|
ta_103477_0 இலங்கை இராணுவத்தின் 65, 651, 653 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 10 ஆவது இலேசாயுத காலாட் படையணி மற்றும் 11 (தொ) கஜபா படையணியினர் இணைந்து பாடசாலைகளில் சிரமதான பணிகளை மேற்கொண்டனர். |
|
ta_103477_1 பள்ளிநகர் பாடசாலை வளாகத்தினுள் (25) ஆம் திகதி சனிக் கிழமையும், பல்லவராயன்கட்டு பாலர் பாடசாலையினுள் (28) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இந்த சிரமதான பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன. |
|
ta_103477_2 இந்த பணிகளில் 80 படை வீரர்கள் ஈடுபட்டனர். |
|
ta_103477_3 இந்த சிரமதான பணிகள் 65 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் வசந்த குமாரப்பெரும அவர்களது எண்ணக் கருவிற்கமைய, 651 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் ரஞ்ஜித் அபேசிங்க அவர்களது வழிக்காட்டலின் கீழ் 653 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் ரொபின் ஜயசூரிய அவர்களது தலைமையில் இடம்பெற்றன. |
|
|