id
stringlengths 1
6
| url
stringlengths 31
789
| title
stringlengths 1
93
| text
stringlengths 9
259k
|
---|---|---|---|
685175 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20703%E0%AE%86%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 703ஆ (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 703ஆ (National Highway 703B (India)) பொதுவாக தெ. நெ. 703ஆ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 3-இன் ஒரு துணைச்சாலையாகும். தே. நெ. 703அ இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
வழித்தடம்
மோகா-கோட் இசி கான்-மக்கு-ஹரிகே-பிக்கிவிண்ட்-கல்ரா.
சந்திப்புகள்
மோகாவில்
மக்கு அருகே
மக்குவில்
ஹரிகே
பிக்கிவிண்ட்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் தே. நெ. 703ஆ
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
685181 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | தர்வா சட்டமன்றத் தொகுதி | தார்வா சட்டமன்றத் தொகுதி (Darwha Assembly constituency) என்பது இந்தியாவில் மகாராட்டிர மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். தார்வா சட்டமன்றத் தொகுதி 1972 முதல் 2004 தேர்தல்கள் வரை செயல்பாட்டிலிருந்தது. இத்தொகுதி யவத்மாள் மாவட்டத்தில் உள்ளது.
இது யவத்மாள்-வாசிம் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2004
மேற்கோள்கள்
மகாராட்டிர அரசியல்
யவத்மாள் மாவட்டம் |
685185 | https://ta.wikipedia.org/wiki/9000 | 9000 | 9000 (9000 (number)) என்பது 8999 அடுத்ததாகவும் 9001க்கு முந்தையதாகவும் உள்ள இயல் எண் ஆகும்.
9001-9999 வரம்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எண்கள்
9001 முதல் 9099 வரை
9001-ஆறகல் பாகத்தனி 9007
9007-ஆறகல் பகாத்தனி 9001
9009-மையப்படுத்தப்பட்ட கனசதுர எண்
9025 = 952 மையப்படுத்தப்பட்ட எண்கோண எண்
9029-சோபி ஜெர்மைன் பகா எண்
9041-சிறப்பு பகா எண்
9045-முக்கோண எண்
9059-சோபி ஜெர்மைன் பகா எண்
9072-தசகோண எண்
9077-மார்கோவ் எண்
9091-தனித்துவ பகா எண்
9100 முதல் 9199 வரை
9103-சிறப்பு பகா எண்
9126-ஐங்கோண பிரமிடு எண்
9139-முக்கோண எண்
9175-மிகச் சிறிய (நிரூபிக்கக்கூடிய) சியர்பின்சுகி எண் பதின்மம் 10:9175 * 10n + 1 எப்போதும் பகா எண்களில் ஒன்றால் வகுக்கப்படுகிறது {7,11,13,73}.
9180-முக்கோண எண்
9200 முதல் 9299 வரை
92 = 962
9221-சோபி ஜெர்மைன் பகா எண்
9224-எண்முக எண்
x">9241-x = y + 1 வடிவத்தின் கியூபன் பகா எண்
9261 = 213, மிகப்பெரிய 4 இலக்க சரியான கனசதுரம்
9272-விந்தை எண்
9283-மையப்படுத்தப்பட்ட எழுகோண எண்
9293-சோபி ஜெர்மைன் பகா எண், சூப்பர் பகா எண்
9300 முதல் 9399 வரை
9316-முக்கோண எண்
9319 சிறப்பு பகா எண்
9334-நவகோண எண்
9349-லூகாசு பகா எண், பிபனாச்சி எண்
9371-சோபி ஜெர்மைன் பகா எண்
9376-1-தானியங்கி எண்
9397-சமநிலை பகா எண்
9400 முதல் 9499 வரை
9403-சிறப்பு பகா எண்
9409 = 972, மைய எண்கோண எண்
9419-சோபி ஜெர்மைன் பகா எண்
9439-பன்னிரண்டாவது பகா நான்கு மடங்கு தொகுப்பை நிறைவு செய்கிறது
9453-முக்கோண எண்
9455-சதுர பிரமிடு எண்
9457-பத்தாம் எண்
9461 சிறப்பு பகா எண், இரட்டைப் பகாத்தனி
9467-பாதுகாப்பான பகா எண்பாதுகாப்பான பகா எண்
9473-சோபி ஜெர்மைன் முதன்மையானது, சமநிலையான முதன்மையானது, முதலாம் முதன்மையானது
9474-அடிப்படை 10-ல் தன்விருப்பு எண்
9479-சோபி ஜெர்மைன் பகா எண்
9496-தொலைபேசி/தொடர்பு எண்
9500 முதல் 9599 வரை
9511-முதன்மை எண்
9521-பகா எண்
9533-பகா எண்
9539-சோபி ஜெர்மைன் பகா எண், சிறப்பு பகா எண்
9551-முதல் பகா எண், இதைத் தொடர்ந்து 35 தொடர்ச்சியான பகு எண்
9587-பாதுகாப்பான பகா எண், 35 தொடர்ச்சியான கூட்டு எண்களைப் பின்பற்றுகிறது
9591-முக்கோண எண்
9592-100,000க்கு கீழ் உள்ள பகா எண்களின் எண்ணிக்கை
9600 முதல் 9699 வரை
9601-முதல் பகா எண்
9604 = 982
9619-சிறப்பு பகா எண்
9629-சோபி ஜெர்மைன் பகா எண்
9647-மையப்படுத்தப்பட்ட எப்டாகனல் எண்
9661-சிறப்பு பகா எண், ஒன்பது தொடர்ச்சியான பகா எண்களின் கூட்டுத்தொகை (1049 + 1051 + 1061 + 1063 + 1069 + 1087 + 1091 + 1093 + 1097)
9689-சோபி ஜெர்மைன் பகா எண்
9699-முக்கோணமற்ற எண்
9700 முதல் 9799 வரை
9721-வடிவத்தின் பகா எண் 2p-1
9730-முக்கோண எண்
9739-சிறப்பு பகா எண்
9743-பாதுகாப்பான பகா எண்
9791-சோபி ஜெர்மைன் பகா எண்
9800 முதல் 9899 வரை
9800-ரூத்-ஆரோன் இணை உறுப்பினர் (முதல் வரையறை 9801 உடன்)
9801 = 2" href="./99_(number)" id="mw8Q" rel="mw:WikiLink" title="99 (number)">99, மிகப்பெரிய 4 இலக்க சரியான சதுரம், மையமான எண்கோண எண், சதுர ஐங்கோண எண், ரூத்-ஆரோன் இணையின் உறுப்பினர் (முதல் வரையறை 9800 உடன்)
9833-சூப்பர் பிரைம்
9839-பாதுகாப்பான பகா எண்
9850-பத்தாவது எண்
n" data-lin="259" href="./9855" id="mw_Q" rel="mw:WikiLin" title="9855">9855-n × n சாதாரண மேஜிக் சதுரம் மற்றும் n-ராணிகளின் சிக்கல் n = 27.
9857-முதல் பகா எண்
9859-சிறப்பு பகா எண்
9870-முக்கோண எண்
9871-சமநிலை பகா எண்
9880-முக்கோண எண்
9887-பாதுகாப்பான பகா எண்
9900 முதல் 9999 வரை
9901-தனித்துவ பகா எண், ஏழு தொடர்ச்சியான பகா எண்களின் கூட்டுத்தொகை (1381 + 1399 + 1409 + 1423 + 1427 + 1429 + 1433)
9905-16 பாடல்களின் எண்ணிக்கை, அவற்றின் ஓட்ட நீளங்கள் பலவீனமாக அதிகரித்து வருகின்றன அல்லது பலவீனமாக குறைந்து வருகின்றன
9923-சிறப்பு பகா எண், x86 எம் எஸ்-டாஸ்-ல் மிகச் சிறிய நிச்சயமாக செயல்படுத்தக்கூடிய பகா எண்
9949-ஒன்பது தொடர்ச்சியான பகா எண்களின் கூட்டுத்தொகை (1087 + 1091 + 1093 + 1097 + 1103 + 1109 + 1117 + 1123 + 1129)
9973-சிறப்பு பகா எண்
9988-13 குறுக்குவெட்டுகளுடன் கூடிய முதன்மை முடிச்சுகளின் எண்ணிக்கை
9999-கப்ரேக்கர் எண், ஒற்றெண்
முதன்மை எண்கள்
112 பகா எண்கள் 9000 முதல் 10000 வரை உள்ளன
9001, 9007, 9011, 9013, 9029, 9041, 9043, 9049, 9059, 9067, 9091, 9103, 9109, 9127, 9133, 9137, 9151, 9157, 9161, 9173, 9181, 9187, 9199, 9203, 9209, 9221, 9227, 9239, 9241, 9257, 9277, 9281, 9283, 9293, 9311, 9319, 9323, 9337, 9341, 9343, 9349, 9371, 9377, 9391, 9397, 9403, 9413, 9419, 9421, 9431, 9433, 9437, 9439, 9461, 9463, 9467, 9473, 9479, 9491, 9497, 9511, 9521, 9533, 9539, 9547, 9551, 9587, 9601, 9613, 9619, 9623, 9629, 9631, 9643, 9649, 9661, 9677, 9679, 9689, 9697, 9719, 9721, 9733, 9739, 9743, 9749, 9767, 9769, 9781, 9787, 9791, 9803, 9811, 9817, 9829, 9833, 9839, 9851, 9857, 9859, 9871, 9883, 9887, 9901, 9907, 9923, 9929, 9931, 9941, 9949, 9967, 9973
மேற்கோள்கள்
முழு எண்கள் |
685193 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D | பிரீத்தி முகுந்தன் | பிரீத்தி முகுந்தன் (Preity Mukhundhan) இந்திய நடிகை, விளம்பர வடிவழகி, நடனக் கலைஞர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் பணிபுரிகிறார்.
தொழில்
2024 ஆம் ஆண்டு வெளியான ஸ்டார் திரைப்படத்தில் கவின் இணையாக இலன் இயக்கத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பிரீத்தி, விளம்பரம் மற்றும் திரைப்படத் தொழிலைத் தவிர, இசைப்படங்களிலும் தோன்றியுள்ளார். 2022 ஆம் ஆண்டு டீஜே அருணாசலம், யோகி பி, சிவாங்கி கிருஷ்ணகுமார் ஆகியோருடம் இணைந்து முட்டு மு2 பாடலிலும் 2024 ஆம் ஆண்டு சாய் அபயங்கருடன் இணைந்து அவருடைய ஆச கூட பாடலிலும் தோன்றியுள்ளார். ஆச கூட பாடலின் மூலம் பெரிதும் அறியப்பட்டார்.
பாட்ஷா மற்றும் ஷர்வி யாதவ் இணைந்து பாடிய மோர்னி பாடலிலும் இவர் இடம்பெற்றுள்ளார்.
திரைப்படங்கள்
திரைப்படங்கள்
இசைப்படங்கள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
இந்தியத் திரைப்பட நடிகைகள்
வாழும் நபர்கள்
தமிழ்த் திரைப்பட நடிகைகள்
2001 பிறப்புகள்
21 ஆம் நூற்றாண்டு நடிகைகள்
மறைக்கப்பட்ட பகுப்புகள்
இந்திய நடிகைகள்
தடப்பகுப்புகள் |
685200 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D | கறுகபுத்தூர் | கறுகபுத்தூர் (Karukaputhur) என்பது கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தின், பட்டாம்பி வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இந்தப் பகுதி திரித்தாலா சட்டமன்றத் தொகுதிக்குள் உள்ளது. இது திருமிட்டக்கோடு ஊராட்சியைச் சேர்ந்தது. இப்பகுதி பாலக்காடு மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் அரை நகர்ப்புறப் பகுதியாகும். இது பாலக்காடு நகரத்தை விட திருச்சூர் நகரத்திற்கு அருகில் உள்ளது.
போக்குவரத்து
கறுகபுத்தூரில் தனியார் பேருந்துகள்தான் அதிகமாக மக்கள் போக்குவரத்தின் பயன்பாட்டுக்கு உள்ளன. இந்த வழியாகத்தான் பட்டாம்பி, நெல்லுவாய் போன்ற இடங்களுக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கறுகபுத்தூருக்கு அருகிலுள்ள மற்ற முக்கிய அரை நகர்ப்புறப் பகுதிகளாக கூட்டாநாடு, சல்லிசேரி ஆகியவை உள்ளன. இதன் வடக்கே பட்டாம்பியும், கிழக்கே ஷொர்ணூர், நெல்லுவாய் போன்றவையும், மேற்கே பெரிங்கோடு, சாலிசேரி மற்றும் திருச்சூர் மாவட்டத்தின் எல்லைப் புறக் கிராமங்களும் உள்ளன. அவற்றை இணைக்கும் முக்கிய போக்குவரத்து மையமாக கறுகபுத்தூர் உள்ளது. திருச்சூர் மாவட்டத்திற்கு அருகாமையில் இருப்பது இந்த சிறிய நகரங்கள் அண்மைய ஆண்டுகளில் வளர்ந்து வருவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.
சமய மையங்கள்
நரசிம்மமூர்த்தி கோயில்
கறுகபுத்தூர் நரசிம்மர் கோயிலில் ஆண்டுதோறும் மகரம் மாதத்தில் கருகாபுத்தூர் ஏகாதசி . கொண்டாடப்படுகிறது. இக்கோயில் சுமார் பட்டாம்பியிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த பழமையான கோயிலில் மகரமாதத்தில் சுக்ல பக்ஷ ஏகாதசி நாளில் ஏகாதசி அனுசரிக்கப்படுகிறது.
இந்த பழமையான கோயிலில் அன்றைய சிறப்பு நாளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. கோயிலானது பாரம்பரியமாக மலர்கள், இலைகள், தேங்காய் துருவல், வாழை இலை, வாழைப்பழம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்படுகிறது. மகரமாதம் அமாவாசைக்குப் பிறகு ஏகாதசி அனுசரிக்கப்படுகிறது. (மகரம் மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி).
கறுகபுத்தூர் ஜும்ஆ மசூதி
பிரசித்தி பெற்ற கறுகபுத்தூர் நேர்ச்சை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் அனுசரிக்கபடுகிறது. இதை கறுகபுத்தூர் ஓடம்புள்ளி ஜரம் சந்தனக்குடம் நேர்ச்சை என்றும் அழைப்பர். இது கேரளத்தில் நடக்கும் பழமையான நேர்ச்சை திருவிழாக்களில் ஒன்றாகும். இது மற்றும் கிட்டத்தட்ட 120 ஆண்டுகள் பழமையானது.
முக்கிய நிறுவனங்கள்
பஞ்சாப் நேசனல் வங்கி - திருமிட்டகோடு கிளை
பெடரல் வங்கி - கறுகபுத்தூர் கிளை
முத்தூட் ஃபைனான்ஸ் - கறுகபுத்தூர்
குறிப்பிடத்தக்க ஆளுமைகள்
ஈ. சிறீதரன் - மெட்ரோ மேன்
கலாமண்டலம் சந்திரன்
கலாமண்டலம் கீதானந்தன்
பெரிங்கோடு விஜயன்
விஜயன் சாத்தன்னூர்
அச்சுதானந்தன் வி பெரிங்கோடு
மேற்கோள்கள்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata |
685205 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D | அமர் சிங் ரத்தோர் | ராவ் அமர் சிங் (Rao Amar Singh) (30 டிசம்பர் 1613 - 25 ஜூலை 1644) என அறியப்படும் இவர் இராஜபுதனத்தின் மார்வார் பிரதேசத்தை ஆட்சி செய்த இரத்தோர் வம்சத்தின் மன்னன் முதலாம் கஜ சிங்கின் மூத்த மகனும் மற்றும் வாரிசும் ஆவார்.
இவர் தனது குடும்பத்திடமிருந்து பிரிந்து நாடு கடத்தப்பட்ட பிறகு, முகலாயகர்ளின் சேவையில் நுழைந்தார். விரைவிலேயே தனது போர் வீரம் காரணமாக பேரரசரின் பிரபுக்களில் ஒருவராக ஆனார். நேரடியாக பேரரசரால் ஆளப்பட்ட நாகௌர் கோட்டையின் சுபாதாராக (ஆளுநர்) ஆனார்.
1644இல், கிளர்ச்சியில் ஈட்டுபட்ட இவர் மீது அபராதம் விதிக்க பேரரசர் முயன்றதால் இவர் கோபமடைந்தார். பேரரசரின் சார்பில் அபராதம் வசூலிக்க வந்த முகலாயப் பேரரசர் ஷாஜகானின் தளபதி சலபாத் கானை குத்திக் கொன்றார். இவர் இன்றும் இராசத்தான், மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாபின் சில பிரபலமான பாடல்களில் கொண்டாடப்படுகிறார்.
குடும்பம்
அமர் சிங் , மார்வாரின் அரசன் கஜ சிங்கின் மூத்த மகனாக 11 டிசம்பர் 1613 அன்று பிறந்தார். இவரது தாயார் சோன்கர்ஜி மேவார் இராச்சியத்தைச் சேர்ந்தவர்.
வாழ்க்கை
இவரது தந்தை இறந்த பிறகு, மார்வார் இராச்சியத்தின் சிம்மாசனம் இவரது தந்தையின் விருப்பப்படி இவரது 11 வயது இளைய ஒன்றுவிட்ட சகோதரர் குன்வர் ஜஸ்வந்த் சிங்கிடம் வழங்கப்பட்டது. அதே சமயத்தில் அமர்சிங் நாகௌரின் பகுதிகளின் ஆட்சியாளர் ஆனார்.
இதனையும் காண்க
ஆக்ரா கோட்டை
மேற்கோள்கள்
1644 இறப்புகள்
1613 பிறப்புகள்
இராஜஸ்தான் வரலாறு |
685206 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் | செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Sri Petaling LRT Station; மலாய்: Stesen LRT Sri Petaling; சீனம்: 大城堡站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் அமைந்துள்ள குறைந்த உயர்வு (Low rise) இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.
1998-ஆம் ஆண்டு, கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் (1998 Commonwealth Games) நினைவாக இந்த நிலையம் திறக்கப்பட்டது. கோலாலம்பூர், சாலாக் செலாத்தான் பகுதி வாழ் மக்களுக்கு இந்த நிலையம் சேவை செய்கிறது.
பொது
செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் முன்பு காமன்வெல்த் நிலையம் (Komanwel station) என்று அழைக்கப்பட்டது.
இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் (STAR-LRT System) இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக 15 கி.மீ. தொலைவிற்கு 7 நிலையங்கள் கட்டப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 11 சூலை 1998 அன்று திறக்கப்பட்டது. இந்த நிலையத்தில் திறந்தவெளி வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன.
அமைவு
அவான் பெசார் எல்ஆர்டி நிலையத்திற்கு முன்னரும்; புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையத்திற்கு பின்னரும் செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம் அமைந்துள்ளது.
அமைப்பு
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.
பிரசரானா மலேசியா
பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெயில் நிறுவனத்தின் ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்த வழித்தடங்கள் இயக்கப்படுகின்றன.
எல்ஆர்டி அம்பாங் வழித்தடத்தில் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்ல 41 நிமிடங்களும்; எல்ஆர்டி செரி பெட்டாலிங் வழித்தடத்தில் செல்ல 74 நிமிடங்களும் பிடிக்கும்.
எல்ஆர்டி செரி பெட்டாலிங் வழித்தடத்தின் அதன் முன்னாள் தெற்கு முனையமான செரி பெட்டாலிங் நிலையத்தின் பெயரில் செரி பெட்டாலிங் வழித்திடத்திற்குப் பெயரிடப்பட்டது.
காட்சியகம்
செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள்
மேலும் காண்க
அம்பாங் வழித்தடம் - செரி பெட்டாலிங் வழித்தடம்
புடு எல்ஆர்டி நிலையம்
பிளாசா ராக்யாட் எல்ஆர்டி நிலையம்
பண்டாராயா எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர் சாலைகளின் பட்டியல்
கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு
மேற்கோள்கள்
Trains collide on LRT line (updated)
வெளி இணைப்புகள்
மலேசியத் தொடருந்து நிலையங்கள்
கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள் |
685207 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D | விஷ்ணு வாசுதேவ் நர்லிகர் | விஷ்ணு வாசுதேவ் நர்லிகர் (Vishnu Vasudev Narlikar)(26 செப்டம்பர் 1908-1 ஏப்ரல் 1991) பொது சார்பியலில் நிபுணத்துவம் பெற்ற இந்திய இயற்பியலாளர் ஆவார். ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் செயல்படும் கோட்பாட்டு இயற்பியல் மையம், இவரது நினைவாக வருடாந்திர "வி. வி. நர்லிகர் நினைவு சொற்பொழிவை" நிறுவியுள்ளது.
வாழ்க்கை
நர்லிகர் இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் கோலாப்பூரில் 1908 செப்டம்பர் 26 அன்று பிறந்தார். இவரது தந்தை வாசுதேவசாசுதிரி நார்லிகர் சமசுகிருதத்தில் பண்டிட் மற்றும் பிரசங்கங்களை வழங்கினார். மூன்று சகோதரர்களில் விஷ்ணு இளையவர். இவர் கோலாப்பூரில் உள்ள வித்யாபீட உயர்நிலைப் பள்ளியிலும் இராஜாராம் கல்லூரியிலும் படித்தார். விஷ்ணுவின் இளமைக் காலத்தில் அவரது தந்தை இயற்கை எய்தினார். இருப்பினும் தனது கல்வியைத் தொடர்ந்த விஷ்ணு பல்கலைக்கழக நுழைவுத் தகுதித் தேர்வில் நான்காவது இடத்தைப் பெற்றார். இவர் கல்வி உதவித்தொகை பெற்று மும்பையில் உள்ள எல்பின்சுடோன் கல்லூரியிலும் மும்பையின் அறிவியல் நிறுவனத்திலும் படித்தார். இளநிலை அறிவியல் பாடத்தில் முதலிடம் பெற்றார். இதன் பின்னர் 1928-ல் மும்பை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நர்லிகர், இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்ந்தார். இங்கு 1930-இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக இறுதிப்பட்டத்தினை கணிதத்தில் பெற்றார்.
கேம்பிரிச்சில் இவரது கல்விக்கு ஜே. என். டாட்டா அறக்கட்டளை நிதியுதவி அளித்தது. இவர் இந்தியாவுக்குத் திரும்பியதும் கோலாப்பூர் மாநிலத்தில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் கோலாப்பூர் மாநிலத்திலிருந்தும் கடன் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதப் பட்டத்தினை நட்சத்திரத் தகுதியில் முடித்த பெருமையினைப் பெற்றார் விஷ்ணு நர்லிகர். இவர் ஐசக் நியூட்டன் மாணவ உதவித்தொகையினையும் ரேலே பரிசினையும் பெற்றவர்.
1932ஆம் ஆண்டில், நர்லிகர் மும்பையினைச் சேர்ந்த சிறீதேவி நவாரேவை மணந்தார். ஆனால் சில ஆண்டுகளுக்குள் உடல்நிலை சரியில்லாமல் சிறீதேவி இறந்தார். பின்னர் 1937-ல் வி. எசு. ஹுசுர்பசாரின் சகோதரியான கிருஷ்ணாவை மணந்தார்.
இந்த இணையருக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். இவர்களில் ஜெயந்த் வானியற்பியலாளராகவும், அனந்த் விஞ்ஞானியாகவும் இருந்தனர்.
தொழில்
நர்லிகர் 1932இல் இந்தியா திரும்பியதும், தனது 24 வயதில் வாரணாசியில் உள்ள பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகவும், கணிதத் துறைத் தலைவராகவும் ஆனார். பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மதன் மோகன் மாளவியா, நர்லிகர் கோலாப்பூர் மாநிலத்திற்குச் செலுத்த வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்தினார். இதன் மூலம் நர்லிகர் பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற முடிந்தது. இதன் பின்னர் 1966-ல் புனா பல்கலைக்கழகத்தில் பணியாற்றத் தொடங்கிய நர்லிகர் 1973-ல் கணிதப் பேராசிரியராக ஓய்வு பெற்றார். 1960 முதல் 1966 வரை, இவர் இராசத்தான் அரசுப்பணியாளர் தேர்வாணையத் தலைவராகப் பணியாற்றினார். நர்லிகர் 1931-ல் அரச வானியல் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1981 முதல் 1982 வரை இந்தியக் கணிதச் சங்கத்தின் தலைவரானார்.
இந்தியாவில் முதல் தலைமுறை பொது சார்புவாதிகளுக்கு இவர் பயிற்சி அளித்தார். இவரது முனைவர் பட்ட மாணவர்களில் பிரகலாத் சுன்னிலால் வைத்யா, அமல் குமார் ராய்சவுதுரி, நரேஷ் தாதிச் மற்றும் அரகம் ஆர். பிரசன்னா ஆகியோர் அடங்குவர்.
மேற்கோள்கள்
மகாராட்டிர அறிவியலாளர்கள்
மராத்தியர்கள்
1991 இறப்புகள்
1908 பிறப்புகள் |
685208 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF | இராஜாராம் கல்லூரி | இராஜாராம் கல்லூரி (Rajaram College), கோலாப்பூர் என்பது கோலாப்பூரில் உள்ள சிவாஜி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஓர் அரசு கல்லூரி ஆகும். இக்கல்லூரி 11 மற்றும் 12ஆம் வகுப்பு போன்ற இளையோர் கல்லூரி அளவிலான படிப்புகளையும், அறிவியல், மனிதநேயம், மொழிகள் மற்றும் கலைகளில் இளம் அறிவியல் மற்றும் இளங்கலைப் போன்ற இளநிலை பட்டப்படிப்புகளையும் வழங்குகிறது. உளவியல் மற்றும் மனையியல் அறிவியலில் முதுநிலைப் பட்டப் படிப்பினையும் வழங்குகிறது. இது பகுப்பாய்வு வேதியியலில் முதுநிலை அறிவியல் படிப்பினையும் நடத்துகிறது. அறிவியல் மற்றும் கலைகளில் மேல்நிலைக் கல்விப் படிப்புகளை வழங்கும் பிரபலமான இளையோர் கல்லூரியும் இங்கு உள்ளது.
வரலாறு
இராஜாராம் கல்லூரி 1880ஆம் ஆண்டில் கோலாப்பூர் மகாராஜாவால் நிறுவப்பட்டது. இது கோலாப்பூர் நகரின் பழமையான கல்லூரியாகவும், மகாராட்டிரவின் புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகவும் உள்ளது. இது மும்பை பல்கலைக்கழகத்துடனும் பின்னர் புனே பல்கலைக்கழகத்துடனும் இணைக்கப்பட்டது. 1962ஆம் ஆண்டில் கோலாப்பூரில் சிவாஜி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இதன் பின்னர் இராஜாராம் கல்லூரி சிவாஜி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இராஜாராம் கல்லூரி கோலாப்பூரில் சிவாஜி பல்கலைக்கழகத்தை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தது. சிவாஜி பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர், இராஜாராம் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜி. பவார் ஆவார். இராஜாராம் கல்லூரி அரசியலில் பல சிறந்த தலைவர்களை வழங்கியுள்ளது. இது பல புகழ்பெற்ற விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், வரலாற்றாசிரியர்கள், கல்வியாளர்கள், தரைப்படை அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களை (இஆப, இகாப மற்றும் இஅப அதிகாரிகள்) தோற்றுவித்த கல்வி நிறுவனமாகும். இக்கல்லூரி 2005ஆம் ஆண்டில் தனது 125ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.
இந்தக் கல்லூரி சிவாஜி பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல மாணவர்கள் இங்குப் படிக்கின்றனர். இது கோலாப்பூர் நகரின் புறநகரில் அமைந்துள்ளது. இது ஒரு பெரிய வளாகத்தைக் கொண்டுள்ளது. அங்கு அருகிலுள்ள பகுதிகளிலிருந்து பலர் இன்ப நடைப்பயணத்திற்காக வருகிறார்கள்.
இந்தக் கல்லூரி சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் அழகிய வளாகத்தைக் கொண்டுள்ளது. இதன் 13 சுயாதீன கட்டிடங்களில் 2000 பேர் அமரக்கூடிய கலையரங்கமும் அடங்கும். முனைவர் பாலகிருஷ்ணா நூலகத்தில் 1,25,000க்கும் மேற்பட்ட தொகுதிகள் உள்ளன.
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
அபய் அசுதேகர், விஞ்ஞானி, குவாண்டம் ஈர்ப்பு, அண்டவியல்
விஷ்ணு வாசுதேவ் நர்லிகர், இந்திய இயற்பியலாளர்
சிவ்ராம் போஜே, அணு விஞ்ஞானி
ஒய். பி. சவான், முதல்வர், மகாராட்டிரா
பாலாசாகேப் தேசாய், அரசியல்வாதி
கோபால கிருஷ்ண கோகலே, அரசியல்வாதி
வசந்த் கோவரிகர், விஞ்ஞானி
காசாபாதாதாசாகேப் சாதவ், மல்யுத்த வீரர், ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்
பசப்பா தனப்பா ஜாட்டி, முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்
நரசிம்ம சிந்தமான் கேல்கர், வழக்கறிஞர் மற்றும் நாடக ஆசிரியர்
பி. ஜி. கெர், பம்பாய் மாநிலத்தின் முதலமைச்சர்
குசுமாகரசு (விஷ்ணு வாமன் சிர்வாத்கர்) -எழுத்தாளர் மற்றும் கவிஞர்
ஜி. டி. யாதவ், புகழ்பெற்ற வேதியியல் பொறியாளர், ஆராய்ச்சியாளர், கல்வியாளர்
ஆர். மாதவன், தமிழ் மற்றும் பாலிவுட் நட்சத்திரம்
மாஸ்டர் விநாயக் (வினாயக் கருநாடகி) திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர்
எஸ். பி. முஜும்தார், சிம்பயோசிஸ் புனேவின் நிறுவனர்
ஞானேஸ்வர் முலே, இராஜதந்திரி, எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர்
பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் முனைவர் அருண் நிகவேகர், துணைவேந்தர், பிரதமரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு உறுப்பினர்
சாலினிதாய் பாட்டீல், அரசியல்வாதி
டி. சி. பாவ்டே, கல்வியாளர்
கோவிந்திராவ் தெம்பே, இசையமைப்பாளர்
இரஞ்சித் தேசாய், மராத்தி எழுத்தாளர்
முனைவர் இரத்னப்பா கும்பர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சமூக சேவகர்
இந்திரா சந்த், புகழ்பெற்ற கவிஞர்
விஜய ராஜாதியாசாஷா, எழுத்தாளர்
இரமேஷ் மந்திரி, எழுத்தாளர்
ஞான்பீட விருது பெற்ற மராத்தி கவிஞர் விந்தா கரந்திகர்
குறிப்பிடத்தக்க ஆசிரியர்கள்
எச். பி. காந்தி-1950களில் உயிரியல் விரிவுரையாளர் .
விநாயக கிருஷ்ண கோகாக் (ஞானபீட விருது)
வி. டி. பாட்டீல், மௌனி வித்யாபீடத்தின் நிறுவனர்
வசந்த்ராவ் காட்ஜே, காட்ஜே பாட்டீல் போக்குவரத்து நிறுவனத்தின் நிறுவனர்.
டாக்டர் பாலகிருஷ்ணா, வரலாற்றாசிரியர், இலண்டன் அரச கழக உறுப்பினர்
நாராயண் சீதாராம் பாட்கே, எழுத்தாளர்
மாதவ் பட்வர்தன், கவிஞர் மாதவ் ஜூலியன் என்றும் அழைக்கப்படுகிறார்
பார். பாலசாகேப் கர்தேகர், கல்வியாளர், மக்களவை உறுப்பினர், கோலாப்பூர் கோகலே கல்லூரியின் நிறுவனர்
மேலும் காண்க
இந்தியாவில் கல்வி
இந்தியாவில் எழுத்தறிவு
இந்தியாவில் பட்டங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
எண் 14 ஐப் பார்க்கவும்
மகாராட்டிரம் |
685210 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 | துத்தநாகக் குரோமேட்டு | துத்தநாகக் குரோமேட்டு (Zinc chromate) என்பது ZnCrO4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குரோமேட்டு அயனியைக் கொண்ட இவ்வுப்பு, மணமற்றதாகவும் மஞ்சள் தூள் அல்லது மஞ்சள்-பச்சை படிகங்களாகக் காணப்படுகிறது. பூச்சுகளுக்குப் பயன்படுத்தும்போது, நிறமிகள் பெரும்பாலும் இதனுடன் சேர்க்கப்படுகின்றன.
1920 ஆம் ஆண்டுகளில் போர்டு மோட்டார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட குரோமேட்டு மாற்று பூச்சுகளில் இது தொழில்துறையில் பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
தொழில்துறையில் பயன்படுத்த துத்தநாக குரோமேட்டை உருவாக்க குரோனாக்கு செயல்முறை எனப்படும் ஒரு செயல்முறை பயன்படுத்தப்படுகிறது. சோடியம் டைகுரோமேட்டு மற்றும் கந்தக அமிலத்தின் கரைசலில் துத்தநாகம் அல்லது துத்தநாகம் பூசப்பட்ட உலோகத்தை சில வினாடிகளுக்கு வைப்பதன் மூலம் இந்த செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. நடுநிலை பொட்டாசியம் குரோமேட்டுடன் (K2CrO4) துத்தநாக சல்பேட்டைச் (ZnSO4) வினைபுரியச் செய்தும் துத்தநாகக் குரோமேட்டை தயாரிக்க முடியும். வினையில் துத்தநாகக் குரோமேட்டு ஒரு வீழ்படிவாக உருவாகிறது.
K2CrO4 + ZnSO4 → ZnCrO4 + K2SO4
பயன்கள்
துத்தநாகக் குரோமேட்டின் முக்கிய பயன்பாடானது தொழில்துறை இரும்பு அல்லது அலுமினியப் பொருட்களின் மேல் பூச்சாகப் பூசுவதேயாகும். அமெரிக்க இராணுவம் குறிப்பாக 1930 மற்றும் 1940 ஆம் ஆண்டுகளில் வானூர்திகளில் அதிகமாகப் பயன்படுத்தியது. விண்வெளி மற்றும் வாகனத் தொழில்களுக்கான பல்வேறு பொருள்களுக்கான வண்ணப்பூச்சுகளிலும் பயன்படுத்தப்படுகிறது அரிப்பு-எதிர்ப்பு முகவராக இதன் பயன்பாடு அலுமினிய கலப்புலோக பாகங்களுக்கு முதலில் வணிக விமானங்களிலும், பின்னர் இராணுவத்திலும் பயன்படுத்தப்பட்டது. 1940 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் அலுமினியத்தை அரிப்பிலிருந்து பாதுகாக்க அமெரிக்க இராணுவ விமானங்களில் உள்ளிழுக்கக்கூடிய தரையிறங்கும் விசைமாற்றிகளின் சக்கர பள்ளங்களில் இது பொதுவாக பூச்சாகக் காணப்பட்டது. இந்த கலவை ஒரு பயனுள்ள பூச்சாக இருந்தது, ஏனெனில் இது ஓர் அரிப்பு எதிர்ப்பு மற்றும் துரு எதிர்ப்பு முதல்பூச்சாகும். துத்தநாகக் குரோமேட்டு அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதால், மேற்பரப்பில் உள்ள கரிமப் பொருள்கள் வளர்ச்சியையும் அழிக்கிறது. தெளிப்பு வண்ணப்பூச்சுகள், கலைஞர்களின் வண்ணப்பூச்சுகள், மெருகுப்பூச்சு நிறமிகள் மற்றும் இலினோலியம் தயாரிப்பிலும் துத்தநாக குரோமேட்டு பயன்படுத்தப்படுகிறது
நிறமியாகப் பயன்படுத்தப்படும் போது, இது துத்தநாக மஞ்சள், பட்டர்கப் மஞ்சள் அல்லது மஞ்சள் 36 என்ற பெயர்களால் அறியப்படுகிறது. கலைத்துறையிலும் இது அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் நிறமி பழுப்பு நிறத்தில் சிதையும். இந்த விளைவை சியார்ச்சசு சீராட்டின் புகழ்பெற்ற ஓவியத்தில் காணலாம். சீராட்டின் இந்த ஓவியத்தில் துத்தநாக மஞ்சள் நிறத்தின் சிதைவு முழுமையாக ஆராயப்பட்டது. இந்த கண்டுபிடிப்புகள் பின்னர் ஓவியத்தின் எண்ணிம புத்துருவாக்க வடிவத்திலும் பயன்படுத்தப்பட்டன.
சேலஞ்சர் விண்கலத்தில் துத்தநாகக் குரோமேட்டு இரண்டு O-வளையங்களுக்கு கூடுதலாக இடநிரப்பியாக ஒரு மெழுகு போன்ற பொருளாகப் பயன்படுத்தப்பட்டது.
நச்சுத்தன்மை
சமீபத்திய ஆய்வுகள் துத்தநாக குரோமேட்டு அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது மட்டுமல்ல என்றும் Cr(VI) இது ஒரு புற்றுநோய் ஊக்கியாகவும் உள்ளது என்று தெரிவிக்கின்றன. துத்தநாக குரோமேட்டின் வெளிப்பாடு திசுக்களில் புண் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும். பிரித்தானிய மருத்துவ செய்தி இதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட ஆய்வில், தொழிற்சாலைகளில் துத்தநாக குரோமேட்டு மற்றும் ஈயக் குரோமேட்டின் பயன்பாடு மற்றும் தொழிலாளர்கள் அனுபவிக்கும் நுரையீரல் புற்றுநோயின் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு இடையே குறிப்பிடத்தக்க தொடர்பு உள்ளது என்று தெரிவிக்கிறது.
மேற்கோள்கள்
துத்தநாக சேர்மங்கள்
குரோமேட்டுகள் |
685213 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%80%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | வணீ சட்டமன்ற தொகுதி | வணீ சட்டமன்றத் தொகுதி (Wani Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது யவத்மால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும். வணீ, சந்திராபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
வெளியிணைப்புகள்
இந்திய தேர்தல் ஆணையம்
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
மகாராட்டிர அரசியல் |
685215 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | அவான் பெசார் எல்ஆர்டி நிலையம் | அவான் பெசார் எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Awan Besar LRT Station; மலாய்: Stesen LRT Awan Besar; சீனம்: 阿旺柏沙站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உயர்த்திய நிலையிலான ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.
கோலாலம்பூர் புக்கிட் ஓயூஜி (Bukit OUG) புறநகர்க் குடியிருப்புப் பகுதியில் உள்ளது. அவான் பெசார் நிலையம் மேசோனிக் கோயிலுக்கு (Masonic Temple) அருகில் உள்ள நிலையமாகும். இதன் அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் புக்கிட் ஓயூஜி காண்டோமினியம் (Bukit OUG Condominium) என்று அழைக்கப்படுகிறது.
பொது
கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் மற்ற எல்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையமாகும்.
இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் (STAR-LRT System) இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக 15 கி.மீ. தொலைவிற்கு 7 நிலையங்கள் கட்டப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 11 சூலை 1998 அன்று திறக்கப்பட்டது. இந்த நிலையத்தில் திறந்தவெளி வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன.
அமைவு
முகிபா எல்ஆர்டி நிலையத்திற்கு முன்னரும்; செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையத்திற்கு பின்னரும் அவான் பெசார் எல்ஆர்டி நிலையம் அமைந்துள்ளது.
பேருந்து சேவைகள்
31 திசம்பர் 2023 வரை; 20 நிமிட இடைவெளியுடன் புக்கிட் ஜாலில் பெவிலியன் (Pavilion Bukit Jalil) பகுதிக்கும்; இந்த அவான் பெசார் நிலையத்திற்கும் இடையே இலவசப் பேருந்து சேவை இருந்தது. தற்சமயம் அந்தச் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் பெரும்பாலான தொடருந்து நிலையங்களில் இலவசப் பேருந்து சேவை வழங்கப்படுகிறது. இலவசப் பேருந்து சேவையின் விவரங்கள் கீழே உள்ளன. அத்துடன் முகிபா எல்ஆர்டி நிலையம் – கிள்ளான் லாமா சாலை (Pearl Point - LRT Muhhibah) வரையிலான இலவசப் பேருந்து சேவையும் இந்த அவான் பெசார் நிலையத்தில் தான் முடிவடைகிறது.
அமைப்பு
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.
காட்சியகம்
அவான் பெசார் எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2021 - 2022)
மேலும் காண்க
செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையம்
புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையம்
பண்டார் துன் ரசாக் எல்ஆர்டி நிலையம்
பண்டாராயா எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர் சாலைகளின் பட்டியல்
கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்களின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Awan Besar LRT Station - KL MRT Line Integrations
Awan Besar Station Google Maps
மலேசியத் தொடருந்து நிலையங்கள்
கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள் |
685223 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF | சர்வதேச தொழில்துறை வங்கி | சர்வதேச தொழில்துறை வங்கி (International Industrial Bank) (உருசிய மொழி: Международный Промышленный Банк, சுருக்கப்பெயர்,MPB, ВИДЕО) என்பது உருசியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகும். 1992 இல் செர்ஜி புகாச்சியோவ் மற்றும் செர்ஜி வெரெமென்கோ ஆகியாரால் இவ்வங்கி நிறுவப்பட்டது .
ஜூலை 6, 2010 அன்று, இவ்வங்கி முதிர்ச்சியடைந்த யூரோ பாண்டு பத்திரங்களால் €200 மில்லியன் தொகையை பத்திரதாரர்களுக்கு செலுத்தத் தவறியது. இதனால் ரஷ்யாவின் மத்திய வங்கி வைப்புத் தொகைதாரர்களுடன் மோசமடைந்து வரும் பணப்புழக்க நிலையை நிலைநிறுத்துவதற்கு விவாதித்தது. இருப்பினும், நவம்பர் 30, 2010 அன்று, மாஸ்கோ நீதிமன்றம் இந்த வங்கியின் திவால் மற்றும் தீர்வின்மையினை அறிவித்தது.
2006 ஆம் ஆண்டில், நியூசிலாந்தை தளமாகக் கொண்ட ஓ.பி.கே அறக்கட்டளை நிறுவனம் அதன் 100 சதவீத பங்கைக் கொண்டிருப்பதை வங்கி கண்டுபிடித்தது. ஓ.பி.கே அறக்கட்டளை நிறுவனம் செர்ஜி புகாச்சியோவ் என்பவாின் கட்டுப்பாட்டில் உள்ளது.
டிசம்பர் 2010 இல், ஒரு உருசிய நீதிமன்றம் சர்வதேச தொழில்துறை வங்கியை திவாலாகிவிட்டதாக அறிவித்து, அதற்கெதிராக கலைப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது.
மேற்கோள்கள் |
685235 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | யவத்மால் சட்டமன்றத் தொகுதி | யவத்மால் சட்டமன்றத் தொகுதி (Yavatmal Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும், இத்தொகுதியானது யவத்மால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும்.யவத்மால், யவத்மால்-வாஷிம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
வெளியிணைப்புகள்
இந்திய தேர்தல் ஆணையம்
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
மகாராட்டிர அரசியல் |
685236 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D | நீலமாதா புராணம் | நீலமாதா புராணம் (Nilamata Purana), காஷ்மீர் மகாத்மியம் என்றும் அழைக்கப்படும் 6 முதல் 8 ஆம் நூற்றாண்டு வரையிலான காஷ்மீரின் வரலாறு, புவியியல், மதம் மற்றும் நாட்டுப்புறவியல் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ள ஒன்றாகும். கல்கணர் இதனை தனது வரலாற்றின் ஆதாரங்களில் ஒன்றாகப் பயன்படுத்த்யுள்ளார்.
இராஜதரங்கிணி 'காஷ்மீரின்' அரசியல் வரலாற்றின் கண்ணோட்டத்தில் முக்கியமானதாக இருந்தது. ஆனாலும் நீலமாதாவும் குறைவான முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என அறிஞர் வேத் குமாரி கய் . இதன் விமர்சன பதிப்பு 1924 இல் வெளியிடப்பட்டது. இது நவீனகால இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கோரசன், தஜிகிஸ்தான், உலகின் நவீன தார்திக் பிராந்தியங்களின் நவீன கால பகுதிகளை உள்ளடக்கிய காஷ்மீரின் தேசிய காவியமாகும்.
இது காஷ்மீரின் புனித இடங்கள் மற்றும் புராணக்கதைகள் பற்றிய தகவல்களின் உண்மையான சுரங்கம் என செர்மனி அறிஞர் ஜார்ஜ் புஃலர் கூறுகிறார். இது பண்டைய காஷ்மீரின் கலாச்சார அரசியல் வாழ்க்கையின் மதிப்புமிக்க ஆதாரமாகவும் உள்ளது. சதீசர் ஏரியின் கதை, காசியபருக்கும் நாகர்களுக்கும் இடையிலான போர் மற்றும் கோனந்தா மற்றும் ராணி யசோமதி ஆகியோரின் வரலாற்று பெயர்களைக் கொண்ட பிற புராணக் கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த ஏரியைப் பற்றிய புராணக்கதை கல்கணரின் இராஜதரங்கினி, இந்தியாவின் ஆரம்பகால பௌத்த பள்ளிகளில் ஒன்றான மூல மூலசர்வஸ்திவாதின் பிரிவின் சீன வினயா மற்றும் சுவான்சாங்கின் பயணங்களிலும் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
மேலும் வாசிக்க
சமசுகிருத நூல்கள்
இந்திய வரலாற்றுவரைவியல்
புராணங்கள் |
685237 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D | மசார் சிங்கம் | மசார் சிங்கம் (Masarh lion) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா நகருக்கு அருகில் உள்ள மசார் என்ற கிராமத்தில் காணப்படும் ஒரு கல் சிற்பம் ஆகும். இந்த சிற்பம் பொதுவாக கிமு 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
சிங்கம் அசோகரின் தூண்களைப் போலவே சுனார் மணற்கற்களால் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் மௌரிய சிற்பத்துடன் தொடர்புடைய ஒரு அம்சமான பளபளப்பான பூச்சுடன் உள்ளது. மேலும் அகாமனிசிய சிற்ப பாணியில் செதுக்கப்பட்டுள்ளது.
இந்த சிற்பங்களின் அம்சங்களை இந்தியாவைச் சேர்ந்தவை அல்ல என்று தொல்லியல் ஆய்வாளர் சுவராஜ் பிரகாஷ் குப்தா விவரிக்கிறார். இதே போன்ற எடுத்துக்காட்டுகள் கிரேக்கம் மற்றும் பெர்செபோலிஸிலும் அறியப்படுகின்றன. இந்தச் சிற்பம் இந்தியாவில் இருந்த அகாமனிசிய அல்லது கிரேக்கச் சிற்பியால் செய்யப்பட்டிருக்கலாம். கி.மு. 5ஆம் நூற்றாண்டுக்கும் கிமு 1ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் எங்காவது கிரேக்க அல்லது அகாமனிசிய மாதிரியைப் பின்பற்றியதாகவும் இருக்கலாம். இருப்பினும் இதன் காலம் மௌரியப் பேரரசின் காலத்திலிருந்து, கி.மு. 3ஆம் நூற்றாண்டு வரை இருக்கலாம்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
A similar lion at Ecbatana
West Asian Influence on Lion Motifs in Mauryan Art, Vinay Kumar
Journal of Multidisciplinary Studies in Archaeology 5 (2017): 433‐444 Lion Motif in Mauryan Art: Indigenous or Foreign? Vinay Kumar
Coordinates on Wikidata
இந்தியாவில் சிற்பக்கலை
இந்திய வரலாற்றுச் சின்னங்கள் |
685239 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D | பெருங்களூர் | பெருங்களூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 99.58 மீ. உயரத்தில் () என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பெருங்களூர் அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், பெருங்களூர் கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 6,474 ஆகும். இதில் 3,169 பேர் ஆண்கள் மற்றும் 3,305 பேர் பெண்கள் ஆவர்.
பழைமை தொடர்பு
சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் பெருங்கற்காலத்திற்கு முந்தைய இரும்புக் காலத்தில் பெருங்களூர் பகுதியில் இரும்பு உருக்காலை இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.
சமயம்
இந்துக் கோயில்கள்
தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் வம்சோத்தாரகர் கோயில் மற்றும் உருமநாதர் கோயில் ஆகிய இரண்டு இந்துக் கோயில்கள் பெருங்களூர் கிராமத்தில் உள்ளன.
மேற்கோள்கள்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் |
685241 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | முகிபா எல்ஆர்டி நிலையம் | முகிபா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Muhibbah LRT Station; மலாய்: Stesen LRT Muhibbah; சீனம்: 轻轨穆希巴站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உயர்த்திய நிலையிலான ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.
கோலாலம்பூர் கம்போங் முகிபா (Kampung Muhibbah) குடியிருப்புப் பகுதியில் உள்ளது. கம்போங் முகிபா என்பது ஒரு கிராமமாகும். கோலாலம்பூரில் இருந்து தெற்கே 21 கி.மீ. தொலைவில் உள்ளது. முகிபா எல்ஆர்டி நிலையம், கம்போங் முகிபா மற்றும் பார்க்லேன் ஓயூஜி அடுக்குமாடி வீடுகளுக்கு (Parklane OUG Service Apartments) அருகில் 1.0 கி.மீ. நடை தூரத்தில் உள்ள நிலையமாகும்.
பொது
முகிபா நிலையத்திலிருந்து அடுத்த நிலையமான அவான் பெசார் எல்ஆர்டி நிலையத்திற்கு நடந்து செல்ல முடியும். அவான் பெசார் எல்ஆர்டி நிலையம் மிக அருகில் உள்ள நிலையமாக அறியப்படுகிறது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் மற்ற எல்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையமாகும்.
இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் (STAR-LRT System) இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக 15 கி.மீ. தொலைவிற்கு 7 நிலையங்கள் கட்டப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த முகிபா எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 11 சூலை 1998 அன்று திறக்கப்பட்டது. இந்த நிலையத்தில் திறந்தவெளி வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன.
அமைவு
இந்த நிலையத்திற்கு முன்னதாக ஆலாம் சுத்திரா எல்ஆர்டி நிலையமும்; பின்னதாக அவான் பெசார் எல்ஆர்டி நிலையமும் உள்ளன.
பேருந்து சேவைகள்
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.
அமைப்பு
காட்சியகம்
முகிபா எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2023)
மேலும் காண்க
அவான் பெசார் எல்ஆர்டி நிலையம்
புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையம்
புக்கிட் ஜாலில்
மலேசிய தொழில்நுட்ப பூங்கா
கூச்சாய் லாமா சாலை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Muhibbah LRT Station - KL MRT / LRT Integration
https://www.google.com/maps/place/Muhibbah/@3.0683267,101.6556029,15z/data=!4m5!3m4!1s0x31cc4ae2bfada2b1:0xf3cb5cdc12b931d4!8m2!3d3.0620505!4d101.6625077 - Google Maps
மலேசியத் தொடருந்து நிலையங்கள்
கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள் |
685242 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D | சாதியா பாம்பு தூண் | சாதியா பாம்பு தூண் (Sadiya Serpent Pillar) இந்தியாவின் அசாமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சாதியா பகுதியில் அமைக்கப்பட்ட ஒரு பழமையான எண்கோண கல் தூண் ஆகும். இது அகோம் எழுத்துகளின் ஆரம்ப உதாரணத்தைக் கொண்டுள்ளது. மேலும், தூணில் கி.பி.1532 எனவும் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது.
விளக்கம்
அசாம் கெஜட்டியரின் (1928) கூற்றுப்படி, திபாங் மற்றும் தியோபானி ஆறுகளுக்கு இடையில், சாதியாவிலிருந்து நிஜாம் காட் செல்லும் சாலையின் கிழக்குப் பகுதியில் இந்த தூண் கண்டுபிடிக்கப்பட்டது. தூணிற்கு அருகில் ஒரு கல் பாலம் இருந்தது. மேலும் இந்த பாலத்திலிருந்து அருகிலுள்ள செங்கற்களாலான குளத்திற்குச் செல்லும் சாலையும் இருந்தது. பிரித்தானிய ஆய்வாளர் எஸ். எஃப். அன்னே இதே பிராந்தியத்தில் (திபாங் மற்றும் தியோபானி ஆறுகளுக்கு இடையில்) ஒரு செங்கல் நுழைவாயில், கல் பாலம் மற்றும் ஒரு செங்கல் குளம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தார். ஆனால் உயரமான கோபுரங்களால் வலுவூட்டப்பட்டிருந்தது.
இந்தக் கல் தூணில் 1532 ஆம் ஆண்டு தேதியிட்ட அகோம் கல்வெட்டு ஒன்று உள்ளது. இந்த கல்வெட்டு சுகுங்முங் திகிங்கியா என்பவனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது. சாதியாவின் அகோம் ஆட்சியாளர் 1523இல் அங்கிருந்த உள்ளூர் மிஷ்மி பழங்குடியினரை பணியவைத்து செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தின் விதிமுறைகள் பதினொரு அடி உயர கல் தூணில் பொறிக்கப்பட்டுள்ளன். இது ஒரு பெரிய பாம்பின் வடிவமைப்பில் கீழேயிருந்து மேலே வரை சுற்றி வளைந்து செல்லும் வகையில் கட்டப்பட்டது. தூணில் 9 மற்றும் ஒன்றரை வரிகளைக் கொண்ட கல்வெட்டு பிராசென்முங் போர்கோகைன் (சாதியா அகோம் ஆட்சியாளார்) வெளியிட்ட ஒரு பிரகடனமாகும். இது மிஷ்மிகள் வருடாந்திர கப்பம் செலுத்தவும், திபாங் ஆற்றின் ஒரு பக்கத்தில் வசிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பாம்புத் தூண் சாதியாவிலுள்ள தாம்ரேசுவரி கோவிலில் காணப்படும் எண்கோண வடிவிலான பாம்புத் தூண்களை ஒத்ததாக இருக்கிறது. இது 1953 ஆம் ஆண்டில் அதன் அசல் இடத்திலிருந்து அகற்றப்பட்டு அசாம் மாநில அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
நூல் ஆதாரங்கள்
அசாம்
அசாம் வரலாறு
இந்தியக் கல்வெட்டுகள் |
685245 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%202 | விடுதலை பாகம் 2 | விடுதலை பகுதி 2 (Viduthalai Part 2) என்பது 2024இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ் இன்ஃபோடெயின்மென்ட், கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இப்படத்தை வெற்றிமாறன் இயக்கினார். விடுதலை பகுதி 1(2023) படத்தின் தொடர்ச்சியான இது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையின் தழுவலாகும். முதல் பாகத்தில் நடித்த நடிகர்களான சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், பவானி ஸ்ரீ, ராஜிவ் மேனன், இளவரசு, பாலாஜி சக்திவேல், சரவண சுப்பையா, சேத்தன், மூணார் ரமேஷ் ஆகியோர் இப்படத்திலும் தொடர்ச்சியாக தங்கள் பாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார்கள். மஞ்சு வாரியர், கிஷோர், அனுராக் காஷ்யப், போஸ் வெங்கட், வின்சென்ட் அசோகன், கென் கருணாஸ், சூர்யா விஜய் சேதுபதி ஆகியோரும் இவர்களுடன் இணைந்துள்ளனர்.
தயாரிப்பு
இத்திரைப்படம் முதலில் ஒரே பாகமாக எடுக்கவிருப்பதாக 2021 ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் புகைப்படம் எடுக்கும் பணி 2020 திசம்பரில் தொடங்கியது. முக்கியமாக சத்தியமங்கலம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. இருப்பினும், செப்டம்பர் 2022 இல், படம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் பகுதியின் படப்பிடிப்பு 2022 திசம்பர் பிற்பகுதியில் முடிவடைந்தது. அதே நேரத்தில் இந்த பகுதியின் படப்பிடிப்பும் அக்டோபர் 2024 தொடக்கத்தில் முடிவடைந்தது. இளையராஜா இசையமைத்த இப்படத்திற்கு ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் இரண்டாம் பகுதியும் முதல் பகுதியுடன்,இராட்டர்டேமில் 2024 சனவரி 31 அன்று நடைபெற்ற பன்னாட்டுத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
வெளியீடு
இத்திரைப்படம் திசம்பர் 2024 திசம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியானது. தமிழ்நாட்டின் விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவீசு வாங்கியுள்ளது.
படத்தின் மேலதிக ஊடக சேவை உரிமங்களை ஜீ5 வாங்கியுள்ளது. அதே நேரத்தில் செயற்கைக்கோள் உரிமங்களை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
விடுதலை 2
2024 தமிழ்த் திரைப்படங்கள்
இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
தமிழ்ப் புதினங்களை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள்
சிறுகதையை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் |
685250 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | ஆலாம் சுத்திரா எல்ஆர்டி நிலையம் | ஆலாம் சுத்திரா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Alam Sutera LRT Station; மலாய்: Stesen LRT Alam Sutera; சீனம்: 阿南苏特拉轻轨站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உயர்த்திய நிலையிலான ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.
இந்த நிலையம் கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் புறநகர்ப் பகுதியில் உள்ளது. கோலாலம்பூரில் இருந்து தெற்கே 21 கி.மீ. தொலைவில், பண்டார் கின்ராரா, ஆலாம் சுத்திரா (Alam Sutera) அடுக்குமாடி வீடுகளில் இருந்து 500 மீட்டர் நடை தூரத்தில் உள்ளது.
பொது
இந்த நிலையம் பல குடியிருப்புப் பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. பண்டார் கின்ராரா 1 (Bandar Kinrara 1); பண்டார் கின்ராரா 9 (Bandar Kinrara 9), புஞ்சாக் ஜாலில் (Puncak Jalil) போன்ற அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதிகள் இந்த நிலையத்திற்கு அருகில் உள்ளன.
கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் மற்ற எல்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையமாகும்.
இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் (STAR-LRT System) இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக 15 கி.மீ. தொலைவிற்கு 7 நிலையங்கள் கட்டப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த ஆலாம் சுத்திரா எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 11 சூலை 1998 அன்று திறக்கப்பட்டது. இந்த நிலையத்தில் திறந்தவெளி வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன.
அமைவு
இந்த நிலையத்திற்கு முன்னதாக கின்ராரா பிகே5 எல்ஆர்டி நிலையமும்; பின்னதாக முகிபா எல்ஆர்டி நிலையமும் உள்ளன.
பேருந்து சேவைகள்
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.
அமைப்பு
காட்சியகம்
ஆலாம் சுத்திரா எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2022)
மேலும் காண்க
அவான் பெசார் எல்ஆர்டி நிலையம்
புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையம்
புக்கிட் ஜாலில்
மலேசிய தொழில்நுட்ப பூங்கா
கூச்சாய் லாமா சாலை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Muhibbah LRT Station - KL MRT / LRT Integration
மலேசியத் தொடருந்து நிலையங்கள்
கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள் |
685256 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | திக்ரசு சட்டமன்றத் தொகுதி | திக்ரசு சட்டமன்றத் தொகுதி (Digras Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது யவத்மால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும். திக்ரசு, யவத்மால்-வாசிம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
வெளியிணைப்புகள்
இந்திய தேர்தல் ஆணையம்
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
மகாராட்டிர அரசியல் |
685258 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF | மகேந்திர குமாரி | மகேந்திர குமாரி (Mahendra Kumari) (1942-27 ஜூன் 2002) இந்திய மக்களவை உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசியல்வாதியும் ஆவார். இவர் இராசத்தான் மாநிலத்தின் அல்வார் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். பூந்தி நகரத்தில் 1942 ஆம் ஆண்டு ஓர் அரச குடும்பத்தில் பிறந்த இவர் குவாலியரில் அமைந்துள்ள சிந்தியா பெண்கள் கல்லூரியில் கல்வி கற்றார். மேலும் இவர் அல்வாரின் அரசர் பிரதாப் சிங்கின் மனைவியும் ஆவார்.
1991 முதல் 1996 வரை இராசத்தானின் அல்வார் மக்களவைத் தொகுதியைபிரதிநிதித்துவப்படுத்தும் பத்தாவது மக்களவை உறுப்பினராக இருந்தார். 1993 முதல் 1996 வரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் குழுவிலும், 1993 முதல் 1995 வரை அவைக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
விளையாட்டில் தீவிர ஆர்வலரான இவர் துப்பாக்கி சுடும் போட்டியில் வாகையர் பட்டம் பெற்றுள்ளார். மேலும், டென்னிசு, நீச்சல் மற்றும் சவாரி ஆகியவற்றில் சிறப்பு ஆர்வம் கொண்டிருந்தார். 1995 ஆம் ஆண்டில் சீனத் தலைநகர் பெய்சிங்கில் நடைபெற்ற பெண்கள் குறித்தான நான்காவது உலக மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவில் மகேந்திர குமாரி ஓர் உறுப்பினராக இருந்தார்.
இவர் 27 சூன் 2002 அன்று புது தில்லியில் தனது 60வது வயதில் ஒரு சிறு நோய்த்தொற்றால் இறந்தார்.
மேற்கோள்கள்
இராசத்தானைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
10வது மக்களவை உறுப்பினர்கள்
2002 இறப்புகள்
1942 பிறப்புகள் |
685261 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D | இரஞ்சித் தேசாய் | இரஞ்சித் இராமச்சந்திரத் தேசாய் (Ranjit Desai)(8 ஏப்ரல் 1928-6 மார்ச் 1992) இந்தியாவின் மகாராட்டிரவினைச் சேர்ந்த ஓர் இந்திய மராத்தி மொழி எழுத்தாளர் ஆவார். சுவாமி மற்றும் சிறீமந்த யோகி ஆகிய வரலாற்று நாவல்களுக்காக இவர் மிகவும் பிரபலமானவர். 1964ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருது, 1973ஆம் ஆண்டில் பத்மசிறீ விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
படைப்புகள்
தேசாயின் மிக முக்கியமான படைப்புகள் "சுவாமி" மற்றும் "சிறீமன் யோகி" ஆகும். இவரது பிற படைப்புகள் பின்வருமாறு.
புதினம்
இராதேயா-பாண்டவர்களின் மற்றும் அவரது கொடுங்கோன்மைக்கு மூத்தவரான 'கர்ணன்'-இன் வாழ்க்கையை விவரிக்கும் கதை.
சுவாமி-சாகித்திய அகாதமி விருது பெற்றவர்
சிறீமன் யோகி-சிவாஜியினை அடிப்படையாகக் கொண்டது
பாரி.
இராஜா இரவி வர்மா
பவன்கிந்த்
இலக்ஷவேத்
மாசா காவ்ன்
சேகரா
பிரதிக்ஷா
அபோகி
சமிதா
சிறுகதைத் தொகுப்புகள்
உரூப் மகால்
மதுமதி
ஜான்.
கனவ்
காந்தாளி
ஆலேக்
காமோதினி
மோர்பாங்கி சவல்யா
கத்தால்
பாபுல்மோரா
சங்கேசு
பிரபாத்
மேகா
வைசாக்
ஆசாத்
மேக் மோகாரி
சினேகா தாரா
நாடகம்
காஞ்சன் ம்ருக்
தன் அபூரே
பன்க் சலே வைரி
சங்கீத் சாம்ராட் டான்சென்
கருட் ஜெப்
இராம் சாசுதிரி
சிறீஇமான் யோகி
சுவாமி.
வாராசா
பங்குல்காடா
லோக் நாயக்
ஹி பந்த் ரேஷ்மாச்சே
துசி வாட் வெகாலி
சவாலி உன்னகாச்சி
திரைக்கதை
இரங்கல்யா iராத்ரி ஆசியா
சவால் மாசா ஐகா
நாகின்.
சங்கோலி ராயனா
இரங் இரசியா
விருதுகள்
மகாராட்டிர மாநில விருது (1963) (சுவாமிக்காக)
ஹரி நாராயண் ஆப்டே விருது (1963)
சாகித்திய அகாதமி விருது (1964) (சுவாமிக்காக)
இந்திய அரசிடமிருந்து பத்மசிறீ (1973)
மகாராட்டிர கௌரவ் புரசுகார் (1990)
மேற்கோள்கள்
1992 இறப்புகள்
1928 பிறப்புகள்
மராத்தி எழுத்தாளர்கள் |
685262 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%20%28%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29 | சிந்து பைரவி (இராகம்) | சிந்து பைரவி என்பது ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக பாரம்பரிய இசையில் ஒரு இராகம் ஆகும். ஹிந்துஸ்தானி முறையில் ஆசாவரி தாட்டு அல்லது மேளத்தில் வரும். கர்நாடக பாரம்பரியத்தில் ஜன்ய ராகங்களில் நடபைரவி மேளத்தில் வரும்.
மேற்கோள்கள்
ஜன்னிய இராகங்கள் |
685267 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | தசதா சட்டமன்றத் தொகுதி | தசதா சட்டமன்றத் தொகுதி (Dasada Assembly constituency) (தொகுதி வரிசை எண்:60) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி சுரேந்திரநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பி. கே. பார்மர் ஆவார்.
சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்
இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.
தசதா தாலுகா
லக்தர் தாலுகா
லிம்பாடி தாலுகா (பகுதி) கிராமங்கள் - மோதி கதேச்சி, நானி கதேச்சி, கத்தால், ஜாலியாலா, பகவான்பர், ரணகாத், ஃபுல்வாடி, ரோஜாசர், தல்வானா, முல்பவ்லா, திக்விஜய்காத், திரஜ்கத், பரலி, பதன், லட்சுமிசார், ஷியானி, ஜம்பு, பர்னாலா, ஜஸ்மத்பர், ஜலம்பர்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
குஜராத் சட்டமன்றத் தொகுதிகள் |
685270 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%28%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%29 | ஆர்ணீ சட்டமன்றத் தொகுதி (மகாராட்டிரா) | ஆர்ணீ-கேலாப்பூர் சட்டமன்றத் தொகுதி (Arni-Kelapur Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது யாவத்மால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும். இது பழங்குடியின வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்ணீ, சந்திரபூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
=2024
வெளி இணைப்புகள்
இந்திய தேர்தல் ஆணையம்
மேற்கோள்கள்
மகாராட்டிர அரசியல்
யவத்மாள் மாவட்டம்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
685280 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D | ஆசா பட்டீல் | ஆசா பட்டீல் (Asha Patil)(1936-18 சனவரி 2016) மராத்தி திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் நாடக நடிகை ஆவார். இவரது காலத்தின் மிகச்சிறந்த நாடக, திரைப்பட நடிகைகளில் ஒருவராகக் கருதப்படும் ஆசா பட்டீல் பெரும்பாலும் தாய் கதாபாத்திரங்களில் நடித்ததற்காக அறியப்பட்டார். தும்சா ஆம்சா ஜமாலா, போட் லாவின் திதா குட் குல்யா, இராம் ராம் கங்காரம், வாஜ்வு கா, பல்வா பால்வி மற்றும் சசார்க் தோதர் உள்ளிட்ட மூத்த நடிகர் மறைந்த தாதா கொண்ட்கே "ஆயே" என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அவர் பிரபலமானார்.
திரைப்படவியல்
திரைப்படங்கள்
அந்தரிச்சா திவா (1960)
சந்தல் சௌகாடி (1961)
மானசலா பங்க அசுதாத் (1961)
சாகிர் பரசுராம் (1962)
ரங்கல்யா ராத்ரி ஆஷா (1962)
சாந்த் நிவ்ருட்டி ஞானதேவ் (1964)
காமபுராதா மாமா (1965)
சாதி மன்சா (1965)
ப்ரீத்தி விவாஹ் (1981)
சாம்னா (1974)
கரவா தாசா பரவ் (1975)
சோயாரிக் (1975)
தும்சா ஆம்சா ஜமாலா (1978)
போட் லாவின் டிட்டே குட் குல்யா (1978)
சசுர்வாசின் (1978)
பன்யா பாபு (1977)
ராம் ராம் கங்காரம் (1977)
பாதராச்சிய சவாலிட் (1977)
சுலவராச்சி போலி (1979)
மன்த்ரியாச்சி சன் (1980)
உதவல நவரா (1989)
கவ்ரான் கங்கு (1989)
பல்வா பால்வி (1990)
சுபா போல் நார்யா (1990)
மகெர்ச்சி சாதி (1991)
சசர்ச்சா தோதர் (1994)
புத்ராவதி (1996)
வஜவு கா
கே பராரி (2008)
மகெர்ச்சி பகுனி
நாடகம்
டூ மி நவெச் (1962)
ஏகாச் பியாலா (1976)
மேலும் காண்க
மராத்தி சினிமா
மேற்கோள்கள்
இந்தியத் திரைப்பட நடிகைகள்
1936 பிறப்புகள்
20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
மராத்தியத் திரைப்பட நடிகைகள்
2016 இறப்புகள் |
685281 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF | கருமணசேரி | கருமணசேரி (Karumanassery) என்பது இந்தியாவின் கேரளாத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இது வடக்கஞ்சேரியிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில், தேசிய நெடுஞ்சாலை 47 இல், பாலக்காடு மற்றும் திருச்சூர் இடையில் உள்ளது. இந்த கிராமத்தில் ஆண்டுதோறும் திசம்பர் கடைசி வாரத்தில் தேர் திருவிழா நடைபெறும்.
மேற்கோள்கள்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata |
685283 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 | கால்சியம் சல்பைட்டு | கால்சியம் சல்பைட்டு (Calcium sulfite) என்பது CaSO3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கால்சியத்தின் சல்பைட்டு உப்பாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. இரண்டு படிக வடிவங்கள் அறியப்படுகின்றன. எனவே இதன் மூலக்கூற்று வாய்ப்பாடை CaSO3 ·x(H2O) என்றும் எழுதலாம். வாய்ப்பாட்டிலுள்ள x = 1/2, 4 என்ற எண்களுகுச் சமமாகும். அதாவது முறையே கால்சியம் சல்பைட்டு அரைநீரேற்று CaSO3·½(H2O) என்றும் கால்சியம் சல்பைட்டு நான்குநீரேற்று CaSO3·4(H2O) என்றும் குறிக்கப்படுகின்றன. இவை இரண்டுமே வெண்மை நிறத்தில் திண்மப் பொருளாகக் காணப்படுகின்றன. வாயு அல்லது வெப்பக்காற்றை வெளியேற்றும் குழாய்களில் கால்சியம் சல்பைட்டு விளைபொருளாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தயாரிப்பு
அனல் வாயு கந்தகநீக்கச் செயல்முறையின் மூலம் கால்சியம் சல்பைட்டு பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. நிலக்கரி அல்லது பிற புதைபடிவ எரிபொருளை எரிக்கும்போது, அதன் துணை விளைபொருளாக அனல் வாயு உருவாகிறது. அனல் வாயுவில் பெரும்பாலும் கந்தக டை ஆக்சைடு கலந்திருக்கும். இதன் உமிழ்வு பெரும்பாலும் அமில மழையைத் தடுக்க ஒழுங்குபடுத்தப்படுகிறது. புகைபோக்கி அடுக்கு வழியாக மீதமுள்ள வாயுக்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்பு கந்தக டை ஆக்சைடு துப்புரவாக்கப்படுகிறது. அனல் வாயுவிலிருந்து கந்தக டை ஆக்சைடை நீக்குவதற்கான ஒரு சிக்கனமான வழி, கழிவுநீரை Ca(OH)2 நீரேற்றப்பட்ட சுண்ணாம்பு அல்லது CaCO3 சுண்ணாம்புக் கல்லைக் கொண்டு சுத்திகரிப்பதாகும்.
சுண்ணாம்புக் கல்லைக் கொண்டு சுரண்டி துப்புரவாக்குதல் பின்வரும் சிறந்த வினையைப் பின்பற்றுகிறது:
SO2 + CaCO3 → CaSO3 + CO2
நீரேற்றப்பட்ட சுண்ணாம்பு கொண்டு சுரண்டி துப்புரவாக்குதலில் பின்வரும் வினை நிகழ்கிறது.
SO2 + Ca(OH)2 → CaSO3 + H2O
இதன் விளைவாக உருவாகும் கால்சியம் சல்பைட்டு காற்றில் ஆக்சனேற்றப்பட்டு ஜிப்சத்தைக் கொடுக்கிறது:
2 CaSO3 + O2 → 2 CaSO4
சிப்சம், போதுமான அளவு தூய்மையாக இருப்பதால் கட்டுமானப் பொருளாக சந்தைப்படுத்தப்படுகிறது.
பயன்கள்
சிப்சம் பலகை
கால்சியம் சல்பைட்டு சிப்சம் உற்பத்தியில் இடைநிலையாக உருவாக்கப்படுகிறது. இது சிப்சம் பலகையின் முக்கிய அங்கமாகும். ஒரு பொதுவான அமெரிக்க இல்லத்தில் 7 மெட்ரிக் டன்கள் சிப்சம் பலகை உள்ளது.
உணவு சேர்பொருள்
உணவு சேர் பொருளாக கால்சியம் சல்பைட்டு ஐரோப்பிய ஒன்றிய எண் ஐ226 என்ற எண்ணின் கீழ் ஓர் உணவு பாதுகாப்பாளராகப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற ஆக்சிசனேற்ற சல்பைட்டுகளுடன் சேர்ந்து இது பொதுவாக ஒயின் எனப்படும் திராட்சை மது, சைடர் எனப்படும் ஆப்பிள் மது, பழச்சாறு, புட்டிகளில் அடைக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பாதுகாப்பதில் பயன்படுத்தப்படுகிறது. சல்பைட்டுகள் கரைசலில் வலுவான குறைப்பான்களாகும். இவை உணவைப் பாதுகாக்க ஆக்சிசன் துப்புரவு ஆக்சிசனேற்றிகளாக செயல்படுகின்றன. ஆனால் சில நபர்களுக்கு அதிக உணர்திறன் கொண்டதாக இருக்கலாம் என்பதால் அடையாளமிடல் தேவைப்படுகிறது.
மரக் கூழ் உற்பத்தி
இரசாயன மரக் கூழ் என்பது செல்லுலோசை மரத்துடன் ஒன்றாக இணைக்கும் இலிக்னினைக் கரைப்பதன் மூலம் மரத்திலிருந்து செல்லுலோசை அகற்றுவதாகும். சல்பைட்டுகளுக்குப் பதிலாக ஐதராக்சைடுகள் மற்றும் சல்பைடுகளைப் பயன்படுத்தும் கிராஃப்ட் செயல்முறைக்கு மாற்றாக, கால்சியம் சல்பைட்டை சல்பைட்டு செயல்முறை மூலம் மரக் கூழ் உற்பத்தியில் பயன்படுத்தலாம்.
சிப்சம்
மாங்கனீசு (Mn2+) நேர்மின் அயனி அல்லது கந்தக அமில வினையூக்கிகளுடன் நீர் கலவையில் ஆக்சிசனேற்றம் (O2 சேர்த்து) சிப்சம் உற்பத்தி செய்ய கால்சியம் சல்பைட்டைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.
கட்டமைப்பு
நீரற்ற கால்சியம் சல்பைட்டு சிக்கலான பல்லுருவ அமைப்பைக் கொண்டிருப்பதை எக்சுகதிர் படிகவியல் காட்டுகிறது. இந்த நான்குநீரேற்று Ca3(SO3)2(SO4).12H2O மற்றும் Ca3(SO3)2(SO3).12H2O ஆகியவற்றின் திண்மக்கரைசலாக படிகமாகிறது. கலப்பு சல்பைட்டு-சல்பேட்டு சிப்சம் உற்பத்தியில் நடைமுறையில் உள்ளபடி, சல்பைட்டின் ஆக்சிசனேற்றத்தில் சல்பேட்டிற்கு ஓர் இடைநிலையாக உள்ளது. திண்மக்கரைசலில் [Ca3(SO3)2(H2O)12]2+ நேர்மின் அயனிகளும் சல்பைட்டு அல்லது சல்பேட்டு எதிர்மின் அயனிகளும் உள்ளன. இந்த படிக ஆய்வுகள் சல்பைட்டு அயனி ஒரு பிரமிடு எனப்படும் பட்டைக்கூம்பு வடிவவியலை ஏற்றுக்கொள்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
இயற்கைத் தோற்றம்
கால்சியம் சல்பைட்டு(III) அரைநீரேற்று இயற்கையில் ஓர் அரிய கனிமமான அன்னேபாகைட்டாக காணப்படுகிறது.
மேலும் காண்க
மக்னீசியம் சல்பைட்
சோடியம் பைசல்பைட்டு
மேற்கோள்கள்
கால்சியம் சேர்மங்கள்
சல்பைட்டுகள் |
685284 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF.%20%E0%AE%9F%E0%AE%BF.%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D | வி. டி. பட்டீல் | வி. டி. பாட்டீல் (V. T. Patil)(பிறப்பு சூலை 31,1900-இறப்பு அறியப்படாதவர்) கல்வி சீர்திருத்தவாதியும் இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவர் 1962 முதல் 1967 வரை 3ஆவது மக்களவையில் கோலாப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இந்தியாவின் மகாராட்டிரவில் உள்ள கோலாப்பூரில் கல்வியின் வளர்ச்சியில் இவரது ஆர்வம் இவர் நிறுவிய அல்லது நிறுவியதில் ஈடுபட்ட பல்வேறு நிறுவனங்களில் பிரதிபலிக்கிறது.
வாழ்க்கை
பட்டீல் இந்தியாவில் பம்பாய் மாகாணத்தின் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள சிகானில் 1900 சூலை 31 அன்று பிறந்தார். இவர் பம்பாய் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றார். 1930 முதல் 1950 வரை கோலாப்பூரில் சட்டத்துறையில் பணியாற்றினார்.
கிராமப்புறக் கல்வி
கோலாப்பூரில் கிராமப்புற மற்றும் பெண்கள் கல்வியை மேம்படுத்துவதில் பட்டீல் ஆர்வம் கொண்டிருந்தார். தராராணி வித்யாபீடத்தின் இளையோர் கல்வி கல்லூரியை நிறுவுவதில் ஈடுபட்ட பட்டீர்ல், சிறீ மவுனி வித்யாபீடத்தின் இணை நிறுவனராகவும் இருந்தார். இவர் கமலா கல்லூரியை நிறுவினார். மேலும் சிவராஜ் கலை வணிகவியல் கல்லூரியை நிறுவ உதவினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்
பட்டீல் 1962ஆம் ஆண்டில் மூன்றாவது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக கோலாப்பூர் மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்தினார்.
மேற்கோள்கள்
மகாராட்டிரத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
இறந்த ஆண்டு குறிப்பிடப்படவில்லை
1900 பிறப்புகள்
3வது மக்களவை உறுப்பினர்கள் |
685285 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%875%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | கின்ராரா பிகே5 எல்ஆர்டி நிலையம் | கின்ராரா பிகே5 எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Kinrara BK5 LRT Station; மலாய்: Stesen LRT Kinrara BK5; சீனம்: 英国金拉拉 5) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உயர்த்திய நிலையிலான ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.
இந்த நிலையம் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், பூச்சோங், பண்டார் கின்ராரா, புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எல்ஆர்டி விரிவாக்கத் திட்டம் கட்டம் 1-இன் இலகுத் தொடருந்து (எல்ஆர்டி) சேவைகளுக்கான (LRT Extension Project Phase 1) தெற்கு முனையமாக உள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் மற்ற எல்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையமாகும்.
பொது
2013-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கப்பட்ட எல்ஆர்டி விரிவாக்கத் திட்டத்தின் (LRT Extension Project) பணிகள் அவான் பெசார் எல்ஆர்டி நிலையத்தில் தொடங்கி கின்ராரா, பூச்சோங் வழியாகச் சென்று புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையத்தில் (Putra Heights) முடிவடைந்தது.
11 புதிய நிலையங்களுடன்; 17.7 கிமீ நீளம் கொண்ட இந்த விரிவாக்கத் திட்டம் கட்டம் கட்டமாகக முடிக்கப்பட்டது. 4 நிலையங்களைக் கொண்ட முதல் கட்டம் செப்டம்பர் 2015-இல் நிறைவடைந்து; 31 அக்டோபர் 2015-இல் செயல்படத் தொடங்கியது..எஞ்சிய 7 நிலையங்களை உள்ளடக்கிய எல்ஆர்டி விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாம் கட்டம்; 30 சூன் 2016 அன்று செயல்படத் தொடங்கியது.
இந்த நிலையத்திற்கு அருகில் பண்டார் கின்ராரா ஜயென்ட் உயர் சிறப்பங்காடி (Giant Hypermarket Bandar Kinrara BK5); மற்றும் கின்ராரா ஓவல் ( Kinrara Oval) போன்ற வணிக மையங்கள் உள்ளன.
கட்டிடக்கலை
பசுமை முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த கின்ராரா பிகே5 எல்ஆர்டி நிலையம், பசுமை நடைமுறைகளை உள்ளடக்கியது. இந்த நிலையத்தில் ஆற்றல் திறன் கொண்ட விளக்குகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
நிலையத்திற்க்குள் சூரிய ஒளியை அனுமதிக்கும் வகையில் சாளரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கட்டுமானத்தின் போது மறுசுழற்சி பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.
சேவைகள்
ஒவ்வொரு நாளும் காலை 6:00 மணி முதல் நிலையம் திறந்திருக்கும். சிறப்புக் கோரிக்கை முன்வைக்கப்பட்டால், நிலையம் முன்னதாகவே திறக்கப்படலாம்.
அமைவு
இந்த நிலையத்திற்கு முன்னதாக பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையமும்; பின்னதாக ஆலாம் சுத்திரா எல்ஆர்டி நிலையமும் உள்ளன.
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.
காட்சியகம்
கின்ராரா பிகே5 எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2023)
மேலும் காண்க
பண்டார் கின்ராரா
பண்டார் பூச்சோங்
பண்டார் புத்திரி பூச்சோங்
பூச்சோங் ஜெயா
திரேசா கோக்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Kinrara BK5 LRT Station - KL MRT Line Integrations
மலேசியத் தொடருந்து நிலையங்கள்
கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள் |
685287 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | புசத் சட்டமன்றத் தொகுதி | புசத் சட்டமன்றத் தொகுதி (Pusad Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது யாவத்மால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும். புசத், யாவத்மால்-வாஷிம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
^ By Elections
தேர்தல் முடிவுகள்
2024
வெளி இணைப்புகள்
இந்திய தேர்தல் ஆணையம்
மகாராட்டிர அரசியல்
யவத்மாள் மாவட்டம்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
மேற்கோள்கள் |
685297 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | உமர்கேட் சட்டமன்றத் தொகுதி | உமர்கேட் சட்டமன்றத் தொகுதி (Umarkhed Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது யவத்மால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும். இது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உமர்கேட், ஹிங்கோலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
}}
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
மகாராட்டிர அரசியல் |
685302 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம் | ஐஓஐ பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம் அல்லது பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: IOI Puchong Jaya LRT Station; மலாய்: Stesen LRT IOI Puchong Jaya; சீனம்: IOI 蒲种再也) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உயர்த்திய நிலையிலான ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.
இந்த நிலையம் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், பூச்சோங் ஜெயா, டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையில் அமைந்துள்ளது. எல்ஆர்டி விரிவாக்கத் திட்டம் கட்டம் 1-இன் இலகுத் தொடருந்து (எல்ஆர்டி) சேவைகளுக்கான (LRT Extension Project Phase 1) திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் மற்ற எல்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையமாகும்.
பொது
2013-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கப்பட்ட எல்ஆர்டி விரிவாக்கத் திட்டத்தின் (LRT Extension Project) பணிகள் அவான் பெசார் எல்ஆர்டி நிலையத்தில் தொடங்கி கின்ராரா, பூச்சோங் வழியாகச் சென்று புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையத்தில் (Putra Heights) முடிவடைந்தது.
11 புதிய நிலையங்களுடன்; 17.7 கிமீ நீளம் கொண்ட இந்த விரிவாக்கத் திட்டம் கட்டம் கட்டமாக முடிக்கப்பட்டது. 4 நிலையங்களைக் கொண்ட முதல் கட்டம் செப்டம்பர் 2015-இல் நிறைவடைந்து; 31 அக்டோபர் 2015-இல் செயல்படத் தொடங்கியது..எஞ்சிய 7 நிலையங்களை உள்ளடக்கிய எல்ஆர்டி விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாம் கட்டம்; 30 சூன் 2016 அன்று செயல்படத் தொடங்கியது.
இந்த நிலையத்திற்கு அருகில் ஐஓஐ வணிக வளாகம் (IOI Mall) உள்ளது. பூச்சோங் ஜெயா நகரின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது.
கட்டுமானம்
செரி பெட்டாலிங் வடத்தடத்திற்கான நீட்டிப்புத் திட்டம் 2006-இல் முன்மொழியப்பட்டது. 2011-இல் கட்டுமானம் தொடங்கியது. RM 955.84 ரிங்கிட் மில்லியன் மதிப்பிலான இந்தத் திட்டம் ஜார்ஜ் கென்ட் (எம்) நிறுவனம் (George Kent (M) Bhd); மற்றும் லயன் பசிபிக் நிறுவனம் (Lion Pacific Sdn Bhd); ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டது.5
2012-இல். திட்டத்தில் சில தாமதங்கள் ஏற்பட்டன. ஆனாலும், மேலும் 3 நிலையங்களுடன் இந்த நிலையம் 2016 மார்ச் 31-இல் திறக்கப்பட்டது.
கட்டிடக்கலை
பசுமை முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த கின்ராரா பிகே5 எல்ஆர்டி நிலையம், பசுமை நடைமுறைகளை உள்ளடக்கியது. இந்த நிலையத்தில் ஆற்றல் திறன் கொண்ட விளக்குகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
நிலையத்திற்க்குள் சூரிய ஒளியை அனுமதிக்கும் வகையில் சாளரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கட்டுமானத்தின் போது மறுசுழற்சி பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.
சேவைகள்
ஒவ்வொரு நாளும் காலை 6:00 மணி முதல் நிலையம் திறந்திருக்கும். சிறப்புக் கோரிக்கை முன்வைக்கப்பட்டால், நிலையம் முன்னதாகவே திறக்கப்படலாம்.
பேருந்து சேவைகள்
அமைவு
இந்த நிலையத்திற்கு முன்னதாக பண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையமும்; பின்னதாக கின்ராரா பிகே5 எல்ஆர்டி நிலையமும் உள்ளன.
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.
காட்சியகம்
பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2023)
மேலும் காண்க
பூச்சோங்
பண்டார் பூச்சோங்
பண்டார் புத்திரி பூச்சோங்
பூச்சோங் ஜெயா
பூச்சோங் தமிழ்ப்பள்ளி
பூச்சோங் மக்களவைத் தொகுதி
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
IOI Puchong Jaya LRT Station - KL MRT Line Integrations
மலேசியத் தொடருந்து நிலையங்கள்
கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள் |
685313 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE | சாந்திப்ரியா | சாந்திப்ரியா ஒரு இந்திய நடிகை மற்றும் நடனக் கலைஞர் ஆவார், இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் முக்கியமாக பணியாற்றியுள்ளார். அவர் தமிழ் படங்களில் நிசாந்தியாகவும், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் சாந்திப்ரியாவாகவும் புகழ் பெற்றார். இவர் நடிகை பானுப்ரியாவின் தங்கை ஆவார்.
ஆரம்பகால வாழ்க்கை
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு அருகிலுள்ள ரங்கம்பேட்டா கிராமத்தில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பட்டாபிராமன் மற்றும் எம்.லட்சுமிக்கு மகளாகப் பிறந்தவர் சாந்திப்ரியா. பின்னர் அவரது குடும்பம் தமிழ்நாட்டின் சென்னைக்கு குடிபெயர்ந்தது. அவருக்கு ஒரு மூத்த சகோதரர் கோபிகிருஷ்ணா மற்றும் ஒரு மூத்த சகோதரி பானுப்ரியா உள்ளனர், அவர் 1980 களில் இருந்து திரைப்பட நடிகையாகவும் இருந்து வருகிறார்.
திரைப்படங்கள்
மேற்கோள்கள்
வாழும் நபர்கள் |
685318 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | லிம்ப்டி சட்டமன்றத் தொகுதி | லிம்ப்டி சட்டமன்றத் தொகுதி (Limbdi Assembly constituency) (தொகுதி வரிசை எண்:61) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி சுரேந்திரநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கிரித்சிங் ரணா ஆவார்.
சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்
இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.
சுடா தாலுகா - முழுவதும்
சைலா தாலுகா - கிராமம் தவிர முழு தாலுகா - ஓரி
லிம்தி தாலுகா (பகுதி) கிராமங்கள் - ஆனந்த்பர், அன்கேவாலியா, பலோல், பல்கம்டா, போய்கா, போஜ்பரா, போடியா, போரானா, போர்னா, சோக்கி, சொரனியா, தேவ்பரா, தோலி, டோலட்பர், கெடி, காக்ரேடியா, ககோசர், கன்ஷ்யாம்பர், ஹடான்ஸ், ஜலக்ஹான், , கமல்பூர், கன்பரா, கட்டாரியா, காம்ப்லாவ், தாலுகா இருக்கை: லிம்ப்டி (எம்), லியாட், மோட்டா டிம்ப்லா, நானா டிம்ப்லா, நட்வர்காத், பாண்ட்ரி, பன்ஷினா, ரலோல், ராம்ராஜ்பர், சாம்லா, ரஸ்கா, சவுகா, டோக்ராலா, உகல், உமேத்பர், உந்தடி, வகாத்பர், ஜாம்தி
சட்டமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
குஜராத் சட்டமன்றத் தொகுதிகள் |
685321 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | வாத்வான் சட்டமன்றத் தொகுதி | வாத்வான் சட்டமன்றத் தொகுதி (Wadhwan Assembly constituency) (தொகுதி வரிசை எண்:62) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி சுரேந்திரநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஜகதீஷ்பாய் பிரபுபாய் மக்வானா ஆவார்.
சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்
இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.
வாத்வான் தாலுகா
சட்டமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
குஜராத் சட்டமன்றத் தொகுதிகள் |
685324 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | பண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையம் | பண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையம் அல்லது பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Pusat Bandar Puchong LRT Station; மலாய்: Stesen LRT Pusat Bandar Puchong; சீனம்: 蒲種市中心站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உயர்த்திய நிலையிலான ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.
இந்த நிலையம் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், பூச்சோங் ஜெயா, டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையில் அமைந்துள்ளது. எல்ஆர்டி விரிவாக்கத் திட்டம் கட்டம் 1-இன் இலகுத் தொடருந்து (எல்ஆர்டி) சேவைகளுக்கான (LRT Extension Project Phase 1) திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் மற்ற எல்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையமாகும்.
பொது
2013-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கப்பட்ட எல்ஆர்டி விரிவாக்கத் திட்டத்தின் (LRT Extension Project) பணிகள் அவான் பெசார் எல்ஆர்டி நிலையத்தில் தொடங்கி கின்ராரா, பூச்சோங் வழியாகச் சென்று புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையத்தில் (Putra Heights) முடிவடைந்தது.
11 புதிய நிலையங்களுடன்; 17.7 கிமீ நீளம் கொண்ட இந்த விரிவாக்கத் திட்டம் கட்டம் கட்டமாகக முடிக்கப்பட்டது. 4 நிலையங்களைக் கொண்ட முதல் கட்டம் செப்டம்பர் 2015-இல் நிறைவடைந்து; 31 அக்டோபர் 2015-இல் செயல்படத் தொடங்கியது..எஞ்சிய 7 நிலையங்களை உள்ளடக்கிய எல்ஆர்டி விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாம் கட்டம்; 30 சூன் 2016 அன்று செயல்படத் தொடங்கியது.
அமைவு
இந்த நிலையத்திற்கு முன்னதாக பூச்சோங் தொழில் பூங்கா எல்ஆர்டி நிலையமும்; பின்னதாக பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையமும் உள்ளன.
கோலாலம்பூருக்கு தெற்கே சுமார் 25 கிமீ தொலைவில் உள்ள இந்த நிலையத்திற்கு அருகில் தெஸ்கோ பேரங்காடி (Tesco Puchong) உள்ளது. டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையின் மீது ஒரு பாதசாரி மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம், தாமான் வாவாசான் பூச்சோங் (Taman Wawasan Puchong) மற்றும் பண்டார் புத்திரி பூச்சோங்கின் (Bandar Puteri Puchong) குடியிருப்புகளுக்கு சேவை செய்கிறது. பூச்சோங் நகரின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது.
கட்டுமானம்
செரி பெட்டாலிங் வடத்தடத்திற்கான நீட்டிப்புத் திட்டம் 2006-இல் முன்மொழியப்பட்டது. 2011-இல் கட்டுமானம் தொடங்கியது. RM 955.84 ரிங்கிட் மில்லியன் மதிப்பிலான இந்தத் திட்டம் ஜார்ஜ் கென்ட் (எம்) நிறுவனம் (George Kent (M) Bhd); மற்றும் லயன் பசிபிக் நிறுவனம் (Lion Pacific Sdn Bhd); ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டது.
2012-இல். திட்டத்தில் சில தாமதங்கள் ஏற்பட்டன. ஆனாலும், மேலும் 3 நிலையங்களுடன் இந்த நிலையம் 2016 மார்ச் 31-இல் திறக்கப்பட்டது.
கட்டிடக்கலை
பசுமை முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த கின்ராரா பிகே5 எல்ஆர்டி நிலையம், பசுமை நடைமுறைகளை உள்ளடக்கியது. இந்த நிலையத்தில் ஆற்றல் திறன் கொண்ட விளக்குகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
நிலையத்திற்க்குள் சூரிய ஒளியை அனுமதிக்கும் வகையில் சாளரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கட்டுமானத்தின் போது மறுசுழற்சி பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.
நுழைவாயில்கள்
பண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையத்தில் மொத்தம் இரண்டு நுழைவாயில்கள் / வெளியேறு வாயில்கள் உள்ளன
நிலைய அமைப்பு
சேவைகள்
ஒவ்வொரு நாளும் காலை 6:00 மணி முதல் நிலையம் திறந்திருக்கும். சிறப்புக் கோரிக்கை முன்வைக்கப்பட்டால், நிலையம் முன்னதாகவே திறக்கப்படலாம்.
பேருந்து சேவைகள்
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.
காட்சியகம்
பண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2011 - 2019)
மேலும் காண்க
பூச்சோங்
பண்டார் பூச்சோங்
பண்டார் புத்திரி பூச்சோங்
பூச்சோங் ஜெயா
பூச்சோங் தமிழ்ப்பள்ளி
பூச்சோங் மக்களவைத் தொகுதி
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Pusat Bandar Puchong LRT Station - KL MRT Line Integrations
மலேசியத் தொடருந்து நிலையங்கள்
கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள் |
685327 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D | சுசீந்திரம் எஸ் பி சிவசுப்ரமணியம் பாகவதர் | சுசீந்திரம் எஸ் பி சிவசுப்ரமணியம் (1917-2003) தென் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பன்முக மேதை. அவரது வாழ்க்கை இசையின் மீது முழுமையான பக்தி கொண்டதாக இருந்தது, மேலும் அவர் ஒரு சிறந்த பாடகர் மற்றும் வயலின் கலைஞர் மற்றும் அர்ப்பணிப்புள்ள குரு மட்டுமல்ல, கிளாசிக்கல் மற்றும் பக்தி பாடல்களின் பெரும் பொக்கிஷத்தை உலகுக்கு வழங்கிய மிகவும் ஈர்க்கப்பட்ட இசையமைப்பாளராகவும் இருந்தார். "ஹரிகதா" மற்றும் "தேசபக்தி" வகைகளில் சிறந்து விள்ங்கினார்.
இளமைக் காலம்
திருநெல்வேலி அருகே வாகை குளத்தில் 1917ல் பிறந்த சிவசுப்பிரமணியம், பூதப்பாண்டியில் "அருணாச்சல அண்ணாவி" என்ற குருவிடம் பயின்றார்.
கலைஞர்
சுசீந்திரம் எஸ் பி சிவசுப்ரமணியம் பாகவதர் சாதாரண வித்துவான் மட்டுமல்ல பாடல் எழுதி மெட்டமைத்த சாகித்தியகர்த்தா. செழுமையான குரல், உணர்வுப்பூர்வமான கலைத்திறன், பிரமிக்க வைக்கும் தன்னிச்சை ஆகியவை சிவசுப்ரமணியத்தின் இசையின் தனிச்சிறப்பாகும். அவரது ஆத்மார்த்தமான, பாவம் நிறைந்த பாணி, அவரது கச்சேரிகளில் திரண்டிருந்த எண்ணற்ற இசை ஆர்வலர்களின் இதயங்களை உருக்கியது. அவர் தென்னிந்தியா மற்றும் இலங்கை முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்தினார், மேலும் அவரது இசை நிகழ்ச்சிகள் அகில இந்திய வானொலியிலும் தொடர்ந்து இடம்பெற்றன.
இசையமைப்பாளர்
சிவசுப்ரமணியம் ஒரு தலைசிறந்த வாக்கேயகாரராக இருந்தார் மற்றும் கம்பீரமான இசை மற்றும் கவிதை அழகு கொண்ட பல ரத்தினங்களை உருவாக்கினார். முருகப்பெருமானின் தீவிர பக்தரான அவர், அவர் மீதும், மற்ற தெய்வங்கள் மீதும், இசையின் மீதும் பல தலைசிறந்த படைப்புகளை இயற்றினார். சக்தி வாய்ந்த மற்றும் ஊக்கமளிக்கும் செய்திகளால் நிரப்பப்பட்ட சமூக மற்றும் தேசபக்தி கருப்பொருள்களில் அவர் பல பகுதிகளை இயற்றினார், அவ்வாறு செய்த சில கர்நாடக இசையமைப்பாளர்களில் ஒருவர்.
வயலின் வீணை ஹார்மோனியம் மிருதங்கம் பியானோ என்று இவர் வாசிக்காத வாதியும் இல்லை அவருடைய குரலுக்கு ஆபத்து வந்ததும் வயலில் எல்லோருக்கும் உடன் வாசிக்க துணிந்தார் அது மட்டுமல்ல வயலின் உருவாக்கி இருக்கிறார்.
தன் மனைவி சொர்ணாம்பால் ஹரி கதையை சிறந்து விளங்க காரணம் இவர் புராணங்களை அலசி ஆராய்ந்து சொற்பொழிவுக்கு தகுந்த மாதிரி வழி காட்டினார். சில ஹரி கதைகளில் மனைவியுடன் எழுச்சியும் நடத்தி இருக்கிறார் முருகன் பெயரில் இவர் ஏற்றிய பாடல்கள் மிகுந்த ரசமானவை.
இறப்பு
2003 ஆம் ஆண்டு, ஜுன் மாதம் 8ம் தேதி அன்று காலமானார்.
இயற்றிய கீர்த்தனைகளின் பட்டியல்
கேட்ட வரம் தருவாய் (முருகப்பெருமானின் மகிமைக்காக, ஐந்து சரணங்களாக அமைக்கப்பட்ட, ஐந்து கானா ராகங்களை அமைத்து எழுதப்பட்டது.)
தமிழிசை பாமலர்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
நூற்றாண்டு-நாயகர்-சுசீந்திரம்-சிவசுப்ரமணிய-பாகவதர்
வில் எடு அக்கரை |
685329 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF | புல் உண்ணி | புல் உண்ணி (Graminivore) விலங்குகள் முதன்மையாகப் புல், குறிப்பாக "உண்மையான" புற்கள், போயேசி குடும்பத்தின் தாவரங்கள் (கிராமினி என்றும் அழைக்கப்படுகிறது) ஆகியவற்றை உணவாகக் கொள்ளும் தாவர உண்ணி விலங்குகள் ஆகும். புல் உண்ணி விலங்குகள் மேய்ச்சல் விலங்குகளின் ஒரு வகையாகும். இத்தகையத் தாவர உண்ணி விலங்குகள் அதற்கானச் செரிமான அமைப்புகளைக் கொண்டுள்ளன. இவை அதிக அளவு செல்லுலோசை செரிமானம் செய்யக்கூடிய வாழ்க்கையினைத் தழுவியுள்ளன. இவை உண்ணும் உணவில் நார்ச்சத்து நிறைந்த தாவரப் பொருட்கள் உள்ளன. இவற்றைச் செரிமானம் செய்வது பல விலங்குகளுக்குக் கடினமானதாக உள்ளது. எனவே, இவற்றின் செரிமானத்திற்கு உதவச் சிறப்பு நொதிகளைக் கொண்டுள்ளன. மேலும் சில சந்தர்ப்பங்களில் இந்த விலங்குகளின் செரிமான பாதையில் வாழும் கூட்டுயிரி பாக்டீரியாவும் குடல் வழியாகப் பயணிக்கும் உணவுப் பொருள் நொதித்தல் மூலம் செரிமான செயல்முறைக்கு "உதவுகின்றன".
குதிரை, கால்நடைகள், வாத்து, கினி எலி, நீர்யானை, கேபிபாரா, பாண்டா கரடி ஆகியவை முதுகெலும்புள்ள புல் உண்ணிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். நாய் மற்றும் பூனை போன்ற சில மாமிச உண்ணிகளும் எப்போதாவது புல்லைச் சாப்பிடுவதாக அறியப்படுகிறது. நாய்களில் புல் நுகர்வு என்பது மாமிசத்தினால் இத்தகைய விலங்குகளின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் குடல் ஒட்டுண்ணிகளை அகற்றுவதற்கான ஒரு வழிமுறையாகும். பல்வேறு முதுகெலும்பற்ற விலங்குகளும் புல் உண்ணி வாழ்க்கை முறையினைக் கொண்டுள்ளன. அக்ரிடிடே குடும்பத்தைச் சேர்ந்த பல வெட்டுக்கிளிகள், முதன்மையாக போயேசி குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களை உணவாகக் கொண்டுள்ளன. மனிதர்கள் புல் உண்பவர்கள் அல்ல என்றாலும், புல் வகைகளிலிருந்து பெறப்படும் தானியங்களை உண்ணுகின்றனர். இவற்றிலிருந்தே மனிதர்கள் ஊட்டச்சத்தின் பெரும்பகுதியைப் பெறுகின்றனர்.
புல் உண்ணி விலங்குகள் பொதுவாகக் குறிப்பிட்ட வகையான புல்லை உண்ண விரும்புகின்றன. உதாரணமாக, வடகிழக்கு கொலராடோவின் குறுகிய புல்வெளி சமவெளிகளில் காணப்படும் வட அமெரிக்கக் காட்டெருமை மொத்தம் முப்பத்தாறு வெவ்வேறு வகையான தாவரங்களை உட்கொள்கிறது என ஓர் ஆய்வுத் தெரிவிக்கின்றது. ஆனால் இந்தக் காட்டெருமை முப்பத்தாறு வகைப் புல்லில் ஐந்து புல் இனங்களை விரும்பி சாப்பிடுகிறது. இவற்றின் உணவில் இந்த ஐந்து புல் இனங்கள் சராசரியாகச் சுமார் 80% நுகரப்படுகிறது. இந்த இனங்களில் சில அரிசுடிடா லாங்கிசெட்டா, முக்லென்பெர்கியா இனங்கள், மற்றும் பூடெலோவா கிராசிலிசு.
மேற்கோள்கள்
நடத்தையியல் |
685335 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D | அரக்கான் இராணுவம் | {{Infobox war faction
| name = அரக்கான் இராணுவம்
| native_name = အာရက္ခတပ်တော်
| native_name_lang = rki
| war = மியான்மர் உள்நாட்டுப் போர்
| logo =
| leaders =வான் ராத் நையிங்நியோ வான் வாங்
| spokesperson =கினெ தூ கா
| status = செயல்பாட்டில்
| ideology = அரக்கான் தேசியம்ரோகிங்கியா எதிர்ப்பு
| headquarters =லைசா, காசின் மாநிலம் (நடப்பு)ரவுக்-கு, இராகினி மாநிலம் (திட்டமிடப்பட்டுள்ளது)
| partof = * ஐக்கிய அரக்கான் லீக்
| area =சின்லாந்து,காசின் மாநிலம்,மாகுவே மண்டலம்,இராகினி மாநிலம்,சாகைங் பிரதேசம்,ஷான் மாநிலம்,வங்காளதேசம்-மியான்மர் எல்லைப்பகுதிகள்சீனா-மியான்மர் எல்லைபகுதிகள்
| active = – தற்போது வரை
| size = 40,000+ (மே 2024)
சின் மாநிலம் மற்றும் இராகினி மாநிலம்15,000+, காசின் மாநிலம் மற்றும் ஷான் மாநிலம் 1500 [ (பிப்ரவரி, 2024)
| allies =
வடக்கு கூட்டணிப் படைகள்
காசின் விடுதலை இராணுவம்
மியான்மர் தேசிய ஜனநாயக கூட்டணி இராணுவம்
தாங் தேசிய சுதந்திர இராணுவம்
பிற கூட்டாளிகள்:
அனைத்து பர்மிய மாணவர்கள் ஜனநாயக முன்னணி
பாமர் மக்கள் சுதந்திர இராணுவம்
சின் தேசிய இராணுவம்
சின்லாந்து பாதுகாப்புப் படைகள்
கரேன் தேசிய விடுதலை இராணுவம்
கரென்னி தேசியவாதிகள் பாதுகாப்புப் படைகள்
மக்கள் பாதுகாப்பு படைகள்
மக்கள் விடுதலை இராணுவம்
மக்கள் புரட்சிகர கூட்டணி
மாணவர்களின் ஆயுதப் படை
ஐக்கிய வா மாநில இராணுவம்
சோமி புரட்சிகர இராணுவம்
| opponents =
மியான்மர் இராணுவம்
மியான்மர் காவல் படைகள்
{{plainlist|
எதிராளிகள்: அரக்கான் விடுதலை இராணுவம்
அரக்கான் ரோகிஞ்சா இரட்சணிய சேனை
ரோகிஞ்சா ஒற்றுமை அமைப்பு
}}
| battles = மியான்மர் உள்நாட்டுப் போர் (2021 - தற்போது வரை)
| website =
| designated_as_terror_group_by = மியான்மர்
| flag =
}}
அரக்கான் இராணுவம்''' (Arakan Army), மியான்மர் நாட்டில் ஏப்ரல் 2009 முதல் மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிராக இராகினி மாநிலத்தில் செயல்படும் ஐக்கிய அரக்கான் லீக்கின் ஆயுதக் குழுவாகும். இராகினி மாநிலத்திற்கு தன்னாட்சி கோரும்
இந்த ஆயுதக் குழுவின் படைத் தலைவராக மேஜர் ஜெனரல் வான் ராத் நயிங் செயல்படுகிறார். 2020ல் மியான்மர் அரசு இந்த ஆயுதக் குழுவை பயங்கரவாத அமைப்பு என அறிவித்துள்ளது. ஜுந்தா இராணுவ அரசு இக்குழுவை 2024ல் பயங்கரவாத அமைப்பு எனக்கூறி தடைசெய்துள்ளது.
பிப்ரவரி 2024ல் அரக்கான் இராணுவத்தில்38,000 படையினர் உள்ளதாக கூறப்படுகிறது.
சில வல்லுநர்கள் சின்லாந்து'' மற்றும் இராகினி மாநிலத்தில் 15,000 போராளிகளும்; காசின் மாநிலம் மற்றும் சான் மாநிலத்தில் 1,500 போராளிகள் மட்டும் உள்ளதாக மதிப்பீடு செய்துள்ளனர்.
ஏற்கனவே இராகினி மாநிலத்தின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளை கைப்பற்றிய அரக்கான் இராணுவம், டிசம்பர் 2024ல் மியான்மர்-வங்காளதேசத்தின் எல்லையை ஒட்டிய வங்காளதேசத்தின் தெக்னாப் பிராந்தியத்தை கைப்பற்றியது.
இதனையும் காண்க
2021 மியான்மர் இராணுவப் புரட்சி
மியான்மர் உள்நாட்டுப் போர் (2021-தற்போது வரை)
மியான்மர் அரசு நிர்வாகக் குழு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Arakan Army's old website 1
Arakan Army's old website 2
Arakan Army's old website 3
மியான்மார்
தீவிரவாத அமைப்பு என குறிப்பிடப்பட்டவை |
685343 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF | கேரளச்சேரி | கேரளச்சேரி (Keralasseri) என்பது இந்தியாவின் கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சியும், ஒரு கிராமமுமாகும். இது கோயில்கள், பள்ளிவசல்கள், தேவாலயங்கள் போன்ற வழிபாட்டிடங்களைக் கொண்ட ஒரு சிறிய கிராமமாகும்.
மக்கள்வகைப்பாடு
2001 ஆண்டய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கேரளச்சேரியின் மக்கள் தொகை 14,755 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 6,972 என்றும், பெண்களின் எண்ணிக்கை 7.783 என்றும் உள்ளது.
வழிபாட்டுத் தலங்கள்
கள்ளப்பாடி சிவன் கோயில் (சிவன், விஷ்ணு ஆகிய இரு தெய்வங்களுக்கும் சம முக்கியத்துவம் கொண்ட கோயில்)
கூட்டாலா பகவதி கோயில்: கோடாலா பாகவதி கோயிலில் பட்டு பிரபலமானது. ஏப்ரல் மே இங்கே ஒரு திருவிழா காலம்.
ஸ்ரீ குரும்ப காவு
கரடிமலை பகவதி கோவில்
அயனாரி ஐயப்பன் கோயில்
யாக்கிகாவ் துர்காதேவி கோயில்
கேரளச்சேரி பள்ளிவாசல்.
புனித மேரி தேவாலயம்
கல்வி நிலையங்கள்
மேல்நிலைப் பள்ளி கேரளச்சேரி
ஏயுபி பள்ளி கேரளச்சேரி
தடுக்காச்சேரி ஹோலி பேமிலி ஏயுபி பள்ளி, கேரளச்சேரி
என்இயுபி பள்ளி கேரளச்சேரி
மேற்கோள்கள்
பாலக்காடு மாவட்ட ஊராட்சிகள்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata |
685345 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%28II%29%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81 | ஈயம்(II) குளோரைடு | ஈயம்(II) குளோரைடு (Lead(II) chloride) என்பது PbCl2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சுற்றுச்சூழல் நிபந்தனைகளில் இது வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படும். இது தண்ணீரில் குறைவாகக் கரையும். ஈயம்(II) குளோரைடு மிகவும் முக்கியமான ஈயம் சார்ந்த வினையாக்கிகளில் ஒன்றாகும். இயற்கையாக கோடண்ணைட்டு என்ற கனிம வடிவத்தில் தோன்றுகிறது.
கட்டமைப்பு
திண்மநிலை ஈயம்(II) குளோரைடின் கட்டமைப்பில் ஒவ்வோர் ஈயம் அயனியும் ஒரு மூவுச்சி முக்கோணப் பட்டகத்தின் உருவாக்கத்தில் ஒன்பது குளோரைடு அயனிகளால் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஆறு ஈயம் அயனிகள் முக்கோண பட்டகத்தின் உச்சியில் உள்ளன. மூன்று அயனிகள் ஒவ்வொரு செவ்வகப் பட்டகத்தின் முகத்தின் மையங்களுக்கு அப்பால் உள்ளன. 9 குளோரைடு அயனிகள் மத்திய ஈய அணுவிலிருந்து சம தூரத்தில் இல்லை, 7 அயனிகள் 280-309 பைக்கோமீட்டர் தூரத்திலும் மற்றும் 2 அயனிகள் 370 பைக்கோமீட்டர் தூரத்திலும் இருக்கின்றன.. PbCl2 வெள்ளை நிறத்தில் செஞ்சாய்சதுர ஊசிகளாக உருவாகும்.
வாயு கட்டத்தில், PbCl2 மூலக்கூறுகள் Cl-Pb-Cl பிணைப்புக் கோணம் 98° ஆகவும், ஒவ்வொரு Pb--Cl பிணைப்பு தூரமும் 2.44 Å ஆகவும் வளைந்த கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இத்தகைய ஈயம்(II) குளோரைடு உள் எரிப்பு இயந்திரங்களில் இருந்து உமிழப்படுகிறது. எத்திலீன் குளோரைடு-டெட்ராஎத்தில் ஈயம் சேர்க்கைகளில் இடி எதிர்ப்புக்குப் இதைப் பயன்படுத்துகின்றன.
PbCl2 தண்ணீரில் குறைவாக கரையும். 20 °செல்சியசு வெப்பநிலையில் கரைதிறன் பெருக்க மதிப்பு Ksp = 1.7×10−5 ஆகும். பொதுவாக நீரில் கரையாத 5 குளோரைடுகளில் இதுவும் ஒன்றாகும். தாலியம்(I) குளோரைடு, வெள்ளி குளோரைடு (AgCl) Ksp = 1.8×10−10, தாமிரம்(I) குளோரைடு (CuCl) Ksp = 1.72×10 Ksp = உடன் −7 மற்றும் பாதரசம்(I) குளோரைடு (Hg2Cl2). 1.3×10−18 என்பன மற்ற நான்கு குளோரைடுகளாகும்.
தயாரிப்பு
காரீய(II) நைட்ரேட்டு மற்றும் காரீய(II) அசிட்டேட்டு போன்ற காரீய(II) சேர்மங்களின் நீரிய கரைசல்களுடன் நீரிய குளோரைடு மூலங்களை (HCl, NaCl, KCl) சேர்ப்பதன் மூலம் திண்ம ஈயம்(II) குளோரைடு வீழ்படிவாகக் கிடைக்கிறது.
Pb(NO3)2 + 2 HCl → PbCl2(திண்மம்) + 2 HNO3
ஈயம்(II) ஆக்சைடு மற்றும் ஈயக் கார்பனேட்டு போன்ற கார ஈயம்(II) சேர்மங்களை சூடுபடுத்தினாலும் ஈயம்(II) குளோரைடு உருவாகிறது.
ஈயம்(IV) ஆக்சைடு குளோரைடு மூலம் பின்வருமாறு ஒடுக்கப்படுகிறது.
PbO2 + 4 HCl → PbCl2(திண்மம்) + Cl2 + 2 H2O
தாமிரம்(II) குளோரைடு மூலம் காரீயம் உலோகத்தை ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலமும் உருவாக்கலாம்.
Pb + CuCl2 → PbCl2 + Cu
அல்லது ஈயம் உலோகத்தின் மீது நேரடியாகக் குளோரின் வாயுவைச் செலுத்தி வினைபுரியச் செய்வதன் மூலம் தயாரிக்கலாம்.
Pb + Cl2 → PbCl2
வினைகள்
PbCl2 இன் தொங்கல் கரைசலுடன் குளோரைடு அயனிகளைச் சேர்ப்பது கரையக்கூடிய அணைவு அயனிகளை உருவாக்குகிறது. இந்த எதிர்விளைவுகளில் கூடுதல் குளோரைடு (அல்லது மற்ற ஈந்தணைவிகள்) திண்ம PbCl2(திண்மம்) பல்லுருவக் கட்டமைப்பை உள்ளடக்கிய குளோரைடு பாலங்களை உடைக்கிறது.
PbCl2(திண்மம்) + Cl− → [PbCl3]−(நீரிய)
PbCl2(திண்மம்) + 2 Cl− → [PbCl4]2−(நீரிய)
PbCl2 உருகிய சோடியம் நைட்ரைட்டுடன் NaNO2 வினைபுரிந்து PbO சேர்மத்தைக் கொடுக்கிறது:
PbCl2(l) + 3 NaNO2 → PbO + NaNO3 + 2 NO + 2 NaCl
ஈயம்(IV) குளோரைடு (PbCl4) தயாரிப்பில் PbCl2 பயன்படுத்தப்படுகிறது. Cl2 ஆனது அமோனியாவில் கரைந்த PbCl2 இன் நிறைவுற்ற கரைசல் மூலம் செலுத்தும்போது [NH4]2[PbCl6] உருவாகிறது. . பிந்தையது செறிவூட்டப்பட்ட குளிர்ந்த கந்தக அமிலத்துடன் (H2SO4) வினைபுரிந்து PbCl4 எண்ணெயை உருவாக்குகிறது.
ஈயம்(II) குளோரைடு என்பது ஈயத்தின் பிளம்போசீன்கள் போன்ற கரிம உலோக வழிப்பெறுதிகள் தயாரிக்கப் பயன்படும் ஒரு முதன்மையான முன்னோடிச் சேர்மமாகும். வழக்கமான ஆல்கைலேற்றும் முகவர்கள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. கிரிக்னார்டு வினையாக்கி மற்றும் கரிமலித்தியம் சேர்மங்களும் அடங்கும்:
2 PbCl2 + 4 RLi → R4Pb + 4 LiCl + Pb
2 PbCl2 + 4 RMgBr → R4Pb + Pb + 4 MgBrCl
3 PbCl2 + 6 RMgBr → R3Pb-PbR3 + Pb + 6 MgBrCl
இந்த எதிர்விளைவுகள் கரிமசிலிக்கன் சேர்மங்களுக்கு மிகவும் ஒத்த வழித்தோன்றல்களை உருவாக்குகின்றன, அதாவது Pb(II) ஆல்கைலேற்றத்தில் விகிதாசாரமாக மாறுகிறது.
சோடியம் ஐப்போகுளோரைட்டு (NaClO) ஈயம்(II) குளோரைடு சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் PbO2 சேர்மத்தை உற்பத்தி செய்ய முடியும் இது PbO2 இன் செம்-பழுப்பு நிற படிகங்களை உருவாக்குகிறது.
பயன்கள்
ஈய தைட்டனேட்டு, பேரியம் ஈயதைட்டனேட்டு பீங்கானை நேர்மின் அயனி மாற்று வினையால் தயாரிக்க உருகிய ஈயம்(II) குளோரைடு பயன்படுத்தப்படுகிறது:
x PbCl2(l) + BaTiO3(s) → Ba1−xPbxTiO3 + x BaCl2
PbCl2 அகச்சிவப்பு கடத்தும் கண்ணாடி மற்றும் ஆரேன் கண்ணாடி எனப்படும் அலங்கார கண்ணாடி உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. ஆரேன் கண்ணாடியானது PbCl2 தெளிப்பதன் மூலமும் கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழும் மீண்டும் சூடாக்குவதன் மூலமும் உருவான ஒரு மாறுபட்ட மேற்பரப்பைக் கொண்டுள்ளது. சிடானசு குளோரைடு (SnCl2) அதே நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.
PbCl2 சேர்மமானது HCl இல் சிறிது கரையக்கூடியதாக இருந்தாலும் HCl சேவையில் Pb பயன்படுத்தப்படுகிறது. 6-25% ஆண்டிமனியைச் (Sb) சேர்ப்பது அரிப்பு எதிர்ப்பை அதிகரிக்கிறது.
ஈயத்தின் காரக்குளோரைடு, PbCl2·Pb(OH)2, பாட்டின்சன் வெள்ளை ஈயம் என்று அறியப்படுகிறது. மேலும் இது வெள்ளை வண்ணப்பூச்சில் நிறமியாகப் பயன்படுத்தப்படுகிறது. 1921 ஆம் ஆண்டின் வெள்ளை ஈயம் (வண்ணம் தீட்டல்) உடன்படிக்கையால் பல நாடுகளில் ஈய வண்ணம் தீட்டல் இப்போது ஓர் உடல்நலக் கேடு என்று தடைசெய்யப்பட்டுள்ளது.
PbCl2 என்பது பிசுமத் (Bi) தாதுவை சுத்திகரிப்பதில் ஓர் இடைநிலை ஆகும். Bi, Pb மற்றும் Zn கொண்ட தாது முதலில் ஆர்சனிக்கு மற்றும் தெலூரியத்தின் தடயங்களை அகற்ற உருகிய எரி சோடாவுடன் சேர்த்து சூடுபடுத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து, வெள்ளி மற்றும் தங்கத்தை அகற்ற பார்க்சு செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. தாதுவில் இப்போது Bi, Pb மற்றும் Zn உள்ளன. 500 °செல்சியசு வெப்பநிலையில் இது Cl2 வாயுவிலிருந்து சூடுபடுத்தப்படுகிறது. முதலில், ZnCl2 உருவாகிறது மற்றும் வெளியேற்றப்படுகிறது. PbCl2 படிவங்களுக்குப் பிறகு தூய்மையான Bi பின்தங்கி நீக்கப்படும். கடைசியாக, BiCl3 உருவாகும்.
நச்சுத்தன்மை
மற்ற கரையக்கூடிய ஈய சேர்மங்களைப் போலவே, PbCl2 சேர்மமும் வெளிப்பாட்டுகு உட்பட்டால் ஈய நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
IARC Monograph: "Lead and Lead Compounds"
IARC Monograph: "Inorganic and Organic Lead Compounds"
National Pollutant Inventory – Lead and Lead Compounds Fact Sheet
Case Studies in Environmental Medicine – Lead Toxicity
ToxFAQs: Lead
ஈயம்(II) சேர்மங்கள்
குளோரைடுகள்
உலோக ஆலைடுகள் |
685352 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | பூச்சோங் தொழில் பூங்கா எல்ஆர்டி நிலையம் | பூச்சோங் தொழில் பூங்கா எல்ஆர்டி நிலையம் அல்லது பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Taman Perindustrian Puchong LRT Station; மலாய்: Stesen LRT Taman Perindustrian Puchong; சீனம்: 蒲种工业园) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உயர்த்திய நிலையிலான ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.
இந்த நிலையம் சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், பூச்சோங் ஜெயா, டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையில் அமைந்துள்ளது. எல்ஆர்டி விரிவாக்கத் திட்டம் கட்டம் 1-இன் இலகுத் தொடருந்து (எல்ஆர்டி) சேவைகளுக்கான (LRT Extension Project Phase 1) திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் மற்ற எல்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையமாகும்.
பொது
2013-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கப்பட்ட எல்ஆர்டி விரிவாக்கத் திட்டத்தின் (LRT Extension Project) பணிகள் அவான் பெசார் எல்ஆர்டி நிலையத்தில் தொடங்கி கின்ராரா, பூச்சோங் வழியாகச் சென்று புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையத்தில் (Putra Heights) முடிவடைந்தது.
11 புதிய நிலையங்களுடன்; 17.7 கிமீ நீளம் கொண்ட இந்த விரிவாக்கத் திட்டம் கட்டம் கட்டமாகக முடிக்கப்பட்டது. 4 நிலையங்களைக் கொண்ட முதல் கட்டம் செப்டம்பர் 2015-இல் நிறைவடைந்து; 31 அக்டோபர் 2015-இல் செயல்படத் தொடங்கியது..எஞ்சிய 7 நிலையங்களை உள்ளடக்கிய எல்ஆர்டி விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாம் கட்டம்; 30 சூன் 2016 அன்று செயல்படத் தொடங்கியது.
அமைவு
இந்த நிலையத்திற்கு முன்னதாக பண்டார் புத்திரி எல்ஆர்டி நிலையமும்; பின்னதாக பண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையமும் உள்ளன.
கோலாலம்பூருக்கு தெற்கே சுமார் 25 கிமீ தொலைவில் உள்ள இந்த நிலையத்திற்கு அருகில் ராக்கான் மூடா வளாகம் (Rakan Muda Complex); ஒரே மலேசியா இளைஞர் திட்டம் (1Malaysia for Youth) (1M4U) உள்ளது. டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையின் மீது ஒரு பாதசாரி மேம்பாலம் உள்ளது.
இந்த மேம்பாலம், பண்டார் புத்திரி பூச்சோங்கில் உள்ள பல்லடுக்கு (Bandar Puteri Puchong) குடியிருப்புகளுக்கு சேவை செய்கிறது. இந்த நிலையத்திற்கு அருகில் உள்ள பூச்சோங் தொழில் பூங்கா (Taman Perindustrian Puchong) எனும் தொழில் வளாகத்தின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது.
கட்டுமானம்
செரி பெட்டாலிங் வடத்தடத்திற்கான நீட்டிப்புத் திட்டம் 2006-இல் முன்மொழியப்பட்டது. 2011-இல் கட்டுமானம் தொடங்கியது. RM 955.84 ரிங்கிட் மில்லியன் மதிப்பிலான இந்தத் திட்டம் ஜார்ஜ் கென்ட் (எம்) நிறுவனம் (George Kent (M) Bhd); மற்றும் லயன் பசிபிக் நிறுவனம் (Lion Pacific Sdn Bhd); ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டது.
2012-இல். திட்டத்தில் சில தாமதங்கள் ஏற்பட்டன. ஆனாலும், மேலும் 3 நிலையங்களுடன் இந்த நிலையம் 2016 மார்ச் 31-இல் திறக்கப்பட்டது.
கட்டிடக்கலை
பசுமை முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த கின்ராரா பிகே5 எல்ஆர்டி நிலையம், பசுமை நடைமுறைகளை உள்ளடக்கியது. இந்த நிலையத்தில் ஆற்றல் திறன் கொண்ட விளக்குகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
நிலையத்திற்க்குள் சூரிய ஒளியை அனுமதிக்கும் வகையில் சாளரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கட்டுமானத்தின் போது மறுசுழற்சி பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.
நிலைய நுழைவாயில்கள்
பூச்சோங் தொழில் பூங்கா எல்ஆர்டி நிலையத்தில் மொத்தம் இரண்டு நுழைவாயில்கள் / வெளியேறு வாயில்கள் உள்ளன
நிலைய அமைப்பு
நிலைய சேவைகள்
ஒவ்வொரு நாளும் காலை 6:00 மணி முதல் நிலையம் திறந்திருக்கும். சிறப்புக் கோரிக்கை முன்வைக்கப்பட்டால், நிலையம் முன்னதாகவே திறக்கப்படலாம்.
பேருந்து சேவைகள்
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.
காட்சியகம்
பூச்சோங் தொழில் பூங்கா எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (சூலை 2022)
மேலும் காண்க
பூச்சோங்
பண்டார் பூச்சோங்
பண்டார் புத்திரி பூச்சோங்
பூச்சோங் ஜெயா
பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம்
பண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையம்
பூச்சோங் விரைவுச்சாலை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Taman Perindustrian Puchong LRT Station - KL MRT Line Integrations
மலேசியத் தொடருந்து நிலையங்கள்
கோலாலம்பூர் கூட்டாட்சியின் தொடருந்து நிலையங்கள் |
685357 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D | திருயிந்தளூர் | திருஇந்தளூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு நகரப் பகுதியாகும்.இது மயிலாடுதுறைக்கு மேற்கே 2.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 23.69 மீ. உயரத்தில், () என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருஇந்தளூர் அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், திருஇந்தளூர் நகரின் மக்கள்தொகை 6,393 ஆகும். இதில் 3,171 பேர் ஆண்கள் மற்றும் 3,222 பேர் பெண்கள் ஆவர்.
சமயம்
இந்துக் கோயில்கள்
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் பரிமள அரங்கநாதர் கோயில் மற்றும் இராமசாமி கோயில் ஆகிய வைணவக் கோயில்கள் இவ்வூரில் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் |
685358 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | கின்வட் சட்டமன்றத் தொகுதி | கின்வட் சட்டமன்றத் தொகுதி (Kinwat Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி நான்டெட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கின்வட், ஹிங்கோலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
வெளியிணைப்புகள்
இந்திய தேர்தல் ஆணையம்
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
மகாராட்டிர அரசியல் |
685375 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D | தேன் உண்ணுதல் | தேன் உண்ணுதல் (Mellivory) என்பது ஆங்கிலத்தில் மெலிவோரி என்று அழைக்கப்படுகிறது. மெலிவோரி என்பதைத் தேனை உணவாகச் சாப்பிடுவதைக் குறிக்கும் ஒரு சொல். தேன் என்பது சில சமூக பூச்சிகளால் குறிப்பாகத் தேனீக்களால், அவற்றின் கூட்டமைப்புகளின் உறுப்பினர்களால், குறிப்பாக அவற்றின் வளரும் இளம் உயிரிகளின் நுகர்வுக்காக உருவாக்கப்பட்ட ஓர் இனிப்புச் சுவையுடைய பிசுபிசுப்பு பொருள் ஆகும். தேன் மனிதன் உட்பட ஏராளமான விலங்குகளால் உண்ணப்படுகிறது. தேனின் நன்மையினையும் பயனையும் உணர்ந்த மனிதர்கள் தேனீக்களைச் செயற்கையாக வளர்க்கக் கற்றுக்கொண்டான். தேனின் மட்டுப்படுத்தப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருந்தபோதிலும் (அதன் செறிவூட்டப்பட்ட சர்க்கரைகளின் மிக அதிக ஊடுகலப்பு அழுத்தத்தால் ஏற்படுகிறது) பல்வேறு நுண்ணுயிரிகளின் உணவு ஆதாரமாக உள்ளது.
சொற்பிறப்பியல்
மெலிவோரி என்ற ஆங்கிலச் சொல் மெல் (mel) "தேன்" என்ற பொருளிலும் வோரசு (vorous), "-சாப்பிடுதல்" என்று பொருள்படும் இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
ஊட்டச்சத்து
தேன் என்பது பல ஒற்றைச் சர்க்கரைகள், முதன்மையாக புரக்டோசு மற்றும் குளுக்கோசு ஆகியவற்றைக் கொண்ட ஒரு பாகு ஆகும். காட்டுத் தேனில் தேனீக்களின் இளம் உயிரிகளின் தடயங்கள் உள்ளன. இதனால் இத்தேன் கொழுப்பு, புரதம், உயிர்ச்சத்துகள் மற்றும் தாதுக்களுடன் காணப்படும். பல சூழல்களில் தேனை உட்கொள்ளும் உயிரினங்களுக்கு கார்போகைட்ரேட்டுகளின் ஒரே உணவு ஆதாரமாக உள்ளது. பெரிய மூளையினைக் கொண்ட விலங்குகளின் வளர்சிதை மாற்றத்திற்கான சக்தி அதிகம் என்பதால், தேன் வழங்கும் செறிவூட்டப்பட்ட ஆற்றல் தான் மனிதர்களுக்கு இவ்வளவு பெரிய மூளையை உருவாக்க வழிவகுத்தது என்று பரிமாணக் கருத்துக்கள் கூறுகிறது. தேனில் குறைந்த அளவிலான நுண்ணுயிர் எதிர்ப்பண்புகளையும் கொண்டுள்ளன.
மனிதர்களும் தேன் உணவும்
உணவு
வரலாற்றில் தேனின் முக்கிய பயன்பாடுகள் சமையல், அடுமனை பயன்பாடு, மிட்டாய், ரொட்டியுடன் பயன்படுத்தப்படுகிறது. தேநீர் போன்ற பல்வேறு பானம் உள்ளிட்ட சில வணிகப் பானங்களிலும் தேன் இனிப்பாகச் சேர்க்கப்படுகின்றது.
தேனின் ஆற்றல் காரணமாக, சூடான காலநிலை நிலவும் இடங்களில் கிட்டத்தட்ட அனைத்து வேட்டைக்கார-சேகரிப்பாளர் கலாச்சாரங்களிலும் தேன் ஒரு முக்கியமான உணவாகும். ஹாட்சா மக்கள் தேனைத் தங்கள் விருப்பமான உணவாக உட்கொள்கின்றனர். ஆப்பிரிக்காவில் தேன் வேட்டைக்காரர்கள் சில வகையான பறவைகளுடன் இணை உறவைக் கொண்டுள்ளனர்.
நொதித்தல்
உலகின் பழமையான புளிக்கவைக்கப்பட்ட பானம், 9,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மீட்டாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. மீட் (தேன் ஒயின் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது தேனுடன் மதுவம் சேர்த்துப் பல வாரங்கள் அல்லது மாதங்களாகப் புளிக்கவைப்பதன் மூலம் தயாரிக்கப்படும் மது ஆகும். மதுவம் சாக்கரோமைசசு செரிவிசியா பொதுவாக நவீன மீட் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.
பல வகையான மீட் பானங்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கின்றன. இவற்றில் முக்கியமானவை, மெத்தக்லின் (மசாலா அல்லது மூலிகைகள்) மெலோமெல் (திராட்சை போன்ற பழச்சாறுகளுடன், குறிப்பாக பைமென்ட் எனப்படுகிறது), இப்போகிராசு (இலவங்கப்பட்டை), சாக் மீட் (அதிக அடர்வுடைய தேன்) ஆகும். "பிராகோட்" என்று அழைக்கப்படும் மீட் பீர் தயாரிக்கவும் தேன் பயன்படுத்தப்படுகிறது.
பாரம்பரிய மருத்துவம்
தேன் என்பது தீக்காயங்கள் மற்றும் பிற தோல் காயங்களுக்கு நாட்டுப்புறச் சிகிச்சையில் மருந்தாகாப் பயன்படுகிறது. மற்ற மருத்துவ முறைகளை விட 4 முதல் 5 நாட்கள் வேகமாகத் தீக்காயங்களைக் குணப்படுத்த இது உதவுகிறது என்று ஆரம்பச் சான்றுகள் தெரிவிக்கின்றன. மேலும் தேன், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய நோய்த்தொற்றுகள் விரைவாகக் குணமாகவும், கிருமி நாசினியாகவும் பயன்பாடு உடையது என ஆய்வுகள் கூறுகின்றன. பாரம்பரிய மற்றும் மூலிகை மருத்துவத்தின் பயிற்சியாளர்களால் தேன் நீண்ட காலமாக ஒரு மேற்பூச்சு நுண்ணுயிர் எதிர்ப்பாயாக பயன்படுத்தப்படுகிறது.
தொன்மங்கள் மற்றும் நாட்டுப்புற மருத்துவத்தில், பண்டைய கிரேக்கர்கள் மற்றும் எகிப்தியர்களால் இரைப்பை தொந்தரவுகள், புண்கள், தோல் காயங்கள் மற்றும் தோல் தீக்காயங்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்குச் சிகிச்சையளிக்கத் தேன் வாய்வழியாகவும் மேற்புறமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆயுர்வேதம், பாரம்பரியச் சீன மருத்துவத்திலும் தேன் பயன்படுத்தப்பட்டுள்ளது. தேன் மாற்று மருத்துவத்தின் ஒரு வடிவமாக தேனீச்சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது .
மதத்தில் தேன்
சில மதங்களின் வழிபாட்டு முறைகளின் ஒரு பகுதியாக மனிதர்கள் தேனை உட்கொள்கிறார்கள். யூத மதத்தில் ரோஷ் ஹஷானாவின் போது, ஆப்பிள் தேனில் நனைத்து ஓர் அடையாளமாக ஒரு இனிமையான புத்தாண்டுக்கான சின்னம் கருதப்படுகிறது. இந்த வழக்கம் டானாக் அல்லது தல்முட் ஆகியவற்றில் குறிப்பிடப்படவில்லை. இதன் ஆரம்பக்காலக் குறிப்புகளில் ஒன்று ரப்பி மோசேயின் ஷுல்சன் அருச் இஸ்ஸர்லெஸ் இடைக்கணிப்பில் உள்ளது. இது பீட் மற்றும் லீக் போன்ற பிற ரோஷ் ஹஷானா சிமனிம் போலல்லாமல் ஓர் உலகளாவிய வழக்கமாகக் குறிப்பிடுகிறது. ஆயினும்கூட, இந்த வழக்கம் கிட்டத்தட்ட உலகளாவிய தாக வளர்ந்துள்ளது. இந்த வழக்கத்திற்கு வேறுபட்ட அல்லது மிகவும் பாரம்பரியத் தோற்றம் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். முனைவர் ஜெபெரி கோகன், 40 ஆண்டுகளாகப் பாலைவனத்தில் அலைந்து திரியும் போது இசுரேலியர்களுக்கு கடவுள் வழங்கிய மன்னாவினை இந்த வழக்கம் நினைவூட்டுவதாகத் தெரிவிக்கின்றார். இந்து மதத்தில், தேன் (மது) என்பது வாழ்க்கையின் ஐந்து அமுதங்களில் ஒன்றாகும் (பஞ்சாமிருத). கோயில்களில், மது அபிசேகம் என்ற சடங்கில் தெய்வங்கள் மீது தேன் ஊற்றப்படுகிறது. வேதங்களும் பிற பண்டைய இலக்கியங்களும் தேனை ஒரு சிறந்த மருத்துவ மற்றும் ஆரோக்கிய உணவாகப் பயன்படுத்துவதைக் குறிப்பிடுகின்றன. புத்த மதத்தில், இந்தியாவிலும் வங்கதேசத்திலும் கொண்டாடப்படும் மது பூர்ணிமா திருவிழாவில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. புத்தர் வனப்பகுதிக்குள் சென்று தனது சீடர்களிடையே அமைதி ஏற்படுத்தியதை இந்த நாள் நினைவுகூருகிறது. புராணத்தின் படி, அவர் அங்கு இருந்தபோது ஒரு குரங்கு அவருக்குச் சாப்பிடத் தேன் கொண்டு வந்தது. மது பூர்ணிமா அன்று, பௌத்தர்கள் துறவிகளுக்குத் தேன் கொடுப்பதன் மூலம் இந்த செயலை நினைவுகூருகிறார்கள். குரங்கின் பரிசு பௌத் பௌத்த கலையில் அடிக்கடி சித்தரிக்கப்படுகிறது. இசுலாத்தில், ஹதீசின் படி, முகம்மது நபி குணப்படுத்தும் நோக்கங்களுக்காகத் தேனைப் பரிந்துரைத்தார். குர்ஆன் தேனைச் சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவாக ஊக்குவிக்கிறது.
விலங்குகளில் தேன் நுகர்வு
முதுகெலும்பற்ற உயிரினங்களின் தேன் நுகர்வு
தேனீ வளர்ப்பில் தீங்குயிரிகளாக பல வகையான பூச்சிகள் உள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், சிறிய தேனடை வண்டு, பெயரிடப்படாத தேனீ பேன் (ஈ). எறும்புகள், குளவிகள் மற்றும் மெழுகு அந்துப்பூச்சிகளான கேலேரியா மெல்லோனெல்லா மற்றும் அக்ரியா கிரிசெல்லா போன்றவை தேனை நேரடியாகச் சாப்பிடுவதன் மூலம் சேதத்தை ஏற்படுத்துகின்றன. , தேனீக்களும் தங்கள் இளம் உயிரிகளுக்குத் தேனை உணவாக வழங்குகின்றன. மேற்கத்திய தேனீக்கள் மற்ற தேனீக்களின் தேனடையிலிருந்து தேனைக் கொள்ளையடிக்கும். அதே போல் மஞ்சள் குளவிகளும் இச்செயலைச் செய்கின்றன. குளெப்டோபராசைட்டுகளின் ஒரு பேரினமான நோமாடாவில், பெண் தனது முட்டைகளை தேனிப் பெட்டியினுள் இடுகின்றது. முட்டையிலிருந்து வளரும் பூச்சிகள் தேனடையின் வளங்களைச் சாப்பிட்டு இறுதியில் தேனடையினை விட்டு வெளியேறும்.
முதுகெலும்புள்ள உயிரினங்களின் தேன் நுகர்வு
தேன் பல வகையான பாலூட்டிகளால் உண்ணப்படுகிறது. குறிப்பாக இசுகங்குகள், ரக்கூன், ஓபோசம்கள், கின்காஜஸ், கரடி மற்றும் தேன் வளைக்கரடி. கரடிகள் தேனடைகளை வேட்டையாடி தேனை உண்ணுகின்றன. கரடிகள் தேன் மட்டுமல்லாமல், கொழுப்பு மற்றும் புரதத்தை வழங்கும் இளம் உயிரிகள் மற்றும் முதிர்ச்சியடையாத தேனீக்களாலும் ஈர்க்கப்படுகின்றன. தேன் வளைக்கரடிகள் தேனீக்களைத் தாக்கி தேன் சாப்பிடுவது குறித்து நன்கு அறியப்பட்டுள்ளன. இவற்றின் உணவின் அடிப்படையில் இவை பெயரிடப்பட்டுள்ளன.
தேன் மற்றும் தேனீ மெழுகு ஆகியவை தேனீ உண்ணிகள் மற்றும் தேனீ வழிகாட்டிகள் உள்ளிட்ட சில பறவைகளால் உண்ணப்படுகின்றன. இவற்றில் பிந்தையது மனிதர்களைத் தேன் கூடுகள் உள்ள இடத்திற்கு வழிநடத்துவதாக அறியப்படுகிறது.
நுண்ணுயிரிகளின் தேன் நுகர்வு
தேன், குறைந்த நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருந்தாலும், சில நுண்ணுயிரிகளால், குறிப்பாக ஈஸ்ட் மற்றும் வித்தியை உருவாக்கும் பாக்டீரியாக்களால் உட்கொள்ளப்படுகிறது. தேனில் காணப்படும் குறிப்பிடத்தக்கப் பூஞ்சைகள் ஆல்டர்னேரியா ஆல்டர்னாட்டா, அசுபெர்ஜிலசு நைஜர், அசுபெர்ஜிலசு புரோலிபெரான்சு, அசுபெர்ஜிலசு இசுபேலுன்சியசு, சேட்டோமியம் குளோபோசம், கிளாடோசுபோரியம் கிளாடோசுபோர்சியோயிட்சு, தால்டினியா கான்சன்ட்ரிகா, எமெரிகெல்லா திசுகோபோரா, எமெரிக்கெல்லா கின்கிக்சியனி, பென்சிலியம் கொரிலோபிலம், பென்சிலியம் டெகம்பன்சு, பென்சிலிம் பொலோனிகம், பென்சிலியம் வினுலட்டம் ஆகியன.
மேற்கோள்கள்
தேன் |
685377 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D | சிரியா தேசியப் படைகள் | சிரிய தேசியப் படைகள் (Syrian National Army சுருக்கமாக:SNA)இந்த ஆயுதக் குழு துருக்கி நாட்டின் நிதி மற்றும் ஆயுத உதவிகளுடன் 29 சூலை 2011ஆம் ஆண்டில் வடக்கு சிரியாவில் நிறுவப்பட்டது. இப்படைக்கு துருக்கி ஆயுதப் பயிற்சி, போர்ப் பயிற்சி வழங்குகிறது.சிரியா அதிபர் பசார் அல்-அசத் அரசை நீக்க, துருக்கியின் உதவியுடன் வடக்கு சிரியாவில் செயல்படும் ஆயுதக் குழுவாகும்.இது 29 சூலை 2011 அன்று நிறுவப்பட்டது. இது சிரியாவில் செயல்படும் இதர ஆயுதக் குழுக்களுடன் கூட்டு சேர்ந்து 2011ஆம் ஆண்டு முதல் சிரிய உள்நாட்டுப் போரில் பங்களித்து வருகிறது.இப்படைகளுக்கு முன்னாள் சிரியா இராணுவ அதிகாரிகளின் ஆதரவு உள்ளது.
டிசம்பர் 2024 நடுவில் சிரியா தேசியப் படைகள், சிரியாவின் வடக்கில் உள்ள குர்திஸ்தான் படைகளுடன் போரிட்டு, சில குர்து பகுதிகளை கைப்பற்றியது.
மேற்கோள்கள்
சிரியாவின் ஆயுதக் குழுக்கள் |
685381 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D | ரக்கா ஆளுநரகம் | ரக்கா ஆளுநரகம் (Raqqa Governorate), சிரியாவின் 14 மாநிலங்களில் ஒன்றாகும். சிரியாவின் வடக்கில் அமைந்த ரக்கா ஆளுநரகத்தின் பரப்பளவு 19,618 km2 ஆகும். இதன் தலைநகரம் அல்-றக்கா நகரம் ஆகும். ரக்கா ஆளுநரகத்தில் குர்து மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் தன்னாட்சி நிர்வாகம் அமைந்துள்ளது.
ரக்கா ஆளுநரகத்தின் அனைத்து பகுதிகளையும் 24 ஆகஸ்டு 2014 அன்று இசுலாமிய அரசுப் படைகள் கைப்பற்றியது.தற்போது அல்-றக்கா நகரம் உட்பட, ரக்கா ஆளுநரகத்தின் வடக்கில் உள்ள பெரும்பகுதிகள் துருக்கியின் ஆதரவு பெற்ற சிரியா ஜனநாயகப் படைகள் கட்டுப்பாட்டில் உள்ளது.2024 நவம்பர் & டிசம்பர் மாதங்களில் சிரியா அதிபர் பசார் அல்-அசத் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற சிரிய உள்நாட்டுப் போரில் தெற்கு ரக்கா ஆளுநரகத்தின் பெரும்பாலான பகுதிகளை சிரியா ஜனநாயகப் படைகள் கைப்பற்றிது.
மாவட்டங்கள்
ரக்கா ஆளுநரகம் மூன்று மாவட்டங்களும், 10 துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ரக்கா மாவட்டம் (4 துணை மாவட்டங்கள்)
ரக்கா துணை மாவட்டம்
அல்-சப்கா துணை மாவட்டம்
அல்-கரமா துணை மாவட்டம்
மாதன் துணை மாவட்டம்
அபைத் மாவட்டம் (3 துணை மாவட்டங்கள்)
அபைத் துணை மாவட்டம்
சுலுக்கு துணை மாவட்டம்
ஆயின் இஸ்ஸா துணை மாவட்டம்
அல்-தவ்ரா மாவட்டம் (3 துணை மாவட்டம்)
அல்-தவ்ரா துணை மாவட்டம்
மன்சௌரா துணை மாவட்டம்
அல்-ஜர்னியா துணை மாவட்டம்
மக்கள் தொகை பரம்பல்
2004ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, ரக்கா ஆளுநரகத்தின் மொத்த மக்கள் தொகை7,93,500 ஆகும்.2011ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இதன் மக்கள் தொகை 9,44,000 ஆகும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
eraqqa The First Complete website for Raqqa news and services
சிரியாவின் ஆளுநரகங்கள் |
685390 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D | கிள்ளிக்குருச்சிமங்கலம் | கிள்ளிக்குருச்சிமங்கலம் (லக்கிடி என்றும் அழைக்கப்படுகிறது) (Killikkurussimangalam) (also known as Lakkidi) என்பது தென்னிந்தியாவின் கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒற்றப்பாலம் என்ற நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊரின் தெற்கு எல்லையாக நிலா ( பாரதப்புழா ) ஆறு பாய்கிறது.
சொற்பிறப்பியல்
இக்கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலான கிள்ளிக்குருச்சி மகாதேவர் கோயிலால் இந்த கிராமத்திற்கு இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இக்கோயில் மிகவும் பழமையானது, இது ஸ்ரீ சுக பிரம்ம ஹ்ரிஷி முனிவரால் நிறுவப்பட்டதாக தொன்மங்கள் கூறுகின்றன.
குஞ்சன் நம்பியார் பிறந்த ஊர்
இந்த சிற்றூரானது பிரபல மலையாள நையாண்டிக் கவிஞரும் ஓட்டன் துள்ளல் கலை வடிவத்தின் நிறுவனருமான குஞ்சன் நம்பியார் (ராம பனிவடா) பிறந்த இடமாகும். குஞ்சன் நம்பியார் பிறந்த இல்லமான, களக்காத்து பவனம், இப்போது கேரள மாநில அரசின் பண்பாட்டுத் துறையால் பண்பாட்டு மையமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. குஞ்சன் நம்பியாரின் நினைவாக குஞ்சன் ஸ்மாரக வயனாசாலா - குஞ்சன் நினைவு நூலகம் என்ற நூலகமும் உள்ளது.
கூடியாட்டம் மற்றும் சாக்கைக் கூத்து கலைஞரும், நாட்டியசாத்திர அறிஞருமான நாட்யாச்சார்யா விதூஷகரத்னம் பத்மசிறீ குரு மணி மாதவ சாக்யாரும் அபிநய (நடிப்பு) அதிகாரியாக இருந்தவர். கிள்ளிக்குருச்சி மகாதேவர் கோயிலுக்கு அருகில் இவரது வீடு உள்ளது. சாக்கியரின் முக்கிய சீடர்களில் ஒருவரான குரு கேலு நாயரின் சொந்த ஊரும் இதுவாகும்.
சமசுகிருத அறிஞர் கொப்பத்து அச்சுத பொதுவாளும் கோயிலுக்கு அருகில் வசித்து வந்தார்.
கல்வி
ஸ்ரீ சங்கரா ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளி, முன்பு பாலகொல்லாசினி சம்ஸ்கிருத பாடசாலை என்று அழைக்கப்பட்டது. இது இந்தப் பகுதியில் உள்ள பழமையான உயர்நிலைப் பள்ளியாகும். இது ஏழைகளின் கல்விக்காகு உதவுவதாக உள்ளது. சிறந்த சமஸ்கிருத அறிஞரும் ஆசிரியருமான பண்டிதரத்தினம் பழேடத்து சங்கரன் நம்பூதிரிபாட் அவர்களால் தொடங்கப்பட்டது. கேரளத்தில் சமசுகிருதம் முக்கிய மொழியாக கற்பிக்கப்படும் ஆறு பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும்.
ஸ்ரீ கிள்ளிக்குருச்சி மகாதேவர் கோயிலுக்கு அருகில் புனிதமான கோயில்- குளம் ( அம்பலக்குளம் ) உள்ளது, அங்கு பக்தர்கள் நீராடுகின்றனர்.
படக்காட்சியகம்
மேலும் காண்க
மணி மாதவ சாக்கியர்
குஞ்சன் நம்பியார்
ஓட்டன் துள்ளல்
சாக்கைக் கூத்து
கூடியாட்டம்
கதகளி
மோகினியாட்டம்
மணி தாமோதர சாக்கியர்
மேற்கோள்கள்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata |
685393 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D | தீனிப்பை பால் | தீனிப்பை பால் (Crop milk) என்பது சில பறவைச் சிற்றினங்களில் தாய்ப் பறவைகளின் தீனிப்பையிலிருந்து இளம் பறவைகளுக்காக எதிர்க்களித்து வெளியேற்றும் ஒரு சுரப்பாகும். இது அனைத்து வகையான புறாக்களிலும் காணப்படுகிறது. இச்சுரப்பு புறா பால் என்று குறிப்பிடப்படுகிறது. தீனிப்பை பால் பூநாரைகள், ஆண் பேரரசப் பென்குயின் தீனிப்பையிலிருந்தும் சுரக்கப்படுகிறது. இந்த பண்பு பரிணாமத் தோற்றத்தின் போது தனித்தனியாகத் தோன்றியதாகப் பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாகப் பாலூட்டிகளில் பெண் உயிரிகள் மட்டுமே பால் உற்பத்தி செய்யும் நிலை போலல்லாமல், தீனிப்பையிலிருந்து ஆண், பெண் என இருபால் உயிரிகளாலும் தீனிப்பை பால் உற்பத்தி செய்யப்படுகிறது. புறாக்களிலும் பூநாரைகளிலும் இருபால் உயிரிகளும் தீனிப்பை பாலினை உற்பத்தி செய்யும் நிலையில் பென்குயினில் ஆண்கள் மட்டுமே தீனிப்பை பாலினை உற்பத்தி செய்கிறது. பறவைகளில் பாலூட்டுதல் புரோலாக்டின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இது பாலூட்டிகளிலும் பாலூட்டலைக் கட்டுப்படுத்தும் கார்மோன் ஆகும் தீனிப்பை பால் ஒரு சுரப்பிக்குமிழி சுரப்பாகும். பாலூட்டிகளில் இது புறச்சுரப்பி சுரப்பாகும். தீனிப்பை பாலில் பாலூட்டிகளைப் போலவே கொழுப்பு மற்றும் புரதம் இரண்டும் உள்ளன. ஆனால் பாலூட்டிகளின் பாலைப் போலல்லாமல், இதில் மாவுச்சத்துக்கள் இல்லை.
புறா பால்
தீனிப்பை பால் பாலூட்டிகளின் பாலுடன் இயற்பியல் ரீதியான ஒற்றுமையைக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் புறாக்களில் இது கலவையாக ஒத்திருக்கிறது. புறா பால் என்பது வெளிர் மஞ்சள் நிறத்தில் பாலாடைக்கட்டி போன்ற பகுதி திடமான பொருளாகும். இதில் புரதமும் கொழுப்பும் அதிகமாக உள்ளது. இதிலுள்ள கொழுப்பு, பசு அல்லது மனிதப் பாலை விட அதிக அளவில் உள்ளது. 1939ஆம் ஆண்டு புறாவின் தீனிப்பை பால் குறித்த ஆய்வின் மூலம் இப்பாலில் பாலூட்டிகளின் பாலில் காணப்படும் மாவுச்சத்து இல்லை என்பது தெரியவந்தது. இந்தப் பால் நோய் எதிர்ப்புச் சக்தியில் பங்களிக்கும் ஆக்சிசனேற்ற எதிர்ப்புக்கள் மற்றும் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் காரணிகளைக் கொண்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. பாலூட்டிகளின் பாலைப் போலவே, தீனிப்பை பாலிலும் ஏ-வகை நோயெதிர்ப்பொருட்கள் உள்ளன. இதில் சில பாக்டீரியாக்களும் உள்ளன. ஒரு பாலூட்டிகளின் பாலைப் போலல்லாமல், புறாவின் தீனிப்பை பால், புரதம், கொழுப்பு நிறைந்த உயிரணுக்களைக் கொண்டுள்ளது. இந்த உயிரணுக்கள் தீனிப்பையினைச் சூழ்ந்துள்ள படலத்தில் பெருக்கமடைந்து பிரிந்து தீனிப்பை பாலில் கலக்கின்றன.
முட்டைகள் பொரிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு புறா பால் உற்பத்தியினைச் செய்யத் தொடங்குகிறது. இக்காலத்தில் பெற்றோர்கள் உணவு உண்பதை நிறுத்திக்கொள்கின்றன. இதனால் குஞ்சுகளுக்கு விதைகளால் மாசுபடாத பாலை வழங்க முடியும். மேலும் விதைகள் இளம் குஞ்சுகளால் செரிமானம் செய்ய இயலாது. குஞ்சுகள் பொரித்து ஒரு வாரத்திற்கு அல்லது 10 முதல் 14 நாட்களுக்குத் தூய தீனிப்பை பால் வழங்கப்படுகிறது. இதற்குப் பிறகு, பெற்றோர்கள் வயது முதிர்ச்சியடைந்த புறாக்களின் உணவினைத் தனது தீனிப்பையில் அரைத்து, மென்மையாக்கி தீனிப்பை பால் கலந்து, இரு வாரங்களுக்கு உணவளிக்கின்றனர்.
பொதுவாகப் புறாக்கள் இரண்டு முட்டைகளை இடும். ஒரு முட்டை பொரிவதில் தோல்வியுற்றால், எஞ்சியிருக்கும் முட்டையிலிருந்து தோன்றும் உயிரி இரண்டு குஞ்சுகளுக்குப் போதுமான தீனிப்பை பாலினைப் பெற்று வேகமாக வளரும். ஆனால் இரண்டிற்கு மேற்பட்ட குஞ்சுகள் வளரும் போது ஓர் இணை இனப்பெருக்கப் புறாக்கள் இவற்றிற்கு உணவளிக்கப் போதுமான தீனிப்பை பாலை உற்பத்தி செய்ய முடியாது என்று ஆராய்ச்சி கூறுகிறது.
பிற பறவைகள்
தீனிப்பை பால் பூநாரை மற்றும் ஆண் பேரரசப் பென்குயின் தனித்தனியாகப் பரிணாம வளர்ச்சியின் போது உருவானது. பூநாரையின் முதல் வாரங்களில் உற்பத்தி செய்யப்படும் தீனிப்பைப் பால் பிரகாசமான சிவப்பு நிறத்தில், ஒப்பீட்டளவில் அடர்த்தி குறைவான திரவமாகும். இது இரத்தச் சிவப்பு நிறத்தை ஒத்திருந்தாலும், இதில் சிவப்பு இரத்த அணுக்கள் இல்லை-சிவப்பு நிறம் கேந்தாசாந்தினால் ஏற்படுகிறது. முதல் சில வாரங்களுக்குப் பிறகு, இந்நிறம் படிப்படியாக மங்குகிறது. பூநாரைகள் தமது இளம் பருவத்தில் முதல் 6 மாதங்கள் வரை தீனிப்பை பாலை உற்பத்தி செய்கின்றன.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பறவை பால் பற்றிய கட்டுரை stanford.edu
தீன்ப்பை பால் மற்றும் முட்டைகளின் எண்ணிக்கைக் குறித்த கட்டுரை (pdf)
சுமித்சோனியன் தேசிய மிருகக்காட்சிசாலையின் பொதுவான புறா பற்றிய கட்டுரை, தீனிப்பை பால் பற்றிய பத்தியை உள்ளடக்கியது |
685397 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81 | சின்லாந்து | சின்லாந்து (Chinland), அதிகாரப்பூர்மாக சின்லாந்து அரசு (State of Chinland), தென்கிழக்காசியாவில் உள்ள மியான்மர் நாட்டின் மேற்கே அமைந்த சின் மாநிலத்தின் மூன்றில் ஒரு பகுதிகளைக் கொண்டு சின்லாந்து தேசிய முன்னணியால் 13 ஏப்ரல் 2021 முதல் சின்லாந்து குழுவின் தன்னாட்சி முறையில் ஆட்சி செய்யும் பகுதியாகும். 6 டிசம்பர் 2023 முதல் சின்லாந்து சொந்த நாடாளுமன்றம் மற்றும் அரசியலமைப்பு கொண்டுள்ளது.சின்லாந்தில் சின் மக்கள் மற்றும் மியான்மர் மிசோ மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் இம்மக்கள்.பர்மிய மொழி, குக்கி-சின் மொழிகள் மற்றும் ஆங்கிலம் பேசுகின்றனர். சின்லாந்திற்கு தெற்கில் ராகினி மாநிலம் மற்றும் வங்காளதேசம் மேற்கில் இந்தியாவின் மிசோரம் மற்றும் வடக்கில் மணிப்பூர் உள்ளது.
வரலாறு
6 டிசம்பர் 2023 முதல் சின்லாந்து அரசு சொந்த அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தியது.சின் மக்களுக்கு ஆதரவான இந்த அரசியலமைப்பை பிற எதிர்-கிளர்ச்சிக் குழுக்கள் மட்டும் ஏற்கவில்லை. சின்லாந்து நாடாளுமன்றமான சின்லாந்து குழுவில் 27 சின்லாந்து தேசிய முன்னணியின் உறுப்பினர்களையும், 14 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மற்றும் 68 உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
நிர்வாகம்
சின்லாந்து அரசு நிர்வாகம், நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை என 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவுகளை சின்லாந்து குழு மேற்பார்வை செய்யும்..சின்லாந்து அரசியலமைப்புசின்லாந்து பாதுகாப்பு படைகளுக்கு ஆதரவாக சின்லாந்து தேசிய இராணுவம் செயல்படும்.
நிர்வாகப் பிரிவுகள்
சின்லாந்து நகர்புற உள்ளாட்சிகள் மற்றும் வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள்து.
தாய்
ஃபாலம்
ஹக்கா
ஹுவால்ன்கோ
கன்பெட்டேட்
லௌலூ
மதுபி
மாரா
மின்தாத்
காவ்ன்
பலேத்வா
செந்தாங்
தாங்லாங்
சன்னியாத்
சோபெல்
சோலூங்
இதனையும் காண்க
2021 மியான்மர் இராணுவப் புரட்சி
அரக்கான் இராணுவம்
மேற்கோள்கள்
மியான்மார் |
685398 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81 | சோடியம் சல்பைடு | சோடியம் சல்பைடு (Sodium sulfide) Na2S என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொதுவாக இதன் நீரேற்றான Na2S·9H2O என்ற வாய்ப்பாட்டாலும் இச்சேர்மத்தை அடையாளப்படுத்துவர். தூய படிக வடிவில் உள்ள நீரற்ற மற்றும் நீரேற்றப்பட்ட உப்புகள் இரண்டும் நிறமற்ற திடப்பொருள்களாகும். இருப்பினும் சோடியம் சல்பைடின் தொழில்நுட்ப தரங்கள் பொதுவாக மஞ்சள் முதல் செங்கல் சிவப்பு வரை காணப்படுகின்றன. பாலிசல்பைடுகளின் இருப்பு காரணமாக இந்த நிறமாற்றம் நிகழ்கிறது. இச்சல்பைடுகள் செதில் வடிவில் திண்மப் பொருளாகக் காணப்படுகின்றன. இவை தண்ணீரில் கரையும். வலுவான கார கரைசல்களை வழங்கும். ஈரப்பதத்தில் வெளிப்படும் போது, சோடியம் சல்பைடு உடனடியாக நீரேற்றம் அடைந்து சோடியம் ஐதரோசல்பைடைக் கொடுக்கிறது.
சில வணிக மாதிரிகள் Na2S·xH2O எனக் குறிப்பிடப்படுகின்றன. இங்கு Na2S இன் எடை சதவீதம் குறிப்பிடப்படுகிறது. பொதுவாகக் கிடைக்கும் தரமுறை எடையின் அடிப்படையில் 60% Na2S கலந்துள்ளது. அதாவது வாய்ப்பாட்டிலுள்ள x என்பது 3 ஆக இருக்கும். சோடியம் சல்பைட்டின் இந்த தரங்கள் பெரும்பாலும் 'சோடியம் சல்பைடு செதில்களாக' விற்பனை செய்யப்படுகின்றன. இந்த மாதிரிகள் NaSH, NaOH மற்றும் தண்ணீரைக் கொண்டிருக்கும்.
கட்டமைப்பு
சோடியம் சல்பைடுகளின் கட்டமைப்புகள் எக்சுகதிர் படிகவியல் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன. ஒன்பது நீரேற்று S2- ஐதரசன் பிணைக்கப்பட்ட 12 நீர் மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது. ஐந்துநீரேற்றில் S2- மையங்கள் Na+ உடன் பிணைக்கப்பட்டு ஐதரசன் பிணைப்புகளின் உறையில் இணைக்கப்பட்டுள்ளது. அரிதாகக் கிடைக்கும் நீரிலி வடிவ Na2S, எதிர்புளோரைட்டு கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. அதாவது Na+ மையங்கள் CaF2 கட்டமைப்பில் புளோரைடின் தளங்களை ஆக்கிரமிக்கின்றன. பெரிய S2− Ca2+ மையங்கள் CaF2 கட்டமைப்பில் கால்சியம் தளங்களை ஆக்கிரமிக்கின்றன.
தயாரிப்பு
தொழில்ரீதியாக சோடியம் சல்பைடானது நிலக்கரியைப் பயன்படுத்தி சோடியம் சல்பேட்டின் உயர்வெப்பக்கார்பன் வினை மூலம் குறைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.:
Na2SO4 + 2 C → Na2S + 2 CO2
நீரற்ற அம்மோனியாவில் உள்ள சோடியத்துடன் கந்தகத்தைச் சேர்த்து குறைப்பு வினைக்கு உட்படுத்துவதன் மூலமோ அல்லது உலர் டெட்ரா ஐதரோ பியூரானில் உள்ள சோடியம் மூலம் நாப்தலீனின் வினையூக்க அளவு கொண்ட சோடியம் நாப்தலீனைடு உப்பைத் தயாரிக்கலாம்.
2 Na + S → Na2S
வினைகள்
சோடியம் சல்பைடு போன்ற சல்பைடு உப்புகளில் உள்ள சல்பைடு அயனியானது, புரோட்டானேற்றம் மூலம் உப்பில் ஒரு புரோட்டானை இணைக்கலாம்:
S2− + H+ → SH−
புரோட்டானின் (H+) பிடிப்பு காரணமாக, சோடியம் சல்பைடு காரத் தன்மையைக் கொண்டுள்ளது. சோடியம் சல்பைடு மிகவும் வலிமையான ஒரு காரமாகும். எனவே இரண்டு புரோட்டான்களை உறிஞ்சும் திறன் கொண்டுள்ளது. இதன் இணை அமிலம் சோடியம் ஐதரோசல்பைடு (SH−) ஆகும். ஒரு நீரிய கரைசலில் சல்பைடு அயனிகளின் கணிசமான பகுதி தனித்தனியாக புரோட்டானேற்றம் செய்யப்படுகிறது.
+ +
+ H2S +
சோடியம் சல்பைடு நீரின் முன்னிலையில் நிலைப்புத்தன்மை அற்றதாக உள்ளது. ஏனெனில் ஐதரசன் சல்பைடு வளிமண்டலத்தில் படிப்படியாக இழக்கப்படுகிறது.
ஆக்சிசன் மற்றும் கார்பன் டை ஆக்சைடுடன் சேர்த்து சூடேற்றப்பட்டால், சோடியம் சல்பைடை சோடியம் கார்பனேட்டு மற்றும் கந்தக டை ஆக்சைடாகவும் ஆக்சிசனேற்றம் செய்யலாம்:
2 Na2S + 3 O2 + 2 → 2 Na2CO3 + 2 SO2
ஐதரசன் பெராக்சைடுடன் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்தால் சோடியம் சல்பேட்டு உருவாகும்.:
Na2S + 4 H2O2 → 4 + Na2SO4
கந்தகத்துடன் சேர்த்து சூடுபடுத்தினால் பாலிசல்பைடுகள் உருவாகும்.
2 Na2S + S8 → 2 Na2S5
கூழ் மற்றும் காகித தொழில்
மேலாதிக்க பயன்பாட்டின் அடிப்படையில், சோடியம் சல்பைடு முதன்மையாகக் காகிதக்கூழ் மற்றும் காகிதத் தொழிலில் கிராஃப்ட்டு செயல்முறையில் பயன்படுத்தப்படுகிறது. இது காகிதத்தின் முக்கிய அங்கமான செல்லுலோசைக் கொடுக்கிறது.
நீர் சுத்திகரிப்பில் ஆக்சிசன் துப்புரவு முகவராக சோடியம் சல்பைடு பயன்படுத்தப்படுகிறது. மேலும் கருப்பு வெள்ளை ஒளிப்படவியலில் ஓர் இரசாயன நிறமாக்கியாகவும் உலோக வீழ்படிவாக்கியாகவும் சோடியம் சல்பைடு பயன்படுகிறது. நெசவுத் தொழிலில் நிறம்நீக்கும் முகவராகவும், கந்தகம் நீக்கி மற்றும் குளோரினேற்றும் முகவராகவும் இது பயன்படுகிறது. தோல் தொழிற்சாலையில் கந்தக டை ஆக்சைடு ஏற்றும் முகவராகவும் சோடியம் சல்பைடு பயன்படுத்தப்படுகிறது. இரசாயன உற்பத்தியில் சல்போனாக்கல் மற்றும் சல்போமெத்திலேற்றம் செய்ய உதவும் முகவராக உள்ளது. இரப்பர் இரசாயனங்கள், கந்தக சாயங்கள் மற்றும் பிற இரசாயன கலவைகள் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. சாயங்கள் தயாரித்தல் சவர்க்காரம் தயாரித்தல் உள்ளிட்ட பிற பயன்பாடுகளிலும் சோடியம் சல்பைடின் பங்கு உள்ளது.
கரிம வேதியியல் வினையாக்கி
கார்பன்-கந்தகம் பிணைப்பில்
சோடியம் சல்பைடை ஆல்கைலேற்றம் செய்தால் தயோயீத்தர்கள் உருவாகும்.
Na2S + 2 RX → R2S + 2 NaX
அரைல் ஆலைடுகளும் கூட இந்த வினையில் பங்கேற்கின்றன. பரந்த அளவில் ஒத்த செயல்முறையின் மூலம் சோடியம் சல்பைடு ஆல்க்கீன்களுடன் தயோல்-யீன் வினையில் வினைபுரிந்து தயோயீத்தர்களைக் கொடுக்கும். சாண்ட்மேயர் வகை வினைகளில் சோடியம் சல்பைடு அணுக்கருகவரியாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஒடுக்கும் முகவர்
சோடியம் சல்பைடின் நீர்த்த கரைசல் நைட்ரோ குழுக்களை அமீனாக குறைக்கும். அசோ குழு போன்ற மற்ற குறைக்கக்கூடிய குழுக்கள் அப்படியே உள்ளதால் இந்த மாற்றம் சில அசோ சாயங்களின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. சோடியம் சல்பைடைப் பயன்படுத்தி நைட்ரோ அரோமாட்டிக் சேர்மங்களை அமீன்களாகக் குறைக்கும் வினை அதைக் கண்டுபிடித்தவரின் நினைவாக சின்னின் வினை என்று அழைக்கப்படுகிறது. நீரேற்றப்பட்ட சோடியம் சல்பைடு 1,3-டைநைட்ரோபென்சீன் வழிப்பெறுதிகளை 3-நைட்ரோ அனிலின்களாகக் குறைக்கிறது.
பிற வினைகள்
ஒளிவினையூக்க வினைகளிலும் சோடியம் சல்பைடு பயன்படுத்தப்படுகிறது.
பாதுகாப்பு
சோடியம் ஐதராக்சைடுக்குச் சமமான சோடியம் சல்பைடு காரம் இரசாயன தீக்காயங்களை ஏற்படுத்தும். அமிலங்களுடன் விரைவாக வினைபுரிந்து ஐதரசன் சல்பைடை உருவாக்கும். இது அதிக நச்சுத்தன்மை கொண்டது.
மேற்கோள்கள்
சோடியம் சேர்மங்கள்
சல்பைடுகள்
ஒளிப்படக்கலை வேதிப்பொருட்கள்
புளோரைட்டு படிகக் கட்டமைப்பு |
685400 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D | சின்லாந்து தேசிய இராணுவம் | சின் தேசிய இராணுவம் (Chin National Army),தென்கிழக்காசியா நாடான மியான்மரின் மேற்கில் உள்ள சின் மாநிலத்தில் வாழும் சின் மக்களின் ஒரு ஆயுதக் குழுவாகும்.இது சின் தேசிய முன்னணி அமைப்பின் கீழ் செயல்படுகிறது. தற்போது சின் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு பகுதி சின் தேசிய இராணுவத்தின் கீழ் உள்ளது. இந்த இராணுவம் 20 பிப்ரவரி 1988 அன்று சின் தேசிய முன்னணியின் ஒரு அங்கமாக நிறுவப்பட்டது. 6 சனவரி 2012 அன்று மியான்மர் அரசு மற்றும் சின் தேசிய முன்னணி போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பம் இட்டுள்ளது.மியான்மர் கூட்டாட்சித் தத்துவததில் நம்பிக்கையுள்ள ஐக்கிய தேசியவாதிகளின் கூட்டமைப்பு குழுவில் சின் தேசிய இராணுவம் ஒரு உறுப்பினராக உள்ளது.
வரலாறு
சின்லாந்தின் சின் மாணவர்களால் நிறுவப்பட்ட அரசியல் குழுவான சின் தேசிய முன்னனியின் இராணுவமாக சின் தேசிய இராணுவம் செயல்படுகிறது.இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு சின் தேசிய இராணுவத்திற்கு ஆயுத தளவாடங்கள் வழங்குகிறது.இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் இதன் தலைமையிடம் 2005ஆம் ஆண்டு வரை செயல்பட்டது.
இதனையும் காண்க
சின் மாநிலம்
சின் மக்கள்
சின்லாந்து
அரக்கான் இராணுவம்
மேற்கோள்கள்
மியான்மார் |
685404 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | சோட்டிலா சட்டமன்றத் தொகுதி | சோட்டிலா சட்டமன்றத் தொகுதி (Chotila Assembly constituency) (தொகுதி வரிசை எண்:63) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி சுரேந்திரநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சாம்ஜிபாய் பீம்ஜிபாய் சௌகான் ஆவார்.
சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்
இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.
வாத்வான் தாலுகா
சட்டமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
குஜராத் சட்டமன்றத் தொகுதிகள் |
685405 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | திரங்கத்ரா சட்டமன்றத் தொகுதி | திரங்கத்ரா சட்டமன்றத் தொகுதி (Dhrangadhra Assembly constituency) (தொகுதி வரிசை எண்:64) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி சுரேந்திரநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரகாஷ்பாய் பர்சோதம்பாய் வர்மோரா ஆவார்.
சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்
இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.
திரங்கத்ரா தாலுகா
கல்வாத்து தாலுகா
சட்டமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
குஜராத் சட்டமன்றத் தொகுதிகள் |
685407 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | தங்கரா சட்டமன்றத் தொகுதி | தங்கரா சட்டமன்றத் தொகுதி (Tankara Assembly constituency) (தொகுதி வரிசை எண்:66) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி மோர்பி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த துர்லப்ஜிபாய் ஹராக்ஜிபாய் தேதாரியா ஆவார்.
சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்
இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.
தங்கரா தாலுகா
மோர்பி தாலுகா (பகுதி) கிராமங்கள் - மன்சார், நரங்கா, பிபாலியா, விர்பர்தா, ஹஜ்னாலி, மோட்பர், லுடவதார், பர்வாலா, கெவாலியா, கக்ராலா, வனாலியா, கரேடா, அந்தர்னா, வான்க்டா, பிபாலி, கோர் கிஜாடியா, ஜெபூர், பகதாலா, பில்யாக், பில்லியா, பில் நாகல்பர், நானி வாவ்டி, குந்து, உஞ்சி மண்டல், நிச்சி மண்டல், கலிகாநகர், லக்திர்பூர், லால்பர், பஞ்சாசர், அம்ராபர் நாக், மோதி வாவ்டி, கான்பர், சஞ்சபர், தோரலா, ராஜ்பர், சக்தசனலா, ஜோத்பூர் நாடி, ஜம்புடியா, பனேலி, கிடாச், மகான்சர், அடேபர், லக்த்பர், சஜன்பர், ரவாபரா, வஜேபர்
ராஜ்கோட் மாவட்டத்தின் பதாரி தாலுகா - கிராமங்களைத் தவிர முழு தாலுகா - கோக்ரி, சிவாபர்
ராஜ்கோட் மாவட்டத்தின் லோதிகா தாலுகா கிராமம் (பகுதி) - உண்ட் கிஜாடியா
ஜாம்நகர் மாவட்டத்தின் த்ரோல் தாலுகா கிராமம் (பகுதி) - சல்லா, கோலிடா
சட்டமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
குஜராத் சட்டமன்றத் தொகுதிகள் |
685408 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | வாங்கனேர் சட்டமன்றத் தொகுதி | வாங்கனேர் சட்டமன்றத் தொகுதி (Wankaner Assembly constituency) (தொகுதி வரிசை எண்:67) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி மோர்பி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஜிதேந்திர காந்திலால் சோமானி ஆவார்.
சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்
இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.
வாங்கனேர் தாலுகா
ராஜ்கோட் தாலுகா (பகுதி) கிராமங்கள் - ஜாலியா, ரத்தன்பர், கொரானா, சனோசரா, ராம்பரா (சூலியா), வான்க்வாட், ஹிராசர், சத்தா, ஜியானா, கிஜாடியா, நாகல்பார், ராஜ்காத், கவரிதாத், பாரா பிபாலியா, ஹத்மதியா (பேடி), நகரவாடி, பிபாலியா, பிபாலியா, குச்சியாதாத், ராம்பாரா பேட்டி, பரேவாலா, சைபர், குவாத்வா, தமல்பர், சோகதா, ரோங்கி, கந்தேஷ்வர், வஜ்தி காத், வெஜகம், மாலியாசன், தர்காடியா, குண்டா, மகர்வாடா, மேஸ்வதா, பர்வன், சஞ்சடியா, ஜம்கத், ரஃபாலா, கெர்டி, அமர்கத், ஃபிஹாட்கா, தோரலா, மஹிகாடா, , டெரோய், மன்ஹர்பூர், பேடி, மாதபர், ஆனந்த்பர்
சட்டமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
குஜராத் சட்டமன்றத் தொகுதிகள் |
685410 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | ஜஸ்தான் சட்டமன்றத் தொகுதி | ஜஸ்தான் சட்டமன்றத் தொகுதி (Jasdan Assembly constituency) (தொகுதி வரிசை எண்:72) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி ராஜ்கோட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த குன்வர்ஜிபாய் மோகன்பாய் பவாலியா ஆவார்.
சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்
இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.
ஜஸ்தான் தாலுகா
கோண்டல் தாலுகா (பகுதி) கிராமங்கள் - தாத்வா ஹமிர்பாரா, கர்மல் கோட்டா.
சுரேந்திரநகர் மாவட்ட சைலா தாலுகா (பகுதி) - ஓரி கிராமம்
சட்டமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
குஜராத் சட்டமன்றத் தொகுதிகள் |
685411 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D | கோபாலசாமி சேனைகொண்டார் | கோபாலசாமி சேனைகொண்டார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி பகுதி மூர்க விநாயகர் கோயில் தெருவில் 1901 ஆம் ஆண்டு கள்ளர் மரபில் ராமசாமி சேனைகொண்டார் மகனாக பிறந்தார்.
இந்திய விடுதலைப் போராட்டம்
இவர் எழுத்தறிவு பெற்றவர், 1932 ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார், 1932 இல் வரி இல்லா இயக்கம், தனிநபர் சத்தியாகிரகம் மற்றும் 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கம் பங்கேற்றார், ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு 1932 இல் ஆறு மாதங்கள் மற்றும் 1943 இல் 14 மாதங்கள் சிறைத்தண்டனை தண்டனை விதிக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் மற்றும் அலிபுரம் சிறைகளில் அடைக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தஞ்சாவூர் மாவட்ட நபர்கள்
தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் |
685416 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D | நல்லம்பல் | நல்லம்பல் என்பது இந்தியாவில் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 23.94 மீ. உயரத்தில், () என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு நல்லம்பல் அமையப் பெற்றுள்ளது.
நீர்நிலை
நல்லம்பல் பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட நல்லம்பல் ஏரி என்ற நீர்நிலை ஒன்று விவசாயத்திற்காகவும் மக்கள் பொழுதுபோக்கு பகுதியாகவும் 2014ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
மேற்கோள்கள்
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும் |
685417 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | கத்காவ் சட்டமன்றத் தொகுதி | கத்காவ் சட்டமன்றத் தொகுதி (Hadgaon Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நாந்தேட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கத்காவ், ஹிங்கோலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
வெளியிணைப்புகள்
இந்திய தேர்தல் ஆணையம்
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
685418 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF | சின் சகோதரத்துவக் கூட்டணி | சின் சகோதரத்துவக் கூட்டணி (Chin Brotherhood Alliance (சுருக்கமாக:CBA), தென்கிழக்காசியாவின் மியான்மர் நாட்டின் சின் மாநிலம், மாகுவே மண்டலம் மற்றும் சாகைங் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மியான்மர் அரசுக்கு எதிராக இயங்கும் பல ஆயுதக் குழுக்களின் அரசியல் கூட்டணி ஆகும். 2021 மியான்மர் இராணுவப் புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட மியான்மர் உள்நாட்டுப் போர் (2021–தற்போது வரை)|மியான்மர் உள்நாட்டுப் போரின்]] போது இக்கூட்டணி 30 டிசம்பர் 2023 அன்று நிறுவப்பட்டது. இதன் நோக்கம் மியான்மரில் சின் மக்களின் அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டுவதாகும்.சின் சகோதரத்துவக் கூட்டணியின் ஆயுதக் குழுக்கள் சின் மாநிலத்தின் தெற்குப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இக்கூட்டணிப் படைகள் சின்லாந்து தேசிய இராணுவம் மற்றும் மியான்மர் அரசு இராணுவத்துடன் மோதல் போக்கைக் கொண்டுள்ளது.
இதனையும் காண்க
2021 மியான்மர் இராணுவப் புரட்சி
சின் மாநிலம்
சின்லாந்து
சின்லாந்து தேசிய இராணுவம்
அரக்கான் இராணுவம்
மேற்கோள்கள்
மியான்மார் |
685419 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | நயினாதீவு தில்லைவெளி பிடாரி அம்பாள் ஆலயம் | நயினாதீவு தில்லைவெளி பிடாரி அம்பாள் ஆலயம் (Nainativu Thillaiveli Sri Pidari Ambal Temple) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டம், நயினாதீவின் தென்மேற்கு மூலையில் தில்லைவெளியில் (யாழ்ப்பாணத்தில் இருந்து 37 கிமீ) கடற்கரை அருகே அமைந்துள்ள கோவில் ஆகும்.
ஆலய உருவாக்கமும் அமைப்பும்
ஐரோப்பியர் காலத்தில் பெரிய கோவில்களுக்கு செல்வதற்கு அச்சப்பட்ட மக்கள் கிராமியத் தெய்வங்களின் வழிபாட்டில் அதிகளவு நாட்டங் கொண்டு வழிபட்டனர். அக்காலத்திலேயே இற்றைக்கு 175 ஆண்டுகளுக்கு முன்பு வை. ஆறுமுகம் என்பவர் கடற்கரையோரத்தில் பேழையில் இருந்த அம்பாளை எடுத்து பூவரசம் மரநிழலில் வைத்து மரந்தடி பனை ஓலைகளால் வேய்ந்து அம்பாளிற்கான ஆலயத்தை அமைத்தார் எனவும், பின் சுண்ணாம்பு, மண் கலந்து கட்டுவித்தார் எனவும் இவை 1845 ஆம் ஆண்டு நடைபெற்றதாகவும் குறிப்பிடப்படுகிறது. அவரது மகன் ஆ.சிவசம்பு என்பவரால் 1952 இல் அர்த்த மண்டபம் 18.5×18 அடி அளவு பரிமானத்தில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து 2004 இல் 40.5×26 அடி அளவுகளைக்கொண்ட மகா மண்டபம் காளி அம்மன் உருவச்சிற்பங்களும் முன்வாசலில் மகிடாசுரனை சங்காரம் செய்த சிங்கத்தின் மீது அமர்ந்த பிடாரி அம்மனும், முருகனும், பிள்ளையாரும் நாக சிற்பங்களும் என நிர்மாணிக்கப்பட்டன.
பிடாரி அம்பாளின் கருவறை
கருவறையில் வீற்றிருக்கும் பிடாரி அம்பாள் பார்ப்பதற்கு கருங்கல்லில் அமைந்தது போல் கறுப்பாக கோபமுடையவளாக காணப்படுகிறது. எனினும் அம்பாள் செஞ்சந்தனக்கட்டை அல்லது தில்லை மரத்தினால் ஆனவள் என குறிப்பிடப்படுகிறது.
திருக்குளிர்த்தி பொங்கலும் வேள்வித் திருவிழாவும்
வைகாசி மாதத்தில் நயினாதீவு மக்கள் கும்பஸ்தானம் ஆரம்ப நாள்முதல் ஒருநேர உணவோடு விரதமிருந்து அம்பாளின் மகாவேள்வி கண்டு விநாயகப்பானை அமுதுண்டு விரதம் துறப்பர்.
வைகாசி விசாகத்துடன் கூடிய ஒரு வெள்ளிக்கிழமை கும்பஸ்தானத்துடன் தொடங்கும் திருவிழாவின் ஏழாம் நாள் நயினை வாழ் சைவ அடியார்களின் இல்லங்களில் சென்று தண்டல் நிகழ்வு இடம்பெறும். எட்டாம் நாள் வெள்ளிக்கிழமை யாழ் நகர தர்மகர்த்தாக்களின் பரம்பரை வணிக நிலையத்திலிருந்து விநாயகப்பானை எழுந்தருளி (வேள்வித்திரவியங்கள், இளநீர், பொங்கல் பண்டங்கள், பழங்கள் உட்பட) கோவிலை வந்தடையும்.
மறு நாள்(ஒன்பதாம் நாள்) சனிக்கிழமை காத்தவராயன் கும்பம் வீதியுலா வந்தடைந்ததும் பொங்கல் தொடங்கும். தொடர்ந்து சிறப்புத் திரவிய சங்காபிடேகமும் பொன்பதித்த வலம்புரிச்சங்கால் மூலிகை அபிடேகமும் அம்பாளுக்கு இடம்பெறும். குருமணிகளின் வேதாகமங்கள் முழங்க வேள்விக்குண்டம் சுடர் விட்டெரியும். இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தங்கள் கொண்டு அம்பாள் குளிர்விக்கப்படுவாள். அடியவர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி அம்பாளிடம் வேண்டுகை செய்வார்கள். மூலஸ்தான, எழுந்தருளி அம்பாளுக்காக உருவகிக்கப்பட்ட பிரதான கும்பங்கள் சுற்றி வந்து கும்ப நீர் ஊற்றப்படும். அதன்பின் காத்தவராயன் மடை விநாயகப்பானை பொங்கல், முக்கனிகள் பரப்பப்பட்டு அடியவர்களின் படையலும் அம்பாளுக்கு அர்ச்சிக்கப்பட்டு மிருக பலிக்குப் (1950ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது) பதில் நீத்துப்பூசணி வெட்டப்பட்டு குருமணிகள் பஞ்சதீர்த்தம் தெளித்து மலர் தூவுவதுடன் தீப ஆராதனை இடம்பெற்று வருடாந்த திருக்குளிர்த்திப் பொங்கல் வேள்வித் திருவிழா இனிதே நிறைவுறும். அடியவர் காணிக்கை பொருட்கள் ஏலத்தில் விடப்படுவதுடன் அன்றிரவு கும்ப உத்தாபனமும் பத்தாம் நாள் பிராயச்சித்தமும் இடம்பெறும்.
நித்திய பூசை, விசேட பூசைகளுடன் மாதந்தோறும் பல்வேறு விழாக்களும் அம்பாளுக்கு சிறப்பாக செய்யப்படுகிறது. எனினும் கோவில் ஆரம்பித்த காலத்தில் வைகாசி வேள்விப் பொங்கலும், சித்திரை வருடப்பிறப்பும் மட்டுமே விசேட திருவிழாவாக செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
கிராமக் கோயில்கள்
இலங்கையில் உள்ள அம்மன் கோயில்கள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கோயில்கள் |
685422 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF | சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி | சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி (Soka Ikeda College of Arts and Science for Women, Chennai, Tamil Nadu, India) என்பது தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள ஒரு மகளிர் கல்லூரியாகும். வாழ்வியல் விழுமியங்கள் என்ற பொருள்படும் “சோகா” என்ற ஜப்பானியச் சொல்லோடு “இகெதா” என்ற ஜப்பானிய தத்துவஞானியின் பெயரினை இணைத்துப் பெயரிடப்பட்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 2000ஆம் ஆண்டில் கல்லூரி தொடங்கப்பெற்றது.
வரலாறு
உலகக் கவிஞர்கள் மாநாட்டில் பங்கேற்ற சேது பாஸ்கரா கல்விக் குழுமத்தின் தாளாளரும் கல்வியாளருமான டாக்டர் சேது குமணன் அவர்கள், பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டவர். காந்திய நெறியில் உலக அமைதியைப் போற்றும் டாக்டர் தைசாகு இகெதாவின் ‘அன்னை’ என்ற கவிதையின் ஈர்ப்பால் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியைத் தொடங்கினார். 2000ஆம் ஆண்டில் 70 மாணவியருடன் தொடங்கப்பெற்ற கல்லூரி தற்போது 2000 மாணவியருடன், பெண்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கான ஏணிப்படியாகத் தன்னுடையப் பணியினைச் செவ்வனே செய்து வரும் கல்லூரி, இந்தியக் காந்தியக் கல்விக் குழுமத்தின் சிறந்த கல்வி நிறுவன விருதைப் பெற்றது. 2009ஆம் ஆண்டில் ஜப்பான் சோகா பல்கலைக்கழத்துடன் இணைந்து கல்விப் பரிமாற்றம் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டு ஆண்டுதோறும் இரண்டு மாணவியர் ஜப்பானுக்குச் சென்று சோகா பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர். அங்கிருந்து இரண்டு ஜப்பானிய மாணவியர் கல்லூரியில் வந்து பயில்கின்றனர். 2019ஆம் ஆண்டு ISO 9001:2015 தரச்சான்றிதழைப் பெற்றுள்ளது. 2024ஆம் ஆண்டில் வெள்ளிவிழாவினைக் கொண்டாடும் கல்லூரி, இந்த ஆண்டு, கல்லூரிகளுக்கான தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவால் தரச்சான்றைப் பெற்றுள்ளது.
பாடப்பிரிவுகள்
பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, பெண்களுக்காக நடத்தப்பெறும் கல்லூரி சுழற்சி I மற்றும் சுழற்சி II என இரண்டு பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் இளமறிவியல் பிரிவில் 15 பாடங்களும் முதுகலை மற்றும் முதுவறிவியல் பிரிவில் 7 பாடங்களும் பயிற்றுவிக்கப்படுகின்றன. அனைத்துத் துறையிலும் பட்டயக்கல்வியும் சான்றிதழ் கல்வியும் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகிறது.
இலச்சினை
கல்லூரியின் இலச்சினை எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் என்பதைக் குறிக்கும் வகையில் எழுதுகோலின் முனையையும்; கற்கும் கல்விக்கு எல்லைகள் இல்லை என்பதை விளக்கும் வகையில் இரண்டு இறகுகளையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
பிற செயல்பாடுகள்
மாணவியர் கல்வி பயில்வதற்கேற்ற அனைத்து வசதிகளையும் பெற்றுள்ள இக்கல்லூரியில், எளிமையாக அனைத்து மாணவியரும் புரிந்து கொள்ளும் வகையில் பாடங்களைக் கற்பிக்கும் திறமை, அனுபவம், தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். படிப்பதற்கு ஏற்ற இயற்கை எழில் சூழ்ந்த காற்றோட்டமான அமைதிச் சூழலில் பயிலும் மாணவியர் ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இடம் பெறுகின்றனர். கல்லூரி, கல்வி, விளையாட்டு மட்டுமல்லாது, பிற திறன்களையும் நல்லொழுக்கங்களையும் வளர்க்கும் விதமாகப் பாடம்சார்ந்த அமைப்புகளில் மாணவியரை ஈடுபடுத்தி வருகிறது. சிறப்புத்தேவையுடைய மாணவியருக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுத்து மாணவியரைத் தன்னம்பிக்கையுடன் வாழ்வில் வெற்றி பெற வழிநடத்துகிறது. சுயத்தொழில் செய்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
சென்னையில் உள்ள மகளிர் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் |
685424 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D | மியான்மர் மக்கள் பாதுகாப்புப் படைகள் | மக்கள் பாதுகாப்புப் படைகள் (People's Defence Force சுருக்கமாக:PDF) மியான்மர் நாட்டின் நாடு கடந்த அரசாங்கமான மியான்மர் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் ஆயுதக் குழுவாகும். 2021 மியான்மர் இராணுவப் புரட்சிக்குப் பின் இப்படையை மியான்மர் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து 5 மே 2021 அன்று நிறுவப்பட்டது. இதன் நோக்கம் மியான்மரை ஆளும் இராணுவ ஆட்சியை நீக்கி விட்டு, மியான்மர் தேசிய ஒற்றுமை அரசை நிறுவுவதே ஆகும். 8 மே 2021 அன்று மியான்மர் இராணுவ ஆட்சியானது இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என அறிவித்தது.
அக்டோபர் 2021ல் நாடு கடந்த மியான்மர் தேசிய ஒற்றுமை அரசின் பாதுகாப்பு அமைச்சகம் நாடு முழுவதும், இராணுவ ஆட்சியை ஒழிக்கும் பொருட்டு இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தல்கள் வெளியிட்டது. இப்படையணியில் வடக்கு, தெற்கு, மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு கட்டளையகங்கள் கொண்டுள்ளது.) தற்போது இப்படையில் நாடு முழுவதும் 1 இலட்சம் இராணுவப்பயிற்சி மற்றும் கொரில்லாப் போர் பயிற்சி பெற்ற வீரர்கள் உள்ளனர்.
இதனையும் காண்க
2021 மியான்மர் இராணுவப் புரட்சி
மியான்மர் தேசிய ஒற்றுமை அரசாங்கம்
மியான்மர் உள்நாட்டுப் போர் (2021-தற்போது வரை)
மியான்மர் அரசு நிர்வாகக் குழு
மேற்கோள்கள்
மியான்மார் |
685428 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87 | சாய் பிரகாசு தகாகே | சாய் பிரகாசு தகாகே (Sai Prakash Dahake)(பிறப்பு 1964) மகாராட்டிராவினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் வாசிம் மாவட்டத்தில் உள்ள காரஞ்சா சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2024 மகாராட்டிராச் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இளமையும் கல்வியும்
தகாகே, மகாராட்டிராவின் வாசிம் மாவட்டத்தில் உள்ள காரஞ்சாவினைச் சேர்ந்தவர். இவர் காரஞ்சா சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரகாசு உத்தமராவ் தாககேவின் மனைவி ஆவார். இவர் அமராவதி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து 1982-ல் தேர்ச்சி பெற்றார். பின்னர், இவர் தனது படிப்பை இடையில் நிறுத்தினார்.
அரசியல்
2024 மகாராட்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் காரஞ்சா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 85,005 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரும் தேசியவாத காங்கிரசு கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கியாக் இராஜேந்திர பட்னியை 35,073 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மேற்கோள்கள்
மகாராட்டிரத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
வாழும் நபர்கள்
1964 பிறப்புகள் |
685429 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20220%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29 | தேசிய நெடுஞ்சாலை 220 (இந்தியா) | தேசிய நெடுஞ்சாலை 220 (National Highway 220 (India)), பொதுவாக தே. நெ. 220 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 20-ன் ஒரு துணைச்சாலையாகும். தேசிய நெடுஞ்சாலை 220 இந்தியாவின் சார்க்கண்டு, ஒடிசா மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. 2018ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் புதிய எண் முறை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு, கேரளாவில் தற்போதைய தேசிய நெடுஞ்சாலை 183 தே. நெ. 220 எனக் குறிப்பிடப்பட்டது.
வழித்தடம்
சார்க்கண்டு
சைபாசா-கோவிந்த்பூர்-ஹாட்டா-ஒடிசா எல்லை.
ஒடிசா
சார்க்கண்டு எல்லை-திரிங்கிதிகி-ராய்ரங்பூர்-ஜஷிபூர்-தேன்கிகோட்.
சந்திப்புகள்
சைபாசா அருகே முனையம்
ஜஷிபூர் அருகே.
தேன்கிகோட்டி அருகே முனையம்
மேலும் காண்க
தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திறந்தவெளி தெரு வரைபடத்தில் தே. நெ. 220
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் |
685433 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF | தேன்கிகோட்டி | தேன்கிகோட்டி (Dhenkikote) என்பது இந்தியாவின் ஒடிசாவின் கேந்துசர் மாவட்டத்தின் கட்கானில் அமைந்துள்ள ஒரு பெரிய கிராமம் ஆகும். இக்கிராமத்தில் மொத்தம் 559 குடும்பங்கள் வசிக்கின்றன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தேன்கிகோட்டி கிராமத்தின் மக்கள் தொகை 2341 ஆகும். இதில் 1185 பேர் ஆண்கள்; 1156 பேர் பெண்கள் ஆவர். டோகர், கபஸ்படா, லங்கல்காந்தி மற்றும் திகிரா ஆகியவை தேன்கிகோட்டிற்கு அருகிலுள்ள கிராமங்களாகும்.
மேற்கோள்கள்
கேந்துஜர் மாவட்டம் |
685438 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D | கோலி மக்களின் பட்டியல் | கோலி மக்களின் பட்டியல் (List of Koli people) என்பது இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு சமூகத்தில் குறிப்பிடத்தக்க நபர்களின் பட்டியல் ஆகும்.
பாதுகாப்பு படை
கடற்படை
கனோஜி ஆங்கரே, மராட்டியக் கடற்படையின் தளபதித் தளபதி
யாகுத் கான், முகலாயக் கடற்படையின் தளபதி
லயா பாட்டீல், மராட்டியக் கடற்படை கடற்படைத் தலைவர்
ராம் பாட்டீல், அகமதுநகர் சுல்தானகக் கடற்படையின் தளபதி
செம்பில் ஆராயன், திருவிதாங்கூர் இராஜ்ஜியக் கடற்படையின் தளபதி
தரைப்படை
தானாஜி மாலுசரே, மராட்டிய தரைப்படையின் தளபதி
அரசியல்
மாதவ் சிங் சோலங்கி, குசராத்தின் முன்னாள் குஜராத் முதலமைச்சர்
பாரதி சியால், பாரதிய ஜனதா கட்சி தேசிய துணைத் தலைவர், பாவ்நகர் நாடாளுமன்ற உறுப்பினர்
பர்ஷோத்தமபாய் சோலங்கி, குசராத்து மீன்வளத்துறை அமைச்சர்
அஜித்ஸின்ஹ் தாபி, கேதாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், புல்சின்ஹ் தாபியின் மகனும் ஆவார்.
அனந்த் தாரே, சிவசேனா மூத்த தலைவரும், தானே முன்னாள் மாநகரத் தந்தை, மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.
கிகாபாய் கோகில், பாவ்நகர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
பிரதாப் சிவ்ராம் சிங், 3வது, 4வது மற்றும் 5வது மக்களவை உறுப்பினர், பிரித்தானிய இந்திய தரைப்படையின் ஓய்வுபெற்ற இளைய ஆணைய அதிகாரி மற்றும் அகிலப் பாரதியச் சத்திரியக் கோலி மகாசபாவின் தலைவர்
மோகன்பாய் படேல், ஜுனாகத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்
புரட்சியாளர்களும் விடுதலைப் போராட்ட வீரர்களும்
கேமிராவ் சார்னாயக், முகலாயப் பேரரசு சுல்தா ஓளரங்கசீப்புடன் போரிட்டு ஜிஸ்யாவினை நீக்கியவர்
ஜல்காரிபாய், கிளர்ச்சி தளபதி, சிப்பாய்க் கிளர்ச்சி 1857
உருப்லோ கோலி, இந்திய விடுதலை இயக்கக் கதாநாயகன்
கோவிந்த ராம் தாசு, ஆங்கிலேயருக்கு எதிராக கோலியினரை 1826 முதல் 1830 வரை வழிநடத்தியவர்
கோவிந்த ராவ் காரே ரத்னாகர் கோட்டையின் சுபேதார்
ஆட்சியாளர்கள்
யஷ்வந்த்ராவ் முக்னே, ஜவ்கார் மாநிலத்தின் மகாராஜா
ஜலீம் ஜலியா, தகேவானின் தலைவர்
முகமது பின் துக்ளக் எட்டு மாதங்கள் கோட்டையைப் பாதுகாத்த சின்ஹாகட் கோட்டையின் ராணா நாக் நாயக், [சரிபார்க்க மேற்கோள் தேவை]
மதம்
பாபு வேல்நாத் தாகூர், குசராத்தைச் சேர்ந்த துறவி
கனுவா பாபா, உத்தரப்பிரதேசத்தின் கோலி துறவி, இவரை இந்துக்களும் முஸ்லிம்களும் பின் தொடர்ந்தனர்
மேலும் காண்க
கோலி மாநிலங்கள் மற்றும் குலங்களின் பட்டியல்
கோலி மொழி
மேற்கோள்கள் |
685439 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%20%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D | ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவன ஊழல் | ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவன ஊழல் (மலாய்: Skandal 1Malaysia Development Berhad; ஆங்கிலம்: 1Malaysia Development Berhad Scandal; சீனம்: 一个马来西亚发展有限公司丑闻) என்பது தற்போது மலேசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஊழல், லஞ்சம் மற்றும் பணமோசடி சதித்திட்டம் சார்ந்த ஊழல் வழக்கு ஆகும்.
இதில் ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் அல்லது 1எம்டிபி (மலாய்: 1Malaysia Development Berhad; (1MDB) ஆங்கிலம்: 1Malaysia Development Berhad) எனும் நிறுவனத்திற்குச் சொந்தமான நிதி; திட்டமிட்ட முறையில் மோசடி செய்யப்பட்டது; மற்றும் உலகளவிய நிலையில் அந்த நிறுவனத்தின் சொத்துக்கள் திருப்பி விடப்பட்டன.
இந்த ஊழல் வழக்கு 2009-ஆம் ஆண்டு மலேசியாவில் தொடங்கினாலும், உலகளாவிய நிலையிலான அரசியல்வாதிகள், வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை உட்படுத்தியது, மேலும் பல நாடுகளில் குற்றவியல் விசாரணைகளுக்கும் வழிவகுத்துக் கொடுததது.
பொது
1எம்டிபி ஊழல் என்பது "உலகின் மிகப்பெரிய நிதி ஊழல்களில் ஒன்று" என விவரிக்கப்படுகிறது. அத்துடன், ஐக்கிய அமெரிக்க நீதித் துறையால் (United States Department of Justice), 2016-ஆம் ஆண்டு தொடங்கி "இன்றைய வரையில் மிகப்பெரிய அதிகார வர்க்க ஊழல் வழக்கு" (Largest Kleptocracy Case) என அறிவிக்கப்பட்டது.
2015-ஆம் ஆண்டு தொடக்கம் 1எம்டிபி நிறுவனத்திற்குப் பிரச்சினைகள் தொடங்கின. சந்தேகத்திற்கு உரிய பண பரிவர்த்தனைகள்; சந்தேகத்திற்கு உரிய பணமோசடி நடவடிக்கைகள்; பணச் சலவைகள்; ஊழல்கள் போன்ற நடவடிக்கைகளில் அந்த நிறுவனம் ஈடுபட்டதாகச் செய்திகள் கசியத் தொடங்கின.
சரவாக் ரிப்போர்ட்
இலண்டன் மாநகரில் இருந்து வெளிவரும் சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் தான் முதன் முதலில் செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து தி எட்ஜ் மலேசியா எனும் செய்தி இதழும் 1எம்.டி.பி. நிறுவனத்தின் இரகசியங்களை வெளி உலகத்தில் கசிய விட்டது. அதனால் 1எம்.டி.பி. நிறுவனம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.
2015-ஆம் ஆண்டு (The Edge), சரவாக் ரிப்போர்ட் (Sarawak Report) மற்றும் தி வால் இஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) ஆகிய ஊடகங்களில் ஆவணக் கசிவு பதிவாகின. மலேசியாவின் அப்போதைய மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் தன் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் 1எம்டிபி-யில் இருந்து ரிங்கிட் RM 2.67 பில்லியன் (சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலுத்தப் பட்டதாக ஆவணக் கசிவுகள் பதிவாகின.
ஜோ லோ
இந்தத் திட்டத்தின் மூளை என அறியப்படும் ஜோ லோ (Jho Low), மோசடி அல்லது வரி ஏய்ப்பு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மூலம் பன்னாட்டு அளவில் 1எம்டிபி நிதியை நகர்த்துவதில் மையமாக இருந்தார்.
2018-ஆம் ஆண்டு நிலவரப்படி, மலேசியா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள்; மற்றும் பிற சதிகாரர்கள் 1எம்டிபியில் இருந்து அமெரிக்க டாலர் US $4.5 பில்லியனுக்கும் அதிகமான தொகையைத் திருப்பி விட்டதாக அமெரிக்க நீதித்துறை கண்டறிந்துள்ளது.
ஆடம்பரமான வாழ்க்கை
அவ்வாறு திசை திருப்பப்பட்ட 1எம்டிபி நிதி, ஆடம்பரப் பொருட்கள் மற்றும் அசையா சொத்துக்களை வாங்குவதற்குப் பயன்பட்டுள்ளது. மேலும், இக்குவானிமிட்டி (Equanimity) எனும் அதிநவீன சொகுசுக் கப்பல் வாங்குவதற்கும்; அமெரிக்க திரைப்பட நிறுவனமான ரெட் கிரானைட் பிக்சர்ஸ் (Red Granite Pictures) நிறுவனத்தின் தி ஊல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட் (The Wolf of Wall Street) எனும் திரைப்படத்தைத் தயாரிப்பதற்கும்; மற்றும் பிற படங்களைத் தயாரிப்பதற்கும் 1எம்டிபி நிதியில் இருந்து நிதியளிக்கப்பட்டது.
1எம்டிபி நிதியானது ஜோ லோ, நஜீப் ரசாக் மற்றும் நஜீப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர் (Rosmah Mansor) மற்றும் நஜீப் ரசாக்கின் வளர்ப்பு மகன் ரிசா அசீஸ் (Riza Aziz) ஆகியோரின் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பயன்படுத்தப்பட்டது. ரிசா அசீஸ், ரோஸ்மாவின் முதல் கணவர் அப்துல் அஜிஸ் நோங் சிக் (Abdul Aziz Nong Chik) என்பவரின் மகன் ஆவார்.
அத்துடன் மலேசியாவில் அரசியல் நன்கொடைகள் வழங்குவதற்கும்; மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் பரப்புரைக்ள் செய்வதற்கும் மோசடி செய்யப்பட்ட நிதிகள் பயன்படுத்தப்பட்டன.
விளைவுகள்
ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவன ஊழல் மோசடி இரகசியங்கள் வெளியே கசியத் தொடங்கியதும் மலேசியாவில் ஒரு பெரிய அரசியல் ஊழலாக மாறியது; அவையே எதிர்ப்புகளையும் பின்னடைவுகளையும் தூண்டி விட்டன.
ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவன ஊழல் தொடர்பாக மலேசியாவில் விசாரணைகள் தொடங்கப்பட்ட பின்னர், நஜீப் ரசாக்கை விமர்சித்த பலர், அரசாங்கப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களில் முன்னாள் மலேசிய துணைப் பிரதமர் முகிதீன் யாசின்; மற்றும் அட்டர்னி ஜெனரல் அப்துல் கனி பட்டேல் (Abdul Gani Patail); ஆகியோர் மிகவும் முக்கியமானவர்கள் ஆவார்கள். நஜீப் ரசாக் மீதான குற்றச்சாட்டுகள் பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டன.
மலேசிய குடிமக்கள் பிரகடனம்
நஜீப் ரசாக்கின் விமர்சகர்களில், அவரின் முன்னாள் நண்பரும் மலேசியாவின் நான்காவது பிரதமருமான மகாதீர் முகமதுவும் ஒருவர் ஆவார். அந்தக் கட்டத்தில் அவர் மலேசிய குடிமக்கள் பிரகடனத்திற்குத் (Malaysian Citizens' Declaration) தலைமை தாங்கினார். அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிற அமைப்புகளை ஒன்றிணைந்து, நஜீப் ரசாக் பதவி துறப்பு செய்ய வேண்டும் அல்லது பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தனர்.
மலேசிய ஆட்சியாளர்களின் பேரவை, இந்த ஊழல் குறித்து உடனடி விசாரணைக்கு அழைப்பு விடுத்தது; இது மலேசியாவில் நம்பிக்கை நெருக்கடியை ஏற்படுத்துவதாகவும் கூறியது.
ஆறு நாடுகளில் நடவடிக்கைகள்
மலேசியாவிற்கு வெளியே, 1எம்டிபி தொடர்பான நிதி மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மீதான விசாரணைகள் ஆறு நாடுகளில் தொடங்கப்பட்டன. பகிரங்கமாகத் தாக்கல் செய்யப்பட்ட கணக்குகளின்படி, 1எம்டிபி 2015-ஆம் ஆண்டுக்குள் ரிங்கிட் RM 42 பில்லியன் (அமெரிக்க டாலர் US$ 11.73 பில்லியன்) கடனில் இருந்தது.
1எம்டிபி மோசடியில் சிக்கிக் கொண்ட வெளிநாட்டு வங்கிகளில் முதலிடம் வகித்தது ஐக்கிய அமெரிக்காவின் கோல்ட்மேன் சாஸ் (Goldman Sachs) எனும் வங்கியாகும். இந்த வங்கியின் தலைமையிலான அமெரிக்க டாலர் $3 பில்லியன் அரசு உத்தரவாதம் பெற்ற பத்திர வெளியீட்டின் விளைவாக ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்காக அமெரிக்க டாலர் $300 மில்லியன் வரை கட்டணம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கோல்ட்மேன் சாஸ் வங்கி
இருப்பினும் கோல்ட்மேன் சாஸ் வங்கி மறுப்பு தெரிவித்தது. இருந்தபோதிலும், கோல்ட்மேன் சாஸ் வங்கி மீது வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது; மற்றும் ஐக்கிய அமெரிக்க நீதித் துறையிடம் அமெரிக்க டாலர் 2.9 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்த ஒப்புக்கொண்டது.
1எம்டிபி மோசடி தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் அமெரிக்க கோல்ட்மேன் சாக்ஸ்வங்கியின் தலைவர் டிம் லீஸ்னர் (Tim Leissner); மற்றும் நிதி திரட்டுபவர் எலியட் பிராய்டி (Elliott Broidy) ஆகியோர் அடங்குவர்.
12 ஆண்டுகள் சிறைத்தண்டனை
மலேசியப் பொதுத் தேர்தல், 2018-க்குப் பிறகு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மகாதீர் முகமது, ஊழல் குறித்த மலேசிய விசாரணைகளை மீண்டும் தொடங்கினார். மலேசிய குடிவரவு துறை, நஜீப் ரசாக் மற்றும் 11 பேர் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதித்தது. அதே வேளையில் நஜீப் ரசாக்குடன் தொடர்புடைய சொத்துக்களில் இருந்து 270 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 500-க்கும் மேற்பட்ட கைப்பைகள்; மற்றும் 12,000 நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மலேசிய வரலாற்றில் அதுவே மிகப்பெரிய பறிமுதல் ஆகும்.
பின்னர் நஜீப் ரசாக் மீது நம்பிக்கை மீறல், பணமோசடி மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதே வேளையில் தலைமறைவாக இருந்த ஜோ லோ மீதும் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டது. பன்னாட்டு பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். 1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேசனலுடன் (SRC International) தொடர்புடைய ஏழு குற்றச்சாட்டுகளில் நஜீப் ரசாக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மலேசிய அரசாங்க அறிக்கை
செப்டம்பர் 2020-இல், 1எம்டிபி நிறுவனத்தில் இருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் தொகை அமெரிக்க டாலர் US $4.5 பில்லியன் என மதிப்பிடப்பட்டது; மற்றும் 1எம்டிபியின் நிலுவையில் உள்ள கடன்கள் அமெரிக்க டாலர் US $7.8 பில்லியன் என்று மலேசிய அரசாங்க அறிக்கை பட்டியலிட்டுள்ளது. 2039-ஆம் ஆண்டு வரையில் 30 ஆண்டு காலத்திற்கு கட்ட வேண்டிய 1எம்டிபி கடன்களை மலேசிய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. 2018-ஆம் ஆண்டில் இருந்து அந்தக் கடன்கள் மலேசிய அரசாங்கத்தால் கட்டப்பட்டு வருகின்றன.
ஆகத்து 2021-இல், ஐக்கிய அமெரிக்கா தனது அதிகார வரம்பிற்குள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட 1எம்டிபி நிதியில் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை மீட்டு மலேசியாவிடம் திருப்பிக் கொடுத்தது, சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளும் தவறாகப் பயன்படுத்தப்பட்ட 1எம்டிபி நிதியை மீட்டுக் கொடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன்.
மேற்கோள்கள்
நூல்கள்
வெளியிணைப்புகள்
The Guardian, "1MDB: The inside story of the world's biggest financial scandal", 28 July 2016.
Global Witness:
"The Real Wolves of Wall Street – The banks, lawyers and auditors at the heart of Malaysia's biggest corruption scandal" (HTML), March 2018.
" The Real Wolves of Wall Street – The banks, lawyers and auditors at the heart of Malaysia's biggest corruption scandal" (PDF), March 2018.
Bloomberg News, "A Guide to the Worldwide Probes of Malaysia's 1MDB Fund", 8 March 2018.
ஒரே மலேசியா
நிதி மோசடிகள்
மலேசிய அரசியல் வரலாறு
மலேசிய அரசு
மலேசிய அரசு நிறுவனங்கள் |
685440 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF | கச்சி கோலி மொழி | கச்சி கோலி (Kachi Koli language) என்பது இந்தியாவில் பேசப்படும் ஓர் இந்திய-ஆரிய மொழியாகும். அண்டை நாடான பாக்கித்தானின் கிழக்கு சிந்து மாகாணத்தின் எல்லையைத் தாண்டி வாழும் ஒரு சிறிய மக்கள் கோலி இனத்தைச் சேர்ந்தவர்கள். குசராத்தி மொழித் துணைக்குடும்பத்தின் ஒரு பகுதியான கச்சி கோலி, பார்கரி கோலி மற்றும் உடையாரா கோலி ஆகியவற்றுடன் நெருக்கமாக தொடர்புடையது.
மேற்கோள்கள்
இந்திய-ஆரிய மொழிகள்
இந்திய மொழிகள் |
685441 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF | சிவாங்கி ஜோசி | சிவாங்கி ஜோசி (Shivangi Joshi)(பிறப்பு 18 மே 1998) என்பவர் ஓர் இந்திய தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் 2013ஆம் ஆண்டு கெல்டி கை ஜிந்தகி ஆன்க் மிச்சோலி படத்தில் நிஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார். பெகுசராய் படத்தில் பூனம் கதாபாத்திரத்தின் மூலம் இவர் தனது நடிப்பில் திருப்புமுனையைப் பெற்றார். ஸ்டார் பிளஸின் யே ரிஷ்தா க்யா கெஹ்லதா ஹையில் நைரா சிங்கானியா கோயங்கா மற்றும் சிரத் ஷெகாவத் கோயங்கா என இரட்டை வேடங்களில் நடித்ததற்காக ஜோசி மிகவும் பிரபலமானவர்.
இளமை
ஜோசி மகாராட்டிர மாநிலம் புனேவில் பிறந்தார். உத்தராகண்டு மாநிலம் தேராதூனில் பள்ளிப்படிப்பை முடித்தார்.
திரைப்படம்
தொலைக்காட்சி தொடர்
மேற்கோள்கள்
இந்திய தொலைக்காட்சி நடிகைகள் |
685454 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D | காசின் விடுதலை இராணுவம் | காசின் விடுதலை இராணுவம் (Kachin Independence Army (சுருக்கமாக: KIA), மியான்மர் நாட்டின் வடக்கில் வாழும் காசின் மக்களின் அரசியல் அமைப்பான காசின் விடுதலை அமைப்பின் ஆயுதக் குழு ஆகும். இந்த ஆயுதக் குழு மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடி வருகிறது. 5 பிப்ரவரி 1961 அன்று நிறுவப்பட்ட இந்த இராணுவக் குழு காசின் மாநிலம், மண்தாலே பிரதேசம், சாகைங் பிரதேசம் மற்றும் சான் மாநிலங்களில் தனது கூட்டாளிகளுடன் இயங்குகிறது.
2021 மியான்மர் இராணுவப் புரட்சிக்குப் பின்னர் இந்த அமைப்பு காசின் மாநிலம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளை மியான்மர் இராணுவத்திடமிருந்து கைப்பற்றி தன்னாட்சி செய்து வருகிறது.
இதனையும் காண்க
2021 மியான்மர் இராணுவப் புரட்சி
மியான்மர் உள்நாட்டுப் போர் (2021-தற்போது வரை)
சின் மாநிலம்
சின்லாந்து
சின்லாந்து தேசிய இராணுவம்
அரக்கான் இராணுவம்
சின் சகோதரத்துவக் கூட்டணி
மியான்மர் மக்கள் பாதுகாப்புப் படைகள்
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
"This article was amended on Monday 31 August 2009 to remove references to the alleged age of SSA soldier"
மேலும் படிக்க
மியான்மார் |
685457 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D | தாங் தேசிய விடுதலை இராணுவம் | தாங் தேசிய விடுதலைப் படை (Ta'ang National Liberation Army சுருக்கமாக: TNLA), மியான்மர் நாட்டின் வடக்கில், சீனாவின் எல்லைப்புற மாநிலமாகிய சான் மாநிலத்தில் செயல்படும் பாலூங் அரசு விடுதலை முன்னணி அரசியல் கட்சியின் ஆயுதப் பிரிவாகும். இது மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிராக, பாலூங் மக்களின் அரசியல் விடுதலைக்கு போரிடும் படையாகும். இப்படை 1992ல் நிறுவப்பட்டது. இந்த படையை மியான்மர் இராணுவ அரசு தீவிரவாத அமைப்பு என அறிவித்துள்ளது.
இதனையும் காண்க
2021 மியான்மர் இராணுவப் புரட்சி
சின் மாநிலம்
சின்லாந்து
சின்லாந்து தேசிய இராணுவம்
அரக்கான் இராணுவம்
சின் சகோதரத்துவக் கூட்டணி
மியான்மர் மக்கள் பாதுகாப்புப் படைகள்
காசின் விடுதலை இராணுவம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Taang National Liberation Army on Telegram
மியான்மார் |
685459 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D | பாபுராவ் கதம் | பாபுராவ் கோலிகர் கதம் (Baburao Kadam)(பிறப்பு 1968) என்பவர் மகாராட்டிர சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள கத்காவ் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2024 மகாராட்டிரச் சட்டப்பேரவைத் தேர்தலில் சிவ சேனா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இளமை
மகாராட்டிர மாநிலம், நான்டெட் மாவட்டத்தில் உள்ள கத்காவ் பகுதியைச் சேர்ந்தவர் கதம். இவர் குணாஜிராவ் கதமின் மகன். இவர் தனது பட்டப்படிப்பை முடித்த பின்னர் யசுவந்த் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டினை முடித்து 1993-ல் கல்லூரிப் படிப்பினை இடையில் நிறுத்தினார்.
அரசியல்
கதம் 2024 மகாராட்டிரச் சட்டப் பேரவைத் தேர்தலில் சிவசேனா கட்சியின் வேட்பாளராக கத்காவ் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் 113,245 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான இந்திய தேசிய காங்கிரசின் ஜவால்கோங்கர் மாதவராவ் நிவ்ருத்திராவ் பாட்டிலை 30,067 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். முன்னதாக 2024ஆம் ஆண்டில், இவர் ஹிங்கோலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் சிவசேனா (உ. பா. தா.) -ன் நாகேஷ் பபுராவோ பாட்டீல் அஷ்டிகரிடம் தோல்வியடைந்தார். இவர் கட்சியின் மாவட்டத் தலைவராக உள்ளார். .
மேற்கோள்கள்
சிவ சேனா அரசியல்வாதிகள்
வாழும் நபர்கள்
1968 பிறப்புகள் |
685460 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF | இருமுனைப் பளுக்கருவி | இருமுனை பளுக்கருவி அல்லது டம்பெல்சு (dumbbell) என்பது எடை பயிற்சியில் பயன்படுத்தப்படும் ஓர் உபகரணமாகும். இது பொதுவாக தனித்தனியாகவோ அல்லது இணையாகவோ, ஒவ்வொரு கையிலும் ஒன்று என்றவாறு பயன்படுத்தப்படுகிறது.
வரலாறு
டம்பெல்சின் முன்னோடியான ஹால்டெரெஸ், பண்டைய கிரேக்கத்தில் எடை தூக்குவதற்கும் பண்டைய கிரேக்கத்தில் நடைபெற்ற நீளம் தாண்டுதலின் போது பயன்படுத்தப்படும் எடைகளாகவும் பயன்படுத்தப்பட்டது. குச்சி போன்ற ஒரு வகையான இந்த இருமுனை பளுதூக்கும் கருவியானது ஒரு மில்லினியத்திற்கும் மேலாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டது, இது கரலாக்கட்டை என்று அழைக்கப்பட்டது. . இது பொதுவாக, மல்யுத்த வீரர்கள், உடற்பயிற்சியாளார்கள், விளையாட்டு வீரர்கள், வலிமை மற்றும் தசையின் அளவை அதிகரிக்க விரும்பும் நபர்ககளால் உடற்பயிற்சியின்போது பயன்படுத்தப்படுகிறது.
சொற்பிறப்பியல்
"டம்ப்பெல்" அல்லது "டம்ப் பெல்" அல்லது "டம்ப்-பெல்" என்ற சொல் இசுடூவர்ட் கால இங்கிலாந்தின் பிற்பகுதியில் உருவானது. 1711 ஆம் ஆண்டில் கவிஞர் ஜோசப் அடிசன் தி ஸ்பெக்டேட்டரில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் "இருமுனைப் பளுக்கருவியுடன்" உடற்பயிற்சி செய்வதைக் குறிப்பிட்டார்.
வகைகள்
17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஒரு கைப்பிடியில் இரண்டு சம எடைகள் இணைக்கப்பட்ட இருமுனைப் பளுக்கருவியின் பழக்கமான வடிவம் தோன்றியது. தற்போது டம்பெல்லில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன:
நிலையான எடை கொண்டது என்பது இருமுனைப் பளுக்கருவி வடிவத்தில் உருவாக்கப்பட்ட எடைக் கருவியாகும் . மலிவான வகைகள் வார்ப்பிரும்பு கொண்டவை, சில சமயங்களில் வசதிக்காக ரப்பர் அல்லது நியோபிரீன் பூசப்பட்டிருக்கும், மேலும் மலிவான பதிப்புகள் கான்கிரீட் நிரப்பப்பட்ட ஒரு திடமான நெகிழிக் கூடுகளைக் கொண்டிருக்கும்.
மாற்றியமைக்ககூடியது ஒரு உலோகப் பட்டியைக் கொண்டிருக்கும், அதன் மையப் பகுதி பெரும்பாலும் பிடியை மேம்படுத்துவதற்காக குறுக்குவெட்டு வடிவத்துடன் ( பொளை உளி ) பொறிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட (சரிசெய்யக்கூடிய) டம்ப்பெல்சு என்பது சரிசெய்யக்கூடிய டம்பெல்சு ஆகும், அவை டம்பல்ஸ் பிடிதாங்கியில் இருக்கும்போது எடை அல்லது தட்டுகளின் எண்ணிக்கையை எளிதாக மாற்ற அனுமதிக்கும்.
வேறுபாடுகள்
தாமஸ் இன்ச் டம்பெல்சு, "172" என்றும் அழைக்கப்படுகிறது ( கைப்பிடி, )
மில்லினியம் டம்பெல்சு ( கைப்பிடி, )
சர்க்கஸ் டம்ப்பெல்சு: வரலாற்று ரீதியாக சர்க்கஸ் செயல்களில் இது பயன்படுத்தப்படுகிறது, இந்த டம்ப்பெல்சு மிகைப்படுத்தப்பட்ட முனைகள், பரந்த கைப்பிடிகள், சாதாரண டம்பல்சுகளைப் போலவே, பல்வேறு எடைகள், அளவுகளில் வருகின்றன.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
உடற்பயிற்சிக் கருவிகள் |
685462 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE | கோபிந்த் புரா | கோபிந்த் புரா (Gobind Pura) என்பது பாக்கித்தானின் பஞ்சாபில் உள்ள பைசலாபாத்தில் உள்ள பழமையான குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றாகும். இது நகரின் "காந்தா கர்" (கடிகார கோபுரம்) அருகே மையமாக அமைந்துள்ளது. பிரதான நர்வாலா சாலையில் அமைந்துள்ள கோவிந்த் புரா, பைசலாபாத் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு எதிரே ஜின்னா காலனி ஒட்டியுள்ளது.
கோபிந்த் புராவின் கட்டிடங்கள் பழைய மற்றும் புதிய கட்டிடக்கலை இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. கோபிந்த் புரா மற்றும் ஜின்னா குடியிருப்பிற்கு (குல்பெர்க் சாலை) இடையில் அமைந்துள்ள பிரதான சாலையில் பல மருத்துவமனைகள், உணவகங்கள், பள்ளிகள் மற்றும் அடுமனைகள் மற்றும் பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டு வணிக விற்பனை நிலையங்களுடன் மிகவும் வணிகமயமாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. நான்கு மசூதிகள் இப்பகுதியில் அமைந்துள்ளன.
மேற்கோள்கள் |
685464 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D | மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணி இராணுவம் | மியான்மர் தேசிய ஜனநாயக கூட்டணி இராணுவம் (Myanmar National Democratic Alliance Army (சுருக்கமாக:MNDAA), மியான்மர் நாட்டின் வடக்கில் கோகாங் பிரதேசத்தில் 1989ஆம் ஆண்டு முதல் செயல்படும் ஆயுதக் குழுவாகும்.
வரலாறு
மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணி இராணுவம் 12 மார்ச் 1989 முதல் செயல்படுகிறது. 2021 மியான்மர் இராணுவப் புரட்சிக்குப் பின், இப்படையானது மியான்மர் நாட்டின் வடக்கில் உள்ள கோகைங் பிரதேசத்தைக் கைப்பற்றி தன்னாட்சி புரிகிறது.
இதனையும் காண்க
2021 மியான்மர் இராணுவப் புரட்சி
சின் மாநிலம்
சின்லாந்து
சின்லாந்து தேசிய இராணுவம்
அரக்கான் இராணுவம்
சின் சகோதரத்துவக் கூட்டணி
மியான்மர் மக்கள் பாதுகாப்புப் படைகள்
காசின் விடுதலை இராணுவம்
தாங் தேசிய விடுதலை இராணுவம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மியான்மார் |
685471 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE | கொடும்பா | கொடும்பா (Kodumba) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரும், கிராம ஊராட்சியும் ஆகும்.
மக்கள்வகைப்பாடு
2001 ஆண்டைய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கொடும்பாவின் மொத்த மக்கள் தொகை 19,138 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 9,382 என்றும், பெண்களின் எண்ணிக்கை 9,756 என்றும் உள்ளது.
கோயில்கள்
இந்தக் கிராமத்தில் தமிழ் செங்குந்தர் கைக்கோல முதலியார் சமூகத்தினரால் கட்டப்பட்ட கொடும்பு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
மேற்கோள்கள்
பாலக்காடு மாவட்ட ஊராட்சிகள்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata |
685472 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 | பொட்டாசியம் புரோமேட்டு | பொட்டாசியம் புரோமேட்டு (Potassium bromate) என்பது KBrO3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியத்தின் புரோமேட்டு உப்பான இச்சேர்மம் வெண்மை நிறத்தில் படிகங்களாக அல்லது தூளாகக் காணப்படும். வலிமையான ஓர் ஆக்சிசனேற்றும் முகவராக இச்சேர்மம் செயல்படுகிறது.
தயாரிப்பு
பொட்டாசியம் ஐதராக்சைடின் சூடான கரைசல் வழியாக புரோமின் அனுப்பப்படும்போது பொட்டாசியம் புரோமேட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. முதலில் நிலையற்ற பொட்டாசியம் ஐப்போபுரோமைட்டை உருவாக்குகிறது, இது விரைவாக விகிதவியலுக்கு ஒவ்வா முறையில் புரோமைடு மற்றும் புரோமேட்டாக மாறுகிறது:
3 BrO−→ 2 Br− + BrO−3
பொட்டாசியம் புரோமைடு கரைசல்களை மின்னாற்பகுப்பு செய்தும் பொட்டாசியம் புரோமேட்டைத் தயாரிக்கலாம். இரண்டு முறைகளிலும் உள்ள பொட்டாசியம் புரோமைடு அதன் மிகக் குறைந்த கரைதிறன் காரணமாக உடனடியாகப் பிரிக்கப்படுகிறது. பொட்டாசியம் புரோமேட்டு மற்றும் புரோமைடு கொண்ட கரைசல் 0 பாகை செல்சியசு வெப்பநிலைவரை குளிர்விக்கப்படும் போது, கிட்டத்தட்ட அனைத்து புரோமேட்டுகளும் வீழ்படிவாகிவிடும். அதே சமயம் அனைத்து புரோமைடுகளும் கரைசலில் இருக்கும்..
பயன்கள்
பொட்டாசியம் புரோமேட்டு பொதுவாக அமெரிக்காவில் மாவு மேம்படுத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது (ஐ எண் ஐ924). ரொட்டி தொழிலில் இது மாவை வலுப்படுத்தவும், அதிகமாக மேலெழும்பவும் செயல்படுகிறது. இது ஒரு ஆக்சிசனேற்ற முகவர் மற்றும் சரியான சூழ்நிலையில் ரொட்டிச் செயல்பாட்டில் புரோமைடாக குறைக்கப்படுகிறது. இருப்பினும் இதை அதிகமாகச் சேர்த்தாலோ அல்லது ரொட்டியை நீண்டநேரம் வேகவைத்தாலோ அல்லது போதுமான அளவு குறைந்த வெப்பநிலையில் வேகவைத்தாலோ பொட்டாசியம் புரோமேட்டு எஞ்சியிருக்க நேரிடும். இதை உட்கொண்டால் தீங்கு விளைவிக்கும்.
மால்ட் பார்லி உற்பத்தியில் பொட்டாசியம் புரோமேட்டு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு நிலைமைகளின் கீழ் பயன்படுத்தப்படுகிறது. முடிக்கப்பட்ட தயாரிப்புகள் தரநிலையுடன் அடையாளப்படுத்தப்படுகின்றன.
நெறிப்படுத்தல்
பொட்டாசியம் ப்ரோமேட்டு ஒரு புற்றுநோய் ஊக்கியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. உணவு, மருந்து மற்றும் அழகுசாதனச் சட்டத்தின் தெலானி விதிக்கு முன்பு வரை உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு பொட்டாசியம் புரோமேட்டைப் பயன்படுத்த அனுமதித்தது. இவ்விதி புற்றுநோயை உண்டாக்கும் பொருட்களைத் தடைசெய்கிறது. 1958 ஆம் ஆண்டு முதல் இவ்விதி நடைமுறைக்கு வந்தது. 1991 ஆம் ஆண்டில் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ரொட்டித் தொழிலாளகளை பயன்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தியது, ஆனால் இத் தடை கட்டாயப்படுத்தப்படவில்லை.
சப்பானிய ரொட்டித் தொழிலாளர்கள் 1980 ஆம் ஆண்டில் தாங்களாக முன்வந்து பொட்டாசியம் புரோமேட்டைப் பயன்படுத்துவதை நிறுத்தினர். இருப்பினும், யாமாசாகி ரொட்டி நிறுவனத்தினர் 2005 ஆம் ஆண்டில் இதன் பயன்பாட்டை மீண்டும் தொடங்கினர். இறுதி தயாரிப்பில் இருந்த இரசாயனத்தின் அளவைக் குறைக்க புதிய உற்பத்தி முறைகள் இருப்பதாகக் கூறினர்.
ஐரோப்பிய ஒன்றியம், அர்கெந்தீனா, பிரேசில், கனடா, நைச்சீரியா, தென் கொரியா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் பொட்டாசியம் புரோமேட்டு உணவுப் பொருட்களிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டில் இலங்கையிலும், 2005 ஆம் ஆண்டில் சீனாவிலும், மற்றும் 2016 ஆம் ஆண்டில் இந்தியாவிலும் தடைசெய்யப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் பெரும்பாலான நாடுகளில் இது அனுமதிக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு மே மாத தரவுகளின் படி அமெரிக்காவின் நியூயார்க்கு மாநிலம் பொட்டாசியம் புரோமேட்டைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது.
கலிஃபோர்னியாவில், புரோமேட்டேற்ற மாவைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கை அடையாளக்குறி தேவைப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கலிபோர்னியா பொட்டாசியம் புரோமேட்டின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை தடை செய்யும் சட்டத்தை இயற்றியது. சட்டம் 2027 இல் அமலுக்கு வருகிறது. பொட்டாசியம் புரோமேட்டை தடை செய்த முதல் அமெரிக்க மாநிலம் கலிபோர்னியாவாகும்.
மேற்கோள்கள்
பொட்டாசியம் சேர்மங்கள்
புரோமேட்டுகள்
ஆக்சிசனேற்றிகள்
உணவுச் சேர்பொருட்கள் |
685473 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D | குரு கோவிந்த் சிங்கின் பெயரிடப்பட்ட நினைவிடங்கள் | குரு கோவிந்த் சிங்கின் பெயரிடப்பட்ட நினைவிடங்கள் (List of things named after Guru Gobind Singh) சீக்கியர்களின் பத்தாவது குரு குரு கோவிந்த் சிங்கின் நினைவாகப் பல இடங்கள் பெயரிடப்பட்டுள்ளன. இவற்றின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா
குசராத்து
குரு கோவிந்த் சிங் மருத்துவமனை, ஜாம்நகர், குசராத்து, இந்தியா
கருநாடகம்
குரு கோவிந்த் சிங் கல்லூரி, பெங்களூர்
தில்லி
குரு கோவிந்த் சிங் இந்திரபிரசுதா பல்கலைக்கழகம், புது தில்லி
சிறீ குரு கோவிந்த் சிங் வணிகவியல் கல்லூரி, புது தில்லி
கல்கிதார் தேசிய பொது மேல்நிலைப்பள்ளி, புது தில்லி
குரு கோவிந்த் சிங் மார்க், தில்லி
பீகார்
குரு கோவிந்த் சிங் மருத்துவமனை, பாட்னா சாகிப் (பீகார்)
சிறீ குரு கோவிந்த் சிங் கல்லூரி, பட்னா
அரியானா
சிறீ குரு கோவிந்த் சிங் முந்நூறாண்டு பல்கலைக்கழகம், குர்கான்
குரு கோவிந்த் சிங் மருத்துவக் கல்லூரி, யமுனாநகர்
குரு கோவிந்த் சிங் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி, சீகா
இமாச்சலப் பிரதேசம்
கல்கிதார் அறக்கட்டளை, பாரு சாகிப் (இமாச்சலப் பிரதேசம்)
கோவிந்த் சாகர், இமாச்சலப் பிரதேசத்தின் பிலாசுபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம் ஆகும்.
சார்க்கண்டு
குரு கோவிந்த் சிங் கல்விச் சங்க தொழில்நுட்ப வளாகம், காண்ட்ரா (சாசு பொகாரோ இரும்பு நகரம், சார்க்கண்டு)
உத்தரப்பிரதேசம்
குரு கோவிந்த் சிங் விளையாட்டு கல்லூரி, இலக்னோ
மத்தியப் பிரதேசம்
குரு கோவிந்த் சிங் கல்சா மேல்நிலைப் பள்ளி-ஜபல்பூர் (மத்தியப் பிரதேசம்)
குரு கோவிந்த் சிங் கல்சா பள்ளி, ஜபல்பூர்
சிறீ குரு கோவிந்த் சிங் சட்டக் கல்லூரி, இந்தூர்
மகாராட்டிரம்
குரு கோவிந்த் சிங் அறக்கட்டளை ஆய்விருக்கை (சீக்கிய மதம்-வரலாற்றுத் துறை) -மும்பை பல்கலைக்கழகம்
சிறீ குரு கோவிந்த் சிங் ஜி வானூர்தி நிலையம், கசூர் சாகிப், நாந்தேட்
குரு கோவிந்த் சிங் விளையாட்டரங்கம், நாந்தேட்
குரு கோவிந்த் சிங் மார்க், முலுண்ட் குடியிருப்பு, மும்பை
குரு கோவிந்த் சிங் தொழிற்பேட்டை, கோரேகான் (மும்பை)
குரு கோவிந்த் சிங் அறக்கட்டளை, நாசிக்
நாக்பூர் காம்ப்டி சாலையில் உள்ள குரு கோவிந்த் சிங் கல்வி நிறுவனம்
சிறீ குரு கோவிந்த் சிங்ஜி பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம், நாந்தேட்
குரு கோவிந்த் சிங் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி, நாசிக்
சிறீ குரு கோவிந்த் சிங்ஜி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், நாந்தேட்
குரு கோவிந்த் சிங் பல்தொழில்நுட்பக் கல்லூரி, நாசிக்
பஞ்சாப்
குரு கோவிந்த் சிங் படிப்பு வட்டம், லூதியானா (ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் நிறுவனம், அமைதி விருது)
குரு கோவிந்த் சிங் பெரும் அனல் மின் நிலையம்
குரு கோவிந்த் சிங் மார்க்
குரு கோவிந்த் சிங் மருத்துவக் கல்லூரி, பரித்கோட்
குரு கோவிந்த் சிங் சுத்திகரிப்பு நிலையம், புலோகேரி, பதிந்தா
குரு கோவிந்த் சிங் பவன், பஞ்சாபி பல்கலைக்கழகம், பாட்டியாலா
குரு கோவிந்த் சிங் விளையாட்டரங்கம், ஜலந்தர்
மண்டி கோபிந்த்கர், இந்தியாவின் பஞ்சாப்பின் எஃகு நகரம்
ஜி. ஜி. எஸ். நவீனத் தொழில்நுட்பக் கல்லூரி, கரார்
குரு கோவிந்த் சிங் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தல்வாண்டி சபோ, பதிந்தா
குரு கோவிந்த் சிங் கல்லூரி, சங்கேரா
குரு கோவிந்த் சிங் கல்விக் கல்லூரி (பெண்களுக்கான) கிதர்பாகா
குரு கோவிந்த் சிங் பல்தொழில்நுட்பக் கல்லூரி, அண்டோவால் கலான்
கல்கிதார் உயர்கல்வி நிறுவனம், மலோட்
திராய் சதாப்தி குரு கோவிந்த் சிங் கல்சா கல்லூரி, அமிருதசரசு
குரு கோவிந்த் சிங் பொதுப் பள்ளி, மதகார் கலான், சிறீ முக்த்சர் சாகிப், பஞ்சாப்
சிறீ குரு கோவிந்த் சிங் கல்லூரி, சண்டிகர்
குரு கோவிந்த் சிங் மகளிர் கல்லூரி, சண்டிகர்
பிற நாடுகள்
கனடா
குரு கோவிந்த் சிங் குழந்தைகள் அறக்கட்டளை
இங்கிலாந்து
கோபிந்த் மார்க், இங்கிலாந்தின் மேற்கு யார்சயரில் உள்ள பிராட்போர்டில் உள்ள ஒரு தெரு, இங்கு குரு கோபிந்த் சிங் குருத்வாரா அமைந்துள்ளது
குரு கோவிந்த் சிங் கல்சா கல்லூரி, சிக்வெல், எசெக்சு, இங்கிலாந்து
ஐக்கிய அமெரிக்கா
குரு கோவிந்த் சிங் சீக்கிய மையம், பிளைன்வியூ, நியூயார்க், அமெரிக்கா
குரு கோவிந்த் சிங் அறக்கட்டளை, வடக்கு போடோமாக், மேரிலாந்து, அமெரிக்கா
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
https://web.archive.org/web/20130522054752/http:// sggscollege. ac. in /
குரு கோவிந்த் சிங் பவன் @YouTube
ஜி. ஜி. எஸ். ஐ. பி. யூ, புது தில்லி
ஜி. ஜி. எஸ். சி. சி, புது தில்லி
குரு கோவிந்த் சிங் மார்க் 31 January 2008 at the Wayback Machine
1-கோவிந்த் மார்க், பிராட்போர்டு
குரு கோவிந்த் சிங் நினைவகங்கள் |
685475 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | போகர் சட்டமன்றத் தொகுதி | போகர் சட்டமன்றத் தொகுதி (Bhokar Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி நான்தேட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. போகர்,நாந்தேடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
வெளியிணைப்புகள்
இந்திய தேர்தல் ஆணையம்
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
மகாராட்டிர அரசியல் |
685485 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87.%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81 | கே. மது | கே. மது (K. Madhu) என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் மலையாளத் திரைப்படத் துறையில் முக்கியமாகப் பணியாற்றுகிறார். இவர் மலரும் கிளியும் திரைப்படத்தில் அறிமுகமானார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 30இற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
திரைப்படங்கள்
மேற்கோள்கள்
மலையாள நபர்கள்
வாழும் நபர்கள்
மலையாளத் திரைப்பட இயக்குநர்கள் |
685488 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | நாந்தேட் வடக்கு சட்டமன்றத் தொகுதி | நாந்தேட் வடக்கு சட்டமன்றத் தொகுதி (Nanded North Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி நான்தேட் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்
மகாராட்டிர அரசியல் |
685494 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF | சுசித்ரா முரளி | சுசித்ரா முரளி என்பவர் ஓர் இந்திய நடிகையாவார். 1990 இல் தனது 14 வயதில் நம்பர் 20 மெட்ராஸ் மெயில் என்ற திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் தோன்றியுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
சுசித்ரா தனது ஆரம்பக் கல்வியை ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட் திருவனந்தபுரத்தில் கல்வியை கற்றார்.
தொழில்
நம்பர் 20 மெட்ராஸ் மெயில் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சுசித்ரா, 90களில் மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால், முகேஷ் , ஜெகதீஷ், மற்றும் சித்திக் போன்றவர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்கள்
{| class="wikitable sortable"
|- style="background:#ccc; text-align:center;"
!ஆண்டு
! திரைப்படம்
!மொழி
!குறிப்புகள்
|-
|rowspan=2 style="text-align:center; background:#7CB9E8; textcolor:#000;" |1978
| அரவம்
|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
| குழந்தை நட்சத்திரம்
|-
|அடிம கச்சவடம்
|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
| குழந்தை நட்சத்திரம்
|-
|style="text-align:center; background:#B284BE; textcolor:#000;"|1979
|என்ட சிநேகம் நினக்கு மாத்திரம்
|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
| குழந்தை நட்சத்திரம்
|-
|style="text-align:center; background:#B0BF1A; textcolor:#000;" |1980
| அங்காடி
|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
| குழந்தை நட்சத்திரம்
|-
|rowspan=2 style="text-align:center; background:#C0E8D5; textcolor:#000;"|1981
|அம்பலப் புறாவு
| style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
| குழந்தை நட்சத்திரம்
|-
|ஊதி காய்ச்சிய பொண்ணு
|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
| குழந்தை நட்சத்திரம்
|-
|style="text-align:center; background:#EDEAE0; textcolor:#000;" |1984
|ஸ்வர்ண கோபுரம்
|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
| குழந்தை நட்சத்திரம்
|-
|style="text-align:center; background:#CFB53B; textcolor:#000;" |1987
|வ்யத்தம்
|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
| குழந்தை நட்சத்திரம்
|-
|rowspan=6 style="text-align:center; background:#6B8E23; textcolor:#000;"|1990
|நம்பர் 20 மெட்ராஸ் மெயில்
| style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|கதாநாயகியாக அறிமுகம் (14 வது வயதில்)|-
|குட்டேட்டன்|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|க்ஷணக்கத்
|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|கமாண்டர் | style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
| என்குயரி|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
| பாடாத வீணையும் பாடும்|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|rowspan=10 style="text-align:center; background:#DA70D6; textcolor:#000;" |1991
| சக்ரவர்த்தி| style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|அபிமன்ய| style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
| மிமிக்கப் பரேடு| style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
| எழுன்னல்லது| style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
| மூக்கில்லா ராஜ்யத்து| style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|கடிஞ்சூல் கல்யாணம்| style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
| நயம் வ்யக்தமா குன்னு| style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
| அதிரதன்| style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
| கோபுர வாசலிலே|style="text-align:center; background:#93C572; textcolor:#000;"|தமிழ்
|
|-
|பரணம்|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|rowspan=7 style="text-align:center; background:#FF6E4A; textcolor:#000;"|1992
| கள்ளன் கப்பலில் தன்னெ
| style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|-
| தலஸ்தானம் |style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
| மாந்த்ரீக செப்பு |style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|நீலக்குறுக்கன் | style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|மிஸ்டர் & மிஸ்ஸஸ்| style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|காசர்கோடு காதர் பாய்| style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
| மக்கள் மாஹாத்ம்யம்|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|rowspan=8 style="text-align:center; background:#ECEBBD; textcolor:#000;"|1993
|காவடியாட்டம்| style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|பாக்யவான்| style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
| ஸ்த்ரீதனம்|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|சௌபாக்யம்| style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|ஸ்தலத்தே ப்ராதான பையன்ஸ்|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|கன்னியாகுமரியில் ஒரு கவித|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
| கவர்ச்சி கதாப்பாத்திரம்
|-
| செப்படி வித்ய| style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|ஏர்போர்ட்|style="text-align:center; background:#93C572; textcolor:#000;"|தமிழ்
|
|-
|rowspan=4 style="text-align:center; background:#D1E231; textcolor:#000;"|1994
| தரவாடு|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|காஷ்மீரம்|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
| சுகம் சுககரம்|style="text-align:center; background:#93C572; textcolor:#000;"| மலையாளம் மற்றும் தமிழ்
|-
|பதவி|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|rowspan=2 style="text-align:center; background:#B768A2; textcolor:#000;"|1995
| தக்ஷசில
|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
| ஆவர்த்தனம்|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|rowspan=2 style="text-align:center; background:#CCCCFF; textcolor:#000;"|1996
|ஹிட்லர்|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
| அம்முவின்டே ஆங்களமார் | style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|style="text-align:center; background:#5DA493; textcolor:#000;"|1997
| சிபிரம்| style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|style="text-align:center; background:#93C572; textcolor:#000;"|1998
|ஆற்று வேல| style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| 1999
| ரிசி வம்சம்| style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|rowspan=2 style="text-align:center; background:#CCCCFF; textcolor:#000;"|2000
|சிநேகிதியே|style="text-align:center; background:#93C572; textcolor:#000;"|தமிழ்
|
|-
|புரஸ்காரம்|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|rowspan=4 style="text-align:center; background:#766EC8; textcolor:#000;"|2001
|அச்சனெயானெனிக்கிஷ்டம் |style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|காக்கா குயில்|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
| ராட்சச ராஜாவு| style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|காசி|style="text-align:center; background:#93C572; textcolor:#000;"|தமிழ்
|
|-
|style="text-align:center; background:#39A78E; textcolor:#000;"|2002
|ஆபரணசார்த்து|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|style="text-align:center; background:#30B21A; textcolor:#000;"|2007
|ராக்கிளிப்பாட்டு|style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|
|-
|style="text-align:center; background:#9ACD32; textcolor:#000;"|2011
|எகய்ன் காசர்கோடு காதர்பாய்| style="text-align:center; background:#D8B2D1; textcolor:#000;"| மலையாளம்
|-
|}
தொலைக்காட்சி
சம்பவாமி யூக் யூக் (சூர்யா தொலைக்காட்சி-தொடர்
பணம் தரும் படம்'' (மழவில் மனோரமா) -விளையாட்டு நிகழ்ச்சி
மேற்கோள்கள்
இந்தியத் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்
இந்தியத் திரைப்பட நடிகைகள்
தமிழ்த் திரைப்பட நடிகைகள்
மலையாளத் திரைப்பட நடிகைகள்
இந்தித் திரைப்பட நடிகைகள்
20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
வாழும் நபர்கள் |
685497 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | கொண்டல் சட்டமன்றத் தொகுதி | கொண்டல் சட்டமன்றத் தொகுதி (Gondal Assembly constituency) (தொகுதி வரிசை எண்:73) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி ராஜ்கோட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கீதாபா ஜெயராஜ்சிங் ஜடேஜா ஆவார்.
சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்
இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.
கொண்டல் தாலுகா - முழு தாலுகா (தாத்வா ஹமிர்பாரா, கர்மல் கோட்டா கிராமங்களைத் தவிர)
சட்டமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
குஜராத் சட்டமன்றத் தொகுதிகள் |
685498 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE | கீதாபா ஜடேஜா | கீதாபா ஜெய்ராஜ்சிங் ஜடேஜா (Geetaba Jayrajsinh Jadeja) (பிறப்பு 1968) குசராத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள கொண்டல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து குசராத்து சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2022 குசராத்து சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றார்.
இளமை
ஜடேஜா குசராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள கொண்டலைச் சேர்ந்தவர். இவர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜெய்ராஜ்சிங் ஜடேஜாவின் மனைவி ஆவார். இவர் கொண்டலில் உள்ள மோந்திபா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து 1985 =ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றார்.
அரசியல்
2022 குசராத்து சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கொண்டல் சட்டமன்றத் தொகுதியில் ஜடேஜா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 86,062 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான ஆம் ஆத்மி கட்சியின் சிவ்லால் பராசியாவை 78,864 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவர் முதலில் 2017 குசராத்து சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் கதாரியா அர்ஜுன்பாய் கன்ஷ்யம்பாயை 15,397 என்ற வித்தியாசத்தில் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
மேற்கோள்கள்
குஜராத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
வாழும் நபர்கள்
1968 பிறப்புகள் |
685500 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE | ஜெய்ராஜ்சிங் ஜடேஜா | ஜெய்ராஜ்சிங் ஜடேஜா (Jayrajsinh Jadeja) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் குசராத்து சட்டமன்றத்தில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக கொண்டலை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.
இளமை
ஜெய்ராஜ்சிங் குசராத்தி பிறந்தார். இவரது தந்தை ஜெயராஜ்சிங் தெமுபா ஜடேஜா ஒரு விவசாயி.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
குஜராத் அரசியல்வாதிகள்
குஜராத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள் |
685505 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D | ரோஸ்மா மன்சூர் | டத்தோ ஸ்ரீ ரோஸ்மா மன்சூர் (ஆங்கிலம்: Dato’ Sri Hajah Rosmah binti Mansor; சாவி: روسمه بنت منصور ) பிறப்பு: சூலை 23, 1953) என்பவர் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் அவர்களின் இரண்டாவது மனைவி ஆவார். இவரின் கணவரைப் போலவே, இவரும் ஊழலில் (1MDB) சிக்கினார்.
1 செப்டம்பர் 2022 அன்று, மலேசியா, சரவாக் கிராமப்புறப் பள்ளிகளில் சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தை நிறைவேற்றுவதில், இவர் ஊழல் செய்ததாகக் கண்டறியப்பட்டு, இவருக்கு $303 மில்லியன் அபராதம் மற்றும் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
தொடக்க கால வாழ்க்கை
ரோஸ்மா தன் இடைநிலைக் கல்வியை நெகிரி செம்பிலான் துங்கு குர்ஷியா கல்லூரியில் பெற்றார்.
ரோஸ்மா, முன்பு அப்துல் அசீஸ் நோங் சிக் (Abdul Aziz Nong Chik) என்பவரை மணந்தார். இவர்களுக்கு ரிசா அசீஸ் மற்றும் அசுரின் சோரயா (Azrene Soraya) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 1987-இல், அவர் நஜீப் ரசாக்கை மணந்தார். அவர்களுக்கு நூரியானா நசுவா (Nooryana Najwa) மற்றும் முகமட் நோராடமான் (Mohd Norashman) எனும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்; மேலும் ரோஸ்மா சிறுவயதில் இருந்தே சேமித்ததாகக் கூறி ஒரு பெரிய அளவிலான சொத்துகளையும் சேர்த்துள்ளார்.
ஊழல்
1எம்டிபி ஊழல்
நஜீப் ரசாக் ஆட்சியில் இருந்தபோது ரோஸ்மா மற்றும் அவருடைய கணவரின் ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் ஆடம்பரமான பொருட்களை வாங்கிக் குவித்த வாழ்வியல் முறை; மலேசிய மக்கள் மத்தியில் சினத்தை ஏற்படுத்தியது.
2018 மலேசியப் பொதுத் தேர்தலில் அவருடைய கணவரின் தோல்வியைத் தொடர்ந்து, இருவரும் ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவன ஊழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த விசாரணையின் மூலமாக $7.5 பில்லியன், ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் அல்லது 1எம்டிபி (1Malaysia Development Berhad) (1MDB) நிதியில் இருந்து காணாமல் போனது தெரிய வந்தது.
பயணத் தடை
12 மே 2018 அன்று, இவருடைய கணவரும் முன்னாள் பிரதமருமான நஜீப் ரசாக் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, கோலாலம்பூருக்கு அருகிலுள்ள ஒரு வானூர்தி நிலையத்திலிருந்து ஜகார்த்தாவில் உள்ள அலிம் பெர்டனகுசுமா பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு (Halim Perdanakusuma International Airport) ஒரு தனியார் வானூர்தியின் மூலமாக புறப்படத் திட்டமிட்டு இருந்தனர்.
அந்த வானூர்தியின் பயணிகளாக நஜீப் ரசாக் மற்றும் ரோஸ்மா என்று பெயரிடப்பட்டு இருந்தது. அப்போதைய பிரதமர் மகாதீர் முகமதுவின் கட்டளையின் பேரில், மலேசிய குடிவரவு துறை ரோஸ்மாவிற்கும்; அவரின் கணவர் நஜீப் ரசாக்கிற்கும்; பயணத் தடை விதித்து, அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் தடை விதித்தது.
மலேசிய காவல்துறை
2018 மே 16 முதல், 1எம்டிபி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, ரோஸ்மா மற்றும் நஜிப் ஆகிய இருவருக்கும் தொடர்புடைய ஆறு சொத்துக்களை அரச மலேசிய காவல் துறை சோதனையிட்டது.
அந்தச் சோதனையின் போது உயர் ரகக் கைப்பைகள் நிரப்பப்பட்ட 284 பெட்டிகள்; பல நாடுகளைச் சேர்ந்த பண நோட்டுகள்; போன்றவை 72 பெரிய பயண மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது; மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களையும் அரச மலேசிய காவல் துறையினர் கைப்பற்றினர்.
அமெரிக்க டாலர் US$273 மில்லியன் மதிப்பிலான பொருட்களைக் கைப்பற்றியதாக மலேசிய காவல்துறை ஆணையர் உறுதிப்படுத்தினார். மலேசிய வரலாற்றில் இதுவே மிகப்பெரிய கைப்பற்றல் என காவல்துறை விவரித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள்
12,000 வகையான நகைகள்:
2,200 மோதிரங்கள்
1,400 அட்டிகைகள்
2,100 கை வளையல்கள்
2,800 இணைக் காதணிகள்
1,600 உடை தங்க ஊசிகள்
14 தலைமுடி பாகைகள்
423 ஆடம்பர கைக்கடிகாரங்கள் (குறிப்பாக: Rolex, Chopard, Richard Mille)
234 ஆடம்பர சன்கிளாஸ்கள் (குறிப்பாக: Versace, Cartier)
72 உயர் ரக 567 ஆடம்பர கைப்பைகள் (குறிப்பாக: Chanel, Prada, Versace, Bijan, Judith Leiber)
272 கைப்பைகள் (Hermès) (Birkin)
26 வெவ்வேறு நாட்டுப் பணத் தாட்களில் மலேசிய ரிங்கிட் MYR116 மில்லியன்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
1எம்டிபி ஊழலுடன் தொடர்புடைய அவரின் கணவரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்ட பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விசாரணைக்கு உதவுவதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) ரோஸ்மாவுக்கு மூன்று முறை அழைப்பாணை விடுத்தது.
முதலாவது முறை: 5 சூன் 2018 - 5 மணிநேர விசாரணை
இரண்டாவது முறை: 26 செப்டம்பர் 2018 - 13 மணிநேர விசாரணை
மூன்றாவது முறை: 3 அக்டோபர் 2018 - அதே நாளில் அவர் கைது செய்யப்பட்டார்
பணமோசடி தொடர்பான 17 குற்றச்சாட்டுகள்
4 அக்டோபர் 2018 அன்று; பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் (Anti-Money Laundering, Anti-Terrorism and Financing and Proceeds of Unlawful Activities Act) கீழ் மலேசிய குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் மலேசிய ரிங்கிட் MYR 7 மில்லியன் சம்பந்தப்பட்ட பணமோசடி தொடர்பான 17 குற்றச்சாட்டுகளை ரோஸ்மா ஒப்புக்கொண்டார்.
மலேசிய குற்றவியல் அமர்வு நீதிமன்றம் அவருக்கு, மலேசிய ரிங்கிட் MYR2 மில்லியன் பிணையம் நிர்ணயித்தது; மற்றும் அவருடைய கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறும்; சாட்சிகள் எவரையும் அணுகக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
சரவாக் பள்ளிகளின் மின் திட்டம்
2019-ஆம் ஆண்டில், சரவாக்கில் உள்ள கிராமப்புறப் பள்ளிகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் (Solar Hybrid Power) வழங்கும் திட்டம் தொடர்பாக 18 பிப்ரவரி 2021 அன்று ரோஸ்மா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தில், தன்னை ஒப்பந்தம் செய்ய, அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த மாட்சிர் காலிட் (Mahdzir Khalid) மீது அழுத்தம் கொடுத்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
1 செப்டம்பர் 2022 அன்று, மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளில் ரோஸ்மா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மலேசிய ரிங்கிட் MYR970 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது.
ரோஸ்மாவின் கணவர் நஜீப் ரசாக், தன் 12 ஆண்டு சிறைத்தண்டனையைக் காஜாங் சிறையில் அனுபவிக்கத் தொடங்கிய ஒரு வாரத்திலேயே ரோஸ்மாவுக்கும் தண்டனை வழங்கப்பட்டது.
சர்ச்சைகள்
ரோஸ்மா ஒரு ஆடம்பரப் பிரியர் என்றும் அறியப்படுகிறது. 2012-ஆம் ஆண்டில், சிட்னி அதிவிலை விற்பனை மையத்தில், ஒரே ஒரு ஒப்பனைப் பொருள் வாங்குவதற்கு ஆஸ்திரேலிய டாலர் $100,000 (மலேசிய ரிங்கிட் MYR325,000) செலவழித்ததாகவும் அறியப்படுகிறது. "கடைவல முதல் பெண்மணி" என்றும் பெயரிடப்பட்டார்.
இவரின் இந்த ஆடம்பரமான வாழ்க்கை குறித்து மலேசிய ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது. அதைப் பற்றி விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) அழைக்கப்பட்டது. 2014 இல், ரோஸ்மா, ஹவாய், ஹொனோலுலுவில் உள்ள ஒரு கடையில் அமெரிக்க டாலர் US$130,625 மதிப்பிலான பொருட்களை வாங்கியுள்ளார். ரோஸ்மாவும் நஜிப்பும் 1எம்டிபி பணத்தில், ஒரே நாளில், அமெரிக்க டாலர் US$15 மில்லியன் பணத்தை ஆடம்பரப் பொருட்களுக்காகச் செலவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் காண்க
ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவன ஊழல்
அல்தான்தூயா சாரிபூ
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
அதிகாரபூர்வ வலைத்தளம்
1951 பிறப்புகள்
வாழும் நபர்கள்
மலேசிய முசுலிம்கள்
மலேசியப் பெண்கள்
நெகிரி செம்பிலான் மக்கள்
மலேசியப் பிரதமர்களின் மனைவிகள் |
685513 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D | தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் | தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் என்பது மாநில அளாவிலான போட்டிகளை நிர்வகிக்கும் தமிழ்நாடு மாநில விளையாட்டு அமைப்பாகும். இது சொசைட்டி பதிவுச் சட்டத்தின் கீழ் 1979 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். 1979 ஆம் ஆண்டு சிவந்தி ஆதித்தன் முதல் தலைவராகவும் ஆர். சுபராயன் செயலாளராகவும் இருந்தனர். இச்சங்கமானது இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினராகும்.
இணைக்கப்பட்ட மாநில விளையாட்டு அமைப்பு
மாநில விளையாட்டுகளின் இணைக்கப்பட்ட உறுப்பினர்கள் கீழே உள்ளனர்.
மேற்கோள்கள்
தமிழ்நாட்டில் விளையாட்டு |
685514 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D | ஒட்டக அருங்காட்சியகம் | ஒட்டக அருங்காட்சியகம் (Camel Museum) என்பது ஒட்டக இனங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் அருங்காட்சியகமாகும். இது ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாயில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் அரபு உலகின் முக்கியமான மற்றும் பாரம்பரிய வரலாற்றைக் காட்டுகிறது. துபாயில் அதிகம் பார்வையிடப்பட்ட இடங்களில் ஒன்றாக இது உள்ளது. பல்வேறு வகையான ஒட்டகங்கள் துபாயில் உள்ள ஒட்டக அருங்காட்சியகத்தில் அவற்றின் வம்சாவளி மற்றும் வரலாற்றின் படி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் ஒட்டக வரலாறு, இனங்கள், உடற்கூறியல், உள்ளிட்ட ஒட்டகங்களுடன் தொடர்புடைய பலவற்றைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். அருங்காட்சியகத்திற்கு இலவச அணுகலைப் பெற, துபாய் நகர அனுமதிச் சீட்டு வைத்திருப்பது அவசியம்.
வரலாறு
ஒட்டக அருங்காட்சியகம் 1940ஆம் ஆண்டில் அல் சிந்தகா சுற்றுப்புறத்தில் கட்டப்பட்டது. இது முன்பு "ஒட்டக-சவாரி இல்லம்" என்றும் "பீட் அல் ரெகாப்" என்றும் அழைக்கப்பட்டது. ஒட்டகச் சவாரி செய்யும் மாளிகை மறைந்த பட்டத்து இளவரசர் சேக் ரசீத் பின் சயீத் அல் மக்தூமின் சொத்தாக அறியப்படுகிறது. மேலும் இது இவரது இல்லத்திற்கு அருகில் கட்டப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கத்திய பாணிகளைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த வீடு, 664 சதுர மீட்டர் அளவில் 4.7 மீட்டர் உயரத்துடன் ஒற்றை மாடி கட்டமைப்பைக் கொண்டுள்ளது. பின்னர், இக் கட்டடம் அருங்காட்சியகமாக மாற்றப் பல புதிய அறைகள் மற்றும் வசதிகளை உள்ளடக்கியதாக வீடு விரிவுபடுத்தப்பட்டது. இந்த அருங்காட்சியகம் ஒட்டகங்களின் வரலாறு, ஒட்டக மேலாண்மையில் பயன்படுத்திய கருவிகள், ஒட்டகம் தொடர்பான தகவல்களை, கொண்ட பல பிரிவுகள் மற்றும் அரங்குகளால் ஆனது. இதில் ஒட்டக இனங்கள், உடற்கூறியல், சிகிச்சை மற்றும் பராமரிப்பு முறைகள், அத்துடன் அவற்றின் இறைச்சி, பால் மற்றும் கம்பளி ஆகியவற்றின் நன்மைகள் பற்றிய தகவல்களையும் கொண்டுள்ளது.
முக்கியத்துவம்
தற்போதைய ஒட்டக அருங்காட்சியகம், அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு முன்பு, ஒட்டகங்கள் மற்றும் குதிரைகளைப் பராமரிப்பதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட ஓர் இடமாகப் பயன்படுத்தப்பட்டது. அருங்காட்சியகமாக மாறிய பிறகு, அரபு உலகில் ஒட்டகத்தின் பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பார்வையாளர்கள் அறிந்து கொள்வதற்கான இடமாக மாற்றப்பட்டது. அரபு கலாச்சாரம் தொடர்பான ஒட்டக இலக்கியத்தின் வரலாறு, அரபு மற்றும் முஸ்லீம் உலகில் ஒட்டகங்களின் முக்கியத்துவத்தையும் இது விளக்குகிறது. பார்வையாளர்கள் பார்வையிடும்போது அருங்காட்சியகம் மற்றும் பாலைவனங்களின் மெய்நிகர் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் வகையில் நிறுவப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
ஒட்டகங்கள்
அருங்காட்சியக வகைகள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அருங்காட்சியகங்கள் |
685516 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF | மலேசிய பிரதமரின் மனைவி | மலேசியப் பிரதமரின் மனைவி (Spouse of the Prime Minister of Malaysia, மலாய்: Pasangan Perdana Menteri Malaysia) என்பவர் மலேசியப் பிரதமரின் துணைவியார் ஆவார். 1957-இல் மலேசியா விடுதலை பெற்றதிலிருந்து, இந்தப் பதவி பெண்களுக்கு மட்டுமே உரித்தானதாக உள்ளது. எனவே அவர் பிரதமரின் மனைவி என்றும் அழைக்கப்படுகிறார்.
மலேசியப் பிரதமரின் மனைவிகளைச் சிலர் "மலேசியாவின் முதல் பெண்மணி" என்று அழைக்கவும் முயற்சி செய்துள்ளனர். முதல் பெண்மணி என்பது குடியரசு நாடுகளில் பயன்படுத்தப்படும் முதல் பெண்மணியின் அழைப்பு பாணி ஆகும். ஆகவே மலேசிய பிரதமரின் மனைவி எனும் பதவி மலேசியாவில் அங்கீகரிக்கப்பட்ட பதவி அல்ல.
இன்றுவரை, பத்துப் பெண்கள் மலேசியப் பிரதமரின் மனைவி என்ற பட்டத்தை வகித்துள்ளனர்.
மலேசிய பிரதமர் மனைவியின் பங்களிப்பு
மலேசியப் பிரதமரின் மனைவி எனும் பதவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரின் பதவி அல்ல. அவருக்கு அதிகாரபூர்வமான கடமைகள் எதுவும் வழங்கப்படவில்லை. அத்துடன் ஊதியம் எதுவும் வழங்கப்படவில்லை.
இருப்பினும், மலேசியப் பிரதமரின் மனைவி என்பதற்காக அவர் செலவழிக்கும் நேரத்தையும் ஆற்றலையும் அங்கீகரிப்பதற்காக அவருக்குச் சில சலுகைகள் வழங்கப்படுகின்றன.
தொண்டுழீயப் பணிகள்
மலேசியாவின் பிரதமரின் மனைவியாக, அவர் பிரதமருடன் அல்லது அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரப்பூர்வ விழாக்கள்; மற்றும் அரசின் செயல்பாடுகளில் கலந்து கொள்கிறார். மலேசியப் பிரதமரின் மனைவியாகப் பணிபுரியும் போது, அவர் வெளியில் வேலை செய்வதற்கு தடை செய்யப்படுகிறது.
மலேசிய பிரதமரின் மனைவி மனிதாபிமான செயல்பாடுகள்; மற்றும் தொண்டுழீயப் பணிகளில் அடிக்கடி பங்கேற்பார். மலேசியப் பிரதமரின் துணைவியார் தொண்டுழீய அமைப்புகளை உருவாக்குவதும்; தொண்டுழீய நடவடிக்கைகளுக்கு ஆதரவாக ஊழியர்களை நியமிப்பதும் வழக்கமாகும்.
மலேசிய பிரதமர்களின் மனைவியர் பட்டியல்
அகவை வாரியாக மலேசியப் பிரதமர்களின் மனைவியர்
மேலும் காண்க
நூருல் இசா அன்வார்
ரோஸ்மா மன்சூர்
வான் அசிசா வான் இசுமாயில்
மலாய் பாணியிலான விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
685517 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | நாந்தேட் தெற்கு சட்டமன்றத் தொகுதி | நாந்தேட் தெற்கு சட்டமன்றத் தொகுதி (Nanded South Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி நாந்தேட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது நாந்தேடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். 2008 இல் தொகுதியின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
685521 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF | லோகா சட்டமன்றத் தொகுதி | லோகா சட்டமன்றத் தொகுதி என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது இலாத்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். இது நாந்தேட் மாவட்டத்தில் உள்ளது. 2008 இல் நிறுவப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2024
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இந்திய தேர்தல் ஆணையம்
மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் |
685525 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F | கொடுமுண்ட | கொடுமுண்ட (Kodumunda) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி வட்டத்தில் உள்ள முத்துதாலா மற்றும் பருதூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூராகும். இது முத்துதால ஊராட்சியில் உள்ள ஒரு சிறு வணிக மையமாகும். பருதூர் ஊராட்சியில் உள்ள கொடுமுண்டா பகுதிகள் மேற்கு கொடுமுண்டா என அழைக்கப்படுகிறது. முத்தாலாவில் உள்ள ஒரே தொடருந்து நிலையம் கொடுமுண்டாவில் அமைந்துள்ளது. இங்கு குறிப்பிடத்தக்க கோயில்களாக, முத்தச்சியர்காவு, செருநீர்க்கரை சிவன் கோயில், மண்ணியம்பத்தூர் சரசுவதி கோயில், மடயில் லட்சுமிநரசிம்மர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன. இக்கிராமத்தில் முத்தச்சியர்காவு தாளப்பொலியும், கொடுமுண்டா நேர்ச்சையும் முக்கிய திருவிழாக்களாகும்.
புவியியல்
கொடுமுண்டா இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதுதல ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி கிழக்கு கொடுமுண்டா (மலையாளத்தில் கிழக்கே கொடுமுண்டா) என்றும், மற்றொரு பகுதியாக, பருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியானது மேற்கு கொடுமுண்டா (மலையாளத்தில் பதின்ஹரே கொடுமுண்டா) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு பகுதிகளும் தொடருந்து பாதையால் பிரிக்கப்பட்டுள்ளன. கிராமத்தின் உள்கட்டமைப்பு இரண்டு பிரிவுகளுக்கும் தனித்தனியே உருவாக்கபட்டுள்ளதன.
அரசியல்
கொடுமுண்டாவின் கிழக்குப் பகுதி பட்டாம்பி சட்டமன்றத் தொகுதிக்கும் பாலக்காடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மேற்கு கொடுமுண்டா, பொன்னானி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட திரித்தாலாவில் உள்ளது.
வழிபாட்டுத் தலங்கள்
கொடுமுண்டாவில் பல கோயில்களும், பள்ளிவாசல்களும் உள்ளன. கொடுமுண்டாவில் உள்ள முக்கியமான கோயில்களில் ஒன்று நெடுங்கநாடு முத்தச்சியர்காவு ஆகும். மேற்கு கொடுமுண்டாவில் அமைந்துள்ள மணியம்பத்தூர் சரஸ்வதி கோயில் மலபாரில் உள்ள ஒரே சரசுவதி கோயிலாகும். கொடுமுண்டா ஜும்ஆ பள்ளிவாசல் மேற்கு கொடுமுண்டா ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியவை இங்கு உள்ள முக்கியமான பள்ளிவாசல்களாகும். முத்தச்சியர்காவு தாளப்பொலி, வளவில் கசேத்திர (செருநீர்க்கரை சிவன் கோவில்) சிவராத்திரி கொடுமுண்டாவின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாகும். இது ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. கொடுமுண்டா நேர்ச்சை இப்பகுதியில் மற்றொரு முக்கிய திருவிழாவாக கருதப்படுகிறது.
கல்வி
கொடுமுண்டா அருகே ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. முத்துதால ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இது பருதூர் ஊராட்சியில் அமைந்துள்ளது. ஜி.எச்.எஸ். அரசுப் பள்ளியானது மேற்கு கொடுமுண்டாவில் அமைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் கொடுமுண்டாவில் தொடக்கக் கல்வியை வழங்கும் இரண்டு கல்வி நிறுவனங்களும் உள்ளன.
நலவாழ்வு
முத்துதால ஊராட்சிக்கு உட்பட்ட கொடுமுண்டாவில் அரசு ஆயுர்வேத மருந்தகம் உள்ளது. கொடுமுண்டாவில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் முத்துதால அரசு மருத்துவமனை உள்ளது. மேல் சிகிச்சைக்காக மக்கள் பட்டாம்பி செல்கின்றனர்.
போக்குவரத்து
நீர்வழிகள்
பாரதப்புழா ஆற்றின் வழியாக வர்த்தக போக்குவரத்து இருந்தது. வரந்தகுட்டிக்கடவு என்பது திரிதலையும் கொடுமுண்டாவையும் இணைக்கும் படகு மையமாகும். இப்போது நீர்வழி போக்குவரத்து வசதி இல்லை. 2000 ஆம் ஆண்டு வரை, சிறிய படகுகள் மற்றும் பெரிய படகுகள் இந்த பகுதியில் ஒரு பொதுவான போக்குவரத்து சாதனமாக இருந்தன.
சாலை
இந்த ஊரனது பட்டாம்பியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பட்டாம்பி-பள்ளிப்புரம் சாலையில் அமைந்துள்ளது. இந்த ஊரை சாலை அல்லது தொடருந்து மூலம் அடையலாம். இதன் வழித்தடத்தில் கொடுமுண்டா முக்கியமான இடமாகும். பட்டாம்பி - பள்ளிப்புரம், பட்டாம்பி - வளஞ்சேரி (கொடுமுண்டா- முத்துதாலா வழியாக), மற்றும் பட்டாம்பி - கொப்பம் (கொடுமுண்டா- முத்துதாலா வழியாக) செல்லும் பேருந்துகள் கொடுமுண்டா வழியாக செல்கின்றன, இருப்பினும் மேற்கு கொடுமுண்டாவை இந்த பேருந்து தடம் வழியாக அடைய முடியாது. ஆனால் தீரதேசம் சாலையில் செல்லும் பட்டாம்பி-பள்ளிப்புரம் பேருந்து, மேற்கு கொடுமுண்டாவுக்கு பேருந்து வசதியை வழங்குகிறது.
தொடருந்து
கொடுமுண்டா என்பது முத்துதாலாவில் உள்ள ஒரே தொடருந்து நிலையம் ஆகும், இது ஷோரனூர்-கோழிக்கோடு இருப்புப் பாதையில் கோழிக்கோடு செல்லும் வழியில் உள்ளது. ஒரு சில பயணிகள் வண்டிகள் மட்டுமே இந்த நிலையத்தில் நிற்கின்றன. எனவே கொடுமுண்டாவை அடைய விரும்பத்தக்க வழியாக சாலை வழியே உள்ளது. பெரும்பாலான தொடருந்துகள் நிற்கும் முக்கிய தொடருந்து நிலையமாக பட்டாம்பி உள்ளது.
அருகிலுள்ள நகரங்களும் முக்கியமான புறநகர்ப் பகுதிகளும்
பட்டாம்பி
கருவன்பாடி
பள்ளிப்புரம்
திரித்தாலா
கொப்பம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Muthuthala - Election Details
பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata |
685528 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81 | பொட்டாசியம் டைகுரோமேட்டு | பொட்டாசியம் டைகுரோமேட்டு (Potassium dichromate) என்பது K2Cr2O7 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது ஒரு பொதுவான கனிம வேதியியல் வினையாக்கியாகக் கருதப்படுகிறது. பொதுவாக பல்வேறு ஆய்வகங்கள் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளில் ஓர் ஆக்சிசனேற்ற முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து ஆறு இணைதிற குரோமியம் சேர்மங்களைப் போலவே, இதுவும் கடுமையான மற்றும் நீண்டகால ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பிரகாசமான, சிவப்பு-ஆரஞ்சு நிறத்துடன் பொட்டாசியம் டைகுரோமேட்டு ஒரு படிக அயனி திண்மப்பொருளாகக் காணப்படுகிறது. இந்த உப்பு ஆய்வகங்களில் பிரபலமாக பயன்பாட்டில் உள்ளது. ஏனெனில் இது நீருறிஞ்சாது. தொழில்துறை ரீதியாக தொடர்புடைய உப்பான சோடியம் டைகுரோமேட்டிற்கு மாற்றாக இது பயன்படுத்தப்படுகிறது.
வேதியியல்
தயாரிப்பு
பொதுவாக சோடியம் டைகுரோமேட்டுடன் பொட்டாசியம் குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பொட்டாசியம் டைகுரோமேட்டு உருவாகும். மாற்றாக, பொட்டாசியம் ஐதராக்சைடுடன் குரோமைட்டு தாதுவை வறுத்து பொட்டாசியம் குரோமேட்டிலிருந்தும் பெறலாம். இது தண்ணீரில் கரையும். கரைக்கும் செயல்பாட்டில் இது அயனியாக்கம் செய்கிறது:
K2Cr2O7 → 2 K+ + Cr2O2−7
Cr2O2−7 + H2O ⇌ 2 CrO2−4 + 2 H+
வினைகள்
பொட்டாசியம் டைகுரோமேட்டு கரிம வேதியியலில் ஓர் ஆக்சிசனேற்றம் செய்யும் முகவராகும். இது பொட்டாசியம் பெர்மாங்கனேட்டை விட இலேசானது. ஆல்ககால்களை ஆக்சிசனேற்றம் செய்யப் பயன்படுகிறது. முதன்மை ஆல்ககால்களை ஆல்டிகைடுகளாகவும், அதிக கட்டாய நிலைமைகளின் கீழ், கார்பாக்சிலிக் அமிலங்களாகவும் மாற்றுகிறது. இதற்கு மாறாக, பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு கார்பாக்சிலிக் அமிலங்களை ஒரே தயாரிப்பாகக் கொடுக்க முனைகிறது. இரண்டாம் நிலை ஆல்ககால்கள் கீட்டோன்களாக மாற்றப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, அமிலமயமாக்கப்பட்ட டைகுரோமேட்டுடன் மெந்தோலைச் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் மெந்தோன் தயாரிக்கப்படுகிறது. மூன்றாம் நிலை ஆல்ககால்களை ஆக்சிசனேற்றம் செய்ய முடியாது.
ஒரு நீரிய கரைசலில், ஆல்டிகைடுகளை கீட்டோன்களிலிருந்து வேறுபடுத்துவதை சோதிக்க, காட்சிப்படுத்தப்படும் வண்ண மாற்றத்தைப் பயன்படுத்தலாம். ஆல்டிகைடுகள் டைகுரோமேட்டை +6 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலிருந்து +3 என்ற ஆக்சிசனேற்ற நிலைக்கு குறைத்து, ஆரஞ்சு நிறத்தில் இருந்து பச்சை நிறமாக மாறும். ஆல்டிகைடு தொடர்புடைய கார்பாக்சிலிக் அமிலத்திற்கு ஆக்சிசனேற்றம் செய்யப்படுவதால் இந்த நிற மாற்றம் ஏற்படுகிறது. ஒரு கீட்டோன் அத்தகைய மாற்றத்தைக் காட்டாது, ஏனெனில் அதை மேலும் ஆக்சிசனேற்ற முடியாது. எனவே கரைசல் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
வலுவாக சூடுபடுத்தும் போது, ஆக்சிசன் வெளியேற்றத்துடன் இது சிதைகிறது.
4 K2Cr2O7 → 4 K2CrO4 + 2 Cr2O3 + 3 O2
டைகுரோமேட்டு அயனிகளைக் கொண்ட ஆரஞ்சு-சிவப்பு கரைசலில் காரம் சேர்க்கப்படும்போது, குரோமேட்டு அயனிகள் (CrO2−4) உருவாவதால் மஞ்சள் நிறக் கரைசல் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, பொட்டாசியம் குரோமேட்டு சேர்மம் பொட்டாசைப் பயன்படுத்தி தொழில்துறையில் உற்பத்தி செய்யப்படுகிறது:
K2Cr2O7 + K2CO3 → 2 K2CrO4 + CO2
இதுவொரு மீள்வினையாகும்.
குளிர்ந்த கந்தக அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்தும்போது குரோமிக் நீரிலியின் சிவப்பு நிறப் படிகங்கள் உருவாகின்றன. (குரோமியம் மூவாக்சைடு, CrO3):
K2Cr2O7 + 2 H2SO4 → 2 CrO3 + 2 KHSO4 + H2O
செறிவூட்டப்பட்ட அமிலத்துடன் சேர்த்து சூடாக்கும்போது, ஆக்சிசன் வெளிப்படுகிறது.
K2Cr2O7 + 8 H2SO4 → 2 K2SO4 + 2 Cr2(SO4)3 + 8 H2O + 3 O2
பயன்கள்
சோடியம் உப்பு தொழில்துறையில் ஆதிக்கம் செலுத்துவதால் பொட்டாசியம் டைகுரோமேட்டு சில முக்கிய பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இதன் முக்கியப் பயன்பாடானது, பொட்டாசியம் குரோம் படிகாரம் தயாரிப்பதற்கான முன்னோடியாக திகழ்வதாகும். பொட்டாசியம் டைகுரோமேட்டு தோல் பதனிடுதலில் பயன்படுத்தப்படுகிறது.
துப்புரவு
குரோமியம் மூவாக்சைடு, சோடியம் டைகுரோமேட்டு போன்ற மற்ற குரோமியம்(VI) சேர்மங்களைப் போலவே பொட்டாசியம் டைகுரோமேட்டும் கண்ணாடிப் பொருட்கள் மற்றும் செதுக்கல் பொருட்களை சுத்தம் செய்வதற்கான குரோமிக் அமிலம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆறு இணைதிறன் குரோமியத்துடன் தொடர்புடைய பாதுகாப்புக் கவலைகள் காரணமாக, இந்த நடைமுறை பெரும்பாலும் நிறுத்தப்பட்டது.
கட்டுமானத் தொழிலில்
பொட்டாசியம் டைகுரோமேட்டு சிமெண்டில் ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. சிமெண்டு கலவையின் அமைப்பைத் தாமதப்படுத்துவதன் மூலம் அதன் அடர்த்தி மற்றும் கட்டமைப்பை மேம்படுத்துகிறது. இந்த பயன்பாடு பொதுவாக கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தொடர்பு தோல் அழற்சியை ஏற்படுத்துகிறது.
புகைப்படம் மற்றும் அச்சிடுதல்
1839 ஆம் ஆண்டில், கண்டுபிடிப்பாளர் முங்கோ பாண்டன், பொட்டாசியம் டைகுரோமேட்டு கரைசலுடன் சுத்திகரிக்கப்பட்ட காகிதத்தை பதப்படுத்துபோது சூரிய ஒளியின் வெளிப்பாட்டின் மூலம் பழுப்பு நிறமாகத் தெரியும். பொட்டாசியம் டைக்ரோமேட்டைக் கழுவிய பிறகும் மீதமுள்ள நிறமாற்றம் தெரியும். 1852 ஆம் ஆண்டில், என்றி ஃபாக்சு தால்போட்டு, பொட்டாசியம் டைகுரோமேட்டின் முன்னிலையில் புற ஊதா ஒளியின் வெளிப்பாடு செலட்டின் மற்றும் அரபிப் பிசின் போன்ற கடினப்படுத்தப்படும் கரிம கூழ்மங்களைக் கண்டுபிடித்தார். இதனால் அவை குறைவாக கரையக்கூடியவையாகின்றன.
இந்த கண்டுபிடிப்புகள் விரைவில் கார்பன் அச்சு, பசை பைகுரோமேட்டு செயல்முறை மற்றும் வேறுபாட்டு அளவு கடினப்படுத்துதல் அடிப்படையில் புகைப்பட அச்சிடும் செயல்முறைகளுக்கு வழிவகுத்தன. பொதுவாக, வெளிப்பாட்டிற்குப் பிறகு, கடினப்படுத்தப்படாத பகுதியை வெதுவெதுப்பான நீரில் கழுவி வெளியேற்றலாம். உற்பத்தியின் போது சேர்க்கப்பட்ட நிறமி அல்லது பின்னர் ஒரு சாயத்தால் கறைபட்ட ஒரு மெல்லிய புடைப்பு எஞ்சும். சில செயல்முறைகள் கடினமான அல்லது கடினப்படுத்தப்படாத பகுதிகளால் சில சாயங்களின் வேறுபட்ட உறிஞ்சுதலுடன் இணைந்து, கடினப்படுத்துதலை மட்டுமே சார்ந்துள்ளது. இந்த செயல்முறைகள் கார்பன் கருப்பு போன்ற சில நிலையான சாயங்கள் மற்றும் நிறமிகளைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன. மிக உயர்ந்த அளவிலான காப்பக நிரந்தரத்தன்மை மற்றும் ஒளியின் நீண்டகால வெளிப்பாட்டினால் மங்குவதற்கான எதிர்ப்பைக் கொண்ட அச்சுகள் உருவாகின்றன.
டைகுரோமேட்டேற்ற கூழ்மங்கள் பல்வேறு தொழில்துறை பயன்பாடுகளில் ஒளிதடைகளாகப் பயன்படுத்தப்பட்டன. மிகவும் பரவலாக ஒளி இயங்கியல் அச்சிடும் செயல்முறைகளில் பயன்படுத்தப்படும் உலோக அச்சிடும் தகடுகளை உருவாக்குகிறது.
பகுப்பாய்வு வினையாக்கி
பொட்டாசியம் டைகுரோமேட்டு ஒரு நீருறிஞ்சும் சேர்மம் அல்லாததால், பகுப்பாய்வு வேதியியலில் பாரம்பரியமாக ஈரமான சோதனைகளில் ஒரு பொதுவான வினையாக்கியாகப் பயன்படுகிறது.
எத்தனால் தீர்மானித்தல்
ஒரு மாதிரியில் உள்ள எத்தனாலின் செறிவை அமிலப்படுத்தப்பட்ட பொட்டாசியம் டைகுரோமேட்டுடன் பின் தரம்பார்த்தல் மூலம் தீர்மானிக்க முடியும். அதிகப்படியான பொட்டாசியம் டைகுரோமேட்டுடன் மாதிரியை சேர்த்து வினைபுரியச் செய்யும் போது, அனைத்து எத்தனாலும் அசிட்டிக் அமிலமாக ஆக்சிசனேற்றம் செய்யப்படுகிறது:
CH3CH2OH + 2[O] → CH3COOH + H2O
எத்தனாலை அசிட்டிக் அமிலமாக மாற்றும் முழுவினை கீழ்கண்டவாறு அமைகிறது.
3 C2H5OH + 2 K2Cr2O7 + 8 H2SO4 → 3 CH3COOH + 2 Cr2(SO4)3 + 2 K2SO4 + 11 H2O
அதிகப்படியான டைகுரோமேட்டு சோடியம் தயோசல்பேட்டுக்கு எதிரான தரம்பார்த்தல் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. ஆரம்ப அளவுடன் அதிகப்படியான டைகுரோமேட்டின் அளவைச் சேர்த்தால், எத்தனாலின் அளவு கிடைக்கிறது. டைகுரோமேட்டு கரைசலை வெற்றுக்கு எதிராக அளவீடு செய்வதன் மூலம் துல்லியத்தை மேம்படுத்தலாம்.
இந்த வினைக்கான ஒரு முக்கிய பயன்பாடு பழைய காவல்துறை ஆல்ககால் மீட்டர் சோதனைக் கருவிகளில் உள்ளது. ஆரஞ்சு நிற டைகுரோமேட்-பூசிய படிகங்களுடன் ஆல்ககால் ஆவி தொடர்பு கொள்ளும்போது, Cr(VI) ஆரஞ்சு நிறத்தில் இருந்து Cr(III) பச்சை நிறமாக மாறும். வண்ண மாற்றத்தின் அளவு சந்தேகப்படும் நபரின் சுவாசத்தில் உள்ள ஆல்ககால் அளவோடு நேரடியாக தொடர்புடையதாகும்.
வெள்ளி சோதனை
தோராயமாக 35% நைட்ரிக் அமிலக் கரைசலில் கரைக்கப்படும் போது இது சுவெர்டர் கரைசல் என்று அழைக்கப்படுகிறது. இக்கரைசல் பல்வேறு உலோகங்களின் இருப்பை சோதிக்கப் பயன்படுகிறது. குறிப்பாக வெள்ளியின் தூய்மையைக் கண்டறிய இக்கரைசல் பயன்படுகிறது. தூய வெள்ளி இக்கரைசலை பிரகாசமான சிவப்பு நிறமாகவும், மாற்றுக்குறையாத வெள்ளி இக்கரைசலை அடர் சிவப்பு நிறமாகவும், தாமிரம் கலந்த குறைந்த தர நாணய வெள்ளி பழுப்பு நிறமாகவும், 0.500 வெள்ளி கரைசலை பச்சை நிறமாகவும் மாற்றும். பித்தளை இக்கரைசலை அடர் பழுப்பு நிறமாகவும், தாமிரம் பழுப்பு நிறமாகவும், ஈயம் மற்றும் வெள்ளீயம் இரண்டும் மஞ்சள் நிறமாகவும் மாற்றுகின்றன. தங்கம் மற்றும் பலேடியம் நிறம் மாறாது.
கந்தக டை ஆக்சைடு சோதனை
பொட்டாசியம் டைகுரோமேட்டு தாளை கந்தக டை ஆக்சைடை சோதிக்க பயன்படுத்தப்படலாம். ஏனெனில் இது ஆரஞ்சு நிறத்தில் இருந்து பச்சை நிறமாக மாறுகிறது. இவ்வினையில் ஆறிணைதிற குரோமியம் மூவிணைதிற குரோமியமாக குறைக்கப்படும். அனைத்து ஆக்சிசனேற்ற ஒடுக்க வினைகளுக்கும் இது பொதுவானது. எனவே, இது கந்தக டை ஆக்சைடுக்கான உறுதியான சோதனை அல்ல. வினையில் உருவாக்கப்படும் இறுதி விளைபொருள் Cr2(SO4)3 ஆகும்.
SO2 + K2Cr2O7 + 3H2SO4 → K2SO4 + Cr2(SO4)3 + 3 H2O
மரம் பதப்படுத்தல்
பொட்டாசியம் டைகுரோமேட்டு மரங்களில் உள்ள டானின் என்ற நிறமற்ற படிகப் பொருள்களை கருமையாக்குவதன் மூலம் சில வகையான மரங்களை கறைப்படுத்த பயன்படுகிறது. இது நவீன வண்ண சாயங்களால் அடைய முடியாத ஆழமான, அதிக பழுப்பு நிறத்தை உருவாக்குகிறது. சீமைத் தேக்கிற்கு குறிப்பாக இது பயனுள்ள சிகிச்சையாகும்.
இயற்கைத் தோற்றம்
பொட்டாசியம் டைகுரோமேட்டு இயற்கையாகவே அரிய கனிம லோபசைட்டாகத் தோன்றுகிறது. சிலியின் அட்டகாமா பாலைவனத்தின் நைட்ரேட்டு படிவுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவின் புசுவெல்ட் பற்றவைப்பு வளாகத்தில் உள்ள பாறையிடுக்குகளில் மட்டுமே தோன்றுகிறது.
பாதுகாப்பு
2005-06 ஆம் ஆண்டில், பொட்டாசியம் டைகுரோமேட்டு திட்டுச் சோதனையில் (4.8%) 11- ஆவது-மிகப் பரவிய ஒவ்வாமையாக இருந்தது.
பொட்டாசியம் டைகுரோமேட்டு குரோமியம் தோல் அழற்சியின் பொதுவான காரணங்களில் ஒன்றாகும். குறிப்பாக கை மற்றும் முன்கைகள் குரோமியம் தோலழற்சிக்கு வழிவகுக்கும் உணர்திறனைத் தூண்டும். இது நாள்பட்டது மற்றும் சிகிச்சையளிப்பதும் கடினம். முயல்கள் மற்றும் கொறித்துண்ணிகள் ஆகியவற்றை முன்வைத்த நச்சுயியல் ஆய்வுகள் இதன் அதிக நச்சு தன்மையை மேலும் விளக்கியுள்ளன. 14 மி.கி./கி.கி.க்கும் குறைவான செறிவுகள் சோதனைக் குழுக்களிடையே 50% இறப்பு விகிதத்தைக் காட்டியுள்ளன. நீர்வாழ் உயிரினங்களில் பொட்டாசியம் டை குரோமேட்டு வெளிப்பட்டால் பாதிக்கப்பு அடைகின்றன. எனவே உள்ளூர் சுற்றுச்சூழல் விதிமுறைகளின்படி இவற்றை பொறுப்பாக அகற்றுதல் அறிவுறுத்தப்படுகிறது.
மற்ற Cr(VI) சேர்மங்களைப் போலவே, பொட்டாசியம் டைகுரோமேட்டும் புற்றுநோயை உண்டாக்கும். இச்சேர்மம் அரிக்கும் தன்மை கொண்டது மற்றும் வெளிப்பாடு கடுமையான கண் பாதிப்பு அல்லது குருட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம். மனிதர்கள் மீது வெளிப்பாடு மேலும் பலவீனமான கருவுறுதலுக்கு காரணமாகிறது.
டைகுரோமேட்டேற்ற கூழ்மங்கள் பல்வேறு தொழில்துறை பயன்பாடுகளில் ஒளிதடைகளாகப் பயன்படுத்தப்பட்டன. மிகவும் பரவலாக ஒளி இயங்கியல் அச்சிடும் செயல்முறைகளில் பயன்படுத்தப்படும் உலோக அச்சிடும் தகடுகளை உருவாக்குகிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Potassium Dichromate at The Periodic Table of Videos (University of Nottingham)
International Chemical Safety Card 1371
National Pollutant Inventory – Chromium VI and compounds fact sheet
NIOSH Pocket Guide to Chemical Hazards
IARC Monograph "Chromium and Chromium compounds"
Gold refining article listing color change when testing metals with Schwerter's Solution
பொட்டாசியம் சேர்மங்கள்
டைகுரோமேட்டுகள்
ஆக்சிசனேற்றிகள்
ஒளிப்படக்கலை வேதிப்பொருட்கள்
புற்றுநோய்க்காரணிகள் |
685529 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D | துபாய் காப்பி அருங்காட்சியகம் | துபாய் காப்பி அருங்காட்சியகம் (Dubai Coffee Museum) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் பாசுதாகியா வரலாற்றுச் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள காப்பி பற்றிய அருங்காட்சியகமாகும். இது காப்பியின் வரலாறு, காப்பி கலாச்சாரம் மற்றும் காப்பி தோட்டத் தொழிலாளர்களின் பணி நிலைமைகள் குறித்து கவனம் செலுத்துகிறது.
இது உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களில் காபியின் முக்கியத்துவம், அரபு மரபுகள், காப்பிக் கொட்டைகளை வறுத்தல், அரைத்தல் போன்ற காப்பி தயாரிப்பில், காலப்போக்கில் பயன்படுத்தப்பட்ட கருவிகள் மற்றும் உலகளவில் காணப்படும் காப்பிக் கொட்டைகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது. இந்த அருங்காட்சியகம் இரண்டு தளங்களில் அமைக்கப்பட்டுள்ளது. தரை தளத்தில் ஓர் அருங்காட்சியகக் கடை உள்ளது.
கண்காட்சிகள்
தரை தளத்தில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த காப்பிக் கொட்டைகளை வறுக்கவும், காப்பி வடிகட்டிகளும், காப்பி தொடர்பான பழங்காலப் பொருட்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. தரைவிரிப்புகள், தல்லாக்கள் மற்றும் தலையணைகள் நிறைந்த ஒரு மறுசீரமைக்கப்பட்ட மஜ்லிஸ் அறை பாரம்பரிய அமீரகப் பாணி காபி நுகர்வு பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. மேலும், காப்பி செடியின் வரலாற்றினை இங்கு அறிந்து கொள்ளலாம்.
முதல் மாடியில் காப்பி, காப்பி தோட்டத் தொழிலாளர்களின் உலகளாவிய வரலாறு குறித்து 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரந்த அளவிலான காப்பி புத்தகங்கள் மற்றும் வரைபடங்களைக் கொண்ட ஓர் இலக்கியப் பிரிவும் உள்ளது. காப்பிக் கொட்டைத் தேர்வு முதல் வறுத்தல் வரை முழுச் செயல்முறையையும், ஒவ்வொரு காப்பி கலாச்சாரத்திற்கும் தனித்துவமான காப்பி தயாரிப்பு நுட்பங்களையும் பார்வையாளர்கள் அறிந்து கொள்ளலாம்.
படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
அதிகாரப்பூர்வ இணையதளம்.
Coordinates on Wikidata
காப்பி
அருங்காட்சியக வகைகள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அருங்காட்சியகங்கள் |
685534 | https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF | சித்தி அஸ்மா முகமட் அலி | துன் சித்தி அஸ்மா முகமட் அலி (ஆங்கிலம்: Tun Dr. Siti Hasmah binti Haji Mohamad Ali; சாவி: سيتي حسمه بنت محمد علي ) பிறப்பு: 12 ஜூலை 1926) என்பவர் மலேசியாவின் 4-ஆவது; 7-ஆவது பிரதமர் மகாதீர் முகமது அவர்களின் மனைவி; மற்றும் மலேசிய பல்லூடக பல்கலைக்கழகத்தின் (Multimedia University) வேந்தரும் ஆவார்.
இவர் சூலை 1981 முதல் அக்டோபர் 2003 வரையிலும்; மே 2018 முதல் மார்ச் 2020 வரையிலும்; ஏறக்குறைய 24 ஆண்டுகள் மலேசியப் பிரதமரின் மனைவியாக உள்ளார். இவர்
மலேசியப் பிரதமரின் மனைவியாக வாழ்பவர்களில் மிகவும் வயதானவராகவும் அறியப்படுகிறார். தற்போது இவரின் வயது 98.
தொடக்க கால வாழ்க்கை
சித்தி அஸ்மா முகமட் அலி 1926-ஆம் ஆண்டு சூலை 12-ஆம் தேதி சிலாங்கூர், கிள்ளான் நகர்ப்பகுதியில் பிறந்தார். அவர் நெகிரி செம்பிலானைச் சேர்ந்த மினாங்கபாவ் வம்சாவளியைச் சேர்ந்தவர்.
அவர் கோலாலம்பூர் செயின்ட் மேரி பள்ளியில் (SMK St. Mary) தம் உயர்நிலைக் கல்வியைப் பெற்றார். பின்னர் சிங்கப்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் தம் எம்பிபிஎஸ் பட்டத்தைப் பெற்றார்.
சிங்கப்பூர் கிங் எட்வர்ட் VII மருத்துவக் கல்லூரி
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சிங்கப்பூரில் உள்ள கிங் எட்வர்ட் VII மருத்துவக் கல்லூரியில் (King Edward VII College of Medicine) (தற்போது யோங் லூ லின் மருத்துவப் பள்ளி) (Yong Loo Lin School of Medicine) மருத்துவப் படிப்பிற்குச் சேர்ந்த முதல் மலாய்ப் பெண்களில் துன் சித்தி அஸ்மா முகமட் அலியும் ஒருவர் ஆவார்.
1955-இல் அவர் அப்போது சிங்கப்பூரில் இருந்த மலாயா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் அரசு சுகாதாரப் பணியில் சேர்ந்தார். அப்போதைய மலாயாவின் முதல் மலாய்ப் பெண் மருத்துவர்களில் இவரும் ஒருவர் ஆகும்.
மிச்சிகன் பல்கலைக்கழகம்
அடுத்த 1956-ஆம் ஆண்டு ஆகத்து மாதம் அவர் மகாதீர் முகமதுவை மணந்தார். இவர்களுக்கு மரினா மகாதீர், மிர்சான், மெலிண்டா, மொக்சானி மகாதீர், முக்ரிஸ் மகாதீர், மைசுரா மற்றும் மசார் என ஏழு பிள்ளைகள் உள்ளனர்.
1966-ஆம் ஆண்டில், மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரப் பள்ளியில் (School of Public Health, University of Michigan) பொது சுகாதார உயர்க்லவியைப் பெற்றார்.[5]
கெடா மாநிலத்தின் தாய் மகவு சுகாதார அதிகாரி
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, தாய் மற்றும் குழந்தைகள் நலத் துறையில் மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆனார். மேலும் 1974-ஆம் ஆண்டில், மலேசியாவின் கெடா மாநிலத்தின் தாய் மற்றும் மகவு சுகாதார அதிகாரியாக (State Maternal and Child Health Officer) நியமிக்கப்பட்ட முதல் பெண்மணியும் ஆவார்.
இவர் குடும்ப மருத்துவம் மற்றும் மலேசியாவில் கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்புடன் தொடர்புடைய சமூக பொருளாதார காரணிகள் பற்றிய பல கட்டுரைகளின் ஆசிரியரும் ஆவார்.
சித்தி அஸ்மா ஒரு பூனைப் பிரியர் மற்றும் இசை ஆர்வலர்.
சமூக பங்களிப்புகள்
பெண்களின் உடல்நலம், குடும்பக் கட்டுப்பாடு, போதைப்பொருள் முறைகேடுகள்; மற்றும் முதியவர்களுக்கான கல்வியறிவு ஆகியவற்றிற்காக அயராது பரப்புரைகள் செய்ய பிரதமரின் மனைவி என்ற பதவியைப் பயன்படுத்தினார். பல்வேறு பதவிகளிலும் பணியாற்றி உள்ளார்.
பக்தி (BAKTI) எனும் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் மனைவிகளின் நலன்புரி சங்கத்தின் (Welfare Club of the Wives of Ministers and Deputy Ministers) தலைவராக சித்தி அசுமா முகமட் அலி சேவை செய்துள்ளார். போதைப்பொருள் துர்ப்பயன்பாட்டின் ஆபத்துகள் குறித்து இளைஞர்களுக்கு கருத்துரை வழங்கும் முயற்சிகளில் தீவிரமாக இருந்தார்.
வியன்னா மாநாட்டில் மலேசியப் பிரதிநிதி
1985-ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்காவின் முதல் பெண்மணி நான்சி ரேகனின் அழைப்பின் பேரில், வாஷிங்டன் மாநகரில் நடந்த போதைப்பொருள் முறைகேடுகள் குறித்த முதல் பெண்மணிகள் மாநாட்டில் கலந்து கொண்டார்.
1987-ஆம் ஆண்டு வியன்னாவில் நடந்த போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் சட்டவிரோத கடத்தல் தொடர்பான பன்னாட்டு மாநாட்டிலும் மலேசியாவைப் பிரதிநிதித்தார்.
சித்தி அஸ்மா முகமட் அலி, பன்னாட்டு அளவில் கிராமப்புற பெண்களுக்கான பொதுநலன்களை ஊக்குவிப்பதிலும் தீவிரமாக இருந்தார். பல பன்னாட்டு மாநாடுகளில் மலேசியப் பெண்களைப் பிரதிநிதித்துள்ளார்.
விருதுகள் அங்கீகாரங்கள்
அவரது வாழ்நாள் முழுவதும் பொது சேவைகளில் தீவிரம் காட்டியுள்ளார். அவரின் தன்னார்வப் பணிகள் மற்றும் பொது நலப் பண்புகள், பெண்களுக்கான கல்வியறிவு விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் முறைகேடு போன்ற செயல்பாடுகளில் அவரின் அயராத சேவைகளுக்காக, சித்தி அஸ்மா முகமட் அலி பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
1988 - பொது சுகாதாரத்திற்கான ஆசியா பசிபிக் கூட்டமைப்பு; கசுவே மெக்லாரன் விருது (Kazue McLaren Award; Asia Pacific Consortium for Public Health)
1991 - மலேசிய தேசிய பல்கலைக்கழகம்; மருத்துவ அறிவியல் துறை; கௌரவ டாக்டர் பட்டம் (Honorary Doctorate in Medical Science)
1992 - அயர்லாந்து அரச மருத்துவக் கல்லூரி; பொது சுகாதாரத் துறை; கெளரவ டாக்டர் பட்டம் (Royal College of Physicians, Ireland Honorary Doctorate in Public Health)
199 4 - இந்தியானா பல்கலைக்கழகம், புளூமிங்டன்; மனிதநேய கௌரவ டாக்டர் பட்டம் (Indiana University, Bloomington; Honorary Doctorate of Humane Letters)
199 4 - கனடா கொலம்பியா விக்டோரியா பல்கலைக்கழகம்; கௌரவ டாக்டர் பட்டம் (Honorary Doctorate of Law from the University of Victoria, British Columbia, Canada)
2018 - பெர்டானா பல்கலைக்கழகம்; பெண்கள் சமூக மேம்பாட்டிற்கான கெளரவ டாக்டர் பட்டம் (Perdana University; Honorary Doctor of Philosophy Degree for Women and Community Development)
20 சூன் 1997 - மலேசிய பல்லூடக பல்கலைக்கழகம்; வேந்தர் பதவி; புரவலர் பதவி (Chancellor of the Multimedia University)
18 டிசம்பர் 2020 - நோனா பெண்கள் பத்திரிகை; 2020 நோனா சிறந்த மகளிர் விருது (Nona Superwoman Award 2020)
விருதுகள்
மலேசிய விருதுகள்
:
- உயரிய நம்பிக்கை மகுட விருது (SSM) – Tun (2003)
- அரச நம்பிக்கை விருது (KMN) (1975)
:
- கெடா அரச விசுவாச விருது (SSDK) – Dato' Seri (1983)
- கெடா முடியரசு விருது (SMK) (1971)
கெடா மாநிலத்தின் சிறப்புமிக்க சேவைப் பதக்கம் (PCK)
:
- Order of the Defender of State (DUPN) – Dato' Seri Utama (2003)
:
- Order of Kinabalu (SPDK) – Datuk Seri Panglima (1994)
:
- Premier and Exalted Order of Malacca (DUNM) – Datuk Seri Utama (2003)
:
- Order of the Crown of Selangor (SPMS) – Datin Paduka Seri (1994, திருப்பி ஒப்படைப்பு 2017)
- Order of the Crown of Selangor (DPMS) – Datin Paduka (1983, திருப்பி ஒப்படைப்பு 2017)
:
- Order of the Star of Hornbill Sarawak (DA) – Datuk Amar (1996)
மேலும் காண்க
மலேசிய பிரதமரின் மனைவி
மகாதீர் முகமது
மலேசியாவின் அரசியல்
மேற்கோள்கள்
வெளியீடுகள்
My Name is Hasmah. Karangkraf Group, 2016.
வெளி இணைப்புகள்
அதிகாரபூர்வ வலைத்தளம்
1926 பிறப்புகள்
வாழும் நபர்கள்
மலேசிய முசுலிம்கள்
மலேசியப் பெண்கள்
மலேசியப் பிரதமர்களின் மனைவிகள் |
Subsets and Splits