும் பல நகராட்சிக் கட்டிடங்கள்; பெட்டாலிங் ஜெயா சதுக்கம்; ஆகியவற்றுக்கு அருகிலும் அமைந்துள்ளது. அத்துடன் பெட்டாலிங் ஜெயா பிரிவு 9, 10 மற்றும் 11-க்கு நடந்து செல்லும் தூரத்திலும் உள்ளது. பெட்டாலிங் ஜெயா பிரிவு 10-இல் உள்ள ஜெயா பூங்கா (Jaya Park) என்பதிலிருந்து இந்த நிலையம் அதன் பெயரைப் பெற்றது. ஜெயா பூங்கா என்பது ஓர் ஏரித் தோட்டம்; மற்றும் பெட்டாலிங் ஜெயாவில் நிறுவப்பட்ட முதல் பூங்கா ஆகும். மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் இந்த நிலையம், கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலைக்கு மிக அருகில், அதாவ்து 440 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அமைப்பு தாமான் ஜெயா எல்ஆர்டி நிலையம், கிளானா ஜெயா வழித்தடத்தின் மற்ற உயர்த்தப்பட்ட நிலையங்களைப் போலவே, மூன்று அடுக்கு நிலைகளைக் கொண்ட ஓர் எளிமையான நிலையமாகும்: தெரு மட்டத்தில் ஒரு நுழைவு நிலை; நிலத்தடியில் ஒரு நிலை; மற்றும் நடைபாதையில் ஒரு நிலை என மூன்று நிலைகள் உள்ளன. இந்த நிலையத்தின் அனைத்து அடுக்கு நிலைகளும், மின்படிக்கட்டுகள் மற்றும் படிக்கட்டுகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தொடருந்து நின்று செல்லும் இடத்திற்கும் நடைபாதைக்கும் இடையில் சுமைதூக்கிச் சேவையும் வழங்கப்படுகிறது. கிளானா ஜெயா வழித்தடம் கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும். மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பில் (Klang Valley Integrated Transit System) இந்த வழித்தடம் ஒரு பகுதியாகும். இந்த வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. காட்சியகம் மேலும் காண்க மலேசிய தொடருந்து போக்குவரத்து கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல் லெம்பா பந்தாய் மக்களவைத் தொகுதி கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
682951
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
அம்மோனியம் அறுபுரோமோபிளாட்டினேட்டு
அம்மோனியம் அறுபுரோமோபிளாட்டினேட்டு (Ammonium hexabromoplatinate) என்பது (NH4)2PtBr6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இயற்பியல் பண்புகள் அம்மோனியம் அறுபுரோமோபிளாட்டினேட்டு செம்பழுப்பு நிறத்தில் படிகங்களாகத் தோன்றுகிறது. மிகச் சிறிதளவே நீரில் கரைகிறது. மேற்கோள்கள் பிளாட்டினம் சேர்மங்கள் புரோமோ அணைவுச் சேர்மங்கள் புரோமோமெட்டலேட்டுகள்
682974
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%88%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
அம்மோனியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு
அம்மோனியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு (Ammonium dihydrogen arsenate) என்பது NH4H2AsO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தயாரிப்பு ஆர்சனிக்கு அமிலத்தின் அடர் கரைசலுடன் அமோனியா கரைசலைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அம்மோனியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு உருவாகும். NH3 + H3AsO4 → NH4H2AsO4 இயற்பியல் பண்புகள் அம்மோனியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு நிறமற்ற படிகங்களாக உருவாகிறது. இது நீரில் நன்றாகக் கரையும். பயன்கள் இச்சேர்மம் ஒரு மருந்தியல் இடைநிலையாகப் பயன்படுத்தப்படுகிறது. நேரிலி ஒளியியல் இரும்பு மின்சாரமாகப் பயன்படுகிறது மேற்கோள்கள் அமோனியம் சேர்மங்கள் ஆர்சனிக்கு சேர்மங்கள் அமில உப்புகள்
682977
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%28IV%29
அம்மோனியம் அறுபுரோமோசெலீனேட்டு(IV)
அம்மோனியம் அறுபுரோமோசெலீனேட்டு(IV) (Ammonium hexabromoselenate(IV)) என்பது (NH4)2[SeBr6]. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தயாரிப்பு ஐதரசன் புரோமைடில் கரைத்து அமிலமயமாக்கப்பட்ட செலீனியம் டெட்ராபுரோமைடின் நீரிய கரைசலில் அம்மோனியம் புரோமைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அம்மோனியம் அறுபுரோமோசெலீனேட்டு(IV) உருவாகும்: SeBr4 + 2NH4Br -> (NH4)2[SeBr6] இயற்பியல் பண்புகள் அம்மோனியம் அறுபுரோமோசெலீனேட்டு(IV) Fm3m என்ற இடக்குழுவில் கனசதுரப் படிக அமைப்பில் சிவப்பு நிறத்தில் படிகங்களாகப் படிகமாகிறது. தண்ணீருடன் சேரும்போது இது சிதைவடைகிறது. மேற்கோள்கள் செலீனியம் சேர்மங்கள் அமோனியம் சேர்மங்கள்
682982
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE
பைரவகோனா
பைரவாகோனா (Bhairavakona), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள நல்லமலா மலையில் அமைந்த குடைவரைக் கோயில்கள் ஆகும். சிவபெருமான், விஷ்ணு மற்றும் பிரம்மாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்குடைவரை கோயில்கள் விஷ்ணுகுந்தினப் பேரரசு காலத்தில் எழுப்பப்பட்டது. புவியியல் பிரகாசம் மாவட்டத் தலைமையிடமான ஒங்கோல் நகரத்திற்கு தென்மேற்கே 145.4 கிலோ மீட்டர் தொலைவிலும், சீதாராமபுரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. விழாக்கள் மகா சிவராத்திரிகார்த்திகை பௌர்ணமி இதன் முக்கிய விழாக்களாகும். படக்காட்சிகள் இதனையும் காண்க இந்தியக் குடைவரைக் கோயில்கள் மேற்கோள்கள் பிரகாசம் மாவட்டம் ஆந்திராவில் உள்ள சிவன் கோயில்கள் இந்தியக் குடைவரைக் கோயில்கள்
682988
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
ஆசியா ஜெயா எல்ஆர்டி நிலையம்
ஆசியா ஜெயா எல்ஆர்டி நிலையம் அல்லது ஆசியா ஜெயா இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Asia Jaya LRT Station; மலாய்: Stesen LRT Asia Jaya; சீனம்: 亚洲再也轻轨站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த நிலையத்தின் வழித்தடம் முன்பு புத்ரா வழித்தடம் என்று அழைக்கப்பட்டது. பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் தொடங்கி கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் வரையிலான முதலாவது கட்டமைப்புப் பிரிவில் 10 நிலையங்கள் கட்டப்பட்டன. அவற்றில் ஒரு பகுதியாக 1 செப்டம்பர் 1998 அன்று இந்த நிலையம் திறக்கப்பட்டது. அந்தக் கட்டமைப்புப் பிரிவில் கோலாலம்பூர் சென்ட்ரல் சேர்க்கப்படவில்லை. ஆசியா ஜெயா எல்ஆர்டி நிலையம் திறக்கப்பட்ட பின்னர் தான் கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த நிலையத்திற்கான பராமரிப்பு கிடங்கு லெம்பா சுபாங் புறநகர்ப்பகுதியில் உள்ளது. அமைவு ஆசியா ஜெயா நிலையம் பெட்டாலிங் ஜெயாவின் பிரிவு 14-இல் அமைந்துள்ளது; மற்றும் பல தொழில்துறை, வணிக மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலும் அமைந்துள்ளது. அத்துடன் பெட்டாலிங் ஜெயா 14-க்கு நடந்து செல்லும் தூரத்திலும் உள்ளது. அத்துடன், அருகிலுள்ள தாமான் ஜெயா எல்ஆர்டி நிலையம் ஏறக்குறைய 900 மீட்டர் தொலைவிலும் உள்ளது ஆசியா ஜெயா வணிக வளாகம் பெட்டாலிங் ஜெயா பிரிவு 14-இல் உள்ள ஆசியா ஜெயா வணிக வளாகம் (Asia Jaya Shopping Complex) என்பதிலிருந்து இந்த நிலையம் அதன் பெயரைப் பெற்றது. ஆசியா ஜெயா வணிக வளாகம் என்பது பெட்டாலிங் ஜெயாவில் ஒரு பிரபலமான வணிக வளாகம் ஆகும். இருப்பினும் இந்த வணிக வளாகம் 1990-களில் அர்மடா தங்கும் விடுதியாக (Armada Hotel) மாற்றப்பட்டது. மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் இந்த நிலையம், கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலைக்கு மிக அருகில், அதாவ்து 300 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அமைப்பு ஆசியா ஜெயா எல்ஆர்டி நிலையம், கிளானா ஜெயா வழித்தடத்தின் மற்ற உயர்த்தப்பட்ட நிலையங்களைப் போலவே, மூன்று அடுக்கு நிலைகளைக் கொண்ட ஓர் எளிமையான நிலையமாகும்: தெரு மட்டத்தில் ஒரு நுழைவு நிலை; மற்றும் நடைபாதையில் ஒரு நிலை என இரண்டு நிலைகள் உள்ளன. இந்த நிலையத்தின் அனைத்து அடுக்கு நிலைகளும், மின்படிக்கட்டுகள் மற்றும் படிக்கட்டுகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தொடருந்து நின்று செல்லும் இடத்திற்கும் நடைபாதைக்கும் இடையில் சுமைதூக்கிச் சேவையும் வழங்கப்படுகிறது. கிளானா ஜெயா வழித்தடம் கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும். மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பில் (Klang Valley Integrated Transit System) இந்த வழித்தடம் ஒரு பகுதியாகும். இந்த வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. காட்சியகம் மேலும் காண்க மலேசிய தொடருந்து போக்குவரத்து கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல் பெட்டாலிங் ஜெயா நகரப் பிரிவுகளின் பட்டியல் கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
682989
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
நூப்ரா சட்டமன்றத் தொகுதி
நூப்ரா சட்டமன்றத் தொகுதி (Nubra Assembly constituency) இந்திய மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் முன்னர் செயல்பாட்டில் இருந்த தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி லடாக் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது. சட்டப்பேரவை உறுப்பினர் தேர்தல் முடிவுகள் 2014 மேலும் காண்க லேஹ் மாவட்டம் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல் மேற்கோள்கள் லே மாவட்டம் சம்மு காசுமீரில் நீக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள்
682991
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
தர்கால் சட்டமன்றத் தொகுதி
தர்கால் சட்டமன்றத் தொகுதி (Darhal Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் முன்பு செயல்பாட்டிலிருந்து பின்னர் நீக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். தர்கால் மல்கன் சம்மு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது. சட்டப்பேரவை உறுப்பினர் தேர்தல் முடிவுகள் 2014 மேலும் காண்க ரஜோரி மாவட்டம் மேற்கோள்கள் சம்மு காசுமீரில் நீக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் ராஜவுரி மாவட்டம்
682992
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE
துபையா
துபையா (Tupaia) என்பது துபையிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரமூஞ்சூறு பேரினமாகும். இது முதன்முதலில் 1821-இல் தாமசு இசுடாம்போர்ட் ராபிள்சு என்பவரால் விவரிக்கப்பட்டது. இந்தப் பேரினத்தின் பெயர் மலாய் வார்த்தையான துபாய் என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் அணில் அல்லது அணிலை ஒத்த சிறிய விலங்கு என்பதாகும். சிறப்பியல்புகள் இராபிள்சு இந்தப் பேரினத்தை ஒரு நீளமான மூக்கு, எட்டு முதல் 10 கோரைப்பற்கள், நன்கு வளர்ந்த கரங்கள், ஐந்து கால் விரல்களுடன் கூடிய உரோமங்களற்ற கால்கள், பட்டைகள் மற்றும் கூர்மையான நகங்கள், அணில்களுக்கே உரித்தான வால்களுடன் கூடியன என விவரித்துள்ளார். மார்கடு வார்டு லியோன் 1913ஆம் ஆண்டில் இந்தப் பேரினத்தின் திருத்தத்தை வெளியிட்டார். மேலும் துபையா பேரினத்தின் அணில் போன்ற தோற்றத்தையும் குறிப்பிட்டார். இவை நீண்ட கருப்பு மீசையுடன் சிறிய காதுகளைக் கொண்டுள்ளன. இவற்றின் முகத்தில் எந்த அடையாளங்களையும் கொண்டிருக்கவில்லை. மூக்கின் உரோமங்களற்றப் பகுதி வலுவாக உள்ளது. தோளில் ஒரு சாய்வான கோடும் நன்கு வேறுபட்டுக் காணக்கூடியதாக உள்ளது. வாலில் உரோமங்கள் காணப்பட்டாலும் குஞ்சமாக இல்லை. மூளை அகலமாகவும், பல் வரிசை நீளமாக இருக்கும். பல் சூத்திரம் ஆகும். முதல் இணை மேல் வெட்டுப்பல் இரண்டாவது இணையை விட நீளமானது. அதே நேரத்தில் இரண்டாவது இணை வெட்டுப்பல் முதல் மற்றும் மூன்றாவது இணைகளை விடச் சற்று பெரியவை. கீழ் கோரைப்பல் மேல் கோரைப்பல்லைவிட நன்கு வளர்ந்துள்ளது. அருகிலுள்ள முன் கடவாய் பற்களை விட உயரமாகக் காணப்படுகின்றன. தலை, உடல் மற்றும் வால் ஆகியவற்றின் அளவு சிற்றினங்களுக்கிடையே வேறுபடுகிறது. துபையா பேரினத்தின் ஒரு சிறந்த பண்பு இவற்றின் வண்ணப் பார்வை ஆகும். இவை மனிதர்கள் மற்றும் பிற விலங்கினங்களைப் போலவே குச்சு மற்றும் கூம்பு காட்சி ஏற்பிகளைக் கொண்டுள்ளன. வகைப்பாட்டியல் 1820ஆம் ஆண்டில் தையார்ட் மற்றும் துவௌசெல் ஆகியோர் பொதுவான மர மூஞ்சூறு, துபையா கிளிசு சிற்றினத்தின் முதல் மாதிரியை விவரித்தபோது, இவர்கள் இதை சோரெக்சு பேரினத்தின் ஓர் இனமாகக் கருதினர். டி. எவரெட்டி 2011 மூலக்கூறு தொகுதி வரலாற்று ஆய்வின் அடிப்படையில் யூரோகேல் பேரினத்திலிருந்து மாற்றினார். பின்வரும் சிற்றினங்கள் துபையா பேரினத்தில் உள்ளன. வடக்கு மர மூஞ்சூறு து. பெலாங்கேரி-(வாக்னர், 1841) தங்க வயிற்று மரமூஞ்சூறு, து. கிரைசோகேசுடர்-கெ. சு. மில்லர், 1903 பாங்கா தீவு மரமூஞ்சூறு, து. டைகோலர்-லியோன், 190 வரியுடைய மரமூஞ்சூறு து. டார்சலிசு-செலெகல், 1857 மிண்டனாவோ மரமூஞ்சூறு து. எவரெட்டி-தாமஸ், 1892 சுமாத்திரா மர மூஞ்சூறு து. பெருகினியா-இராபிள்சு 1821 பொதுவான மர மூஞ்சூறு து. கிளிசு-டையார்ட் & துவௌசெல், 1820 மெல்லிய மர மூஞ்சூறு து. கிராசிலிசு-தாமஸ், 1893 சாவகம் மர மூஞ்சூறு து. கைபோக்ரிசா-தாமஸ், 1895 கோர்சுபீல்டு மர மூஞ்சூறு து. சாவனிகா-கோர்சூபீல்ட், 1821 நீண்ட கால் மர மூஞ்சூறு து. லாங்கிபசு-தாமசு, 1893 குள்ள மர மூஞ்சூறு து. மைனர்-குந்தர், 1876 மலை மர மூஞ்சூறு து. மோன்டானா-தாமசு, 1892 நிக்கோபார் மர மூஞ்சூறு து. நிக்கோபாரிகா- (ஜெலெபோர், 1868) பலவன் மர மூஞ்சூறு து. பலவனென்சிசு-தாமசு, 1894 வண்ண மர மூஞ்சூறு து. பிக்டா-தாமசு, 1892 கலிமந்தன் மரமூஞ்சூறு து. சலாதனா-லியோன், 1895 செந்நிற மர மூஞ்சூறு து. இசுப்ளெண்டிடுலா-ஜா. எ. கிரே, 1865 பெரிய மர மூஞ்சூறு து. தானா- இராபிள்சு, 1821 † துபையா மியோசெனிகா-மெயின் & ஜின்சுபர்க், 1997 கடந்த காலத்தில், பல்வேறு ஆய்வாளர்கள் மர மூஞ்சுறுகளை பூச்சியுன்னி தரவரிசையில் வைக்க முன்மொழிந்தனர். இவற்றை முதனிகளின் நெருங்கிய உறவினர்களாகக் கருதினர். 1972 முதல், மர மூஞ்சூறு குடும்பங்களாக துபாயிடே மற்றும் பிடிலோசெர்சிடே ஆகியவை இசுகேண்டென்சியா வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன. பரவலும் வாழிடமும் வடகிழக்கு இந்தியா, மியான்மர், நிக்கோபார் தீவுகள் முதல் கிழக்கே பிலிப்பீன்சு தீவுகள், மத்திய சீனா, சாவகம், போர்னியோ மற்றும் சுமாத்திரா வரை தென்மேற்குக் கடற்கரையில் உள்ள தீவுகள் உட்படப் பல பகுதிகளில் துபையா சிற்றினங்கள் உள்ளன. இவை பாலித் தீவுகள் தவிர, செலிபீசிலோ அல்லது சாவகத்தின் கிழக்கே உள்ள தீவுகளிலோ காணப்படவில்லை. இவை வெப்பமண்டலக் காடுகளின் அடர்ந்த நிலப்பரப்பில் வாழ்கின்றன. து. மைனரைத் தவிர, இவை முதன்மையாக நிலப்பரப்பு மற்றும் வனத் தரையில் இரை தேடுகின்றன. பரந்த சாலைகளைக் கடப்பது அரிதாகவே காணப்படுவதால், மரம் வெட்டுதல் நடவடிக்கைகளால் ஏற்படும் காடுகளின் துண்டாக்கத்தால் இதன் எண்ணிக்கை எதிர்மறையாகப் பாதிக்கப்படுகின்றது. சூழலியலும் நடத்தையும் ஆரம்பக்கால இயற்கை ஆர்வலர்கள் வனப்பகுதிகளில் பிடிபட்ட துபையா மாதிரிகளை அமைதியற்றவை, பதற்றமானவை மற்றும் ஒலிகள் மற்றும் இயக்கங்களுக்கு விரைவாக எதிர்வினையாற்றும் தன்மையுடையன என்று விவரித்தனர். இவற்றின் செவிப்புலனின் பரந்த அதிர்வெண் வரம்பு மீயொலி வெகு தொலைவில் இருப்பதால் இவற்றின் செவி உணர்திறன் நன்கு மேம்பட்டுள்ளது. துபையா இனங்களின் கன்னப் பற்களின் வடிவம் இவை முதன்மையான பூச்சிக்கொல்லிகள் என்பதைக் குறிக்கிறது. கொல்லைப்படுத்தப்பட்ட மாதிரிகள் எறும்பு, ஈக்கள், சிள்வண்டு, வெட்டுக்கிளி, கரப்பான் மற்றும் சிறிய வண்டுகளை வேட்டையாடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இவை தங்கள் உணவினை உட்கார்ந்திருக்கும்போது தங்கள் முன்னங்கால்களுக்கு இடையில் வைத்துக்கொள்கின்றன. உணவுண்ட பின்னர், தங்கள் தலைகளையும் முகங்களையும் இரண்டு முன்கைகளாலும் மென்மையாக்கி, உதடுகளையும் உள்ளங்கைகளையும் நக்கிக் கொள்கின்றன. இவை குடிக்கவும் குளிக்கவும் தண்ணீரை விரும்புகின்றன. பெரும்பாலும் பறவைகளால் பரவும் மென்மையான பழங்களை உண்ணுகின்றன. இப்பழங்களின் கூழ்ப் பகுதியினை விழுங்குகின்றன. ஆனால் நார்ச்சத்து கூறுகளை நிராகரிக்கின்றன. இவற்றின் நீண்ட மற்றும் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பைகளால் இவற்றைச் செரிக்க முடியாது. மர மூஞ்சூறு நன்கு வாசனையினை உணரக்கூடியன. வனப்பரப்பில் தரையில் உள்ள இலைக் குப்பைகளில் உணவைத் தேடுகின்றன. துபையா சிற்றினங்கள் இவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் உள்ள அவதானிப்புகள் இவை பொதுவாக ஓரிணை வாழ்க்கையினை மேற்கொள்கின்றன என்பதைக் குறிக்கின்றன. சமூக நடத்தை இனங்களுக்கும் அவற்றின் பிராந்தியங்களில் கிடைக்கும் உணவு வளங்களுக்கும் இடையில் வேறுபடுகிறது. உணவு போதுமானதாக இருக்கும் இடத்தில், பிராந்திய மோதல்களில் ஈடுபடாமல் இவை ஒத்துப் போகின்றன. புக்கிட் திமா இயற்கை காப்பகத்தில் காணப்பட்ட பொதுவான மரமூஞ்சூறுக்கள் அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் பிற மூஞ்சூறுகளைத் துரத்திச் செல்வதன் மூலம் குறைந்து வரும் உணவு வளங்களைப் பாதுகாக்கின்றன. பறக்கும் பறவைகள், பாம்புகள் மற்றும் சிறிய மாமிச விலங்குகளை மர மூஞ்சூறு வேட்டையாடுவதாக அறியப்படுகிறது. மனிதர்கள் உணவுக்காக இவற்றைக் கொல்வதில் ஆர்வம் காட்டுவதில்லை; ஏனெனில் இவற்றின் விரும்பத்தகாத சுவை. மேலும் இவை அரிதாகவே தீங்குயிரியாக காணப்படுகின்றன. இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சி மர மூஞ்சூறுக்கள் இவற்றின் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சியைப் பொறுத்தவரை முதனுயிரி விலங்கினங்களைக் காட்டிலும் கொறித்துண்ணிகள் மற்றும் அணில்களுடன் அதிக ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்கின்றன. நீண்ட கர்ப்ப காலங்களுடன் குட்டியினை உருவாக்கும் உயர் விலங்கினங்களுக்கு மாறாக, மர மூஞ்சூறு பொதுவாக இரண்டு அல்லது மூன்று இளம் குட்டிகளைக் கொண்டுள்ளன. மேலும் இவை கருப்பையில் சுமார் 45 நாட்கள் மட்டுமே இருக்கும். பெண் மரமூஞ்சூறுக்கள் உலர்ந்த இலைகளால் செய்யப்பட்ட கூடுகளில் குட்டிகளை ஈணுகின்றன. மேலும் அவ்வப்போது திரும்பி வந்து குட்டிகளுக்குப் பால் கொடுக்கும். துபையாவில் பெற்றோர் பராமரிப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது . குட்டிகள் சராசரியாக 33 நாட்கள் கூட்டிலிருக்கும். இவை கூட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு படிப்படியாக வளரும். துபையா பேரினச் சிற்றினங்களில் பத்து அடையாளம் காணப்பட்ட கரு வளர்ச்சி நிலைகள் காணப்படுகின்றன. இவற்றின் பாலியல் முதிர்ச்சி 90 நாட்களில் நடைபெறுகிறது. மருத்துவ ஆராய்ச்சி விலங்கினங்களுடனான இவற்றின் நெருங்கிய உறவு மனித மருத்துவ ஆராய்ச்சியில் மரமூஞ்சூறுக்கள் முக்கியமான மாதிரி உயிரினங்களாக பயன்படுகிறது. மரமூஞ்சூறுக்களைப் பயன்படுத்தி போர்னா நோய் தீநுண்மியின் விளைவுகளை ஆராயும் ஓர் ஆய்வு நரம்பியல் நோய் குறித்த புதிய நுண்ணறிவை வழங்கியுள்ளது. துபையா பேரினத்தின் சிற்றினங்கள் விலங்கினங்களுடன் பல ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொள்வதால், இவை மிகுதியாக பயன்படுத்தப்பட்டன. இவை மற்றவற்றை விட அதிகமான சந்ததிகளைக் கொண்டுள்ளன. இதனால் மனித மருத்துவ ஆராய்ச்சியில் பயன்படுத்துவதற்கான மாற்று மாதிரியாக இவற்றைப் பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. வெற்றிகரமான உளவியல் சமூக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் மனச்சோர்வடைந்த மனித நோயாளிகளைப் போலவே துபையாவின் துணை ஆண்களில் வியத்தகு நடத்தை, நரம்பியல் மற்றும் உடலியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. திநுண்மிகளால் இவை எளிதில் பாதிக்கப்படக்கூடிய தன்மையினைக் கொண்டுள்ளன. ஈரல் அழற்சி பி போன்ற நோய்த்தொற்றுகளுக்கு நோயெதிர்ப்பு சக்தியைப் பற்றி ஆய்வு செய்ய இவற்றைப் பயன்படுத்துவதில் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. மனித உயிரியல் மற்றும் நோய் வழிமுறைகள் பற்றிய ஆய்வில் கொறித்துண்ணிகள் மாதிரிகளைப் பயன்படுத்துவதற்கான வரம்புகளை சமாளிக்கவும், புதிய மருந்துகள் மற்றும் நோயறிதல் கருவிகளின் வளர்ச்சிக்கும் துபையா இனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சமீபத்திய ஆய்வுகள் தொற்று, வளர்சிதை மாற்ற, நரம்பியல் மற்றும் மனநல நோய்கள் மற்றும் புற்றுநோய்களைப் பற்றி ஆய்வு செய்ய மரமூஞ்சூறுகளைப் பயன்படுத்தியுள்ளன. 2013ஆம் ஆண்டில், வைராலஜி ஆய்விதழில் ஒரு கட்டுரையை வெளியிடப்பட்டடது. இது எச்1 என்1 இன்ப்ளூயன்சா தீநுண்மி மாதிரிகளாக வடக்கு மர மூஞ்சூறு (து. பெலாங்கேரி) பயன்பாட்டை ஆவணப்படுத்துகிறது. இது சாதகமாக இருந்தது, ஏனெனில் கினி எலி, எலிகள், சுண்டெலி உள்ளிட்டப் பிற கொறித்துண்ணிகளும் சாத்தியமான விலங்குகளாக இருந்தபோதிலும் தகவல்களில் மருத்துவ அறிகுறிகள் மற்றும் பரவுதல் குறித்து இடைவெளிகளை விட்டுச் செல்கின்றன. இருப்பினும், துபையா மிதமான அமைப்பு மற்றும் சுவாச அறிகுறிகளையும், சுவாசக் குழாயில் நோயியல் மாற்றங்களையும் வெளிப்படுத்துகிறது. இது எச்1என்1 ஆராய்ச்சியில் ஒரு நன்மையான மாதிரியாக இதன் பயன்பாட்டை ஆதரிக்கிறது. மேற்கோள்கள் மூஞ்சூறு பாலூட்டிப் பேரினங்கள்
682994
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%20%28%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%29
இராம்நாத் கோயங்கா விருது (ஊடகவியல்)
இராம்நாத் கோயங்கா ஊடகவியல் விருது (Ramnath Goenka Excellence in Journalism Awards(RNG Awards)இந்தியாவின் ஊடகவியலில் சிறப்பாக செயல்பட்ட வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ராம்நாத் கோயங்கா பெயரில் 2006ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது ஆகும்.மேலும் 2014ஆம் ஆண்டு முதல் சிறந்த ஊடகவியல் புகைப்படக்காரர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இதனையும் காண்க இராம்நாத் கோயங்கா விருது (இலக்கியம்) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Official website of the Ramnath Goenka Excellence in Journalism Awards 43 winners felicitated at Ramnath Goenka Awards for excellence in journalism, Year 2019 and 2020 ஊடகவியலாளர்களுக்கான விருதுகள்
682996
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE
தையாசு கேரினாட்டா
தையாசு கேரினாட்டா (Ptyas carinata) என்பது பொதுவாக இணைச் சாரைப்பாம்பு என்று அழைக்கப்படும். இது கொலுப்பிரிடே பாம்புக் குடும்பத்தினைச் சார்ந்த ஓர் சிற்றினமாகும். இந்த பாம்பு இந்தோனேசியா, மியான்மர், மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், கம்போடியா, இந்தியா, வியட்நாம், லாவோஸ் மற்றும் சிங்கப்பூரில் காணப்படுகிறது. அதிகம் அறியப்படாத இந்த சிற்றினம், உயிருள்ள பாம்பு இனங்களில் பாதிக்கும் மேலானவற்றை உள்ளடக்கிய கொலுப்பிடே குடும்பத்திலுள்ள மிகப்பெரிய சிற்றினமாக இருக்கலாம். தைவானில் இந்த இனத்தின் பாம்புகளின் அறியப்பட்ட பாம்பின் நீளம் 1.12 முதல் 2.75 மீ (4 அடி முதல் 9 அடி வரை) வரை அளவிடப்பட்டுள்ளது. இருப்பினும், இதன் அதிகபட்ச நீளம் சுமார் 4 மீட்டர் என்று கூறப்படுகிறது. ஆண் பாம்புகளின் சராசரி அளவு பெண் பாம்புகளை விடச் சற்றே பெரியதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தோனேசியாவில் பல்லிகள் குறிப்பிடத்தக்க இரையாகக் கருதப்பட்டாலும், இவை கொறித்துண்ணிகள் போன்ற பல்வேறு இரைகளை சில சந்தர்ப்பங்களில் வேட்டையாடுபவையாக இருக்கலாம். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் படம் நோயல் தாமஸ்-மேக்ரிச்சி வடக்கு மத்திய நீர்ப்பிடிப்பு இயற்கை காப்பகம், சிங்கப்பூர் புகைப்படம் ஜான் வரிகோஸ்-மவுண்ட் ரிமாவ், சிபிதாங்-மலேசியா டோய் சுதெப்-புய் தேசியப் பூங்காவின் இனங்கள் தாய்லாந்தில் உள்ள Ptyas carinata ஊர்வன சாரைப்பாம்புகள்
682998
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
திருப்பூர் ஐயப்பன் கோயில்
திருப்பூர் ஐயப்பன் கோயில் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஐயப்பன் கோயில் ஆகும். அமைவிடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 323.92 மீ. உயரத்தில், () என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, இக்கோயில் திருப்பூரில் கல்லூரி (சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி) சாலையில் அமைந்துள்ளது. மேற்கோள்கள் திருப்பூர் மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்
683000
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
தாமான் பாராமவுண்ட் எல்ஆர்டி நிலையம்
தாமான் பாராமவுண்ட் எல்ஆர்டி நிலையம் அல்லது தாமான் பாராமவுண்ட் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Taman Paramount LRT Station; மலாய்: Stesen LRT Taman Paramount; சீனம்: 百乐花园站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த நிலையத்தின் வழித்தடம் முன்பு புத்ரா வழித்தடம் என்று அழைக்கப்பட்டது. பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் தொடங்கி கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் வரையிலான முதலாவது கட்டமைப்புப் பிரிவில் 10 நிலையங்கள் கட்டப்பட்டன. அவற்றில் ஒரு பகுதியாக 1 செப்டம்பர் 1998 அன்று இந்த நிலையம் திறக்கப்பட்டது. அந்தக் கட்டமைப்புப் பிரிவில் கோலாலம்பூர் சென்ட்ரல் சேர்க்கப்படவில்லை. தாமான் பாராமவுண்ட் எல்ஆர்டி நிலையம் திறக்கப்பட்ட பின்னர் தான் கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த நிலையத்திற்கான பராமரிப்பு கிடங்கு லெம்பா சுபாங் புறநகர்ப்பகுதியில் உள்ளது. அமைவு தாமான் பாராமவுண்ட் நிலையம் பெட்டாலிங் ஜெயாவின் பிரிவு 14, 20, 21, 22, SS1-இல் அமைந்துள்ளது; மற்றும் பல தொழில்துறை, வணிக மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலும் அமைந்துள்ளது. அத்துடன் பிரிவு SS1-க்கு நடந்து செல்லும் தூரத்திலும் உள்ளது. அத்துடன், அருகிலுள்ள தாமான் ஜெயா எல்ஆர்டி நிலையம் ஏறக்குறைய 900 மீட்டர் தொலைவிலும் உள்ளது தாமான் அமான் பொழுதுபோக்கு பூங்கா, கம்போங் துங்கு பள்ளிவாசல், செரி அமான் குடியிருப்புகள்; மற்றும் பாரமவுண்ட் வியூ அடுக்குமாடி வளாகம் போன்றவை அருகில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளாகும். அமைப்பு தாமான் பாராமவுண்ட் எல்ஆர்டி நிலையம், கிளானா ஜெயா வழித்தடத்தின் உயர்த்தப்பட்ட சில நிலையங்களைப் போலவே, இரண்டு அடுக்கு நிலைகளைக் கொண்ட ஒரு நிலையமாகும்: தெரு மட்டத்தில் ஒரு நுழைவு நிலை; உயர்த்தப்பட்ட ஒரு நிலை; என இரண்டு நிலைகள் உள்ளன. இந்த நிலையத்தின் அனைத்து அடுக்கு நிலைகளும், மின்படிக்கட்டுகள் மற்றும் படிக்கட்டுகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தொடருந்து நின்று செல்லும் இடத்திற்கும் நடைபாதைக்கும் இடையில் சுமைதூக்கிச் சேவையும் வழங்கப்படுகிறது. கிளானா ஜெயா வழித்தடம் கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும். மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பில் (Klang Valley Integrated Transit System) இந்த வழித்தடம் ஒரு பகுதியாகும். இந்த வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. பேருந்து சேவைகள் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ரேபிட் கேஎல் பேருந்து நிறுத்தங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையத்தில் பேருந்து நிறுத்தமும் உள்ளது. காட்சியகம் மேலும் காண்க மலேசிய தொடருந்து போக்குவரத்து கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல் பெட்டாலிங் ஜெயா நகரப் பிரிவுகளின் பட்டியல் கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
683001
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%20%28%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%29
இராம்நாத் கோயங்கா விருது (இலக்கியம்)
இலக்கியத்திற்கான இராம்நாத் கோயங்கா விருது அல்லது ராம்நாத் கோயங்கா சாகித்ய சம்மான் (Ramnath Goenka Sahithya Samman) இந்திய மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் இலக்கிய விருது ஆகும். இவ்விருது தினமணி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திப் பத்திரிக்கைகளின் நிறுவனத் தலைவரான ராம்நாத் கோயங்கா நினைவு அறக்கட்டளை மூலம் செப்டம்பர் 2023ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இந்த விருது ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்டது. 2023ல் விருது பெற்றவர்கள் பெருமாள் முருகன் - இலக்கியம் - 2 இலட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அனிருத் கனிசெட்டி - சிறந்த புனைகதை அல்லாத வரலாற்று நூலான லார்ட்ஸ் ஆஃப் தி டெக்கான்:சாளுக்கியர்கள் முதல் சோழர்கள் வரை (Lords of the Deccan: Southern India from the Chalukyas to the Cholas) - 1 இலட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் தேவிகா ரேகா - சிறந்த புனைகதை நூலான குவாட்டர் லைப் (Quarterlife) 2024ல் விருது பெற்றவர்கள் Second edition of Ramnath Goenka Sahithya Samman awards to be held in New Delhi நீரஜ் சௌத்திரி - புனை அல்லாத நூல் ஐஸ்வரியா ஜா - புனைகதை நூல் -The Scent of Fallen Stars ரஸ்கின் பாண்ட் - இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் இதனையும் காண்க இராம்நாத் கோயங்கா விருது (ஊடகவியல்) மேற்கோள்கள் இந்திய இலக்கிய விருதுகள்
683010
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88
தோட்ட ஆந்தை
தோட்ட ஆந்தை (Garden owl) என்பது கொம்பு ஆந்தை ஒத்த ஒரு சோளக்காட்டுப் பொம்மை வடிவமாகும். இது பொதுவாக விவசாய மற்றும் நகர்ப்புற சூழல்களில் தீங்குயிரிகள், குறிப்பாகப் பறவைகள் அல்லது கொறித்துண்ணிகளைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறது. தயாரிப்பும் வடிவமைப்பும் நவீனத் தோட்ட ஆந்தைகள் பொதுவாக நெகிழியினால் செய்யப்பட்ட அச்சுகளிலிருந்து உருவாக்கப்படுகின்றன. இந்தத் தோட்ட ஆந்தைகளை உற்பத்தி செய்யப் பல நிலையங்கள் உள்ளன. இந்த பொம்மைகளில் அமைக்கப்பட்டிருக்கும் சுழலும் தலை, காற்றால் இயங்கும் இறக்கைகள் பெரும்பாலும் உயிருள்ள ஆந்தைகளின் நடத்தையைப் பிரதிபலிக்கவும், தோட்ட ஆந்தையின் தீங்குயிரிகளைத் தடுக்கும் திறனை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. தோட்ட ஆந்தைக்குப் பல தொழில்நுட்ப புதுப்பிப்புகள் சூரிய சக்தி எந்திரம் பொருத்தப்பட்டும், அசைவூட்ட உணர்விகளுடனும், மறைக்கப்பட்ட புகைப்படக் கருவிகளுடனும் உற்பத்தி செய்யப்படுகின்றன. செயல்திறன் தோட்ட ஆந்தைகளின் பயன்பாடு காரணமாக தீங்குயிரிகளின் தாக்குதல் தற்காலிகமாகக் குறையலாம். ஆனால் காலப்போக்கில் இச்செயல்பாடு தன் செயல்திறனை படிப்படியாக இழக்க நேரிடும். நகர்த்துவது, ஒலிச் சேர்ப்பு, அல்லது சூழல் பிரதிபலிப்பு தோட்ட ஆந்தையின் செயல்திறனினை நீண்ட நாட்களுக்கு அதிகரிக்கும் முறைகளாகும். வரலாறு வேட்டையாடும் தூண்டில் பொறி தோட்ட ஆந்தைகளின் ஆரம்ப முன்னோடியாகும். பூர்வீக அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் இருவரும் மூலோபாய வேட்டை நடைமுறைகளில் பறவைப் பொறிகளைப் பயன்படுத்தினர். 1400களிலிருந்து வேட்டைப் பொறிகள் பயன்படுத்தப்பட்டாலும், பயிர்களில் பறவைகளின் சேதத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளை ஐரோப்பியப் பதிவுகள் காட்டுகின்றன. தீங்குயிரிகளைக் கட்டுப்படுத்துவது பற்றிய புத்தகங்கள் 1600களில் எழுதப்பட்டன. அமெரிக்க ஆந்தை பொறி 1900களிலிருந்து பால்சா மரம், பேப்பியர்-மாச் மற்றும் தோல் போன்ற பொருட்களால் செய்யப்பட்டன. மேற்கோள்கள் ஆந்தைகள்
683011
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE
செப்பு நாடா
செப்பு நாடா (Copper tape) என்பது மெல்லிய செம்பு துண்டானது, பெரும்பாலும் ஒட்டும் பசையுடன் கூடியதாகும். இது பெரும்பாலான வன்பொருள் மற்றும் தோட்டக்கலை கடைகளிலும், சில நேரங்களில் மின்னணு கடைகளிலும் கிடைக்கின்றது. இந்தச் செப்பு நாடா, தோட்டங்கள், தொட்டிகளில் நடப்படும் தாவரங்கள், பழ மரங்களின் தூர், பிற மரங்களிலும் புதர்களிலும் ஓடில்லா நத்தை, நத்தைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. மின்காந்தக் கவசம், மின்னணுவியலில் குறைந்த அளவிலான மேற்பரப்பு ஏற்றம் செலுத்து கம்பி போன்ற பிற பயன்பாடுகளுக்கும், ஒளி ஊடுருவும் விளக்குகள் உற்பத்தியிலும் இது பயன்படுத்தப்படுகிறது. இது இரண்டு வடிவங்களில் - கடத்தும் பிசின் மற்றும் கடத்தும் தன்மையில்லா பிசினுடன் (இது மிகவும் பொதுவானது) கிடைக்கின்றது. மேற்கோள்கள் செப்பு
683015
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
தாமான் பகாகியா எல்ஆர்டி நிலையம்
தாமான் பகாகியா எல்ஆர்டி நிலையம் அல்லது தாமான் பகாகியா இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Taman Bahagia LRT Station; மலாய்: Stesen LRT Taman Bahagia; சீனம்: 幸福花園站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த நிலையத்தின் வழித்தடம் முன்பு புத்ரா வழித்தடம் என்று அழைக்கப்பட்டது. பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் தொடங்கி கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் வரையிலான முதலாவது கட்டமைப்புப் பிரிவில் 10 நிலையங்கள் கட்டப்பட்டன. அவற்றில் ஒரு பகுதியாக 1 செப்டம்பர் 1998 அன்று இந்த நிலையம் திறக்கப்பட்டது. அந்தக் கட்டமைப்புப் பிரிவில் கோலாலம்பூர் சென்ட்ரல் சேர்க்கப்படவில்லை. தாமான் பகாகியா எல்ஆர்டி நிலையம் திறக்கப்பட்ட பின்னர் தான் கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த நிலையத்திற்கான பராமரிப்பு கிடங்கு லெம்பா சுபாங் புறநகர்ப்பகுதியில் உள்ளது. அமைவு இந்த நிலையம் 1995 மற்றும் 1998 க்கு இடையில் கட்டப்பட்டது. அப்போது அந்த இடத்தில் தாமான் கெலோரா (Taman Gelora) எனும் 25 ஒற்றை மாடி குடியிருப்பு இருந்தது. இந்த நிலையம் SS 2/3 சாலையில், டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையின் தாமான் மேகா இடைமாற்றத்திற்கு அருகில் அமைந்துள்ளது. தாமான் பகாகியா நிலையம் பெட்டாலிங் ஜெயாவின் பிரிவு SS 3/59E; SS 2/3-இல் அமைந்துள்ளது; மற்றும் பல தொழில்துறை, வணிக மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலும் அமைந்துள்ளது. அத்துடன் பிரிவு SS 3/59E; SS 2/3|பிரிவு SS1-க்கு அருகாமையிலும் உள்ளது. அத்துடன், இந்த நிலையத்திற்கு அருகில் டாமன்சாரா ஜெயா (SS22); டாமன்சாரா உத்தாமா (SS21) ஆகிய புறநகர்ப் பகுதிகள் உள்ளன. அமைப்பு தாமான் பகாகியா எல்ஆர்டி நிலையம், கிளானா ஜெயா வழித்தடத்தின் உயர்த்தப்பட்ட சில நிலையங்களைப் போலவே, இரண்டு அடுக்கு நிலைகளைக் கொண்ட ஒரு நிலையமாகும்: தெரு மட்டத்தில் ஒரு நுழைவு நிலை; உயர்த்தப்பட்ட ஒரு நிலை; என இரண்டு நிலைகள் உள்ளன. இந்த நிலையத்தின் அனைத்து அடுக்கு நிலைகளும், மின்படிக்கட்டுகள் மற்றும் படிக்கட்டுகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தொடருந்து நின்று செல்லும் இடத்திற்கும் நடைபாதைக்கும் இடையில் சுமைதூக்கிச் சேவையும் வழங்கப்படுகிறது. கிளானா ஜெயா வழித்தடம் கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும். மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பில் (Klang Valley Integrated Transit System) இந்த வழித்தடம் ஒரு பகுதியாகும். இந்த வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. பேருந்து சேவைகள் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ரேபிட் கேஎல் பேருந்து நிறுத்தங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையத்தில் பேருந்து நிறுத்தமும் உள்ளது. காட்சியகம் மேலும் காண்க மலேசிய தொடருந்து போக்குவரத்து கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல் பெட்டாலிங் ஜெயா நகரப் பிரிவுகளின் பட்டியல் கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
683023
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF
சிட்டிலம்சேரி
சிட்டிலம்சேரி (Chittilamchery, ) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இந்த ஊர் வடக்கஞ்சேரி-கொல்லங்கோடு பிரதான சாலையில் அமைந்துள்ளது. இது ஆலத்தூர் வட்டம் மெலர்கோடு ஊராட்சிக்கு உட்பட்டது. சொற்பிறப்பியல் இந்த பெயர் "சுடிலம் சேரி" என்பதிலிருந்து வந்திருக்கலாம், அதாவது" "இல்லங்கள்" (வீடுகள் நம்பூதிரிகள்) சூழப்பட்ட இடம். சிட்டிலம்சேரியில் உள்ள ஒடியங்காடு, தற்போது கொடியன்காடு என்று அழைக்கப்படுகிறது, இது பிரித்தானியர் ஆட்சியின் போது சூனியம் செய்யும் ஒடியன்களின் இடமாக இருந்தது. பெண்கள் இருளில் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர். பிரித்தானியர் ஆட்சி ஒடியம் வழிபாட்டு முறை அல்லது சேவை தடை செய்ததால் இந்த பாரம்பரியம் நிறுத்தப்பட்டது. வரலாறு சிட்டிலம்சேரியில் முதல் பள்ளி 1885 ஆம் ஆண்டில் இராமு ஐயரால் நிறுவப்பட்டது. 15 மார்ச் 1965 முதல் மெலர்கோடு ஊராட்சி டி. என். பரமேஸ்வரன் தலைமையில் உருவானது. பொருளாதாரம் கிராமத்தின் பெரும்பான்மை மக்களின் வருவாய்க்கு வேளாண்மையே முதன்மை வருமான ஆதாரமாக உள்ளது. சிறு எண்ணிக்கையினர் வங்கி, தகவல் தொழில்நுட்பம், வணிகம் போன்ற பல்வேறு துறைகளில் இருந்து வருவாய் ஈட்டுகின்றனர். இணைய வசதிகள், அக்ஷயா மையம் மற்றும் செல்பேசி கோபுரத் தொடர்புகள் போன்ற வசதிகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. மாநில நெடுஞ்சாலை 58 இல் அமைந்துள்ள இந்த கிராமம் பயணிகளுக்கு ஒரு முக்கியமான சந்திப்பாகும். மேல் மருத்துவ வசதிகளுக்கும், மருத்துவ அவசர காலங்களிலும் கிராமவாசிகள் கோயம்புத்தூர் அல்லது திருச்சூர் போன்ற நகரங்களைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது இந்த கிராமம் மெலர்கோடு ஊராட்சியின் கீழ் வருகிறது. இது நெம்மர ஊராட்சி ஒன்றியத்துக்கும் , ஆலத்தூர் வட்டத்துக்கும் உட்பட்டது. திரைப்படம் வினீத் சீனிவாசன் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான மனோகரம் திரைப்படம் இந்த இடத்தில் படமாக்கப்பட்டது. பிருத்விராஜ் நடித்த 2012 படம் மோலி அத்தை ராக்ஸ், படம் ஓரளவு இங்கு படமாக்கப்பட்டது. கல்வி சிட்டிலம்சேரியில் எம்.என். கே. எம் உயர்நிலைப் பள்ளி (1947 இல் நிறுவப்பட்டது), ஏ. யு. பி. எஸ் சிட்டிலம்சேரி, முத்துக்குன்னி ஏ. எல். பி பள்ளி, ஏ. யு. பி. எஸ் மெலர்கோடு, என். எஸ். எஸ் ஆங்கில வழி துவக்கப்பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகள் உள்ளன. சமயம் செருநெட்டூரி பகவதி கோயில் அல்லது சிட்டிலம்சேரி காவு கோயில் இந்த கிராமத்தில் அமைந்துள்ளது. மூலத்தான தெய்வமாக செருநாட்டுரி அம்மா அல்லது செரிநாட்டுரி பகவதி உள்ளார். கிராமத்தில் பெரும்பாலும் இந்துக்களே உள்ளனர், என்றாலும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் உள்ளனர். செருநத்தூரி பகவதி கோயிலில் சனவரி மாத இறுதியில் ஒரு வாரத்தில் ஆராட்டு விழா கொண்டாடப்படுகிறது, இதில் கலாச்சார நிகழ்ச்சிகள், பஜனைகள், பக்தி பாடல்கள் பாடப்படுகின்றன. மால்மா களி (போராட்டன் களி) கோயில் வளாகத்திற்குள் நடைமுறையில் உள்ளது. சுவர்கநாதர் கோயில், அரக்குன்னி சிவன் கோயில், தாழகோட்டு காவு ஆகியவை மற்ற முக்கியமான கோவில்களாகும். திருவிழாக்கள் சிட்டிலம்சேரி விழா என்பது ஒரு வகை பூரம் ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஒரு சமய விழா ஆகும். விஷூவுக்கு 15 நாட்கள் அடுத்து ஏப்ரல் 28 அல்லது 29 அன்று வேலா கொண்டாடப்படுகிறது, இது செருனட்டரி கோயிலை மையமாக்க் கொண்டு நடத்தப்படுகிறது. இது வெளிச்சம், பஞ்ச வாத்தியம், பட்டாசு, மேடை நிகழ்ச்சிகள் (கான மேளா) ஆகியவற்றைக் கொண்ட பல அடுக்குப் நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. திருவிழாவிற்கு முந்தைய நாளில் அருகிலுள்ள பள்ளி விளையாட்டு அரங்கில் சாமயா-பிராடர்சனம் [யானையின் அலங்காரங்களின் கண்காட்சி] நிகழ்கிறது. கோயிலில் நடக்கும் பிற திருவிழாக்கள் ஆரட்டு மற்றும் மளமள களி ஆகும். புவியியல் சிட்டிலம்சேரி பல சிறிய குளங்களையும் (ஆனாரி குளம், கக்காட்டு குளம், பதியிலா குளம், சோரம் குளம், நொச்சுகுளம், கப்பல் குளம் உட்பட), நெல் வயல்களாலும் சூழப்பட்டுள்ள ஒரு கிராமமாகும். சிட்டிலம்சேரி நென்மாராவிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பொள்ளாச்சி-திருச்சூர் பேருந்து வழித்தடமான மா.நெ 58 பிரதான சாலையில் இந்த கிராமம் அமைந்துள்ளதால், இந்த கிராமமானது பரபரப்பான சந்திப்பாக உள்ளது. கிராம ஊராட்சி: മേലാർകോട് (மேலார்கோடு) வட்டம்: ആലത്തൂർ (ஆலத்தூர்) சட்டமன்றத் தொகுதி: ആലത്തൂർ (ஆலத்தூர்) பாராளுமன்ற தொகுதி: ആലത്തൂർ (ஆலத்தூர்) ( 2010இக்கு முன்பு பாலக்காடு) வார்டுகளின் எண்ணிக்கை: 16 மக்கள் தொகை: 23,706 ஆண்: 11,497 பெண்: 12,209 மக்கள் அடர்த்தி: 929 ஆதாரம்: மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு 2001 எல்லைகள் வடக்கு: ஆலத்தூர், எரிமையூர் கிழக்கு: பல்லாசனா, நெம்மரா தெற்கு: ஆயிலூர் மேற்கு: வந்தாழி, வடக்கஞ்சேரி அருகிலுள்ள நகரங்கள் திருச்சூர்-42.7 கி. மீ. பாலக்காடு - 29.7 கி. மீ. வடக்கஞ்சேரி-9.4 கி. மீ. ஆலத்தூர்-7.6 கி. மீ. முடபள்ளூர்-3.8 கி. மீ. திரிபல்லூர்-6.2 கி. மீ. நென்மறை-5.6 கி. மீ. கொல்லங்கோடு - 18.1 கி. மீ. கோவிந்தபுரம்-33.4 கி. மீ. மேற்கோள்கள் பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள் Coordinates on Wikidata
683024
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D
பக்-ஏ-சால்ட்
பக்-ஏ-சால்ட் (Bug-A-Salt) என்பது மென்மையான உடலினைக் கொண்ட பூச்சிகளை உப்புத் துகள்களால் தாக்கிக் கொல்லப் பயன்படுத்தப்படும் நெகிழி சுடுகலனின் வணிகப் பெயர் ஆகும். விளக்கம் பக்-ஏ-உப்பு சாதனம் நுண்ணிய சமையல் உப்பை நச்சுத்தன்மையற்ற எரிபொருள்களாகப் பயன்படுத்துகிறது. நெகிழி வேட்டைத்துப்பாக்கி மூலம் 80 வெளியேற்றங்கள் வரை உப்பை தெளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வேட்டைத் துப்பாக்கியிலிருந்து வெடிக்கும் முறையைப் போலவே ஒரு கூம்பு பரப்பு வடிவத்தை உருவாக்குகிறது. கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவன உயிரியலாளர் மைக்கேல் டிக்கின்சன் கூறுகையில், ஈக்கள் சிறிய உப்புத் துகள்களின் தாக்குதலைத் தாங்க முடியாது. ஆனால் கணுக்காலிகளின் புறவன் கூடு இத்தாக்குதலிலிருந்து இவற்றைப் பாதுகாக்கும். இருப்பினும் இவை அதிர்ச்சியடைகின்றன. வரலாறு பக்-ஏ-சால்ட் லோரென்சோ மாகியோர் என்பவரால் உருவாக்கப்பட்டு 2012இல் காப்புரிமை பெறப்பட்டது. குழப்பத்தை உருவாக்காமல், தூரத்தில் உள்ள வீட்டு ஈக்களைக் கொல்லும் கருவியை மாகியோர் கண்டுபிடித்தார். இசுகெல் இன்க் நிறுவனம் தனது பக்-ஏ-சால்ட் தயாரிப்பை 2012ஆம் ஆண்டில் இண்டிகாகோ இயங்குதளத்தில் அறிமுகப்படுத்தியது. செப்டம்பர் 11,2012 அன்று இசுகெல்லின் பொது நிதியுதவி பிரச்சாரத்தின் முடிவில், பக்-ஏ-உப்பு துப்பாக்கியின் 21,400க்கும் மேற்பட்ட அலகுகளை விற்றது. மேலும் காண்க பறக்கும்-கொல்லும் கருவி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் நிறுவனத்தின் இணையதளம் இந்த சுய தயாரிக்கப்பட்ட மில்லியனர் ஈக்கள் மீது உப்பை சுடும் ஒரு 'துப்பாக்கியை' கண்டுபிடித்தார் ஹஃபிங்டன் போஸ்ட்-பக்-ஏ-சால்ட் வெளியீட்டு கட்டுரை பூச்சிக் கட்டுப்பாடு
683028
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%20%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
பொட்டாசியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு
பொட்டாசியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு (Potassium hexafluoroarsenate) என்பது KAsF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தயாரிப்பு ஆர்சனிக்கு பெண்டாபுளோரைடுடன் பொட்டாசியம் புளோரைடைச் சேர்த்து நேரடியாக வினைபுரியச் செய்தால் பொட்டாசியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு உருவாகும். AsF5 + KF → KAsF6 பொட்டாசியம் பெர்புரோமேட்டு முன்னிலையில் ஆர்சனிக்கு பெண்டாபுளோரைடுடன் ஐதரோபுளோரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் பொட்டாசியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு உருவாகிறது: KBrO4 + 3HF + 2AsF5 + KF -> KAsF6 + AsF6[H3O] ஐதரோபுளோரிக் அமிலத்தின் முன்னிலையில் ஆர்சனிக்கு பெண்டாபுளோரைடுடன் பொட்டாசியம் குளோரைடு வினைபுரிந்தாலும் பொட்டாசியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு உருவாகிறது: AsCl5 + KCl + 6HF -> KAsF6 + 6HCl இயற்பியல் பண்புகள் பொட்டாசியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு வெள்ளை நிறத்தில் தூளாகக் காணப்படும். சாதாரண நிலைமைகளின் கீழ் இச்சேர்மம் நிலைப்புத்தன்மை கொண்டிருக்கும். உருகுநிலை சுமார் 400 ° செல்சியசு ஆகும். எளிதில் தீப்பற்றி எரியாது. வலுவான ஆக்சிசனேற்ற முகவர்களுடன் பொருந்தாது. பாதுகாப்பு பொட்டாசியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு விழுங்கும்போது அல்லது உள்ளிழுக்கும்போது நச்சுத்தன்மை வாய்ந்தது மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது. இது ஒரு புற்றுநோய் ஊக்கியாக கருதப்படுகிறது. ஐதரசன் புளோரைடு, பொட்டாசியம் ஆக்சைடு மற்றும் ஆர்சனிக் ஆக்சைடுகள் ஆகியவை தீயின் போது ஏற்படும் அபாயங்களாகும். மேற்கோள்கள் புளோரோ அணைவுச் சேர்மங்கள் பொட்டாசியம் சேர்மங்கள் புளோரோ மெட்டலேட்டுகள் ஆர்சினைடுகள்
683035
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
பொட்டாசியம் அறுபுளோரோயிரேனேட்டு
பொட்டாசியம் அறுபுளோரோயிரேனேட்டு (Potassium hexafluororhenate) என்பது K2ReF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தயாரிப்பு பொட்டாசியம் ஆறயோடோயிரேனேட்டுடன் (K2ReI6) பொட்டாசியம் புளோரைடும் ஐதரசன் அயோடைடும் சேர்ந்த கலவையைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பொட்டாசியம் அறுபுளோரோயிரேனேட்டு உருவாகும். K2ReI6 அல்லது K2ReCl6 உடன் KHF2 சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் பொட்டாசியம் அறுபுளோரோயிரேனேட்டு உருவாகும். இயற்பியல் பண்புகள் P3m1 என்ற இடக்குழுவில் வகை படிகங்களாக முக்கோணவமைப்பில் பொட்டாசியம் அறுபுளோரோயிரேனேட்டு வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் படிகமாகிறது. மேற்கோள்கள் பொட்டாசியம் சேர்மங்கள் புளோரோ அணைவுச் சேர்மங்கள் புளோரோ மெட்டலேட்டுகள் இரேனியம் சேர்மங்கள்
683036
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
சென்னானூர்
சென்னானூர் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தின் கெங்கபிரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும். அமைவிடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 366.53 மீ. உயரத்தில், () என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இக்கிராமம் ஊத்தங்கரை வட்டத்தில் அமைந்துள்ளது. தொல்லியல் முக்கியத்துவம் தமிழ்நாட்டின் கற்கால பண்பாட்டுச் சுவடுகளால், சிறப்பான தொல்லியல் களமாக சென்னானூர் திகழ்கிறது. சென்னானூர் பகுதியில் நடத்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம் இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சங்க காலத்திய பொருட்களாகக் கூறப்படும் சங்கு வளையல் துண்டுகள், கண்ணாடி வளையல் துண்டுகள், சுடுமண் முத்திரை, தக்களி, வட்டச் சில்லுகள், சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வெட்டுக் கருவி, இடைக்கால வரலாற்றைச் சார்ந்தாகக் கருதப்படும் இரும்பினால் தயாரிக்கப்பட்ட ஏர்க்கலப்பையினுடைய கொழுமுனை மற்றும் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், மூடியுடன் கூடிய பானை, தொட்டி, பாசிமணிகள், உறை கிணறு, சுடுமண் கிண்ணங்கள், வெள்ளியினாலான முத்திரைக் காசு, செம்பினாலான அஞ்சனக் கோல், சிவப்பு வண்ணக் கொள்கலன், தந்தத்தாலான பகடைக்காய், பாறை ஓவியங்கள், கற்காலக் கோடரி மற்றும் சுடுமண் சிற்பம் ஆகியவை இவ்வூரின் தொல்லியல் துறையின் அகழாய்வுகளின் போது கிடைக்கப்பெற்ற பொருட்களில் முக்கியமானவையாகும். மேற்கோள்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
683040
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம்
கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Kelana Jaya LRT Station; மலாய்: Stesen LRT Kelana Jaya; சீனம்: 格拉那再也站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த நிலையம் பயணிகள் சேவைகளுக்கான முன்னாள் மேற்கு முனையமாக இருந்தது. பின்னர் 1995-ஆம் ஆண்டு, கிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டத்தின் தொடக்க நிலையமாக அமைந்தது. அமைவு கிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டம், கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரை நீடித்தது. கிளானா ஜெயா மாநகர்ப் பகுதியில் இந்த நிலையம் அமைந்து இருந்ததால், மாநகரின் பெயரும் இதற்குச் சூட்டப்பட்டது. இந்த நிலையம், 1108 மற்றும் 1109 சாலைச் சந்திப்புகளுக்கு இடையில்; டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையில், 1995 மற்றும் 1998-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது. பாதசாரிகள் டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையைக் கடக்க ஒரு மேம்பாலமும் கட்டப்பட்டு உள்ளது. பெட்டாலிங் ஜெயா உத்தாரா பெட்டாலிங் ஜெயா SS2, கிளானா ஜெயாவின் SS4; SS5; தாமான் மாயாங் SS25 ஆகியவற்றின் சுற்றுப்புறங்கள் இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன. ஒரு பெரிய அதிவேக விரைவுச்சாலைக்கு அருகில் இந்த நிலையம் இருப்பதால், பெட்டாலிங் ஜெயா உத்தாரா (PJ Utara - PJU) எனும் வடக்கு பெட்டாலிங் ஜெயா, திராப்பிகானா, சுபாங் ஜெயா, சன்வே மற்றும் புத்ராஜெயா ஆகிய பகுதிகளுக்குப் பயணிகளைக் கொண்டு செல்லும் பேருந்து இணைப்புகளால் இந்த நிலையம் நன்கு சேவை செய்யப்படுகிறது. இந்த நிலையம், உள்ளூர் வாடகை வாகனங்களின் நிறுத்த மையமாகவும் செயல்படுகிறது. கிளானா ஜெயா பேருந்து நிறுத்தம் கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம், பெட்டாலிங் ஜெயாவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும்; கோலாலம்பூருக்கான விரைவுப் பேருந்து மையமாகவும் உள்ளது. இந்த நோக்கத்திற்காக, வடக்கு நோக்கி செல்லும் பேருந்துகளுக்காக கோலாலம்பூர் கிள்ளான் விரைவுச்சாலைக்கு எதிரே ஒரு பெரிய பேருந்து நிறுத்தமும் கட்டப்பட்டு உள்ளது. இந்தப் பேருந்து நிறுத்தம் ஒரு பாதசாரி மேம்பாலம் மூலமாக நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் நிலையத்திலிருந்து தெற்குப் பாதையில் புறப்படுகின்றன. ஆனால் பல பேருந்துகள் தங்கள் பயணிகளை பேருந்து நிறுத்தத்திலயே இறக்கிவிடுகின்றன. ஏனெனில் இந்தச் செயல்பாடு, பேருந்து முனையத்தில் நெரிசலைத் தவிர்க்கிறது. அத்துடன் இந்த நிலையம் பண்டார் உத்தாமா எம்ஆர்டி நிலையத்திற்கும் பேருந்துச் சேவைகளை வழங்குகிறது. கிளானா ஜெயா வழித்தட வரைபடம் நிலைய தள அமைப்பு கிளானா ஜெயா வழித்தடம் கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும். மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பில் (Klang Valley Integrated Transit System) இந்த வழித்தடம் ஒரு பகுதியாகும். இந்த வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. அமைப்பு தொடருந்துகள் பயணிக்கும் தடத்தில் உள்ள பெரிய கூரைகள் பாரம்பரிய மலாய்ப் பண்பாட்டுக் கட்டிடக்கலை வடிவமைப்பைக் கொண்டது. கிளானா ஜெயாயா எல்ஆர்டி நிலையம், கிளானா ஜெயா வழித்தடத்தின் உயர்த்தப்பட்ட சில நிலையங்களைப் போலவே, இரண்டு அடுக்கு நிலைகளைக் கொண்ட ஒரு நிலையமாகும்: தெரு மட்டத்தில் ஒரு நுழைவு நிலை; உயர்த்தப்பட்ட ஒரு நிலை; என மூன்று நிலைகள் உள்ளன. இந்த நிலையத்தின் அனைத்து அடுக்கு நிலைகளும், மின்படிக்கட்டுகள் மற்றும் படிக்கட்டுகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தொடருந்து நின்று செல்லும் இடத்திற்கும், பாதசாரிகள் நடைபாதைகளுக்கும் இடையில் சுமைதூக்கிச் சேவையும்; மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளும் வழங்கப்படுகின்றன. பேருந்து சேவைகள் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ரேபிட் கேஎல் பேருந்து நிறுத்தங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையத்தில் பேருந்து நிறுத்தமும் உள்ளது. காட்சியகம் மேலும் காண்க மலேசிய தொடருந்து போக்குவரத்து கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல் பெட்டாலிங் ஜெயா நகரப் பிரிவுகளின் பட்டியல் கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Kelana Jaya LRT Station மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
683041
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%20%28%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%29
சிறப்பு நடவடிக்கைகள் குழு (ஒடிசா)
சிறப்பு நடவடிக்கைகள் குழு (Special Operation Group)}} (SOG) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நக்சலைட்டு-மாவோயிஸ்ட் கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்காக இப்படை 21 ஆகஸ்டு 2004 அன்று நிறுவப்பட்டது. ஒடிசா காவல்துறையில் சிறப்பாக செயல்படும் 3,000 இளம் காவலர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட இப்படை ஒரு அதிரடிப்படையாகச் செயல்படுகிறது. இப்படை காடுகளில் கரந்தடிப் போர் முறையில் செயலாற்றுவதில் வல்லவர்கள்.இதன் தலைமையிடம் கட்டாக் நகரத்தில் உள்ளது. இதன் பயிற்சி மையம் புவனேசுவரம் நகரத்தில் உள்ளது. மேற்கோள்கள் பயங்கரவாத எதிர்ப்புப் படைகள் ஒடிசா இராணுவம் அல்லாத பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகள்
683042
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%20%28%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%29
பயங்கரவாத எதிர்ப்புப் படை (கேரளம்)
பயங்கரவாத எதிர்ப்பு படைகள் (Kerala Thunderbolts), இந்தியாவின் கேரளா மாநிலத்தில் செயல்படும் பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகும். இது தேசிய பாதுகாப்புப் படை மற்றும் சிறப்பு பாதுகாப்புப் படை போன்று அதிரடிப்படையாகச் செயல்படுகிறது. இப்படை 1200 அதிரடி வீரர்கள் கொண்டது. இரண்டு ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. நடவடிக்கைகள் பிப்ரவரி 2013ல் மலப்புரம் மாவட்டத்தின், நிலம்பூர் காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகளின் கிளர்ச்சியை இப்படை ஒடுக்கியது.மார்ச் 2013ல் கண்ணூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் கிளர்ச்சியை இப்படை ஒடுக்கியது. 6 டிசம்பர் 2014 அன்று வயநாடு மாவட்டத்தின் காடுகளில் இப்படைகளுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நேரடி துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் https://www.youtube.com/watch?v=q9g5TIgSwLc – in Malayalam பயங்கரவாத எதிர்ப்புப் படைகள் கேரளம் இராணுவம் அல்லாத பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகள்
683044
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
கணிகர்
கணிகர், மகாபாரதத்தில் பார்வையற்ற மன்னனான திருதராஷ்டிரனின் அரச நீதியை கற்றறிந்த புத்திசாலி மற்றும் தந்திரமான அமைச்சர் ஆவார். இவரது அரச நீதியை கணிகர் நீதி என்பர். பின்னணி மகாபாரதத்தின் ஆதி பர்வத்தின், சம்பவ பர்வத்தில் கூறப்பட்டுள்ளவாறு, பாண்டவர்களுக்கு இந்திரப்பிரஸ்தம் பகுதியை குரு நாட்டிலிருந்து பிரித்துக் கொடுத்த பின், பாண்டவர்கள் செல்வச் செழிப்புடனும், அதிகாரத்துடனும் வாழ்வதை காணச் சகியாத திருதராட்டிரன் அமைச்சர் கணிகரை அழைத்து பாண்டவர்கள் மீது போர் தொடுக்கலாமா என ஆலோசனை கேட்டார். அதற்கு அமைச்சர் கணிகர் கூறிய எதிரிகளை அழிக்கும் நீதி வருமாறு: எதிரிகளை மன்னர்கள் தாக்குவதற்கு எப்போதும் தயாராக இருத்தல் வேண்டும் மற்றும் தங்களது ஆற்றலை வளர்த்துக் கொண்டே இருத்தல் வேன்டும். தங்கள் குற்றங்கள் அனைத்தையும் கவனமாக மறைத்துக் கொண்டே, எதிரிகளின் குற்றங்களை இடையறாமல் கவனித்தல் வேண்டும். தனது எந்தப் பலவீனத்தையும் எதிரி அறிந்து கொள்ளாத வகையில் அவன் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், தான் தனது எதிரியிடம் கண்டுபிடிக்கும் பலவீனத்தைக் கொண்டு, அவனைத் தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். மன்னன் எப்போதும், ஓர் ஆமை தனது உடலை மறைத்துக் கொள்வது போல, தனது செயல்களையும், அதன் முடிவுகளையும், தனது சொந்த பலவீனத்தையும் மற்றவர்கள் பார்வையிலிருந்து மறைத்து வைக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட செயலைத் தொடங்கி விட்டால், அதை மன்னன் முழுமையாக முடிக்க வேண்டும். ஒரு முள்ளை உடலிலிருந்து முழுமையாக எடுக்காவிட்டால், அது வளர்ந்து சீழ் பிடித்து, புண் உற்பத்தி செய்யும். அது போன்று தீங்கு செய்யும் எதிரியைக் கொல்வது எப்போதும் பாராட்டுக்குரியதே. எதிரி பெரும் பலவானாக இருந்தால், அவனது கெட்ட எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். பிறகு, எந்த மன உறுத்தலும் இல்லாமல் அவனைக் கொல்ல வேண்டும். எவ்வளவு வெறுப்பூட்டும் வகையில் எதிரி இருந்தாலும், அவனை வசைபாடக் கூடாது. பயந்தவனை மிரட்ட வேண்டும்,. வலியவன் முன் பணிந்து, பேராசை கொண்டவர்களுக்கு லஞ்சம் கொடுங்கள். எதிரி உன் மகனாக இருந்தாலும், நண்பனாக இருந்தாலும், சகோதரனாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும், ஆசானாக இருந்தாலும் அவனைக் கொல்லுங்கள். இதுவே வெற்றிக்கான அரச பாதை. எதிரி பலவீனமாக இருந்தாலும் புறக்கணிக்காதீர்கள். நெருப்பின் தீப்பொறி கூட காற்றின் உதவியுடன் காட்டை எரித்துவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் வெளி இணைப்புகள் Story of Kaṇika மேற்கோள்கள் மகாபாரதக் கதை மாந்தர்கள்
683046
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
சக்ரி சட்டமன்றத் தொகுதி
சக்ரி சட்டமன்றத் தொகுதி (Sakri Assembly constituency‌‌‌‌‌‌‌‌‌) என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். சக்ரா தொகுதி துளே மாவட்டத்தில் அமைந்துள்ளது, நந்துர்பார் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். மேலும் இது பழங்குடியினத்தைச் ‌சேர்ந்த ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவை உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2009 2014 2019 தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவ சேனாவுக்கு தனது ஆதரவை அறிவித்தார். மேற்கோள்கள் துளே மாவட்டம் மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
683053
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
லெம்பா சுபாங் எல்ஆர்டி நிலையம்
லெம்பா சுபாங் எல்ஆர்டி நிலையம் அல்லது லெம்பா சுபாங் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Lembah Subang LRT Station; மலாய்: Stesen LRT Lembah Subang; சீனம்: 梳邦谷) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த நிலையம் லெம்பா சுபாங் பராமரிப்பு கிடங்கிற்கு (Lembah Subang Depot) அருகில் அமைந்துள்ளது. அமைவு கிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டம், கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரை நீடித்தது. லெம்பா சுபாங் பகுதியில் இந்த நிலையம் அமைந்து இருந்ததால், சுபாங் எனும் பெயரும் இந்த நிலையத்திற்குச் சூட்டப்பட்டது. காத்திருக்கும் நேரம் PJU 1A/46 சாலை; PJU 1A சாலை, ஆரா டாமன்சாரா ஆகியவற்றின் சுற்றுப்புறங்கள் இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன. 2019-ஆம் ஆண்டில், ஆரா டாமன்சாரா எல்ஆர்டி நிலையம் மற்றும் கோம்பாக் எல்ஆர்டி நிலையம் ஆகிய நிலையங்களுக்கு இடையே உச்ச நேர தொடருந்துப் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டது. அதிகரித்து வரும் பயணிகளின் தேவைகளை நிறைவு செய்வதற்காக, காத்திருக்கும் நேரம் 3 நிமிடங்களில் இருந்து 1.5 நிமிடங்களுக்கு தற்காலிகமாகக் குறைக்கப்பட்டது. லெம்பா சுபாங் பராமரிப்புக் கிடங்கு லெம்பா சுபாங் நிலையம், லெம்பா சுபாங் பராமரிப்புக் கிடங்கிற்கு அருகில் உள்ளது. இந்தப் பராமரிப்புக் கிடங்கு கிளானா ஜெயா வழித்தடத்திற்குச் சேவை செய்யும் ஒரே நிலையக் கிடங்கு ஆகும். லெம்பா சுபாங் என்பது சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கோலாலம்பூர் மாநகருக்கு மேற்கே 17 கி.மீ. தொலைவில் அமைந்து இருக்கும் இந்த நகரம், சா ஆலாம், சுபாங் ஜெயா பெருநகரங்களுக்கு இடையிலும் அமைந்துள்ளது. சுபாங் வானூர்தி நிலையம் லெம்பா சுபாங் நகரம் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள கம்போங் பாரு சுபாங் சிற்றூரையும்; சௌஜானா குழிப்பந்து மன்றத்தையும் (Saujana Golf Country Club) அடக்கி உள்ளது. சுபாங் ஜெயா, கிளானா ஜெயா (Kelana Jaya), சுங்கை பூலோ, குவாசா டமன்சாரா (Kwasa Damansara), கோத்தா டாமன்சாரா (Kota Damansara), ஆரா டாமன்சாரா (Ara Damansara), முத்தியாரா டாமன்சாரா போன்ற நகரங்களும்; பெட்டாலிங் ஜெயா பெரு நகர்ப் பகுதிகளும், இந்தச் சுபாங் நகரத்திற்கு மிக அருகில் உள்ளன. இங்குதான் கோலாலம்பூரின் முன்னாள் பன்னாட்டு வானூர்தி நிலையமான சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம் (Subang International Airport) அமைந்துள்ளது. இந்த வானூர்தி நிலையம், சுபாங் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Subang Airport) என்றும் அழைக்கப்படுகிறது. கிளானா ஜெயா வழித்தடம் கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு தொடருந்து வழித்தடம் (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும். மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பில் (Klang Valley Integrated Transit System) இந்த வழித்தடம் ஒரு பகுதியாகும். இந்த வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. பேருந்து சேவைகள் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ரேபிட் கேஎல் பேருந்து நிறுத்தங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையத்தில் பேருந்து நிறுத்தமும் உள்ளது. காட்சியகம் மேலும் காண்க மலேசிய தொடருந்து போக்குவரத்து கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல் பெட்டாலிங் ஜெயா நகரப் பிரிவுகளின் பட்டியல் கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Lembah Subang LRT station மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
683054
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%28%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%29
சாம்பல் வேட்டைநாய்கள் (சிறப்புக் காவல்படை)
சாம்பல் வேட்டைநாய்கள் (Greyhounds), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சிகளை முறியடிக்க 1989ஆம் ஆண்டில் காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குநாரின் தலைமையில் நிறுவப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகும்.2020ல் இப்படையில் 2000 சிறப்பு பயிற்சி பெற்ற காவலர்களும் மற்றும் காவல் அதிகாரிகளும் இருந்தனர். ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளைக் கொண்டு . 2 சூன் 2014 அன்று நிறுவப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கும் இப்படைகள் செயலாற்றுகிறது. சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்கள் உள்ளதால், ஆந்திரத்தில் இப்படையின் தலைமையகம் விசாகப்பட்டினத்திலும், தெலங்கானாவில் இப்படைகளின் தலைமையகம் ஐதராபாத்திலும் செயல்படுகிறது. இப்படையினருக்கு காட்டுப் போர் முறை பயிற்சிகள், நவீன துப்பாக்கிகள் மற்றும் கவச தளவாடங்கள் மற்றும் வாகனங்கள் தரப்படுகிறது. 1995 மற்றும் 2016 காலகட்டத்தில் இப்படையினர் 1780க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகளை வேட்டையாடிக் கொன்றுள்ளனர். சிறப்புப் படையினர் தரப்பில் 163 காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.. விருதுகள் சனவரி 2024ல் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 16 மாநிலங்களின் பயங்கரவாத எதிர்ப்புப் படைகளுக்கு இடையே நடைபெற்ற அகில இந்திய போட்டிகளில், ஆந்திரப் பிரதேசத்தின் சாம்பல் வேட்டைநாய் படையினர் வென்று முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டனர். இதனையும் காண்க சிறப்பு நடவடிக்கைகள் குழு (ஒடிசா) சிறப்பு நடவடிக்கைகள் குழு (ஜம்மு காஷ்மீர்) பஞ்சாப் காவல்துறையின் சுவாத் பிரிவு பயங்கரவாத எதிர்ப்புப் படை (கேரளம்) பயங்கரவாத எதிர்ப்புப் படை (மேற்கு வங்காளம்) போர்ஸ் ஒன் (மகாராட்டிரம்) சிவப்பு தாழ்வாரம் நக்சலைட்டு-மவோயிஸ்ட் கிளர்ச்சி மேற்கோள்கள் பயங்கரவாத எதிர்ப்புப் படைகள் இராணுவம் அல்லாத பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகள் ஆந்திரப் பிரதேசம் தெலங்காணா
683059
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%20%28%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%29
பயங்கரவாத எதிர்ப்புப் படை (தமிழ்நாடு)
பயங்கரவாத எதிர்ப்புப் படை, தமிழ்நாட்டில் நவம்பர் 2023ல் பயங்கரவாத எதிர்ப்புப் படை நிறுவ அரசாணை வெளியிடப்பட்டது. 383 பேர் கொண்ட இப்படையானது கூடுதல் காவல்துறை இயக்குநர் (உளவுத்துறை) மேற்பார்வையில் செயல்படும். காவல்துறைத் துணைத்தலைவர் (DIG) தலைமையில் செயல்படும் இப்படையில் 5 காவல் கண்காணிப்பாளர்கள், 5 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 13 துணை கண்காணிப்பாளர்கள், 31 காவல் ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள் மற்றும் உளவுப்பிரிவு காவலர்கள் மற்றும் அதிரடிப்படை காவலர்கள் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் செயல்படும் இப்படைபிரிவினரின் பணிகளுக்கு 89 புதிய வாகனங்கள் வழங்கப்படும். பயிற்சிகள் இப்படையினருக்கு காட்டுப் பகுதிகளில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும், நவீன துப்பாக்கிகள் மற்றும் தளவாடங்கள் கையாள்வதற்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. சலுகைகள் இப்படைப்பிரிவில் பணியாற்றுபவர்களின் அடிப்படை ஊதியத்தில் 10% அல்லது ரூபாய் 20,000 இவற்றுள் எது குறைவோ அத்தொகை சிறப்பு ஊதியமாக வழங்கப்படும். சிறப்பு ஊதியத்திற்கும் சேர்த்து அகவிலைப்படி கணக்கிடப்படும். அவசரப் பணிக்கு வானூர்தி பயணம் அனுமதிக்கப்படும். இதனையும் காண்க பயங்கரவாதம் சாம்பல் வேட்டைநாய்கள் (சிறப்புக் காவல்படை) சிறப்பு நடவடிக்கைகள் குழு (ஒடிசா) சிறப்பு நடவடிக்கைகள் குழு (ஜம்மு காஷ்மீர்) பஞ்சாப் காவல்துறையின் சுவாத் பிரிவு பயங்கரவாத எதிர்ப்புப் படை (கேரளம்) பயங்கரவாத எதிர்ப்புப் படை (மேற்கு வங்காளம்) போர்ஸ் ஒன் (மகாராட்டிரம்) மேற்கோள்கள் இராணுவம் அல்லாத பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகள் பயங்கரவாத எதிர்ப்புப் படைகள்
683061
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
ஆரா டாமன்சாரா எல்ஆர்டி நிலையம்
ஆரா டாமன்சாரா எல்ஆர்டி நிலையம் அல்லது ஆரா டாமன்சாரா இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Ara Damansara LRT Station; மலாய்: Stesen LRT Ara Damansara; சீனம்: 阿拉白沙罗) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த நிலையம் லெம்பா சுபாங் பராமரிப்பு கிடங்கிற்கு (Lembah Subang Depot) அருகில் அமைந்துள்ளது. அமைவு கிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டம், கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரை நீடித்தது. ஆரா டாமன்சாரா பகுதியில் இந்த நிலையம் அமைந்து இருந்ததால், ஆரா டாமன்சாரா எனும் பெயரும் இந்த நிலையத்திற்குச் சூட்டப்பட்டது. காத்திருக்கும் நேரம் PJU 1A/46 சாலை; PJU 1A சாலை, ஆரா டாமன்சாரா ஆகியவற்றின் சுற்றுப்புறங்கள் இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன. 2019-ஆம் ஆண்டில், ஆரா டாமன்சாரா எல்ஆர்டி நிலையம் மற்றும் கோம்பாக் எல்ஆர்டி நிலையம் ஆகிய நிலையங்களுக்கு இடையே உச்ச நேர தொடருந்துப் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டது. அதிகரித்து வரும் பயணிகளின் தேவைகளை நிறைவு செய்வதற்காக, காத்திருக்கும் நேரம் 3 நிமிடங்களில் இருந்து 1.5 நிமிடங்களுக்கு தற்காலிகமாகக் குறைக்கப்பட்டது. ஆரா டாமன்சாரா ஆரா டாமன்சாரா (Ara Damansara); என்பது சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள குடியிருப்பு புறநகர்ப் பகுதியாகும். இந்தப் புறநகர்ப் பகுதி சுபாங் வானூர்தி நிலையச் சாலையின் (Jalan Lapangan Terbang Sultan Abdul Aziz) வழியில் அமைந்துள்ளது. துரோபிக்கானா (Tropicana) மற்றும் பண்டார் உத்தாமா டாமன்சாரா (Bandar Utama Damansara) புறநகர்ப் பகுதிகளுக்கு அடுத்தப் புறநகர்ப் பகுதியாக உள்ளது. தாமான் துன் டாக்டர் இசுமாயில் பெட்டாலிங் ஜெயா மாநகரத்தில் 739 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் புறநகர்ப் பகுதி; சுபாங் வானூர்தி நிலைய நெடுஞ்சாலையில்; புஞ்சாக் ஆலாம் நெடுஞ்சாலைக்கு (Puncak Alam Highway) கிழக்கிலும்; கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலையின் (New Klang Valley Expressway - NKVE) வடக்கு மேற்கிலும் அமைந்துள்ளது. இந்தப் புறநகர்ப் பகுதியின் வடக்கே கோத்தா டாமன்சாரா (Kota Damansara), கிழக்கே தாமான் துன் டாக்டர் இசுமாயில் (Taman Tun Dr Ismail), தெற்கே சுபாங் ஜெயா (Subang Jaya) மற்றும் மேற்கில் காயாங்கான் அயிட்ஸ் (Kayangan Height) நகர்ப் பகுதிகள் உள்ளன. சுபாங் வானூர்தி நிலையம் லெம்பா சுபாங் நகரம் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள கம்போங் பாரு சுபாங் சிற்றூரையும்; சௌஜானா குழிப்பந்து மன்றத்தையும் (Saujana Golf Country Club) அடக்கி உள்ளது. சுபாங் ஜெயா, கிளானா ஜெயா (Kelana Jaya), சுங்கை பூலோ, குவாசா டமன்சாரா (Kwasa Damansara), கோத்தா டாமன்சாரா (Kota Damansara), ஆரா டாமன்சாரா (Ara Damansara), முத்தியாரா டாமன்சாரா போன்ற நகரங்களும்; பெட்டாலிங் ஜெயா பெரு நகர்ப் பகுதிகளும், இந்தச் சுபாங் நகரத்திற்கு மிக அருகில் உள்ளன. இங்குதான் கோலாலம்பூரின் முன்னாள் பன்னாட்டு வானூர்தி நிலையமான சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம் (Subang International Airport) அமைந்துள்ளது. இந்த வானூர்தி நிலையம், சுபாங் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Subang Airport) என்றும் அழைக்கப்படுகிறது. ஆசிய நெடுஞ்சாலை ஆரா டாமன்சாரா நகர்ப்புறம் கூட்டரசு சாலை ; கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை   எனும் ஆசிய நெடுஞ்சாலை மூலமாகச் சேவை செய்யப்படுகிறது. ஆரா டாமன்சாரா இரண்டு எல்ஆர்டி (LRT) நிலையங்களைக் கொண்டுள்ளது. லெம்பா சுபாங் எல்ஆர்டி நிலையம் (Lembah Subang LRT Station) ஆரா டாமன்சாரா எல்ஆர்டி நிலையம் (Ara Damansara LRT Station) 2016 சூன் மாதம் கிளானா ஜெயா வழித்தடம் (LRT Kelana Jaya Line) கட்டி முடிக்கப்பட்டது. காட்சியகம் மேலும் காண்க மலேசிய தொடருந்து போக்குவரத்து கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல் பெட்டாலிங் ஜெயா நகரப் பிரிவுகளின் பட்டியல் கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Ara Damansara LRT station மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
683065
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
பொட்டாசியம் நான்கையோடோபிளாட்டினேட்டு
பொட்டாசியம் நான்கையோடோபிளாட்டினேட்டு (Potassium tetraiodoplatinate) என்பது K2PtI4·(H2O)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நான்கையோடோபிளாட்டினேட்டின் பிளாட்டினம் உப்பாகக் கருதப்படும் இச்சேர்மம் பிளாட்டினம்(II) இன் சதுரத்தள ஒருங்கிணைவுச் சேர்மமாகவும் கருதப்படுகிறது. தண்ணீரிலிருந்து ஓர் இருநீரேற்றாக இச்சேர்மம் படிகமாகிறது. ஆனால் இதனுடன் தொடர்புடைய குளோரைடும் (K2PtCl4) புரோமைடும் (K2PtBr4) நீரிலி உப்புகளாகவே படிகமாகின்றன. பொட்டாசியம் நான்கையோடோபிளாட்டினேட்டு அமீன்கள் மற்றும் அமோனியாவுடன் வினைபுரிந்து நடுவுநிலைமை வழிப்பெறுதியான PtI2(RNH2)2 சேர்மத்தைக் கொடுக்கிறது. பொட்டாசியம் அயோடைடும் பொட்டாசியம் டெட்ராகுளோரோபிளாட்டினேட்டும் இடப்பெயர்ச்சி வினையில் ஈடுபடுவதால் பொட்டாசியம் நான்கையோடோபிளாட்டினேட்டு உருவாகிறது: K2PtCl4 + 4 KI → K2PtI4 + 4 KCl சிசுபிளாட்டின் என்ற புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை தயாரிப்பதற்கு உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாக இது பயன்படுகிறது. மேற்கோள்கள் பொட்டாசியம் சேர்மங்கள் அயோடோ அணைவுச் சேர்மங்கள் பிளாட்டினம்(II) சேர்மங்கள்
683075
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
புதுநகரம் தொடருந்து நிலையம்
புதுநகரம் தொடருந்து நிலையம் (Pudunagaram railway station, நிலையக் குறியீடு: PDGM) என்பது இந்திய இரயில்வேயின், தென்னக தொடருந்து மண்டலத்தின், பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் உள்ள NSG-6 வகை இந்திய தொடருந்து நிலையம் ஆகும். இந்த தொடருந்து நிலையம் பாலக்காடு-பொள்ளாச்சி வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது இந்திய மாநிலமான கேரளத்தில் பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி இடையான ஒரு கிளைப்பாதையாகும். வரலாறு பாலக்காடு சந்திப்பு மற்றும் பாலக்காடு நகரத்திற்கு இடையே இந்த பாதை முழுமையாக இயங்கி வந்தது. இந்நிலையில் பாலக்காடு நகரம் மற்றும் பொள்ளாச்சி இடையேயான பாதையானது மீட்டர்கேஜ் பாதையிலிருந்து அகலப் பாதையாக 2015 ஆம் ஆண்டு மாற்றபட்டது. 2 அக்டோபர் 2015 அன்று பாதுகாப்பு சோதனைகள் நிறைவு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஆய்வுகள் 7 அக்டோபர் 2015 அன்று நிறைவடைந்தன. 8 அக்டோபர் 2015 அன்று ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் பயணிகள் தொடருந்து சேவைகளுக்காக இந்த பாதை அங்கீகரிக்கப்பட்டது. தற்போது இங்கு இரண்டு தொடருந்துகள் நிறுத்தப்பட்டுகின்றன. அவை எர்ணாகுளம்-ராமேஸ்வரம் சிறப்பு கட்டண விரைவு வண்டி மற்றும் திருச்செந்தூர்-பாலக்காடு பயணிகள் வண்டி. மேற்கோள்கள் பாலக்காடு தொடருந்து கோட்டம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்
683076
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
கறையான் கவசம்
கறையான் கவசம் (Termite shield) என்பது மண்ணிலுள்ள கறையான்கள் தரை விட்டங்கள் உள்ளிட்ட மரத்தினால் செய்யப்பட்ட பொருட்கள் பாதிக்காமல் இருக்கக் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் ஓர் உலோகத் தடுப்பாகும். இப்போது பல வகையான இரசாயனமற்ற கறையான் தடுப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொருள்கள் கறையான் கவசங்கள் பல்வேறு பொருட்களால் உருவாக்கப்படலாம். துத்தநாகம் பூசிய இரும்பு, ஈய வெள்ளீயக் கலப்புலோகம், செம்பு அல்லது அலுமினியம் உள்ளிட்ட பல்வேறு உலோகங்களைப் பயன்படுத்தி கறையான் கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. அடித்தளச் சுவரின் மேற்பகுதிக்கும் மரத்தின் சந்து தகட்டின் அடிப்பகுதிக்கும் இடையில் பொருந்தும் வகையில் இந்த உலோகத் தாள் பயன்படுத்தப்படுகிறது. கறையான் கவசத்தின் விளிம்புகள் பொதுவாக வளைக்கப்பட்டு, சுவரின் முகத்திற்குச் சற்று அப்பால் நீட்டிக்கப்பட்டு, கீழே திருப்பப்படுகின்றன. இது சுவரின் முகத்திலிருந்து கீழே ஓடும் தண்ணீரைத் திசைதிருப்புகிறது. மண்ணிலிருந்து நிலத்தடி கறையான்களின் இயக்கத்தைக் குறைக்கிறது. கறையான் கவசங்கள் ஒரு கட்டிடத்தை கறையான்களின் செயல்பாட்டிலிருந்து பாதுகாக்காது. ஆனால் கறையான்களின் செயல்களைக் காணக்கூடியதாக மாற்ற உதவும். சமீபத்தில், கருங்கல் மற்றும் பாலிவினைல் குளோரைடு செங்கலுக்கிடையில் இடப்பட்டு கறையான்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. இதில் கறையான்கள் முழுச் சுற்றளவையும் சுற்றியுள்ள கட்டிடத்திற்குள் நுழைய முடியும். கறையான்கள் மென்று அந்தப் பொருளை ஊடுருவுவதற்குக் கறையான்கள் கவசம் மிகவும் தடிமனாக இருப்பதால், கறையான்கள் எளிதில் அழிக்கக்கூடிய திறந்தவெளிக்கு இடம்பெயரக் கட்டாயப்படுத்துகின்றன. இந்த வகைப் பொருட்களைப் பயன்படுத்துவதன் நன்மைகள் என்னவென்றால், இவை சுற்றுச்சூழல் சங்கத்தின் பரிந்துரையின் கீழ் வழங்கப்படுகின்றன. இவை உலோகங்களை விட மலிவானது. மேலும் பிற கவசப் பாதுகாப்பு அமைப்புகளுடன் எளிதில் இணைத்துப் பயன்படுத்தலாம். பிரச்சனைகள் கறையான் கவசங்களில் உள்ள ஒரு சிக்கல் என்னவென்றால், உலோகக் கவசத்திற்குள் எஃகு வலுவூட்டும் கம்பிகள் ஊடுருவும் மடிப்புகள் மற்றும் திறப்புகளில் உள்ள இடைவெளிகள் ஆகும். பல வகையான நிலத்தடி கறையான்கள் இத்திறப்பு வழியாக நுழைய முடியும் என்பதால், இந்த இடைவெளிகளைக் கறையான்களைத் தடுக்கும் அடைப்பான் மூலம் மூட வேண்டும். கூடுதலாக, கவசத்தின் கீழ் கறையான்களைக் கட்டுப்படுத்த அடைப்பான்களைப் பயன்படுத்தப்பட வேண்டும். எனவே கறையான்கள் கட்டமைப்புகளின் வெளிப்புறத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதர பொருட்கள் பன்னாட்டுக் குறியீடு குழுமத்தினால் மதிப்பீடு செய்யப்பட்ட "கறையான் கவசங்கள்" என்பதை விட "கறையான்கள் தடைகள்" என்று அழைக்கப்படும் இரண்டு பொருட்கள் உள்ளன. ஒன்று ரசாயனம் அல்லாத கறையான்கள் தடுப்பு முத்திரை கொண்ட நீர்புகா சவ்வு, மற்றொன்று கம்பி வலை. மேற்கோள்கள் பூச்சிக் கட்டுப்பாடு
683078
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கறையான் தடுப்பு
கறையான் தடுப்பு (Termite barrier) என்பது நிலத்தடி கறையான் ஒரு கட்டமைப்பை அணுகுவதைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட பொருட்கள் ஆகும். இத்தகைய தடுப்பு பொருட்களில் கறையானைக் கொல்லப் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல் கறையான்களின் செயல்பாட்டைத் தடுக்கின்றன. நிலத்தடி கறையான்களை திறம்பட விலக்குவதற்கான இயற்த் தடைகளை உருவாக்குவது, கட்டிடத்தின் வாழ்நாளில் கறையான்கள் தாக்குதல் மற்றும் சேதம் ஏற்படுவதற்கான மிகக் குறைந்த சாத்தியக்கூறுகளுடன் கட்டமைப்புகளை வடிவமைத்து உருவாக்க உதவுகிறது. கறையான்களின் சிறிய அளவு (0.02 அங்குலங்கள்) மற்றும் இனப்பெருக்கத் திறன் (ஒரு கறையான் ராணி ஒவ்வொரு 3 விநாடிகளுக்கும் ஒரு முட்டையை உற்பத்தி செய்கிறது, அல்லது ஆண்டுக்கு 10 மில்லியனுக்கும் அதிகமான முட்டைகளை உற்பத்தி செய்கிறது) மற்றும் பல கட்டுமான பொருட்களைச் சாப்பிடும் திறன், கறையான்களை அனைத்துப் பூச்சிகளிலும் மிகவும் அழிவுகரமானவை கருதவைக்கின்றது. ஆரம்பக்கால இயற் தடையாக இருந்த கறையான் கவசங்கள், ஒளி சட்டகக் கட்டுமானத்தில் பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்படும் உலோகத் தாள் ஆகும். கறையான் கவசங்கள் பெரும்பாலும் மரத்தின் தட்டுகளின் கீழ் பயன்படுத்தப்படுகின்றன. கறையான்கள் கட்டமைப்பிற்கு வெளியே தங்கள் இருப்பிடத்தினை உருவாக்கக் கட்டாயப்படுத்தும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனைப் பயிற்சி பெற்ற பூச்சி மேலாண்மை நிபுணர் நன்கு அறிவார் (கறையான் கவசம் - பார்க்கவும்) சவ்வுகள் கறையான சவ்வு தடைகள் நீட்சித்தன்மைக் கொண்ட அடைப்பான்களைக் கொண்டுள்ளன. இவை அதிக வலிமை கொண்ட ஆதரவுடன் ஒட்டப்படுகின்றன. கட்டிட உறையில் சேர்க்கப்படும்போது, சவ்வு தடைகள் பல செயல்பாடுகளைச் செய்கின்றன. கறையான்கள் மற்றும் பூச்சிகளைத் தவிர்த்தலுடன் நீர் புகாமலும், காற்றுத் தடை மற்றும் நீராவித் தடை உள்ளிட்ட கூடுதல் செயல்பாடுகளையும் கொண்டுள்ளன. கறையான்களுக்கான பயன்பாடுகளில் கற்காரை அடித்தளச் சுவர்கள், ஐ. சி. எப் காப்பிடப்பட்ட கற்காரை வடிவங்கள், கீழ்-பாளம் நீர் புகா அமைப்பு, கீழ்-பாளத் தகடுகள், தரை அடித்தளங்கள் மற்றும் சுவர், ஜன்னல் மற்றும் கதவு ஒளிரும் பொருட்கள் ஆகியவை அடங்கும். கட்டுமான செயல்பாட்டின் போது பெரும்பாலான கறையான் தடுப்புகளை அமைத்தல் வேண்டும். அடைப்பான்கள் கறையான் அடைப்பான் பொருட்கள் மேலே விவரிக்கப்பட்ட கறையான்களின் சவ்வுகளின் அடிப்படைக் கூறுகளாகும். அடைப்பான்கள் நீழ்த்தன்மையுடன் கூடியன ஆகும். அதாவது இவை கிழிபடாமல் கட்டமைப்புடன் நகர்கின்றன. மேலும் இவை சக்கை அல்லது நீட்சித்தன்மையுடையவையாகக் கிடைக்கின்றன. ஒரு கட்டமைப்பில் உள்ள குழாய் அமைப்பிற்கும் கற்காரைக்கும் இடையே உள்ள இடைவெளியினை இந்த அடைப்பான்கள் மூடி கறையான்கள் பாதிப்பினைத் தடுக்கின்றன. நிலைபெறும் போது அல்லது விரிவான மண் காரணமாகக் கட்டமைப்பு நகரும்போது, அடைப்பான் தடுப்பு பொருள் கறையான்கள் மற்றும் பிற பூச்சிகளால் ஊடுருவ முடியாத ஒரு தடையைப் பராமரிக்கிறது. துருப்பிடிக்காத எஃகு திரைகள் நிலத்தடி கறையான்களைத் திறம்பட விலக்க, 0.02 அங்குலங்களுக்கு (0.5 மிமீ) சிறிய திரை துளைகள் தேவைப்படுகின்றன. கட்டிடத்தின் பல பகுதிகளில் இவை பயன்படுகின்றன. துகள் தடைகள் துகள்கள் நிறைந்த கறையான் தடைகள் பசிபிக் வடிநிலத்தைச் சுற்றிப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. 1980களில் ஹவாய் பல்கலைக்கழக விஞ்ஞானி மினார் தமாசிரோ என்பவரால் வணிக ரீதியாக இவை உருவாக்கப்பட்டன. இருப்பினும், துகள் தடைகள் சமீபத்தில் தான் அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பில் வணிக ரீதியாகக் கிடைத்தன. துகள் தடைகளுக்குப் பின்னால் உள்ள கோட்பாடு எப்லிங் மற்றும் பென்சு (1957), சூ மற்றும் பலர் (1991) சூவும் செப்ர்க்ன் (1992) யாட்சு மற்றும் பலரால் ஆய்வு செய்யப்பட்டது. எரிமலைப் பாறை கறையான் துகள் தடைகள் ஹவாயில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் வேறு எந்த இடத்திலும் இவைப் பயன்பாட்டில் இல்லை. ஏனெனில் எரிமலைப் பாறை கற்கள் எரிமலை செயல்பாட்டிலிருந்து வருகிறது. இது உலகின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டுமே நடைபெறுகிறது. ஆத்திரேலியாவில் பயன்படுத்தப்படும் கருங்கல் போன்ற எந்தவொரு கடினமான கனிமமும், தேவையான அளவு மற்றும் வடிவப் பண்புகளைக் கொண்டிருந்தால், கறையான் தடுப்பாகச் செயல்படும். 2003ஆம் ஆண்டில் டெக்சாசு ஏ & எம் பல்கலைக்கழகத்தில் துகள் தடைகள் குறித்த ஆராய்ச்சி தொடங்கியது. அளவு, கோணத்தன்மை மற்றும் துகள்களுக்கு இடையிலான இடைவெளி உள்ளிட்ட பல்வேறு துகள் பண்புகள் மதிப்பீடு செய்யப்பட்டன. இந்தப் பொருள் ஒரு வீடு அல்லது கட்டமைப்பின் வெளிப்புறச் சுற்றளவைச் சுற்றி 4 அங்குலங்கள் (100 மிமீ) குறுக்கே மற்றும் 5 அங்குலங்கள், (130 மிமீ) கீழே, அடித்தளத்திற்குக் கீழ் நேரடியாக அளவிடும் ஓர் ஆப்பு உருவாக்கத்தில் நிறுவப்படலாம். மேற்கோள்கள் இதரச் சான்றுகள் Scientific American; https://blogs.scientificamerican.com/running-ponies/long-live-the-morbidly-obese-termite-queen-and-her-terrifying-army-of-sweat-licking-babies/ Pest Control Technology; https://www.pctonline.com/article/pct0215-annual-termite-damage-quest/ Gold, Roger; (October 2015. "Pest Exclusion Using Physical Barriers - Part of the Sustainable Future for New and Existing Structures" (https://www.youtube.com/watch?v=2c2BEFq9Bmk. ' 'Pest World 2015 - National Pest Management Association' '). Retrieved 25 October 2017. International Code Council AC 380 "Acceptance Criteria for Termite Physical Barrier Systems" (http://shop.iccsafe.org/ac380-termite-physical-barriers-approved-oct-2014-editorially-revised-feb-2017-pdf-download.html) International Code Council ICC Evaluation Report ESR-3632 TERM Barrier System (http://www.icc-es.org/Reports/pdf_files/load_file.cfm?file_type=pdf&file_name=ESR-3632.pdf) International Code Council ICC Evaluation Report ESR-1860 Termimesh Termite Control System (http://www.icc-es.org/Reports/pdf_files/load_file.cfm?file_type=pdf&file_name=ESR-1860.pdf) பூச்சிக் கட்டுப்பாடு
683081
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%28%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%29
காந்திநகர் சட்டமன்றத் தொகுதி (சம்மு காசுமீர்)
காந்திநகர் சட்டமன்றத் தொகுதி (Gandhinagar Assembly constituency) என்பது சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையின் மேனாள் தொகுதிகளில் ஒன்றாகும். இது சம்மு காசுமீர் ஒன்றியப் பிரதேசத்தின் மிகவும் ஆடம்பரமான பகுதிகளில் ஒன்றாகும். ஒன்றிய பிரதேசத்தில் உள்ள வசதிகளுக்காக இப்பகுதி நன்கு அறியப்பட்டதாகும். காந்திநகர் சட்டமன்றத் தொகுதி சம்மு மக்களவைத் தொகுதி ஒரு பகுதியாக இருந்தது. சட்டப்பேரவை உறுப்பினர் தேர்தல் முடிவுகள் 2014 2008 2002 மேலும் காண்க ஜம்மு மாவட்டம் மேற்கோள்கள் சம்மு காசுமீரில் நீக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் ஜம்மு மாவட்டம்
683082
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B1%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
பொட்டாசியம் ஆறயோடோயிரேனேட்டு
பொட்டாசியம் ஆறயோடோயிரேனேட்டு (Potassium hexaiodorhenate) என்பது K2ReI6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஓர் கனிம வேதியியல் சேர்மமாகும். தயாரிப்பு பொட்டாசியம் பெர்யிரேனேட்டு சேர்மத்தை அடர் ஐதரோகுளோரிக் அமிலத்திலுள்ள பொட்டாசியம் அயோடைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் பொட்டாசியம் ஆறயோடோயிரேனேட்டு உருவாகும்: 2KReO4 + 2KI + 16HI -> 2KReI6 + 3I2 + 8H2O இயற்பியல் பண்புகள் பொட்டாசியம் ஆறயோடோயிரேனேட்டு கருப்பு நிறப் படிகங்களாக உருவாகிறது. மெத்தனால் அசிட்டோன் ஆகிய கரைப்பான்களில் கரைகிறது. வேதிப் பண்புகள் நீரிய கரைசல்களுடன் சேரும்போது பொட்டாசியம் ஆறயோடோயிரேனேட்டு நீராற்பகுப்புக்கு உட்படுகிறது. K2ReI6 + 2H2O -> ReO2 + 2KI + 4HI சூடுபடுத்தும் போது இச்சேர்மம் சிதைவடைகிறது.: K2ReI6 -> Re + 2KI + 2I2 வலிமையான அமிலங்களுடன் பொட்டாசியம் ஆறயோடோயிரேனேட்டு வினைபுரிகிறது: K2ReI6 + H2SO4 -> HReI5 + HI + K2SO4 மேற்கோள்கள் பொட்டாசியம் சேர்மங்கள் இரேனியம் சேர்மங்கள் அயோடோ அணைவுச் சேர்மங்கள்
683085
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D
தலிப் சிங் சந்த்
தலிப் சிங் சந்த் (Dalip Singh Saund) (செப்டம்பர் 20, 1899 - ஏப்ரல் 22, 1973) ஓர் இந்திய-அமெரிக்க அரசியல்வாதி ஆவார். இவர் மக்களாட்சிக் கட்சியின் உறுப்பினராக கலிபோர்னியாவின் 29வது காங்கிரசு மாவட்டத்தில் இருந்து ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவையில் பணியாற்றினார். ஐக்கிய அமெரிக்கப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சீக்கியர், இந்திய அமெரிக்கர் மற்றும் ஆசிய அமெரிக்கர் ஆவார். காங்கிரசில் இவர் பதவியேற்றதற்கு முன்பு , கலிபோர்னியாவின் இம்பீரியல் கவுண்டியில் உள்ளூர் அரசியலில் தீவிரமாக இருந்தார். இளமை வாழ்க்கை தலிப் சிங் சந்த் பிரித்தானிய இந்தியாவின் சஜுல்வாடியில் செப்டம்பர் 20,1899 அன்று நாதா சிங் மற்றும் ஜியோனி கௌர் ஆகியோருக்கு பிறந்தார். இவருக்கு பத்து வயதாக இருந்தபோது இவரது தந்தை இறந்துவிட்டார். சந்த் வேல்ஸ் கல்லூரியில் பயின்றார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது இந்திய சுதந்திர இயக்கத்தை சந்த் ஆதரித்தார். 1919 ஆம் ஆண்டில், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். 1920 ஆம் ஆண்டில், பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உணவு பாதுகாப்புப் பற்றி படிப்பதற்காக தனது சகோதரரின் உதவியுடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். 1922இல் முதுகலைப் பட்டமும், 1924இல் முனைவர் பட்டமும் பெற்றார். ஜூலை 21,1928 அன்று மரியன் இசட் கோசா என்பவரை மணந்தார், தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். புத்தக வெளியீடு 1925 ஆம் ஆண்டில் இம்பீரியல் பள்ளத்தாக்கில் சந்த் வேளாண்மயில் ஈடுபட்டார். கேத்ரின் மேயோவின் மதர் இந்தியா என்ற இந்தியாவைப் பற்றிய புத்தகத்திற்கு பதிலளிக்கும் இவர் மை மதர் இந்தியா என்ற புத்தகத்தை 1930 ஆம் ஆண்டில் எழுதினார். இவர் இந்திய அமெரிக்கச் சங்கத்தை ஏற்பாடு செய்து 1942 இல் அதன் முதல் தலைவராக பணியாற்றினார். இந்த அமைப்பு இந்தியர்களை இயல்பாக்குவதற்கு தகுதி பெற அனுமதிக்கும் சட்டத்திற்காக வற்புறுத்தியது. பின்னர்,. லூஸ்-செல்லர் சட்டம் 1946 இல் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் சந்த் டிசம்பர் 16,1949 அன்று அமெரிக்க குடியுரிமையைப் பெற்றார். இறப்பு பக்கவாதத்தைதால் பாதிக்கப்பட்டிருந்த சந்த் ஏப்ரல் 22,1973 அன்று இறந்தார். மேற்கோள்கள் நூல் ஆதாரங்கள் வெளி இணைப்புகள் Dalip Singh Saund materials in the South Asian American Digital Archive (SAADA) The Dalip Singh Saund web site from the family archives கலிபோர்னியா பல்கலைக்கழக (பெர்க்லி) முன்னாள் மாணவர்கள் 1973 இறப்புகள் 1899 பிறப்புகள்
683086
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
நூராபாத் சட்டமன்றத் தொகுதி
நூராபாத் சட்டமன்றத் தொகுதி (Noorabad Assembly constituency) என்பது இந்திய ஒன்றிய பிரதேசமான சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் முன்னர் செயல்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றாகும். நூராபாத் அனந்த்நாக் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது. அப்துல் மஜித் பாடர் இத்தொகுதிக்குக் கடைசியாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஆவார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2014 மேலும் காண்க பாம்பூர் மேற்கோள்கள் சம்மு காசுமீரில் நீக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள்
683090
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
பொட்டாசியம் அறுபுரோமோயிரேனேட்டு
பொட்டாசியம் அறுபுரோமோயிரேனேட்டு (Potassium hexabromorhenate) என்பது K2ReBr6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஓர் கனிம வேதியியல் சேர்மமாகும். தயாரிப்பு புரோமின் வாயு ஓட்டத்தில் பொட்டாசியம் புரோமைடையும் இரேனியத்தையும் சேர்த்தால் பொட்டாசியம் அறுபுரோமோயிரேனேட்டு உருவாகும். Re + 2KBr + 2Br2 → K2ReBr6 இரேனியம் மூவாக்சைடும் பொட்டாசியம் புரோமைடும் சேர்ந்த கலவையில் ஐதரோபுரோமிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் பொட்டாசியம் அறுபுரோமோயிரேனேட்டு உருவாகும்: ReO2 + 2KBr + 4HBr -> K2ReBr6 + 2H2O செறிவூட்டப்பட்ட ஐதரோ புரோமிக் அமிலத்தில் உள்ள பொட்டாசியம் அயோடைடைப் பயன்படுத்தி பொட்டாசியம் பெர்யிரேனேட்டை ஒடுக்கினாலும் இச்சேர்மம் உருவாகும். 2KReO4 + 6KI + 16HBr → 2K2ReBr6 + 4KBr + 3I2 + 8H2O இயற்பியல் பண்புகள் பொட்டாசியம் அறுபுரோமோயிரேனேட்டு Fm3m என்ற இடக்குழுவில் கனசதுரப் படிகத்திட்டத்தில் சிவப்பு நிறப் படிகங்களாக படிகமாகிறது. வேதிப்பண்புகள் பொட்டாசியம் அறுபுரோமோயிரேனேட்டு ஐதரோபுரோமிக் அமிலத்தில் கரைந்து சிவப்பு அல்லது ஆழமான மஞ்சள் நிற கரைசலை உருவாக்குகிறது. தண்ணீருடன் இச்சேர்மம் வினைபுரிகிறது. K2ReBr6 + 2H2O → ReO2 + 2KBr + 4HBr மேற்கோள்கள் பொட்டாசியம் சேர்மங்கள் இரேனியம் சேர்மங்கள் புரோமோ அணைவுச் சேர்மங்கள் புரோமோமெட்டலேட்டுகள்
683092
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
பாரிபா பகுஜன் மகாசங்கம்
பாரிபா பகுஜன் மகாசங்கம் (Pharipa Bahujan Mahasaangha) என்பது பிரகாசு அம்பேத்கரால் 4 சூலை,1994 அன்று நிறுவப்பட்ட ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி இந்தியக் குடியரசுக் கட்சியின் பிளவுபட்ட குழுவாக இருந்தது. மேலும் அம்பேத்கர் தலைமையிலான பட்டியல் சாதியினர் கூட்டமைப்பில் தன் வேர்களைக் கொண்டிருந்தது. கட்சியின் தலைவர் பிரகாசு அம்பேத்கர் ஆவார். கட்சியின் முழு பெயர் பாரதிய குடியரசுக் கட்சி-பகுஜன் மகாசங்கம் (இந்தியக் குடியரசுக் கட்சி). இக்கட்சி மகாராட்டிராவை அடிப்படையாகக் கொண்டது. 2019ஆம் ஆண்டில், பிரகாசு அம்பேத்கரால் நிறுவப்பட்ட புதிய அரசியல் கட்சியான வஞ்சித் பகுஜன் அகாதியுடன் இணைந்தது. வரலாறு இந்தியக் குடியரசுக் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக இந்தக் கட்சி 1994 சூலை 4 அன்று உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சிக்கு பி. ஆர். அம்பேத்கரின் பேரனான பிரகாசு யசுவந்த் அம்பேத்கர் தலைமை தாங்கினார். 1999 மகாராட்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இக்கட்சி 34 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற 13வது மக்களவைத் தேர்தலில் அம்பேத்கர் அகோலா மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 மக்களவைத் தேர்தலில் கட்சி தனது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இக்கட்சி இழந்தது. மொத்தம் 16 வேட்பாளர்களைக் கட்சி அறிவித்தது, அனைவரும் மகாராட்டிராவினைச் சேர்ந்தவர்கள். அகோலாவில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரால் அம்பேத்கர் தோற்கடிக்கப்பட்டார். இத்தேர்தலில் மொத்தம் 606,827 வாக்குகளைப் பெற்று மூன்று இடங்களை வென்றது. 2014 மகாராட்டிராச் சட்டப்பேரவைத் தேர்தலில் பலிராம் சிர்சுகர் அகோலாவின் பாலாப்பூர் தொகுதியில் பாரிபா பகுஜன் மகாசங்கம் சார்பில் போட்டியிட்டு 6939 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 20 மார்ச் 2018 அன்று, பிரகாசு அம்பேத்கர் வஞ்சித் பகுஜன் அகாதி என்ற புதிய அரசியல் கட்சியை நிறுவினார். 2019 மார்ச் 14 அன்று, பாரிபா பகுஜன் மகாசங் வஞ்சித் பகுஜன் அகாதியுடன் இணைக்கப்படும் என்று அம்பேத்கர் அறிவித்தார். பாரிபா-பகுஜான் மகாசங்கத்தின் வெற்றியின் மூலம் சமூக பொறியியலின் 'அகோலா முறை' இருந்தபோதிலும், 'பாரிபா' என்ற சொல் கட்சியின் விரிவாக்கத்தினை மட்டுப்படுத்தியதாக அவர் கூறினார். 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பாரிபா பகுஜன் மகாசங்கம் வஞ்சித் பகுஜன் அகாதியுடன் இணைக்கப்படும் என்றும், வஞ்சித் பகுஜன் அகாதி பரந்த அர்த்தத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றும் அறிவித்தார். 2019 நவம்பர் 8 அன்று, பாரிபா பகுஜன் மகாசங்கா வஞ்சித் பகுஜன் அகாதியுடன் இணைந்தது. தேர்தல் செயல்பாடு மக்களவைத் தேர்தல் மகாராட்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் மேலும் காண்க இந்திய குடியரசுக் கட்சி (அ.) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இந்தியன் எக்ஸ்பிரஸில் பி. ஒய். அம்பேத்கருடன் நேர்காணல் தலித்திய அரசியல் மகாராட்டிர அரசியல் கட்சிகள்
683095
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
கிளன்மேரி எல்ஆர்டி நிலையம்
கிளன்மேரி எல்ஆர்டி நிலையம் அல்லது கிளன்மேரி இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: Glenmarie LRT Station அல்லது CGC-Glenmarie LRT Station; மலாய்: Stesen LRT Glenmarie; சீனம்: 格林瑪麗站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா, சுபாங், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த நிலையம் தற்போது சா ஆலாம் வழித்தடத்திற்காக கட்டுமானத்தில் உள்ளது. கட்டுமானம் நிறைவடைந்த பின்னர் இந்த நிலையம் ஒரு பரிமாற்ற நிலையமாகச் செயல்படும்; மற்றும் 2025-இல் திறக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அமைவு கிளன்மேரி எனும் பெயரை இந்த எல்ஆர்டி நிலையம் பகிர்ந்து கொண்டாலும், கேஎல் சென்ட்ரல்–இஸ்கைபார்க் வழித்தடத்தின் விரிவாக்கத்தில் உள்ள கிளன்மேரி கொமுட்டர் நிலையத்துடன் ஒரு பரிமாற்ற நிலையமாக இணைந்து செயல்படாது. கிளன்மேரி தொழில் பூங்காவிற்கு அருகில் ஏறக்குறைய 2.6 கிமீ தொலைவில் கிளன்மேரி கொமுட்டர் நிலையம் அமைந்துள்ளது. கிளன்மேரி எல்ஆர்டி நிலையம், SS7 சுபாங் வானூர்தி நிலைய நெடுஞ்சாலையில், கிளானா ஜெயாவின் அருகில் அமைந்துள்ளது. கிளன்மேரி SS7 சாலை, கிளன்மேரி ஆகியவற்றின் சுற்றுப்புறங்கள் இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன. 2019-ஆம் ஆண்டில், கிளன்மேரி எல்ஆர்டி நிலையம் மற்றும் கோம்பாக் எல்ஆர்டி நிலையம் ஆகிய நிலையங்களுக்கு இடையே உச்ச நேர தொடருந்துப் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டது. அதிகரித்து வரும் பயணிகளின் தேவைகளை நிறைவு செய்வதற்காக, காத்திருக்கும் நேரம் 3 நிமிடங்களில் இருந்து 1.5 நிமிடங்களுக்கு தற்காலிகமாகக் குறைக்கப்பட்டது. சுபாங் வானூர்தி நிலையம் சுபாங் ஜெயா, கிளானா ஜெயா, சுங்கை பூலோ, குவாசா டமன்சாரா, கோத்தா டாமன்சாரா, ஆரா டாமன்சாரா, முத்தியாரா டாமன்சாரா போன்ற நகரங்களும்; பெட்டாலிங் ஜெயா பெரு நகர்ப் பகுதிகளும், கிளன்மேரி நகரத்திற்கு அருகில் உள்ளன. கிளன்மேரி நகரத்திற்கு அருகில் கோலாலம்பூரின் முன்னாள் பன்னாட்டு வானூர்தி நிலையமான சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம் (Subang International Airport) அமைந்துள்ளது. இந்த வானூர்தி நிலையம், சுபாங் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Subang Airport) என்றும் அழைக்கப்படுகிறது. காட்சியகம் மேலும் காண்க மலேசிய தொடருந்து போக்குவரத்து கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல் பெட்டாலிங் ஜெயா நகரப் பிரிவுகளின் பட்டியல் கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Glenmarie LRT station மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
683097
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%29
அம்பலம் (பட்டம்)
அம்பலம் (Ambalam) என்பது தமிழ்நாட்டில் உள்ள சில சாதிகளின் பட்டப்பெயராகும். சொற்பிறப்பு அம்பலம் என்பதற்கு பலர்கூடும் வெளி என்று பொருள், மேலும் அம்பலம் என்பது கள்ளர் சாதிப் பட்ட பெயர்களுள் ஒன்றாகும்.தமிழ்நாட்டில் சில சாதிகளின் பட்டப் பெயராகவும் உள்ளன. கவியரசு கண்ணதாசன் அவர்கள் தன்னுடைய நூலில் தலைமறைந்து செல்வதை கள்ளத்தனம் என்றும், துணிந்து நிற்பதை மறத்தனம் என்று அழைப்பதை அறிவீர்கள். இவை, பின்னால் வந்த வழக்குகள். உளவறியும் கடினமான வேலையை செய்ததால்தான், கள்ளப்படைக் குலத்தினரை "அம்பலக்காரர்கள்" என்று மரியாதையோடு அழைக்கிறது மறவர் நாடு என்கிறார். அம்பலகாரன் என்ற சொல்லுக்கு "கள்ளர் சாதித் தலைவன்" (chief of the Kallar caste) என்றும் "கள்ளர் நாட்டுத் தலைவன்" என்றும் பொருள் தருகிறது தமிழகராதி. “அம்பலம்‌” என்னும்‌ பட்டமுடைய கள்ளர்கள் மேலூர்ப்‌ பகுதிக்‌ கள்ளர் மற்றும் கிளைவழி கள்ளர்கள் ஆவார்கள். அழகர்மலையை ஒட்டி அதன்‌ தென்பகுதியிலும்‌, கிழ்ப்பகுதியிலும்‌ அம்பலம்‌ எனும்‌ பட்டமுடைய கள்ளர்கள் வாழ்ந்து வருவதாக தொ. பரமசிவன் அவர்களது 'அழகர் கோயில்' நூலில் குறிப்பிடுகிறார். 1836 ஆம் நூற்றாண்டு மெக்கென்சி கையெழுத்துப் பிரதி ( Mackenzie Manuscripts) கள்ளர் சாதியினரின் பட்டப்பெயர் அம்பலகாரர் இன்று குறிப்பிடுகிறது. அட்டமா சித்தி அருளிய பட்டமங்கை எனத்‌ திருவிளையாடற்‌ புராணம்‌ கூறுகின்ற அம்மனின்‌ தலம்‌ தான்‌ பட்டமங்கலம்‌ என்ற ஊர். அந்தப்‌ பட்டமங்கல அம்பலக்‌காரருக்கு திருக்கோட்டியூர்‌ பெருமாள்‌ கோயில்‌ தேர்‌ திருவிழாக்களில்‌ பட்டுப்‌ பரிவட்டம்‌ கட்டிச்‌ சிறப்புகள் செய்திடுவர் என்று கலைஞர். மு.கருணாநிதி அவர்கள் தென்பாண்டிச் சிங்கம் என்ற நூலில் குறிப்பிடுகிறார். கிழவன் சேதுபதி மன்னரின் தெற்குப்‌ பகுதி கள்ளர்‌ படைக்குத்‌ தலைவனாயிருந்தவர் இளந்தரி முத்துலிங்க அம்பலக்காரன்‌ என்பவர்‌. கல்வெட்டுக்களில் அம்பலம் பட்டம் கங்கைகொண்ட சோழபுரத்துத்‌ திருக்கொற்றவாசலில்‌ புறவாயில்‌ சேனாபதி இளங்காரிக்குடையான்‌ சங்கரன்‌ அம்பலம்‌ என்று திருவா வடுதுறைக்‌ கோயில்‌ கல்வெட்டு கூறுகிறது. மதுரை, மேலூர்‌, சொக்கலிங்கபுரம் சிவன்‌ கோயிலில்‌ உள்ள விநாயகர்‌ சிற்றாலய முன்‌ மண்டபத்‌ தூணில் சொக்கலிங்கபுரத்தில்‌ இருந்த கட்டசிம்ப அம்பலக்காரன்‌ பிச்சன்‌ அம்பலம்‌ மற்றும்‌ அவனது மனைவி வீராயி ஆகியோரது பக்தியைத்‌ தெரிவிக்க்கிறது. தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருச்சுற்றின் வடபுறச் சுவற்றில் இருக்கும் நீண்ட கல்வெட்டு. பெரியகோவிலில் இசைக்கலைஞர்களாக பணியாற்றிய 130 பேர்கள். இவர்களின் விபரங்கள் மற்றும் இவர்களுக்கான நிவந்தங்களும் இக்கல்வெட்டில் உள்ளன. இந்த இசைக்கலைஞர்களில் சோழ தேச போர்வீரர்களும் இருந்துள்ளனர். குதிரைப்படை, யானைப்படை, வலங்கை வேளாக்காரப்படை மற்றும் பல்வேறு படைப்பிரிவில் இருப்பவர்கள். கோவில் இசைக்கலைஞர்களாகவும் இருந்தனர், அதில் பக்கவாத்தியம் வாசிப்பவர் ராஜகண்டியர் தெரிந்த வலங்கை வேளைக்காரர் பட்டாலகன் அம்பலம் என்பவர் குறிப்பிடப்படுகின்றார் . மதுரை, மேலூருக்கு அருகிலுள்ள நரசிங்கம்பட்டியில்‌ கி.பி. 1615 ஐ சார்ந்த கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சு, உப்பு ஆகிய வற்றை வணிகம்‌ செய்ய நகரத்தார்கள்‌ எல்லாரும்‌ நரசிங்கன்பட்டி அர்ச்சுனப்‌ பெருமாள்‌ அம்பலகாரர்‌ வீட்டுக்குவந்து ஒன்று கூடிப்‌ போவார்கள்‌ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை அருங்காட்சியகத்தில்‌ சேகரித்து வைக்கப்பட்டுள்ள செப்பேடுகளில்‌, 14-6-1659 ஆண்டு மூணுடைப்பு என்ற கிராமத்தின் திசைக்காவல் பணிபுரியும் பளுத்தாண்டிக் குப்பச்சி அம்பலகாறன் என்பவன் திருமலை நாயக்கரும், கிழவன் சேதுபதி முத்துராமலிங்க துரையும் பள்ளிமடம் வந்திருந்த போது அவர்களைப் பாதகாணிக்கை, சீனி சர்க்கரையுடன் வணங்கிச் சந்தித்தான். அவனது கோரிக்கையைக் கேட்ட அவ்வரசர்கள் அதற்கிணங்க அவனுக்கு புன்செய், நன்செய் நிலங்களை மானியமாகத் தந்ததை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. அம்பலகாரர் என்று தலைகாவல் முறி பட்டயங்கள் வழங்கப்பட்டுள்ளன. தாது வைகாசி மீ 17 உ ஏரிமங்கலம் நாட்டிலிருக்கும் கறுத்த காங்கய அம்பலகாரர், கீழத்தூவாகுடியைச் சேர்ந்த செங்கிபட்டியிலிருக்கும் ஒத்தய மேல் கொண்டார் அம்பலகாரர் கருவிப்பட்டியிலிருக்கும் இராமைய மேல் கொண்டார் அம்பலக்காரர் இவர்களுக்குக் கூகையூர் சீமை நாட்டார், சொக்கநாத உடையார் , மற்றமுள்ள உடையார் கிராமத்துக் குடியானவர்கள் ஆகிய நாங்கள் மேன் காவல் பட்டயம் எழுதி குடுத்தோம். தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் இருக்கும்நெற்குப்பை செப்பேட்டில் காணியாளவந்த சோழப்புரையர்‌, அஞ்சாத கண்டப்புரையர்‌, வணங்கனாத்தேவன்‌, தொண்டைமான்‌ அம்பலம்‌, சொக்கட்‌டான்‌ அம்பலம்‌ என ஐந்து அம்பலகாரர்‌ இருந்ததாகக்‌ குறிப்பிடுகின்‌றனர்‌. இந்த ஐந்து அம்பலகாரர்களும்‌ தற்பொழுது முறையே முதலியம்பலம்‌, கருப்‌ பையா அம்பலம்‌, மதியாரி அம்பலம்‌, மாலையிட்டான்‌ அம்பலம்‌, சொக்‌ கட்டான்‌ அம்பலம்‌ என அழைக்கப்படுகின்றனர்‌. இவர்கள்‌ முறையே முல்லை மங்கலம்‌, சதுர்வேத மங்கலம்‌, சிர்சேர்ந்த மங்கலம்‌, கன்ன மங்கலம்‌, வேல மங்கலம்‌ என்ற ஐந்து நிலைநாட்டிலிருந்து வந்தவர்கள்‌. தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம்,காரைக்குடி. வட்டம்‌, கோட்டையூரில்‌ அமைந்துள்ள தெற்கு ஊரணியின்‌ வடகரையில்‌ எடுப்பிக்கப்பட்டுள்ள அம்பலகாரர்‌ சமாதியில்‌ திண்ணை மேடையின்‌ கீழ்புரத்தில்‌ பதிப்பட்டுள்ள சமாதிக்கல்வெட்டில், 1889 ஆண்டு கோட்டையூர்‌ கைலாச அம்பலகாரர்‌ சிவலோக பதவி அடைந்தமை குறிப்பிடப்படுகின்றது. இதனையும் காண்க வாளுக்கு வேலி அம்பலம் நன்னியம்பலம் கரியமாணிக்கம் அம்பலம் கரு. மாணிக்கம் அம்பலம் எஸ். ஓ. எஸ். பி. உடையப்பா அம்பலம் மேற்கோள்கள் சாதிகள் கள்ளர் முக்குலத்தோர்
683106
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D
செயந்த் பிரபாகர் பாட்டீல்
செயந்த் பிரபாகர் பாட்டீல் (Jayant Prabhakar Patil ) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராகவும், மகாராஷ்டிரா சட்ட மேலவை உறுப்பினராகவும் உள்ளார். ராய்காட் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக உள்ளார். அரசியல் வாழ்க்கை இவரது தந்தை இறந்த பிறகு இவர் தனது கட்சியின் தலைவராக ஆனார். 2004 மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் அவரது கட்சிக்கு ஒரு பெரிய பின்னடைவாக இருந்தது, ஏனெனில் இரண்டு முக்கிய தலைவர்கள் அலிபாக் மற்றும் பென் தொகுதிகளில் தங்கள் இடங்களை இழந்தனர். 2009 ஆம் ஆண்டில் அவர்கள் அந்த தொகுதி இடங்களை மீண்டும் பெற்றனர், ஆனால் பன்வேலில் தோல்வியடைந்தனர், மேலும் மாவட்டத்தில் இருந்து பல வாக்குகளையும் இழந்தனர். 2014 தேர்தலில் அவர்கள் ராய்காட்டில் இரண்டு இடங்களை மட்டுமே வென்றனர். 2019 ஆம் ஆண்டில், அவர்கள் தேசியவாத காங்கிரசு கட்சியுடன் கூட்டணி அமைத்து ராய்காட்டில் உள்ள அனைத்து இடங்களையும் இழந்தனர். மேற்கோள்கள் வாழும் நபர்கள்
683109
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
ஜாதவ்பூர்
ஜாதவ்பூர் (Jadavpur), இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் கொல்கத்தா மாவட்டத்தில் உள்ள தலைநகர் பகுதியான கொல்கத்தா மாநகரத்தின் ஒரு பகுதியாக உள்ளது. ஜாதவ்பூர் கொல்கத்தாவிற்கு தென்கிழக்கே (ஜவகர்லால் நேரு சாலை வழியாக) 12.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கொல்கத்தா மாநகராட்சியின் வார்டுகள் எண் 92, 93, 96, 98, 99 மற்றும் 102 ஜாதவ்பூர் நகர்புற பகுதியில் உள்ளது. தெற்கு கொல்கத்தா மாநகரத்தில் அமைந்த ஜாதவ்பூர் நகர்புற பகுதியில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம், மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய வேதியியல் உயிரியல் நிறுவனம் உள்ளது. ஜாதவ்பூரில் இராஜா சுபோத் சந்திர மல்லிக் சாலை மிகவும் பிரபலம். ஜாதவ்பூர் பகுதி, ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதிக்கும்; ஜாதவ்பூர் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. போக்குவரத்து ஜாதவ்பூர் பகுதியில் ஜாதவ்பூர் தொடருந்து நிலையம் மற்றும் கொல்கத்தா மெட்ரோவின் இரவீந்திர சரோவர் மெட்ரோ நிலையம், மகாநாயக் உத்தம் குமார் மெட்ரோ நிலையம், கவி சுகந்தா மெட்ரோ நிலையம், ஜோதிரிந்திரா நந்தி மெட்ரோ நிலையம் மற்றும் சத்யஜித் ராய் மெட்ரோ நிலையங்கள் உள்ளது. கல்வி & ஆய்வு நிலையங்கள் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம். விஜய்கர் ஜோதிஷ் ராய் கல்லூரி இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம் இந்திய வேதியியல் உயிரியல் நிறுவனம் மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் ஆராய்ச்சி நிறுவனம் கேபிசி மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை. ஜாதவ்பூர் வித்தியாபீடம் மேற்கோள்கள் கொல்கத்தாவின் சுற்றுப்பகுதிகள்
683111
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்
ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் (Jadavpur University) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா மாநகரத்திற்குட்பட்ட ஜாதவ்பூர் பகுதியில் இயங்கும் ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் 1955ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 2023ஆம் ஆண்டில் இப்பல்கலைக்கழகத்தில் 902 ஆசிரியர்களும்; 13,570 மாணவர்களும் இருந்தனர். அவர்களில் இளநிலை மாணவர்கள் 8,148, முதுநிலை மாணவர்கள் 3,134 மற்றும் ஆய்வு மாணவர்கள் 2,888 பேரும் இருந்தனர். இப்பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை கலை, அறிவியல், பொறியல், வணிகம், நிர்வாகப் படிப்புகளும் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளது. வளாகங்கள் முதன்மை வளாகம் இதன் முதன்மை வளாகம் ஜாதவ்பூரில் 60 ஏக்கர் பரப்பளவில் உள்ள்து. இங்கு பொறியியல், கலை மற்றும் அறிவியல் துறைகள் செயல்படுகிறது. முதன்மை வளாகத்தில் 7 கூட்டரங்கங்கள் மற்றும் 3,000 பேர் அமரக்கூடிய திறந்தவெளி அரங்கம் உள்ளது. 6 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டுத் திடல்கள் கொண்டுள்ளது. பிற வளாகங்கள் உப்பு நீர் ஏரி வளாகம் - 26 ஏக்கர் கொண்ட இவ்வளாகத்தில் பொறியியல், தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்பம் மற்றும் எரிசக்தி பொறியியல் பிரிவுகள் உள்ளது. மேற்கு வளாகம், ஜாதவ்பூர் புதிய நகர வளாகம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் இணையதளம் இந்திய பல்கலைக்கழகங்கள் கொல்கத்தாவில் உள்ள கல்வி நிறுவனங்கள்
683113
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%28%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%29
தி சபர்மதி ரிப்போர்ட் (திரைப்படம்)
தி சபர்மதி ரிப்போர்ட் என்பது இந்தியாவில் இந்தி மொழியில் வெளிவந்த ஓர் திரைப்படமாகும். இத்திரைப்படமானது குசராத் மாநிலத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும் பாலாஜி மோசன் பிக்சர்ஸ், விகிர் பிலிம்ஸ் புரொடக்சன், விபின் அக்னிஹோத்ரி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளன. தீரஜ் சர்னா படத்தை இயக்கி உள்ளார். நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி, நடிகை ராசி கன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். பல சிக்கல்கள் மற்றும் தாமதங்களுக்குப் பிறகு, சபர்மதி அறிக்கை 15 நவம்பர் 2024 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. எதிர்மறை மற்றும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பின்னணி 27 பிப்ரவரி 2002 அன்று காலையில் கோத்ரா சந்திப்பு தொடருந்து நிலையத்தில் நின்றிருந்த சபர்மதி விரைவு வண்டியின் ஒரு பெட்டியில் சமூக விரோதிகள் தீவைத்த காரணத்தினால், அயோத்தியிலிருந்து வாரணாசி வழியாக ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த 59 பயணிகள் தீயால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வை மையமாகக் கொண்டு சபர்மதி ரிப்போர்ட் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. மேற்கோள்கள் குறிப்புகள் 2024 திரைப்படங்கள் இந்திய இந்தித் திரைப்படங்கள்
683115
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி
இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி (Peasants and Workers Party of India (PWP) என்பது இந்தியா மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மார்க்சிஸ்ட் அரசியல் கட்சி. இந்தக் கட்சி 1948 இல் நிறுவப்பட்டது, சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலிருந்து அதன் வேர்களைக் கொண்டுள்ளது மற்றும் சுமார் 10,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. கட்சியின் செல்வாக்கு பெரும்பாலும் மூன்று மாவட்டங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சி மஹாராஷ்டிராவில் புனே சேர்ந்த கேசவராவ் ஜேதே, சங்கரராவ் மோரே, மும்பை சேர்ந்த பவுசாகேப் ராவத், சதாரா சேர்ந்த நானா பாட்டீல், சோலாப்பூரைச் சேர்ந்த துல்ஷிதாஸ் ஜாதவ், பெல்காமைச் சேர்ந்த தாஜிபா தேசாய், கோலாப்பூரைச் சார்ந்த மாதவராவ் பாகல், அகமதுநகரைச் சேர்ந்த பி. கே. பாப்கர் மற்றும் தத்தா தேஷ்முக், வித்தலராவ் ஹண்டே மற்றும் பலர் மூலம் நிறுவப்பட்டது. மஹாராஷ்டிராவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயந்த் பிரபாகர் பாட்டீல் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். குறிப்பாக ராய்காட் மாவட்டத்தில் இக்கட்சிக்கு செல்வாக்கு உள்ளது, மேலும் மகாராஷ்டிராவில் ராய்காட், சோலாப்பூர், நாஷிக், நாக்பூர், நாந்தேட் மற்றும் பரபானி ஆகிய மாவட்டங்களில் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. தேர்தல் முடிவுகள் 2014 மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் தனது 88வது வயதில், கட்சியின் கணபத்ராவ் தேஷ்முக் சங்கோல் தொகுதியில் 94,374 வாக்குகள் பெற்று, சிவசேனா கட்சியின் ஷாஜிபாபு பாட்டிலை 25,224 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேற்கோள்கள் மகாராட்டிர அரசியல் கட்சிகள் மகாராட்டிர அரசியல்
683116
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
கார்கில் சட்டமன்றத் தொகுதி
கார்கில் சட்டமன்றத் தொகுதி (Kargil Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் 2019 வரை செயல்பாட்டிலிருந்த ஒரு தொகுதியாகும். கார்கில் சட்டமன்றத் தொகுதி, லடாக் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் இருந்தது. சட்டப்பேரவை உறுப்பினர் 1962: அகா சையத் இப்ராகிம் சா, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 1967: காச்சு முகமது அலி கான், சுயேச்சை 1972: காச்சு முகமது அலி கான், சுயேச்சை 1977: முன்ஷி ஹபீபுல்லா, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 1983:முன்ஷி அபீபுல்லா, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 1987: கமர் அலி அகுன், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 1996: கமர் அலி அகுன், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 2002: ஹாஜி நிசார் அலி, சுயேச்சை உறுப்பினர் 2008: கமர் அலி அகுன், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 2014: அசுகர் அலி கர்பாலை, இந்திய தேசிய காங்கிரசு தேர்தல் முடிவுகள் 2014 மேலும் காண்க கார்கில் கார்கில் மாவட்டம் மேற்கோள்கள் கார்கில் மாவட்டம்
683119
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
சன்சுகர் சட்டமன்றத் தொகுதி
சன்சுகர் சட்டமன்றத் தொகுதி (Zanskar Assembly constituency) இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் முந்தைய சம்மு காசுமீர் சட்டமன்றத்தின் ஒரு தொகுதியாகும். சன்சுகர் லடாக் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் இருந்தது. சட்டப்பேரவை உறுப்பினர் 1996: முகமது அப்பாசு, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 2002: முகமது அப்பாசு, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 2005: குலாம் ராசா, சுயேச்சை 2008: பெரோசு அகமது கான், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 2014: சையத் முகமது பாகிர் ரிசுவி, சுயேச்சை தேர்தல் முடிவுகள் 2014 மேலும் காண்க சன்ஸ்கார் லே மாவட்டம் மேற்கோள்கள் லே மாவட்டம்
683123
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%20%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
பொட்டாசியம் முப்புளோரோ அசிட்டேட்டு
பொட்டாசியம் முப்புளோரோ அசிட்டேட்டு (Potassium trifluoroacetate) என்பது CF3COOK என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஓர் கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் டிரைபுளோரோ அசிட்டேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படும். KH(CF3COO)2 என்ற வாய்ப்பாடு கொண்ட அமில உப்பாகவும் இது உருவாகும். தயாரிப்பு முப்புளோரோஅசிட்டிக் அமிலத்துடன் பொட்டாசியம் ஐதராக்சைடு, பொட்டாசியம் கார்பனேட்டு அல்லது பொட்டாசியம் பைகார்பனேட்டு ஆகியனவற்றைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் பொட்டாசியம் முப்புளோரோ அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது. CF3COOH + KOH → CF3COOK + H2O பண்புகள் வெப்பப்படுத்தினால் பொட்டாசியம் முப்புளோரோ அசிட்டேட்டு சிதைவடையும். 220 °செல்சியசு வெப்பநிலையில் அதிகபட்ச சிதைவு விகிதத்தை அடையும். பொட்டாசியம் புளோரைடு, சில ஆவியாகும் பொருட்கள், கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, முப்புளோரோ அசிட்டைல் புளோரைடு போன்றவை விளைபொருட்களாகும்.. மேற்கோள்கள் பொட்டாசியம் சேர்மங்கள் முப்புளோரோ அசிட்டேட்டுகள்
683127
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
உதம்பூர் சட்டமன்றத் தொகுதி
உதம்பூர் சட்டமன்றத் தொகுதி (Udhampur Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் செயல்பாட்டிலிருந்த ஒரு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். உதம்பூர் மக்களவை தொகுதியின் ஒரு பகுதியாகவும் இருந்தது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2014 மேலும் காண்க உதம்பூர் உதம்பூர் மாவட்டம் மேற்கோள்கள் சம்மு காசுமீரில் நீக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள்
683129
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
சா ஆலாம் வழித்தடம்
சா ஆலாம் வழித்தடம் (ஆங்கிலம்: Shah Alam Line அல்லது LRT Shah Alam Line; அல்லது LRT Bandar Utama-Johan Setia Line; மலாய்: Laluan Shah Alam அல்லது Laluan LRT Bandar Utama–Johan Setia) என்பது மலேசியா, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில், சா ஆலாம் மற்றும் கிள்ளான் நகர்ப்புறங்களுக்குச் சேவை செய்யும் ஒரு விரைவுத் தொடருந்து வழித்தடம் ஆகும். தற்போது இந்த வழித்தடம் கட்டுமானத்தில் உள்ளது. இது மூன்றாவது இலகு விரைவு தொடருந்து வழித்தடமாகவும், கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் நான்காவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பாகவும் இருக்கும். பொது பிரசரானா மலேசியாவின் ரேபிட் ரெயில் துணை நிறுவனத்தின் ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்த வழித்தடம் இயக்கப்படும். 24 ஏப்ரல் 2013-இல் இந்தத் திட்டம் பிரசரானா மலேசியா நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டது. இந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும். 25 நிலையங்கள் இந்த வழித்தடத்தில் 25 நிலையங்கள் உள்ளன. 37.8 கிமீ நீளமுள்ள இந்த வழித்தடத்தில், பெரும்பாலும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. அத்துடன் ஒரே ஒரு நிலத்தடி நிலையம் மட்டுமே உள்ளது. இந்த வழித்தடத்தில், பண்டார் உத்தாமா எம்ஆர்டி நிலையத்தில் எம்ஆர்டி காஜாங் வழித்தடம்; கிளன்மேரி எல்ஆர்டி நிலையத்தில் கிளானா ஜெயா வழித்தடம் எனும் இரண்டு பரிமாற்ற வழித்தடங்களின் சேவைகளும் உள்ளன. வரலாறு [ { "type": "ExternalData", "service": "geoline", "ids": "Q17055821", "properties": { "stroke": "#00aae4", "stroke-width": 6 } }, { "type": "Feature", "properties": { "marker-symbol": "rail-metro", "description": "", "marker-color": "#5AB8E6", "marker-size": "small", "title": "SA23 Klang Jaya" }, "geometry": { "type": "Point", "coordinates": [ 101.44191473454, 3.00542541046 ] } }, { "type": "Feature", "properties": { "marker-symbol": "rail-metro", "description": "", "marker-color": "#5AB8E6", "marker-size": "small", "title": "SA06 SS7" }, "geometry": { "type": "Point", "coordinates": [ 101.59116357297, 3.10614377042 ] } }, { "type": "Feature", "properties": { "marker-symbol": "rail-metro", "marker-color": "#5AB8E6", "marker-size": "small", "title": "SA04 Tropicana" }, "geometry": { "type": "Point", "coordinates": [ 101.59565895528, 3.12978458104 ] } }, { "type": "Feature", "properties": { "marker-symbol": "rail-metro", "description": "", "marker-color": "#5AB8E6", "marker-size": "small", "title": "SA20 Pasar Jawa" }, "geometry": { "type": "Point", "coordinates": [ 101.44757151335, 3.04748271470 ] } }, { "type": "Feature", "properties": { "marker-symbol": "rail-metro", "marker-color": "#5AB8E6", "marker-size": "small", "title": "SA10 Stadium Shah Alam" }, "geometry": { "type": "Point", "coordinates": [ 101.54915213317, 3.07996069394 ] } }, { "type": "Feature", "properties": { "marker-symbol": "rail-metro", "description": "", "marker-color": "#5AB8E6", "marker-size": "small", "title": "SA05 Damansara Idaman" }, "geometry": { "type": "Point", "coordinates": [ 101.59421592683, 3.12275693893 ] } }, { "type": "Feature", "properties": { "marker-symbol": "rail-metro", "marker-color": "#5AB8E6", "marker-size": "small", "title": "SA12 Dato Menteri" }, "geometry": { "type": "Point", "coordinates": [ 101.52116058111, 3.06990351872 ] } }, { "type": "Feature", "properties": { "marker-symbol": "rail-metro", "marker-color": "#5AB8E6", "marker-size": "small", "title": "SA15 Seksyen 7 Shah Alam" }, "geometry": { "type": "Point", "coordinates": [ 101.48700535029, 3.06745011950 ] } }, { "type": "Feature", "properties": { "marker-symbol": "rail-metro", "description": "", "marker-color": "#5AB8E6", "marker-size": "small", "title": "SA22 Seri Andalas" }, "geometry": { "type": "Point", "coordinates": [ 101.44075870246, 3.01611533070 ] } }, { "type": "Feature", "properties": { "marker-symbol": "rail-metro", "description": "", "marker-color": "#5AB8E6", "marker-size": "small", "title": "SA01 Bandar Utama" }, "geometry": { "type": "Point", "coordinates": [ 101.61899003012, 3.14495975816 ] } }, { "type": "Feature", "properties": { "marker-symbol": "rail-metro", "description": "", "marker-color": "#5AB8E6", "marker-size": "small", "title": "SA03 Bu11" }, "geometry": { "type": "Point", "coordinates": [ 101.60458266467, 3.13340283420 ] } }, { "type": "Feature", "properties": { "marker-symbol": "rail-metro", "description": "", "marker-color": "#5AB8E6", "marker-size": "small", "title": "SA19 Jalan Meru" }, "geometry": { "type": "Point", "coordinates": [ 101.45205616683, 3.05906144422 ] } }, { "type": "Feature", "properties": { "marker-symbol": "rail-metro", "description": "", "marker-color": "#5AB8E6", "marker-size": "small", "title": "SA21 Taman Selatan" }, "geometry": { "type": "Point", "coordinates": [ 101.44239216775, 3.02693639075 ] } }, { "type": "Feature", "properties": { "marker-symbol": "rail-metro", "description": "", "marker-color": "#5AB8E6", "marker-size": "small", "title": "SA24 Bandar Bukit Tinggi" }, "geometry": { "type": "Point", "coordinates": [ 101.44603192538, 2.99314700655 ] } }, { "type": "Feature", "properties": { "marker-symbol": "rail-metro", "description": "", "marker-color": "#5AB8E6", "marker-size": "small", "title": "SA02 Kayu Ara" }, "geometry": { "type": "Point", "coordinates": [ 101.61674380034, 3.13483031331 ] } }, { "type": "Feature", "properties": { "marker-symbol": "rail-metro", "marker-color": "#5AB8E6", "marker-size": "small", "title": "SA26 Johan Setia" }, "geometry": { "type": "Point", "coordinates": [ 101.45934104651, 2.97641129914 ] } }, { "type": "Feature", "properties": { "marker-symbol": "rail-metro", "description": "", "marker-color": "#5AB8E6", "marker-size": "small", "title": "SA07 Glenmarie" }, "geometry": { "type": "Point", "coordinates": [ 101.58869057626, 3.09518423895 ] } }, { "type": "Feature", "properties": { "marker-symbol": "rail-metro", "marker-color": "#5AB8E6", "marker-size": "small", "title": "SA09 Kerjaya" }, "geometry": { "type": "Point", "coordinates": [ 101.56195968121, 3.08229619917 ] } }, { "type": "Feature", "properties": { "marker-symbol": "rail-metro", "description": "", "marker-color": "#5AB8E6", "marker-size": "small", "title": "SA18 Pasar Besar Klang" }, "geometry": { "type": "Point", "coordinates": [ 101.45083307952, 3.06795365220 ] } }, { "type": "Feature", "properties": { "marker-symbol": "rail-metro", "marker-color": "#5AB8E6", "marker-size": "small", "title": "SA14 UiTM Shah Alam" }, "geometry": { "type": "Point", "coordinates": [ 101.50119691819, 3.06278171732 ] } }, { "type": "Feature", "properties": { "marker-symbol": "rail-metro", "marker-color": "#5AB8E6", "marker-size": "small", "title": "SA17 Bandar Baru Klang" }, "geometry": { "type": "Point", "coordinates": [ 101.46592855185, 3.06267993897 ] } }, { "type": "Feature", "properties": { "marker-color": "#5AB8E6", "marker-size": "small", "title": "Johan Setia Depot", "marker-symbol": "warehouse", "description": "" }, "geometry": { "type": "Point", "coordinates": [ 101.46522, 2.97608 ] } } ] முன்னதாக, மொத்தம் 26 நிலையங்கள் கட்டப்பட்ட திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு நிலையத்திற்கும் இடையே இரண்டு கிலோமீட்டர் தூர இடைவெளி வரையறுக்கப்பட்டது.அவற்றுள் ஒரு நிலையம் நிலத்தடி நிலையமாக இருக்க வேண்டும்; மற்ற 25 நிலையங்கள் உயர்த்தப்பட்ட நிலையங்களாக இருக்க வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டது. 2018 மலேசியப் பொதுத் தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக, புதிய பாக்காத்தான் அரப்பான் அரசாங்கம் இந்தத் திட்டத்தின் செலவைக் குறைக்க முடிவு செய்தது. அதன் காரணமாக தொடக்கத் திட்டத்தில் ஆறு நிலையங்களின் கட்டுமானம் நிறுத்தி வைக்கப்பட்டது. திட்டச் சீரமைப்பு திட்டத்திற்கான அதிக செலவு; வழித்தடத்தின் நிலத்தடி பகுதியில் தேவையற்ற சுரங்கப்பாதைகள்; மற்றும் அப்பகுதியில் குறைவான பயணிகளின் எண்ணிக்கை; ஆகியவை செலவைக் குறைக்க முடிவு செய்த காரணங்கள் என குறிப்பிடப்பட்டது. மேலும் சில செலவுக் குறைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆறு பெட்டிகள் கொண்ட தொடருந்துகளை மூன்று பெட்டிகள் கொண்ட தொடருந்துகளாக மாற்றுவது தொடருந்துகளை 42-இல் இருந்து 22-ஆகக் குறைப்பது நிலையங்களின் அளவைக் குறைப்பது விலையுயர்ந்த தொழில் நுட்பங்களைக் குறைப்பது பிற செலவுகளைக் குறைப்பது கட்டுமான நிறைவு காலம், 2020-இல் இருந்து 2024 வரை நீட்டிக்கப்பட்டது. கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள் பத்துமலை–புலாவ் செபாங் வழித்தடம் தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம் அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம் கிளானா ஜெயா வழித்தடம் கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து கேஎல்ஐஏ போக்குவரத்து கோலாலம்பூர் மோனோரெயில் காஜாங் வழித்தடம் கேஎல் சென்ட்ரல்–இஸ்கைபார்க் சா ஆலாம் வழித்தடம் புத்ராஜெயா வழித்தடம் எம்ஆர்டி சுற்று வழித்தடம் சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம் காட்சியகம் கட்டுமானத்தில் உள்ள நிலையங்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Official LRT3 website MRT and LRT3 Line Integrations Rapid KL, LRT3 service brands மலேசியாவில் போக்குவரத்து மலேசியத் தொடருந்து நிலையங்கள் மலேசியாவில் தொடருந்து போக்குவரத்து‎
683130
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9
சந்தன அபேரத்ன
சந்தன அபேரத்ன ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். தற்போது அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பணியாற்றுகிறார். அவர் 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினராக புத்தளம் மாவட்டத்தில் இருந்து இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கோள்கள் வாழும் நபர்கள் இலங்கை அமைச்சர்கள் இலங்கையின் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
683133
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE
சிவ் சரண் குப்தா
சிவ் சரண் குப்தா (Shiv Charan Gupta)(பிறப்பு 3 மார்ச் 1925 உதம்பூர், சம்மு காசுமீர்-இறப்பு 15 மார்ச் 2008, உதம்புர், சம்மு காசுமீர்) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சம்மு காசுமீர் சட்டப் பேரவை மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். உதம்பூர் மாவட்டத்தில் உள்ள உதம்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினராக குப்தா இருந்தார் 1996 முதல் 2001 வரை பதவி வகித்துள்ளார். மேற்கோள்கள் 3வது மக்களவை உறுப்பினர்கள் 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் 2008 இறப்புகள் 1925 பிறப்புகள்
683135
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D15%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
எஸ்எஸ்15 எல்ஆர்டி நிலையம்
எஸ்எஸ்15 எல்ஆர்டி நிலையம் அல்லது எஸ்எஸ்15 இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் (ஆங்கிலம்: SS15 LRT Station; மலாய்: Stesen LRT SS15; சீனம்: SS15站) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த நிலையம் சிலாங்கூர், சுபாங் ஜெயா, SS15; SS17 சுற்றுப்புறங்களை இணைக்கிறது; மற்றும் இந்த நிலையம் சுபாங் ஜெயா ஜெங்கா சாலையில் அமைந்துள்ளது. அமைவு கிள்ளான் பள்ளத்தாக்கு இலகு விரைவுப் போக்குவரத்து விரிவாக்கத் திட்டம், கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரை நீடித்தது. SS15 பகுதியில் இந்த நிலையம் அமைந்து இருந்ததால், எஸ்எஸ்15 எனும் பெயரும் இந்த நிலையத்திற்குச் சூட்டப்பட்டது. சுபாங் ஜெயா SS15; SS17, சுபாங் ஜெயா ஆகியவற்றின் சுற்றுப்புறங்கள் இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன. கிளானா ஜெயா வழித்தடம் கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடம்' (LRT Kelana Jaya Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும். இந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும். கிளானா ஜெயா வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கிமீ நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. காட்சியகம் மேலும் காண்க மலேசிய தொடருந்து போக்குவரத்து கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல் பெட்டாலிங் ஜெயா நகரப் பிரிவுகளின் பட்டியல் கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் SS15 LRT Station மலேசியத் தொடருந்து நிலையங்கள் கிளானா ஜெயா வழித்தடம்
683138
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%87
பெர்சினிடே
பெர்சினிடே (Percnidae) என்பது கிராப்சோயிடே என்ற பெருங் குடும்ப நண்டுகளின் ஒன்றாகும். பெர்சினிடே குடும்பத்தில் ஒரு பேரினத்தில் விவரிக்கப்பட்ட ஆறு சிற்றினங்கள் உள்ளன. இப்பேரினம் பெர்க்னான் ஆகும். இதனை ஜிசுடெல் 1848ஆம் ஆண்டு விவரித்தார். மேற்கோள்கள் மேலும் வாசிக்க கணுக்காலி குடும்பங்கள்
683140
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF
வஞ்சித் பகுஜன் ஆகாடி
வஞ்சித் பகுஜன் ஆகாடி (Vanchit Bahujan Aagadi) என்பது பிரகாஷ் அம்பேத்கரால் 20 மார்ச் 2018 அன்று நிறுவப்பட்ட ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி முதன்மையாக இந்தியா மஹாராஷ்டிரா அடிப்படையாகக் கொண்டது. வஞ்சித் பகுஜன் ஆகாடி ஜோதிபா கோவிந்த ராவ் புலே மற்றும் அம்பேத்கரிச சித்தாந்தத்தை பின்பற்றுகிறது. வரலாறும் பின்னணியும் 2018 சனவரி 1 அன்று, மகாராஷ்டிராவின் பாந்தர்பூரில் தங்கர் சமூக மக்கள் நடத்திய மாநாட்டில் வஞ்சித் பகுஜன் ஆகாடி என்ற பெயர் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. மாநாட்டுக்கு பிரகாஷ் அம்பேத்கர் தலைமை தாங்கினார். இதுவரை சுமார் 100 சிறிய அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளன. மேற்கோள்கள் மகாராட்டிர அரசியல் கட்சிகள்
683141
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
இலெகோண்டைட்டு
இலெகோண்டைட்டு (Lecontite) என்பது (NH4,K)NaSO4·2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சோடியம் அமோனியம் சல்பேட்டு இருநீரேற்றுடன் அமோனியாவிற்குப் பதிலாக பொட்டாசியம் பதிலீடு செய்யப்பட்ட குறிப்பாக நான்கில் ஒரு பங்கு பொட்டாசியம் உள்ள கனிமமாக இக்கனிமம் கருதப்படுகிறது.) இது ஒரு சல்பேட்டு வகை கனிமமாகும். ஓண்டுராசு நாட்டில் உள்ள லாசு பீட்ராசு குகையில் இயான் லாரன்சு இலெகோண்டே என்பவரால் ஒரு அங்குல நீளமுள்ள படிகங்கள் உட்பட வௌவால் கழிவுகளின் சிதைவுப் பொருளாக இது கண்டறியப்பட்டது. 1858 ஆம் ஆண்டில் டபிள்யூ.இயே. டெய்லரால் தனி கனிமமாக அடையாளம் காணப்பட்டது. 1963 ஆம் ஆண்டு நிலவரப்படி, பெரும்பாலான இயற்கை மாதிரிகள் அதே குகையில் இருந்து வந்தவையாகும். அம்மோனியம் சல்பேட்டுடன் நீரிய கரைசலிலுள்ள சோடியம் சல்பேட்டைச் சேர்த்து கரைசலை வினைபுரியச் செய்து படிகமாக்குவதன் மூலம் இலெகோண்டைட்டை எளிதில் தயாரிக்கவும் முடியும். பன்னாட்டு கனிமவியல் சங்கம் இலெகோண்டைட்டு கனிமத்தை Lcn என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் அமோனியம் கனிமங்கள் சோடியம் கனிமங்கள் சல்பேட்டுக் கனிமங்கள் நேர்ச்சாய்சதுரக் கனிமங்கள்
683142
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
அம்பேத்கரிசம்
அம்பேத்கரிசம் (Ambedkarism) என்பது இந்தியப் பொருளாதார வல்லுநரும், வழக்கறிஞரும், சமூகச் சீர்திருத்தவாதியுமான பீ. ஆர்.அம்பேத்கரின் போதனை, சித்தாந்தம் அல்லது தத்துவம் என்று அழைக்கப்படுகிறது. சகோதரத்துவம், சனநாயகம், வகுப்புவாதத் தொகுதிகள், இந்து மதத்திலிருந்து மதம் மாறுதல், அரசியல் அதிகாரம், சட்டத்தின் ஆட்சி, நவாயனம் போன்ற விசயங்களில் அம்பேத்கரிசம் சிறப்பு கவனம் செலுத்துகிறது. இதனையும் காண்க அம்பேத்கர் மக்கள் இயக்கம் தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாம்செப் பகுஜன் சமாஜ் கட்சி மேற்கோள்கள் ஆதாரங்கள் அம்பேத்கர்
683144
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
தினாக்சைட்டு
தினாக்சைட்டு (Tinaksite) என்பது K2Na(Ca,Mn2+)2TiO[Si7O18(OH)] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.Tnk வடக்கு உருசியாவில் இக்கனிமம் கண்டறியப்பட்டது. தினாக்சைட்டு சாம்பல்-வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு அல்லது பழுப்பு நிறமாகக் காணப்படுகிறது. மேலும் இது பெரும்பாலும் சிலிக்கேட்டு வகை கனிமமான சாரோயிட்டு கனிமத்துடன் காணப்படுகிறது. கனிமத்தின் பகுதிக் கூறுகளாக உள்ள தைட்டானியம், சோடியம், பொட்டாசியம், சிலிக்கான் ஆகிய தனிமங்களின் பெயர்களிலிருந்து இக்கனிமத்தின் பெயர் பெறப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் முதன்முதலில் 1965 ஆம் ஆண்டில் தினாக்சைட்டு கனிமத்தை ஒரு கனிமமாக அங்கீகரித்தது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் இலெகோண்டைட்டு கனிமத்தை Tnk என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. மேற்கோள்கள் கால்சியம் கனிமங்கள் சோடியம் கனிமங்கள் பொட்டாசியம் கனிமங்கள் இனோசிலிக்கேட்டுகள் இரத்தினக் கற்கள் முச்சரிவச்சுக் கனிமங்கள்
683145
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%29
ஊசல் (அரசியல்)
ஊசல் (Swing) என்பது தேர்தலின் பொது வாக்காளர் ஆதரவு நிலைபாட்டில் எற்படும் கணக்கிடும் ஓர் பகுப்பாய்வைக் குறிக்கிறது. ஒரு தேர்தலுக்கும் மற்றொரு தேர்தலுக்கும் எற்படும் நேர்மறை அல்லது எதிர்மறை நிலைபாட்டை சதவிகித முறையில் கணக்கிடும் முறையாகும். பல கட்சி ஊசலாட்டம் என்பது வேட்பாளர்கள் அல்லது கட்சிகளுக்கு இடையேயான வாக்காளர்களின் விருப்பத்தில் ஏற்படும் மாற்றத்தை குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட தேர்தல் மாவட்டத்தையோ அல்லது ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையையோ அளவைக்கு எடுத்துக்கொண்டு பகுப்பாய்வு செய்ய அல்லது கணக்கிட இம்முறை உதவுகிறது. கணக்கீடு ஒரு குறிப்பிட்ட தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தையும், முந்தைய தேர்தலில் அதே கட்சி அல்லது வேட்பாளரின் வாக்கு சதவீதத்தையும் ஒப்பிட்டு ஊசலாட்டம் கணக்கிடப்படுகிறது. ஊசலாடும் வாக்காளர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யாத ஒருவரை ஊசலாடும் வாக்காளர் என்று தேர்தல் கருத்துக் கணிப்பாளர்கள் கருதுகிறார்கள். மிதக்கும் வாக்காளர் எப்போதும் ஒரே அரசியல் கட்சிக்கு வாக்களிக்காத ஒருவர் கட்சி சாரா வாக்காளர் ஆவார். இத்தகைய வாக்காளர்கள் மிதக்கும் வாக்காளர் என்று தேர்தல் கருத்துக் கணிப்பாளர்கள் கருதுகிறார்கள். மேற்கோள்கள் ஐக்கிய அமெரிக்காவில் தேர்தல்கள் ஐக்கிய இராச்சியத்தில் தேர்தல்கள் தேர்தல்
683149
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
தூவானத் தும்பிகள்
தூவானத் தும்பிகள் () என்பது 1987 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள மொழி காதல் நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படமானது பி.பத்மராஜன் எழுதி இயக்கியதாகும், இது இவர் எழுதிய சொந்த புதினமான உதகப்போலயே என்பதை அடிப்படையாகக் கொண்டது. இத்திரைப்படம் ஓர் புதிய முயற்சியில் உருவானதாகும். இது வணிக ரீதியாக தோல்வியடைந்த போதிலும் ரசிகர்களால் இன்றும் பெரிதும் விரும்பப்படுகிறது. அனைத்து காலத்திலும் சிறந்த இந்திய திரைப்படங்களின் பட்டியலில் இது ஐ. பி. என் லைவ் எட்டாவது இடத்தைப் பிடித்தது. இத்திரைப்படமானது சிறந்த இசை, பாடல்கள், உரையாடல்கள், கதாபாத்திரங்கள், விரிவான திரைக்கதை, மோகன்லால் மற்றும் சுமலதாவின் நடிப்பு ஆகியவைகளுக்காக பரவலாக அறியப்படுகிறது. இத்திரைப்படத்தில் மழை என்பது ஓர் முக்கிய கருப்பொருளாகவும், கிட்டத்தட்ட ஓர் கதாபாத்திரமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. கதைச்சுருக்கம் ஜெயகிருஷ்ணன் மணமாகாத ஒரு இளைஞர், அவர் ஒரு மாறுபட்ட இரட்டை வாழ்க்கையை வாழ்கிறார். ஒரு வாழ்க்கை நகரத்தில் உள்ள தனது நண்பர்களுடனும், மற்றொரு வாழ்க்கை தனது தாய் மற்றும் சகோதரியுடன் அவர்களின் கிராமத்திலும் வாழ்கிறார் . அவர் நகரத்தில் தனது நண்பர்களுடன் வாழ்க்கையை கொண்டாடும் ஒரு துணிச்சலான பையனாக இருந்தாலும், அவர் வீட்டில் ஒரு சிக்கனமான குடும்ப மனிதர். அவரது இரட்டை வாழ்க்கை, கிளாரா மற்றும் ராதா என்ற இரண்டு பெண்களை அவர் எப்படி காதலிக்கிறார், அவர்களுக்கு இடையே முடிவெடுப்பதில் அவருக்கு ஏற்படும் சிரமம் ஆகியவற்றைப் பற்றிய படம் இது. கதாப்பாத்திரங்கள் மன்னாரத்தோடி ஜெயகிருஷ்ணனனாக மோகன்லால் கிளாராவாக சுமலதா ராதாவாக பார்வதி ரிஷி (ஜெயகிருஷ்ணனின் நண்பர்) வேடத்தில் அசோகன் தங்கலாக பாபு நம்பூதிரி ராதாவின் சகோதரர் மாதவனாக சிறீநாத் ஜெயகிருஷ்ணனின் தாயார் லட்சுமியாக சுகுமாரி ரவுன்னி அல்லது ராமனுன்னி நாயராக செகதி சிறீகுமார் ராதாவின் தந்தையாக சுகுமாரனாக சங்கரதி மேத்யூ சோசப்பாக எம். ஜி. சோமன் (கிளாராவின் கணவராக கேமியோ) ஜெயகிருஷ்ணனின் சகோதரியான மாலினியாக சுலக்சனா ராதாவின் உறவினரான ரஞ்சினியாக செயலிலிதா. சாந்தகுமாரி பாபுவாக அலெக்சு மேத்யூ (தேவமாதா பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர்) மேற்கோள்கள் இந்தியப் புதினங்களை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் 1987 திரைப்படங்கள்
683154
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D
செபஸ்டியன் குளத்துங்கல்
செபஸ்டியன் குளத்துங்கல் (Sebastian Kulathunkal) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மே 2021 முதல் கேரள சட்டமன்றத்தின், பூஞ்சார் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார். குளத்துங்கல் கேரள காங்கிரசு (எம்) கட்சியை சார்ந்தவராவார். 2021 தேர்தலில், முந்தைய சட்டமன்ற உறுப்பினரான பி. சி. ஜார்ஜை எதிர்த்து 16,581 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேற்கோள்கள் கேரள சட்டமன்றம்கேரள அரசு வாழும் நபர்கள் 1966 பிறப்புகள் கேரள அரசியல்வாதிகள்
683157
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE
குருநானக் தாம் குருத்துவாரா
குருத்துவாரா குரு நானக் தாம் (Gurudwara Guru Nanak Dham) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், இராமேசுவரத்தில் உள்ள ஒரு குருத்துவார் ஆகும். முதல் சீக்கிய குருவான குரு நானக், சுமார் 1511 இல் இராமேசுவரத்திற்கு வந்ததன் நினைவாக இந்த குருத்துவாரா கட்டப்பட்டது. இந்த குருத்வாராவை தமிழ்நாடு ஆளுநர், சுர்சித் சிங் பர்னாலா 2005 இல் பார்வையிட்டார். பின்னர் குருத்வாராவை பழுதுபார்ப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் உதவி செய்வதாக அதன் பொறுப்பாளர்களுக்கு உறுதியளித்தார். அதன் பின்னர் குருத்வாரா விரிவாக்கப்பட்டது. இராமேசுவரத்தில் சீக்கியர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லாததால், இது சென்னையில் உள்ள, ஸ்ரீ குருநானக் சத் சங் சபா குருத்வாராவின் நிர்வாகத்தால் பராமரிக்கபடுகிறது. மேற்கோள்கள் இராமேசுவரம் இராமநாதபுரம் மாவட்டம்
683159
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%87
கிராப்சோயிடே
கிராப்சோயிடே (Grapsoidea) நண்டுகளின் ஒரு மீப்பெரும் குடும்பமாகும். இவை நன்கு அறியப்பட்டவை. இவற்றில் பெரும்பான்மையானவை நிலப்பரப்புகளில் வாழக் கூடியன. இவை இனப்பெருக்கம் செய்ய மட்டுமே கடலுக்குச் செல்கின்றன. ஒரு சில நன்னீரில் வாழ்பவையாக உள்ளன. மிகவும் வழக்கமான வாழ்க்கை முறையைக் கொண்ட மற்றொரு நன்கு அறியப்பட்ட சிற்றினம் சீன நடு நண்டு, எரியோசீர் சைனென்சிசு ஆகும். கிராப்சிடே மற்றும் பிளாகுசிடே வகைப்பாட்டியலில் திருத்தம் தேவைப்படுகிறது. பிளாகுசிடே ஒற்றைத்தொகுதி மரபு உயிரினத் தோற்றம்கொண்டவை அல்ல. செசார்மிடே குடும்பத்திலுள்ள பல பேரினங்களுக்கும் இது பொருந்தும். கிராப்சோயிடேயாவின் மிக நெருக்கமான வாழக்கூடிய உறவினவையாக ஊசிபோடோய்டியா உள்ளது. உண்மையில், இவை ஒன்றையொன்று பொறுத்தவரை பலதொகுதி உயிரினத் தோற்றம் கொண்டவை என்று தோன்றுகிறது. மேலும் ஊசிபோடோய்டியாவை கிராப்சோயிடேவுடன் இணைப்பது உத்தரவாதமாகத் தெரிகிறது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் நண்டுகள் கணுக்காலி குடும்பங்கள்
683160
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%87
கிளைப்டோகிராப்சிடே
கிளைப்டோகிராப்சிடே (Glyptograpsidae) என்பது கிராப்சோயிடே என்ற மீப்பெரும் குடும்பத்தைச் சேர்ந்த நண்டுகளின் குடும்பமாகும். இவை மத்திய அமெரிக்காவில் வாழ்கின்றன. பேரினங்கள்: கிளைப்டோகிராப்சசு சுமித், 1870 பிளாட்டிகிரோக்ராப்சசு தி மேன், 1896 மேற்கோள்கள் நண்டுகள் கணுக்காலி குடும்பங்கள்
683162
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D
கமல்காட்
கமல்காட் (Kamalgad) (தாமரைக் கோட்டை) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள வய் என்னும் ஊரிலுள்ள ஒரு சதுரமான மலைக் கோட்டை ஆகும். அமைவிடம் இது வய்க்கு மேற்கே பத்து மைல் (16 கி. மீ) தொலைவிலும், சாதாராவிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இதன் ஆயத்தொலைவுகள் 18°05 'N, 74°00' E. இது கடல் மட்டத்திலிருந்து 4,511 அடி (1,375 மீ) உயரத்தில் உள்ளது. வரலாறு கோட்டையை கட்டியவர் யார் என்று தெரியவில்லை. மராத்தியர் காலத்தில், கமல்காட், பாண்டவ்காட் மற்றும் இப்பகுதியில் உள்ள பிற கோட்டைகள் பிஜாப்பூரைச் சேர்ந்த ஒருவரால் நிர்வகிக்கப்பட்டன மராத்திய மொழியின் இப்போது செயலிழந்த மோடி எழுத்துகளில் எழுதப்பட்ட ஆரம்பகால ஆவணங்கள் கோட்டையை 'கட்டல்காட்' என்று குறிப்பிடுகின்றன. இந்த ஆவணங்கள் குறித்து விரிவான ஆய்வு நடந்து வருகிறது. 1818 ஏப்ரலில், மேஜர் தாட்சர் தலைமையிலான பிரித்தானிய படைக்கு எதிராக கமல்காட் வீழ்ந்தது. ஆங்கிலேயர்களின் கீழ், இது போர்க் கைதிகளை தூக்கிலிட இக்கோட்டைப் பயன்படுத்தப்பட்டது. முக்கிய அம்சங்கள் இந்தக் கோட்டை 3 முதல் 4 ஏக்கர் பரப்பளவில் ஒரு தட்டையான நிலப்பரப்பை உள்ளடக்கியுள்ளது. இது செங்குத்தான பாறைகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் இந்த பாறையை ஆபத்தான முறையில் ஏறுவதன் மூலம் மட்டுமே அடைய முடியும். முன்னதாக, ஒரு செயற்கை சுரங்கப்பாதை மூலம் அணுகுமுறை இருந்தது. இது பாறையின் அடிவாரத்தில் தொடங்கி மேலே வெளிப்பட்டது. இப்போது இந்த சுரங்கப்பாதை ஒரு பெரிய பாறை விழுந்து மூடப்பட்டது. அது ஒருபோதும் அகற்றப்படவில்லை. புகைப்படங்கள் மகாபலேசுவரர் பீடபூமியின் காட்சி மேற்கோள்கள் இதனையும் காண்க மகாராட்டிராவில் உள்ள கோட்டைகளின் பட்டியல் இந்தியாவில் உள்ள கோட்டைகளின் பட்டியல் பாஜி பிரபு தேஷ்பாண்டே மராத்தியர் மராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல் முகலாய-மராத்தியப் போர்கள் இந்தியாவிலுள்ள கோட்டைகள் மகாராட்டிர கோட்டைகள்
683163
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%87
கிராப்சிடே
கிராப்சிடே (Grapsidae) என்பது சதுப்பு நண்டு, கடற்கரை நண்டு அல்லது டலோன் நண்டு என்று பல்வேறு பெயர்களில் அறியப்படும் நண்டுகளின் குடும்பமாகும். இந்தக் குடும்பம் ஒற்றைத் தொகுதி பிறப்பு உயிரிக்கிளையினை உருவாக்கியது உறுதி செய்யப்படவில்லை. இவை கடற்கரையோரப் பாறைகள், முகத்துவாரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் மிதக்கும் கடற்பாசி மற்றும் மிதவை ஆகியவற்றிற்கு இடையே காணப்படுகின்றன. பேரினங்கள் முன்பு கிராப்சிடே குடும்பத்தின் துணைக் குடும்பங்களாகக் கருதப்பட்ட பல பேரினங்கள் இப்போது வருணிடே மற்றும் பிளாகுசிடே உள்ளிட்ட குடும்பங்களாகக் கருதப்படுகிறது. நாற்பது சிற்றினங்கள் பத்து பேரினங்களின் கீழ் இக்குடும்பத்தில் உள்ளன. இரண்டு சிற்றினங்கள் புதைபடிவங்களிலிருந்து மட்டுமே அறியப்படுகின்றன. ஜியோக்ராப்சசு இசுடிம்ப்சன், 1858 கோனியோப்சிசு தி ஹான், 1833 கிராப்சசு இலாமார்க், 1801 லெப்டோகிராப்சோடெசு மாண்ட்கோமெரி, 1931 லெப்டோகிராப்சசு எச். மில்னே எட்வர்ட்சு, 1853 லிட்டோகிராப்சசு † சுவிட்சர் & கரசாவா, 2004 மெட்டோபோகிராப்சசு எச். மில்னே எட்வர்ட்சு, 1853 மியோக்ராப்சசு †பிளெமிங், 1981 பாச்சிகிராப்சசு ராண்டல், 1840 பிளேன்சு போடிச், 1825 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கணுக்காலி குடும்பங்கள் நண்டுகள்
683165
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8B%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
சுப்ரதோ பக்சி
சுப்ரதோ பக்சி (Subroto Bagchi) (பிறப்பு: 31 மே 1959) இந்தியாவைச் சேர்ந்த ஓர் தொழில் முனைவோர் ஆவார். அனைத்துலகத் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனை வழங்குதலுக்கும் செயல்படுத்துதலுக்குமான மைன்றீ என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். இளமை வாழ்க்கை ஒடிசாவின் பட்நாகரில் மக்கான் கோபால் பக்சி மற்றும் இலபோனியா பிரோவா ஆகியோருக்கு மகனாக சுப்ரதோ பக்சி பிறந்தார். இவர் உத்கல் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்றார். தொழில் 1976 ஆம் ஆண்டில் ஒடிசா அரசாங்கத்தின் தொழில்துறையில் எழுத்தராக தனது பணி வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு ஓராண்டு பணியாற்றிய பிறகு, 1977 ஆம் ஆண்டில் மேலாண்மை பயிற்சியாளராகச் சேர்ந்தார். 1981 ஆம் ஆண்டில், கணினி துறையில் நுழைந்தார். 1981 முதல் 1999 வரை பல கணினி நிறுவனங்களில் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் செயல்பாடுகள் போன்ற பல்வேறு பணிகளில் பணியாற்றினார்.விப்ரோவில் மிக நீண்ட காலம் பணியாற்றினார். 1998 ஆம் ஆண்டில் விப்ரோவை விட்டு வெளியேறி லூசண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். 1999 ஆம் ஆண்டில் 9 பிற இணை நிறுவனர்களுடன் இணைந்து மைன்றீயை நிறுவ லூசெண்டை விட்டு வெளியேறினார். மைன்றீ என்பது சுமார் 20000க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட 1 பில்லியன் டாலர் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும். இது இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. மைன்றி தொடங்கியபோது, சுப்ரத்தோ அதன் தலைமை இயக்க அலுவலராகத் தனது பணியைத் தொடங்கினார். 2010 ஆம் ஆண்டில், இவர் அதன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 1,2012 அன்று, தலைவர் பதவியை ஏற்றார். 2016 ஜனவரியில் தலைவர் பதவியில் இருந்து விலகினார். 2016 மே 1 அன்று, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் அழைப்பின் பேரில், ஒடிசா திறன் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக ஆண்டுக்கு 1 ரூபாய் சம்பளத்தில் முழுநேரப் பொறுப்பை ஏற்றார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Official Mindtree page 1957 பிறப்புகள் வாழும் நபர்கள்